Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Viththiyasamaana Kaalam
Viththiyasamaana Kaalam
Viththiyasamaana Kaalam
Ebook128 pages1 hour

Viththiyasamaana Kaalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Stella Bruce, an exceptional Tamil novelist, written over 100 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… He has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465650
Viththiyasamaana Kaalam

Read more from Stella Bruce

Related to Viththiyasamaana Kaalam

Related ebooks

Reviews for Viththiyasamaana Kaalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Viththiyasamaana Kaalam - Stella Bruce

    12

    1

    திருமணம் ஆனபோது எனக்கு இருபத்தைந்து வயசு. படித்துப் பட்டம் பெற்ற ஒரு வருஷத்திலேயே அரசுடமையாக்கப்பட்ட இந்த வங்கியில் எனக்கு வேலை கிடைத்து விட்டதால் சந்தோஷமாக இருந்தது.

    அப்பாவும் நல்ல வேலையில் இருந்ததால் என் தங்கையின் கல்யாணத்தை முடித்த கையோடு என் கல்யாணத்தையும் நடத்திவிட்டு; அந்த வருஷமே வேலையில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு அப்பா எங்கள் சொந்த கிராமத்துக்குப் போய் விட்டார். நான் என் மனைவி ஆனந்தியுடன் கல்யாணமான மூன்றாவது மாதத்தில் இருந்தே தனிக்குடித்தன வாழ்க்கையைத் துவங்கி விட்டேன். கல்யாணமான உடனே மனைவியுடன் தனிக்குடித்தன வாழ்க்கை கிடைப்பது உண்மையில் அதிர்ஷ்டமானது என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம்... ஏனெனில், கல்யாணமான பிறகும் பல வருஷங்களுக்குக் கூட்டுக் குடும்ப வாழ்க்கை வாழ நேரிட்ட பல நண்பர்கள் அந்த வாழ்க்கை எவ்வளவு அலுத்து மனம் கசந்து போயிருந்தார்கள் என்பதை நான் நிறையவே பார்த்திருக்கிறேன்.

    தாம்பத்ய வாழ்க்கையின் ஆரம்ப நாட்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகவும் அற்புதமானவை. மனைவியின் சின்னச்சின்ன பார்வைகள் கூட கணவனை மயங்க வைப்பவை. மனைவியின் கை வளையல்களின் ஒலி... அவளுடைய கால் கொலுசுகளின் சப்தம்.... எல்லாமே காதல் பொதிந்தவை... மனசும் உடம்பும் எந்த நிமிஷமும் பாலுறவு மேற்கொள்ள- நீருக்குள் வளர்ந்து கிடக்கும் தாவரங்கள் போல நிசப்தமான சிலிர்ப்பில் போதை ஏறிப் போயிருக்கும். அந்த போதைக்கு இளமையிலேயே கிடைக்கிற தனிக் குடித்தன வாழ்க்கை மிகச் சுதந்திரமான ஒரு வடிகால். அந்தச் சுதந்திரத்தை மனைவி ஆனந்தியுடன் விரும்பிய போதெல்லாம் நான் பகிர்ந்து கொண்டேன். ஆனால்; எத்தனை பகிர்ந்து கொண்டால்தான் என்ன? வெயில் காலத்தில் எவ்வளவு தண்ணீர் அருந்தினாலும் தாகம் தீர்ந்தா போகிறது...? அது போன்றதுதான் தாம்பத்ய வாழ்வின் ஆரம்ப காலப் பாலுறவு மோகம்... வங்கியில் பணியில் ஆழ்ந்திருக்கும் போது கூட மனைவியின் அந்தரங்க நிலைகள் மனதில் வந்து வந்து போகும்... உடனே வீட்டுக்குப் போக மாட்டோமாவென்று இருக்கும்... சில தினங்களில் வங்கிக்கு லீவ் போட்டுவிட்டுக்கூட மனைவியுடன் இருக்க விருப்பப்பட்டு வீட்டில் தங்கிவிடுவதும் உண்டு.

    அப்படியெல்லாம் ஓர் உணர்வுப் புயல் போல ஆரம்ப நாட்களில் நான் சுழன்றாடினாலும் திருமணத்திற்கு முன் பாலுறவிற்காக நான் தவறான எந்த வழியிலும் சென்றதில்லை. உருவம் இல்லாமல் அந்த உணர்வுகள் இதயத்துடிப்பில் கலந்திருந்தாலும் கூட வடிகால் தேடுகிற அளவுக்கு உணர்வுகள் எனக்குள் பொங்கி வழிந்ததில்லை. இயல்பான தன்மையாக மட்டும்தான் அவ்வுணர்வுகள் எனக்குள் கலந்திருந்தன. ஆனால், கல்யாணமாகிச் சில வருடங்களுக்குப் பிறகு நான் வேறு மாதிரி யோசித்தேன். திருமண வாழ்க்கைக்காக ஏங்கிப்போகிற கால தாமதம் எனக்கு வாய்க்காமல் போயிருந்தது. கால தாமதம் ஏற்பட்டிருந்து; அந்த உணர்வுகள் உள்ளுக்குள் விரைந்து சுழலத் துவங்கியிருந்தால் அதற்கான பெண்களை நோக்கி, நானும் போயிருக்கலாம். கிடைக்கத் தாமதமாகிக் கொண்டிருக்கின்ற விஷயத்தை அனுபவிக்கத் துடித்து ஓடியிருக்கலாம்.

    எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் அந்தத் துடிப்பில் என் கண் எதிரே ஓடிக்கொண்டிருந்தார்கள். ஓட்டத்தில் கிடைத்த அனுபவங்களைப் பற்றி கூடிக்கூடிப் பேசிச் சிரித்துக்கொண்டும் மகிழ்ந்து கொண்டும் இருந்தார்கள். ஆனால், வேறொரு உண்மையையும் இங்கு நான் குறிப்பிட வேண்டும். அந்த அனுபவசாலிகள் எல்லோருமே கல்யாண வாழ்க்கை தாமதமாகிக் கொண்டிருப்பவர்கள் இல்லை. அவர்களில் கல்யாணமாகிக் குழந்தை பெற்றவர்களும்கூட இருந்தார்கள். கல்யாணமான புதிதில் இதைப் பற்றி என் மனைவியிடம் ஆச்சர்யத்துடன் நான் பேச முற்பட்டேன். ஆனால் அவளுக்கு அதைப் பற்றியெல்லாம் பேசுவதற்குப் பிடிக்கவில்லை. ‘வேண்டாம் இந்தப் பேச்சு’ என்று ஒரு வரியில் என்னைப் பேசவிடாமல் அடக்கி விடுவாள். என் மனைவியின் இந்தக் குணம் எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் நான் அந்த மாதிரியான விஷயங்கள் பற்றி அவளிடம் பேசுவது கிடையாது. ஆனால், எனக்குள் அந்த ஆச்சர்யமான கேள்வி மட்டும் பெரியதாக எழும்பி நின்றது. கல்யாணமாகிக் குழந்தைகள் பிறந்த பிறகும்கூட சில நண்பர்களும் ஆண்களும் அந்த உணர்வுகளுக்காக ஏன் தப்பான பெண்களை நாடிச் செல்கிறார்கள்? அப்படிப்பட்ட நடத்தை கொண்டிருந்த சில நெருங்கிய நண்பர்களிடம் இந்தக் கேள்வியை நிஜமான ஆச்சரியத்துடன் கேட்டேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான பதிலைச் சொன்னார்கள். சிலருடைய பதில் நான் எதிர்பாராதவைகளாக இருந்தன. சிலருடைய பதிலில் ஆண் என்ற அகம்பாவம் தெரிந்தது. வேறு சிலரின் பதிலில் பணமும் இளமையும் இருப்பதால் வாழ்க்கையை மனம் போகிறபடி அனுபவித்துப் பார்க்கிற அலட்சியமும், உல்லாசமும் தெரிந்தன. நான் வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாதவன் என்ற ஏளனமும் அவர்களின் பேச்சில் தொனித்தது.

    அந்தத் தொனி என்னைக் கொஞ்சம் பிரமிக்கத்தான் வைத்தது. வாழ்வில் நான் அனுபவித்துக் கொள்ளாத களியாட்டங்கள் பற்றிய யோசனைகளில் என்னை ஆழ்த்தியது. என்னுடைய அறியாமையே என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியது. ஆனாலும் என் அறியாமையை நான் சேதப்படுத்திக் கொள்கிற காரியங்களில் ஈடுபடவே இல்லை. மாசுபடாத பனி ஸ்படிகம் போன்ற உடல் நிலையோடு எனது இருபத்தைந்தாவது வயதில்

    Enjoying the preview?
    Page 1 of 1