Unnai Kanatha Kannum Kannala
By R.Geetharani
4/5
()
About this ebook
Read more from R.Geetharani
Nee Sooriyan, Naan Thamarai Rating: 5 out of 5 stars5/5Seer Kondu Vaa Venmagame Rating: 4 out of 5 stars4/5Paarvai Ondre Podhume Rating: 4 out of 5 stars4/5Pichipoove Mella Vanthu Killi Po Rating: 4 out of 5 stars4/5Anbil Vantha Raagame Rating: 5 out of 5 stars5/5Muththangal Theernthu Vidumo Rating: 5 out of 5 stars5/5Manasaiththadi Manikkuyile Rating: 4 out of 5 stars4/5Vanna Poochchudava Vennila Rating: 0 out of 5 stars0 ratingsVaanamazhai Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratingsPanthaya Kuthiraikal Rating: 0 out of 5 stars0 ratingsSella Kiliye Mella Pesu Rating: 4 out of 5 stars4/5Unai Paarththa Kangal Rating: 0 out of 5 stars0 ratingsNettruvarai Nee Yaro GR Rating: 0 out of 5 stars0 ratingsIni Ellaam Sugame Rating: 0 out of 5 stars0 ratingsMalarnthum Malaraatha Rating: 0 out of 5 stars0 ratingsPoonkaatru Puthithanathu Rating: 4 out of 5 stars4/5Pachai Kiligal Tholodu Rating: 4 out of 5 stars4/5Kannaththil Muththamittaal Rating: 0 out of 5 stars0 ratingsMevum Viral Naanunakku Rating: 0 out of 5 stars0 ratings
Related to Unnai Kanatha Kannum Kannala
Related ebooks
Oru Thappu Thaalam Oru Sariyaana Raagam Rating: 5 out of 5 stars5/5ஒரு தப்புத் தாளம் ஒரு சரியான ராகம் Rating: 0 out of 5 stars0 ratingsபொன் வானம் பன்னீர் தூவுது... Rating: 0 out of 5 stars0 ratingsPon Vaanam Panneer Thuvuthu Rating: 0 out of 5 stars0 ratingsKaathalaal Thavikkiren Rating: 5 out of 5 stars5/5காதலால் தவிக்கிறேன்! Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5Muththazhagi Rating: 0 out of 5 stars0 ratingsமுத்தழகி Rating: 0 out of 5 stars0 ratingskadhal Regai Rating: 5 out of 5 stars5/5Samsaram Enbathu Veenai! Rating: 0 out of 5 stars0 ratingsசொல்லத்தான்... நினைக்கிறேன்..! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Valaiyil Vizhalama! Rating: 0 out of 5 stars0 ratingsதேடினேன் வந்தது! Rating: 0 out of 5 stars0 ratingsThedinen Vanthathu Rating: 5 out of 5 stars5/5Aaruyire... En Oruyire... Rating: 5 out of 5 stars5/5Poo Pookkum Osai Rating: 5 out of 5 stars5/5Nenjamellam Nee! Rating: 0 out of 5 stars0 ratingsNIzhal Manithan Rating: 0 out of 5 stars0 ratingsMounamenum Siraiyil...! Rating: 0 out of 5 stars0 ratingsAmaavasaikku Muthal Naal Rating: 4 out of 5 stars4/5Puthai Manal Rating: 0 out of 5 stars0 ratingsMalligai Panthal Rating: 0 out of 5 stars0 ratingsபூங்கிளி கைவரும் நாள் வருமா..? Rating: 0 out of 5 stars0 ratingsPoonkili Kaivarum Naal Varumaa Rating: 0 out of 5 stars0 ratingsKaatrai Kaithu Sei Rating: 5 out of 5 stars5/5Thai Maasam...! Poo Vaasam...! Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Banthalitten! Rating: 0 out of 5 stars0 ratingsPattaampoochigal Parakkum Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsஇரும்பு கனவுகள் Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Unnai Kanatha Kannum Kannala
1 rating0 reviews
Book preview
Unnai Kanatha Kannum Kannala - R.Geetharani
16
1
"செல்லக்கிளி ... அங்கே என்ன பண்ணிட்டிருக்க? அப்பா போன்ல லைன்ல இருக்கார்..." ரிசீவரின் வாயை வலது கரத்தினால் பொத்தினவாறே தனலட்சுமி குரல் கொடுத்தாள் மகள் இருந்த அறையை நோக்கி.
‘வாஸந்தி’யின் ‘வேர்கள்’ நாவலிலிருந்து ஆய்வுக் கட்டுரைக்குத் தயார் செய்ய வேண்டிய குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்த செல்லக்கிளி, புத்தகத்தினை மெத்தையின் மீது குப்புறக் கவிழ்த்து விட்டு எழுந்து வந்தாள். போன் ரிசீவரை தனலட்சுமி, மகளின் கையில் கொடுத்தாள்.
ம்... செல்லக்கிளியாம்மா.....?
எதிர்முனையில் பாசம் இழைந்தோடிற்று... அப்பாவின் குரலில்.
ஆமாம்ப்பா....
பத்திரிக்கைகள் எல்லாம் அச்சடிச்சு வந்தாச்சு. மாப்பிள்ளை போட்டோவும், உன் போட்டோவும் ரொம்ப ஜோரா வந்திருக்கு. உனக்கு ஒரு நூறு பத்திரிக்கை போதுமாம்மா? சிநேகிதிங்க வட்டாரத்துக்குக் கொடுக்கணும்ன்னு கேட்டிருந்தியேம்மா....?
ம்.. போதும்ப்பா...!
மென்மையாக ஒலித்தது செல்லக்கிளியின் குரல்.
சரி.. போனை அம்மாகிட்டே கொடு. சாயந்திரம் போல சீக்கிரமா ரெடியா இருங்க. பட்டு எடுக்கப் போகணும். அப்புறம்... குமரன் சில்க்ஸ்லயே எடுத்துடலாமில்லே....?
ம்... உங்க விருப்பம்ப்பா....
அதானே... எம் பொண்ணாச்சுல்லே....
என்ற சிரிப்பொலி செல்லக்கிளியை ரிசீவரை அம்மாவிடம் தர வைத்தது.
ம்... என்னங்க! நான் தான் பேசறேன். சொல்லுங்க...!
ம்... சாயந்திரம் கார் அனுப்பறேன். நீயும் செல்லக்கிளியும் கார்ல வந்து சேர்ந்துடுங்க. நான் நேரா கடைக்கே வந்துட்றேன். அப்புறம் தங்கம்மாளையும் கையோட கூட்டிட்டு வந்துடுங்க. பொண்ணுக்கு அத்தை முறை சீர் செய்யணுமில்லே. அவள் விருப்பத்துக்கு புடவையை எடுத்துக்கட்டும். இந்தக் கல்யாணத்துல யாருக்கும் ஒரு குறையும் இருக்கக் கூடாது. என்ன நான் சொல்றது...?
சரிங்க... எல்லாம் தயாரா இருக்கோம்ங்க. ஒரு அஞ்சு மணி போல காரை அனுப்பிடுங்க....!
சரி... சரி... அனுப்பறேன். போனை வெக்கட்டுமா...?
எதிர்முனை தொடர்பை இழந்தது. தனலட்சுமியும் போனை வைத்து விட்டு மகளிடம் வந்தாள்.
செல்லக்கிளி... உன் நிறத்துக்குன்னு எல்லாப் புடவைகளுமே ரொம்பப் பொருத்தமாத்தானிருக்கும். ஏற்கனவே பீரோ நிறைக்க அடுக்கி வெச்சிருக்கே. அதிகப்படியா பட்டுப்புடவைகளை செலக்ட் பண்ணாமல் நல்ல நகைகளா செலக்ட் பண்ணு செல்லம். காசுக்கு அழிவில்லாமல் இருக்கும்...!
ம்... உங்க இஷ்டம் போல செய்ங்கம்மா. எனக்கு கம்ப்யூட்டர்ல ப்ராஜெக்ட் வொர்க் இருக்கு. இ.மெயில் ஐ.டி.யில் இன்னைக்கே புரஃபசருக்கு தீஸீஸ் சப்மிஷன் பண்ணியாகணும்...!
செல்லக்கிளி பரபரப்புடன் பேசினாள்.
ப்ராஜெக்ட்ன்றே, ரெஸ்யூம்ன்றே... எனக்கெங்கே வௌங்கப் போவுது அதெல்லாம். படிச்சது வரைக்கும் போதும்ன்னாலும் கேட்கறியா... தொடர்ந்து படிச்சுட்டேதானிருக்கே. ஒருவழியா இப்பவாவது கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டியே. அது வரைக்கும் சந்தோஷம். எங்கே வந்த மாப்பிள்ளையை எல்லாம் தட்டிக் கழிச்சாப்ல இதையும் தட்டிக் கழிச்சிடுவியோன்னு நினைச்சேன். எப்படியோ சம்மதம் கொடுத்துட்டே. அதுவே பெரிய விசயம்...!
ம்ஹ்... அப்பா, அம்மா, அத்தை, நான் வளர்த்த இந்தத் தோட்டம் இதெல்லாம் விட்டுட்டு போகறதுன்றது எனக்கு மனசுக்கு ரொம்பவும் சங்கடமாயிருக்கும்மா.....!
சொன்னவளின் குரலில் உண்மையான வருத்தம் தொனித்தது.
பொண்ணாப் பொறந்துட்டாலேயே அவளுக்கு எப்பவும் ரெண்டு இடம் தான்- தாய் வீடு ஒண்ணு; புகுந்த வீடு ஒண்ணுன்னு. தாய் வீட்டுல விளைஞ்ச மரக்கன்றை புருஷன் வீட்டுலன்னு மொத்தமா கொண்டு நடறது, தழைச்சு செழிச்சு குழந்தை, குட்டிகள்னு குடும்பமா- சிறப்பா இருக்கணும்ன்னு தான்...!
ஏன்ம்மா... அதே மாப்பிள்ளையை பொண்ணு வீட்டுல கொண்டு வந்து விட்டா மட்டும் மரம் தழைச்சு செழிச்சு பூ, பிஞ்சுன்னு காய்ச்சு கனியாகாமலா போய்டும்...? ஏன்ம்மா நம்ம கன்ட்ரியில மட்டும் காலகாலத்துக்கும் இந்த முட்டாள்தனமான கல்ச்சரை ஃபாலோ பண்ணிட்டு..? இருபத்தோராம் நூற்றாண்டுல இருக்கோம் நாம..... விஞ்ஞான வள்ர்ச்சி ராக்கெட், ஏவுகணை, கம்ப்யூட்டர், இண்ட்டர்நெட்டுன்னு உலகத்தையே கைக்குள்ள அடக்கிட்டிருக்கு. இந்தக் காலத்துல போய் இன்னும் பழைய பஞ்சாங்கங்களைப் புரட்டிப் பார்த்துக்கிட்டு... தொட்ட தொண்ணூத்துக்கும் நாள், நட்சத்திரம் பார்த்துக்கிட்டு... இட்ஸ் வெரி போர்ம்மா...
ம்... உனக்கு எல்லாமே போராத்தான் தெரியும் செல்லம். ஏன்னா... உங்கப்பா ஒரே ஒரு பொண்ணுன்னு ரொம்பவுமேதான் செல்லம் கொடுத்து எதை எதையோ சிந்திக்க வெச்சுட்டார். உங்கப்பாவை நான் மணமேடையிலதான் பார்த்ததே. பிடிச்சுதா பிடிக்கலையான்னுகூட யாரும் கேட்கலை. நான் வாழ்க்கையை நடத்தி அழகான உன்னைப் பெறலையா....? படிப்புன்றது அறிவை விசாலப்படுத்திக்க தானே தவிர வீண் விவாதங்களை வளர்த்துக்க இல்லை. மண் கீழேயும், ஆகாயம் மேலேயும் இருக்கிற பிரபஞ்சத் தத்துவம் பெண் எப்பவும் ஆணுக்குள் ஐக்கியமாகி அடங்கி நிற்க வேண்டியவள்ன்றதைத் தான் குடும்பம்ன்ற பூலோக உருண்டை விளக்குது. ஒண்ணை ஒண்ணு சார்ந்து சுழலணும்ன்றது இயற்கையோட நிர்மாணிக்கப்பட்ட நியதி.....!
"வா....வ்வ்... சூப்பர்ம்மா. நீங்க கூட சூப்பரா லெக்சரடிக்கிறீங்க.
பேசாமல் மாதர் சங்கம், லயன்ஸ் கிளப்புன்னு எங்கேயாவது ரௌண்ட்ஸ் போய் ஸ்பீச் குடேன்ம்மா..."
என்னடி... நக்கலா இருக்கா...? போட்டேன்னா..! உங்கப்பாவோட உத்தரவு இல்லாமல் இந்த வீட்டை விட்டு நான் தாண்டினேன்... மனுசன் பொலி போட்டுருவார்.. செல்லம் எல்லாம் உன் வரைக்கும் தான்...!
ம்... இந்தப் பெரிய செல்லத்தைக் கொஞ்சாமல்தான் சின்ன செல்லம் வந்ததாமா...?
முகவாய்க்கட்டையைப்பற்றி இழுத்து ஒரு ஆட்டு ஆட்டி நெற்றியில் முட்டினாள் செல்லக்கிளி சின்ன சிரிப்புடன்.
ச்சீ... இதென்ன அசிங்கமா பேசிட்டு... தள்ளு.. எனக்கு அடுப்படியிலெ வேலை இருக்கு...
என்று பொய்க்கோபத்துடன் தனலட்சுமி உள்ளே சென்று விட, செல்லக்கிளி கம்ப்யூட்டரை ஆன் செய்தாள். ஸ்கிரீனரில் மாப்பிள்ளை அருண்குமார் அழகான பல்வரிசை காட்டி சிரித்தான்.
ம்... என் புஜ்ஜிக்குட்டி நீ கூட அழகாய்த்தானிருக்கே...
என்று ஸ்கிரீனரில் தெரிந்த உருவத்தின் நெற்றியுடன் ஒரு முட்டு முட்டி சிரித்தாள் கண்ணடித்து.
முத்தா... குடுப்பேன்னு நினைச்சியா... அது தான் மாட்டேன் போ....
என்று உதடுகளை மட்டும் மவுஸின் உதவியால் பெரிதாக்கிப் பார்த்து நகைத்தாள்.
ஹேய்... சிகரெட் குடிப்பியா நீ. உதடெல்லாம் லைட்பிளாக் கலர்ல இருக்கு. உன்னை நேர்ல வெச்சுக்கிறேன்...
என்று சுட்டு விரல் காட்டி எச்சரித்த அதே கணத்தில்-
படுக்கை மெத்தை விரிப்பின் மீதிருந்த செல்போன் குழந்தை சிணுங்கிற்று. ஒளிர்திரையில் எண்ணைப் பார்த்தாள். தோழி சௌம்யாவின் எண் தெரிந்தது புலனிற்கு. போனின் பட்டனை அழுத்தி ‘ஹலோ’ என்ற மென்மையான உச்சரிப்புடன் காதிற்குக் கொடுத்தாள்.
செல்லம். நான் சௌமி பேசறேன்டி....
ம்... சொல்லு சௌம்யா.... ஏன் குரல் ஒரு மாதிரியா இருக்கு....?
ம்... அ... அது வந்து... நான் ஒரு பெரிய பிரச்சனையில் மாட்டிக்கிட்டு இருக்கேன்டி.....
சொன்னாத்தானே தெரியும்.....!
நம்ம ரத்னா இல்லை... அவள் ‘லவ்’ பண்றாளே ஸ்ரீநாத்... அவருக்கு என்னைப் பேசி முடிச்சுட்டாங்கடி வீட்ல....
ஸ்ரீநாத் இதுக்கு எப்படி ஒப்புக்கிட்டார்...? ஆமாம்... ரத்னாவுக்கு இந்த மேட்டர் தெரியுமா...?