Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poonkaatru Puthithanathu
Poonkaatru Puthithanathu
Poonkaatru Puthithanathu
Ebook159 pages35 minutes

Poonkaatru Puthithanathu

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465643
Poonkaatru Puthithanathu

Read more from R.Geetharani

Related authors

Related to Poonkaatru Puthithanathu

Related ebooks

Reviews for Poonkaatru Puthithanathu

Rating: 4 out of 5 stars
4/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poonkaatru Puthithanathu - R.Geetharani

    15

    1

    சென்னை

    லலித்கலா அகாடமி, ரசிகர் கூட்டத்தினால் நிரம்பி வழிந்தது. திடலில் வர்ணஜால மயமான விளக்குகளின் மின்னொளி. மிக விஸ்தீரணமான ஹாலில் இடதுபுறம் முதன்மையாக லியனார்டோ டாவின்சியின் பிரதான படைப்பான ‘மோனாலிசா’ புன்னகைத்துக் கொண்டிருந்தாள். அதனை அடுத்தாற் போன்று மைக்கேல் ஆஞ்சலோவின் சரித்திரப் புகழ் வாய்ந்த படைப்பான ‘தி லாஸ்ட் சப்பர்’ இடம் பெற்றிருந்தது.

    ரூபன், ரெம்ப்ரெண்ட், வேன்கோ, காகின்ஸ், சிசேன் என்று... பல்வேறு நாட்டு ஓவியக் கலைஞர்களின் படைப்புகளுடன் ஆங்காங்கே ரவிவர்மா தன் கை வண்ணத்தினால் கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தார். காலங்கள் எத்தனையானால் என்ன... இல்லை கலைஞன் தான் மாண்டு விட்டால் என்ன... கலை என்றும் வாழும் என்று கட்டியம் கூறுகிறாற்போன்று ஒவ்வொரு படைப்பினையும் பார்க்க வைத்தது.

    ஜனப்பிரியன் ஒவ்வொன்றாய் பார்வை பதித்துக் கொண்டே வந்தவன் சட்டென்று ஒரு ஓவியத்தின் முன் ஆணியறைந்தாற் போன்று நின்று விட்டிருந்தான்.

    ‘பொய் பட பேசு’ என்று வித்தியாசமாய் தலைப்பிட்டு தற்கால ஓவியர்களின் கைவண்ணங்களில் போட்டிக்கென்று பங்கேற்றிருந்தது அந்தப் படைப்பு, அந்த கைவண்ணத்தில் மெருகும் நளினமும் ஒளிர்ந்து நிற்க, பின்னணியில் ஏதோ சொல்லாத சோகத்தைச் சொல்லிய பெண்ணின் முகம். மாலையை கைகளில் பற்றினவாறு சற்று தூரத்தே இளைஞன் ஒருவன் குதிரையின் மீது ஆரோகணித்தாற் போன்று வரையப்பட்டிருந்தது. உற்று நோக்கினான். ஏனோ தெரியவில்லை. வித்தியாசமாகத் தெரிந்தது. நங்கூரம் பாய்ச்சினாற் போன்று இன்றைய வரதட்சணைக் கொடுமையின் வன்மை காட்சிகளில் இடம் பெற்றிருந்தது.

    நந்தா... இந்த ஓவியத்தைப் பாரேன்.. டிஃப்ரண்ட்டா இல்லை? கவிதைத்தனமா ஓவியத்தை வரைஞ்சிருக்காங்க. அதே சமயம் சோகமான சமயுக்தா... மாலையோட பிருதிவிராஜன் குதிரை மேலன்னு எவ்வளவு துல்லியமாக வரைஞ்சிருக்கார் ஓவியர். ம்... ஆர்ட்டிஸ்ட் நேம் என்ன? கண்களை சுருக்கிக் கொண்டு பார்த்தான்.

    ‘ஜனனி’ - உதடுகள் மெல்ல உச்சரித்தன.

    ஜனனி..! பேர் வித்தியாசமாயிருக்கில்லே? இங்கே ஆடிட்டோரியத்துள் இருந்தா ஓடிப்போய் நேர்ல பார்த்து கை குலுக்கிட்டு வந்துடணும்ன்னு மனசு துடிக்குது.. பள்ளிச்சிறுவன் போல அவன் ஆரவாரிக்க எதிரே கால் ஊனமுற்ற நிலையில் ஊன்று கோல்களின் உதவியுடன் தாங்கித் தாங்கி நடந்து வந்த பெண்ணை சற்றும் கவனிக்கவில்லை.

    இவன் திரும்பிய வேகத்தில் நிலைதடுமாறி அந்த பெண் ‘பொத்’தென்று கீழே விழ, மிஸ்டர்.. ஓவியத்தை மட்டுமே பார்க்கக்கூடாது. மனுசங்களையும் பார்த்து நடந்துக்கணும்... என்று திட்டினவாறே கீழே விழுந்த பெண்ணை தூக்கி நிறுத்தி ஊன்றுகோல் கொடுத்து உதவுவதில் முனைந்தான் உடன் வந்த நபர்.

    விடுண்ணா... வேணும்ன்னா செய்தாங்க. நாம தான் பார்த்து வந்திருக்கணும்..!

    இல்லை ஜனனி..! சில அல்பஜென்மங்கள் எல்லாம் இடிக்கிறதுக்காகன்னே வந்துடுறானுங்க. ‘கோழி குருடா இருந்தால் என்ன... குழம்பு ருசியாயிருந்தா சரிதான்’ற கூட்டம் எத்தனை இருக்கு...

    அண்ணா.. இதுக்கெல்லாம் போய் ஆர்க்யூமெண்ட் பண்ணிட்டு...! விடுங்க.. நாம சேர்ல போய் உட்காருவோம். பிரைஸ் அநௌன்ஸ்மெண்ட் டைமாயிட்டது வேற...

    நிச்சயம் உன்னோட ஆர்ட்டுக்கு ஃபர்ஸ்ட் பிரைஸே கிடைக்கும் பாரேன் நீ வேணா...! வந்தவங்கள்ள எழுபது சதம்பேர் உன்னோட ஆர்ட்டைத் தான் பார்த்து பார்த்து நின்னுட்டு இருந்தாங்க. நான் வாட்ச் பண்ணினேன் ஜனனி.. கடைசியா உன்னை இடிச்சு கீழே விழ வெச்சானே அவனும் கூட அந்த ஆர்ட்டைத்தான் பார்த்துட்டு இருந்தான்... ஜனனி... அண்ணன் பேசிக் கொண்டே போக ஜனனி சிறகின்றிப் பறந்தாள்.

    சென்ற வருடமும் இதே தருணத்தில் இதே ஆர்ட் காலரியில் அவளுடைய கை வண்ணத்திற்குத்தான் முதல் பரிசு கிடைத்திருந்தது.

    ஜனனி அண்ணனுடன் அருகில் அமர்ந்து கொண்டாள். ஊன்றுகோல் இடதுபக்கவாட்டில் சற்றே சாய்வாக வைக்கப்பட்டு இருந்தது.

    அன்பும் நேசமும் ஒருங்கே இணைந்த கலைப்பண்பாளர்களுக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும் இனிதான மாலை நேரத்து பிரிய வணக்கங்களை உரித்தாக்குகிறேன். கலை என்பது ரத்தம், சதை, நாடி, நரம்புகளில் எல்லாம் ஊறி இருந்தாலன்றி ஒருவரால் இத்தனை தத்ரூபமாக வரைய இயலாது. மகத்தான இந்த கலை நம் நாட்டில் மட்டுமல்லாது பிற நாடுகளிலும் போற்றிப் பெருமை பெற வேண்டும். கலைஞர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் உயர்ந்த நோக்கோடுதான் இந்த கலை நிகழ்ச்சி நடந்து கொண்டுள்ளது பிரதி வருடந்தோறும். நீங்கள் ஆவலுடனும், ஆர்வத்துடனும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மிகச் சிறந்த ஓவியப்படைப்புகளுக்கான பரிசளிப்பு இதோ அறிவிக்கப்படுகிறது. முதலில் அரங்கு நிறைந்த கரகோஷம் ஒலிக்கட்டும்... என்று நிகழ்ச்சி அறிவிப்பாளர் அறிவித்ததுதான் தாமதம் படபடபடவென்ற கைத்தட்டல் மழை... சீழ்க்கையொலி... ஹூர்ரே என்ற கத்தல்கள்வேறு.

    இத்தனை பேரும் இன்னும் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து இங்கே வந்திருப்பதில் அதிகப்படியான சந்தோஷத்தை அள்ளித் தருகிறது. இந்த வருடமும் முதற்பரிசினைத் தட்டிச் செல்லும் ஓவியத்திற்கு சொந்தக்காரர் செல்வி. ஜனனி... அறிவிப்பாளர் உச்சரித்தாரோ இல்லையோ ஜனனிக்குள் சிறகு முளைத்தாற்போன்றிருந்தது.

    ஜனனி.. நான் தான் அப்போவே சொன்னேனில்லை.. என்று சந்தோஷம் மேலிட அண்ணன் பார்த்திபன் ஊன்றுகோலை வாகாய் சகோதரிக்கு எடுத்துக் கொடுத்து மெள்ள உடன் நடந்து வர கூட்டத்தில் சற்று நேரம் சலசலப்பு.

    ‘பொய் படபேசு’ எனும் தலைப்பிடப்பட்ட இவரின் ஓவியம் இந்த ஆண்டின் மிகச் சிறந்த ஓவியமாக தேர்வு செய்யப்பட்டு முதற்பரிசைப் பெறுகிறது. ஊனம் ஒரு தடையல்ல என்பதனை உண்மையாய் - சவாலாய் ஏற்றுக்கொண்டு சாதித்துள்ள இப்பெண்மணிக்கு முதலில் கை தட்டுங்கள்..."

    கரகோஷம் ஆடிட்டோரியத்தினையே பிளந்தது. ஜனப்பிரியன் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான். ‘சற்று நேரத்திற்கு முன்பாக நான் கீழே தள்ளின இந்தப் பெண்தானா நான் புகழ்ந்த ஓவியத்தை வரைந்தது..? அற்புதமான ஒரு கலைத் திறமையினை அள்ளிக் கொடுத்து விட்டு அழகான மங்கையினை ஊனமாக்கி விட்ட இறைவன் நயவஞ்சகக்காரனே...! பிறவியிலேயே ஊனமா... இல்லை போலியோவின் தாக்கத்தினால் ஏற்பட்ட நிகழ்வா..? இல்லை... விபத்து ஏதேனும் ஒன்றில் கால்களை இழந்து விட்டாளா...?’ ஜனப்பிரியனிடம் அடுக்கடுக்காய் கேள்விக்கணைகள்.

    "என்ன ஜனா அப்செட் ஆகிட்டே?

    Enjoying the preview?
    Page 1 of 1