Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iraval Sorkkam
Iraval Sorkkam
Iraval Sorkkam
Ebook282 pages1 hour

Iraval Sorkkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Iraval Sorkkam

Read more from Rajeshkumar

Related to Iraval Sorkkam

Related ebooks

Related categories

Reviews for Iraval Sorkkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iraval Sorkkam - Rajeshkumar

    23

    1

    ஆகாயம் முழுவதும் அழுக்கு மேகங்கள் நிரம்பியிருக்க - இந்த இராத்திரி பதினோரு மணி வேளையில் மழை தூறிக் கொண்டிருந்தது. காற்று இல்லாத மழை. சாலையோர மரங்கள் மவுனமாய் நனைந்தன. சாக்கடைகளில் மழைத்தண்ணீர் புரண்டோட போக்குவரத்து இல்லாத சாலை - கலாட்டா நடக்காத சட்டசபை மேல் அமைதியாய் இருந்தது. அந்தப் பெண் சுற்றும் முற்றும் பார்த்தபடி வேகவேகமாய் நடந்து கொண்டிருந்தாள். வயது இருபத்தைந்துக்குள் என்று சொன்னது. மழையில் நனைந்து அவள் உடம்பின் வளைவுகள் அசைந்து பளிச்சென்று தெரிந்தது. சேலை முந்தானையை இடுப்பில் சொருகியிருந்தாள். மழைநீர்பட்ட முகம் 'சோடியம் வெபர்' விளக்கு வெளிச்சத்தில் அழகாக இருந்தது. பெரிய கண்கள். சிறிய உதடுகள். ஒரு கைப்பிடிக்குள் அடக்கிவிடலாம் போன்ற இடுப்பு.

    வேகமாய் நடந்தவள் அந்த வளைவுக்கு வந்ததும் நின்றாள். சாலை ஓரமாய் ஒரு ஆட்டோ ஒதுங்கியிருக்க - அதை நோக்கி ஓடினாள். படுதாக்களை தொங்கவிட்டுக் கொண்டு - ஆட்டோவின் பின் இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த ஒட்டுநரைப் பார்த்து குரல் கொடுத்தாள்.

    டிரைவர்....

    .....

    டிரைவர்....

    இரண்டாவது தடவையாய் - சற்று பலமாய் குரல் கொடுத்ததும் படுதா விலகியது. ஓட்டுனரின் தூக்கக் கலக்க முகம் எட்டிப் பார்த்தது.

    என்னம்மா?

    ஆட்டோ வருமா...?

    எங்கே போகணும்....?

    எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. பக்கத்தில் இருக்கிற எதாவது ஒரு ஆஸ்பத்திரிக்கு அவரை உடனே கொண்டு போகணும்.

    உங்க அப்பா எங்கே...

    வீட்ல...

    வீடு...?

    அதோ... அந்த தெருவைத் தாண்டினா வர்ற முதல் சந்துக்குள்ளே..

    ஏறி உட்காரம்மா... மப்ளரை தலைக்கு சுற்றிக் கொண்ட ஆட்டோ ஓட்டுனர் முன் இருக்கைக்கு வர - அந்தப் பெண் பின் இருக்கைக்குப் போனாள். ஆட்டோ இருமிவிட்டு நகர்ந்தது.

    டிரைவர் கேட்டார்.

    அப்பாவோட உடம்புக்கு என்ன...?

    நெஞ்சுவலி...

    பக்கத்துல எந்த ஆஸ்பத்திரியும் இல்லையே! பக்கம்ன்னு பார்த்தா 'கருணா மருத்துவமனை' தான். ஆனால், அது பணக்காரங்க போற ஆஸ்பத்திரி.

    பரவாயில்லை... அந்த ஆஸ்பத்திரிக்கே போயிடலாம்...

    ஆட்டோ வேகம் பிடித்து தெருவைத் தாண்டியதும் எதிர்ப்பட்ட சந்தில் திரும்பியது.

    அந்த வீடுதான்.

    சந்து நிசப்தமாய் இருந்தது, வீடுகள் அவ்வளவாக இல்லை. விலகி விலகி இருந்தன.

    ஓட்டு வீட்டுக்கு முன்னாள் ஆட்டோ நின்றது. அந்தப் பெண் இறங்கி உள்ளே ஓடினாள். ஓட்டுனர் அரை நிமிட நேரம் காத்திருக்க - ஒரு பெரியவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டே தளர்நடை போட்டு வந்தார். அவரைப் பற்றிக் கொண்டு அந்தப் பெண் கூப்பிட்டாள்.

    டிரைவர்...! இவரைக் கொஞ்சம் ஆட்டோவில் உட்கார வையுங்க... நான் வீட்டைப் பூட்டிக்கிட்டு வந்துடறேன்.

    பெய்கிற மழையைப் பொருட்படுத்தாமல் - டிரைவர் இறங்கிப் போய் - பெரியவரை கைத்தாங்கலாய் அழைத்து வந்து ஆட்டோவில் உட்கார வைப்பதற்குள், அந்தப் பெண் வீட்டைப் பூட்டிக் கொண்டு வந்தாள். ஆட்டோவுக்குள் ஏறி பெரியவரை தன் தோள் மேல் சித்திக் கொண்டதும் - ஆட்டோ புறப்பட்டது.

    கொஞ்சம் வேகமா போங்க...

    கருணா ஆஸ்பத்திரிக்கே போயிடலாமாம்மா ?

    ம்...

    ஆட்டோ வேகம் எடுத்தது.

    அப்பா... நெஞ்சை ரொம்பவும் வலிக்குதா...?

    இன்னிக்கு கொஞ்சம் அதிகமாத்தாம்மா இருக்கு...

    அப்படியே சாய்ந்து படுத்துக்கோப்பா... நான் நெஞ்சை நீவி விடறேன். பத்து நிமிசத்துல ஆஸ்பத்திரி வந்துடும்...

    ஆட்டோ இப்போது பிரதான சாலையில் மழைநீரை வாரியிறைத்துக் கொண்டு ஓடியது. புறநகர் பகுதி.. அது. இருட்டின் ஆதிக்கம் அதிகம் தெரிந்தது. பெய்கிற மழையில் குளிர் மூர்க்கமாய் அடித்தது.

    சரியாய் பத்து நிமிட பயணம்.

    கருணா மருத்துவமனையின் நியான் விளக்கும் - குழல் விளக்குகளின் வெளிச்சமும் தெரிந்தது.

    அப்பா!... கொஞ்சம் பொறுத்துக்கோங்கப்பா... ஆஸ்பத்திரி வந்துடுச்சு...

    ஆட்டோ திறந்திருந்த வாசல் கதவில் நுழைந்து - மருத்துவமனையின் போர்டிகோவுக்கு முன்னால் போய் நின்றது.

    இறங்கினார்கள்.

    ஆட்டோவுக்கு பணத்தைக் கொடுத்து அனுப்பி விட்டு - பெரியவரை கைத்தாங்கலாய் பற்றிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் அந்தப் பெண்.

    உள்ளே யாருமில்லை.

    மருத்துவமனை வெறிச்சோடியிருந்தது.

    யாரும் தட்டுப்படவில்லை.

    சுற்றும் முற்றும் பார்த்தாள்.

    சற்றுத் தொலைவில் இருந்த அறையொன்றில் இருந்து பேச்சுக் குரல் கேட்டது. கூடவே சிரிப்புச் சத்தம்.

    அந்தப் பெண் பெரியவரை - அங்கெ சுவரோரமாய் போடப்பட்டிருந்த நாற்காலியொன்றில் உட்கார வைத்து விட்டு - பேச்சுச் சத்தம் கேட்ட அந்த அறையை நோக்கிப் போனாள்.

    அறைக்கதவு வெறுமனே சத்தியிருக்க -

    மெல்லத் தட்டினாள்.

    டொக்... டொக்...

    உள்ளே பேச்சுக்குரல் நின்றது.

    யாரது?

    கதவை மெல்லத் தள்ளினாள்.

    உள்ளே -

    வெள்ளை கோட் அணிந்த இரு டாக்டர்கள் தெரிந்தார்கள். முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள்.

    என்னம்மா...

    எங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லை. நெஞ்சுவலியால கஷ்டப்பட்டுகிட்டு இருக்கார்ய்யா.

    ஆஸ்பத்திரியில் இப்ப வேலை நிறுத்தம் நடக்குதம்மா. யாரும் வேலைக்கு வர்றதில்லை. இங்கே ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு - சிகிச்சை எடுத்துகிட்டு இருக்கிற நோயாளிகளை கவனிக்கிறதுக்காக நாங்க இருக்கோம். நீ உங்க அப்பாவை வேற ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிடு... மருத்துவர் ஒருவர் சொல்ல - அந்தப் பெண் பதறினாள்.

    வந்த ஆட்டோவையும் திருப்பி அனுப்பிச்சுட்டேன்... மழை பெய்யற இந்த இராத்திரி நேரத்துல... நான் வலியால கஷ்டப்படற எங்கப்பாவை கூட்டிகிட்டு எங்கேய்யா போவேன்...

    உள்ளே இருக்கிற நோயாளிகளைத் தவிர வெளி நோயாளிகளை நாங்கள் பார்க்கக் கூடாதம்மா...

    அப்படி சொல்லாதீங்கய்யா...! எனக்கு இருக்கிற ஒரே துணை அப்பா மட்டும்தான். அவரைக் காப்பாத்தி கொடுத்துடுங்கய்யா...

    கால்களில் விழ வந்தாள்.

    இந்தாம்மா... எந்திரி... உன் அப்பா எங்கே...?

    அங்கே உட்கார்த்தி வைச்சிருக்கேன்.

    போய் கூட்டிட்டு வா...

    அவள் வேகமாய் வெளியே போனாள்.

    போனதும்-

    மருத்துவர்கள் - ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டார்கள்.

    எப்படியிருக்கா பார்த்தியா... கோவிந்த்?

    நாட்டுக்கட்டை... வாசன்...!

    மழைக்கு தோதா வந்திருக்கா... வலை வீசிப்பார்க்கலாமா?

    ம்

    மணி என்ன...

    பதினொண்ணேகால்...

    நோயாளிகள் அசந்து தூங்கற நேரம்.

    வெளியே - இருமல் சத்தம் கேட்டது.

    வந்துட்டாள்...

    அந்தப் பெண், பெரியவரை தன் தோளில் ஆதரவாய் சாய வைத்து உள்ளே கூட்டிவந்தாள்.

    மருத்துவர் கோவிந்த் சொன்னார்.

    இப்படி இருக்க வையம்மா... மேசையைக் காட்ட, அவள் படுக்க வைத்தாள். கோவிந்த் சோதித்தார்.

    இவர் உனக்கு அப்பாவா?

    ஆமாங்க.

    வேற யாராவது துணைக்கு வந்திருக்காங்களா?

    இல்லீங்க...

    ஆட்டோவில் வந்ததா சொன்னியே... அந்த ஆட்டோ டிரைவர் உனக்குத் தெரிஞ்சவரா...?

    இல்லீங்க...

    உன்பேர் என்ன...?

    வசந்திங்க...

    அப்பா பேரு...

    பெரியசாமி...

    வீடு எங்கே...?

    முகவரியைச் சொன்னாள். மருத்துவர் வாசன் மழையில் நனைந்த வசந்தியின் உடம்பை மனசுக்குள் வெறித்தனமாய் ரசித்துக் கொண்டே, முகத்தில் புன்னகை தவழக் கேட்டார்.

    அப்பாவுக்கு அடிக்கடி இப்படி வருமா...?

    வரும்ங்க... மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும். ஆனால் இன்னிக்கு மாத்திரை சாப்பிட்டும் வலி நிக்கலை. அதான் கூட்டிட்டு வந்தேன்.

    சரி... நீ போய் கொஞ்சம் வெளியே நில்லம்மா... உங்கப்பாவை பரிசோதனை பண்ணனும்...

    வசந்தி தலையாட்டி விட்டு வெளியே போக - கோவிந்தும் வாசனும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டு ஆங்கிலத்தில் பேசிக் கொண்டார்கள்.

    என்ன பண்ணலாம்?

    முடிச்சுட வேண்டியது தான்...

    எப்படி...?

    கிழவனுக்கு ஒரு பெத்தடின் ஊசி போட்டால் போதும். விடியற வரைக்கும் எந்திரிக்க மாட்டான். நீ அவளைக் கூட்டிட்டு கட்டிடத்துக்கு கடைசியில் இருக்கிற மருந்து குடோனுக்கு போயிடு. நான் கிழவனுக்கு ஊசியைப் போட்டுட்டு வந்துடறேன்.

    அவள் சத்தம் போட்டால்...?

    உங்கப்பாவை கொன்னுடுவோம்ன்னு மிரட்டு...

    கொஞ்சம் உதறலாயிருக்கே...

    என்ன வாசன்... இவளுக்குப் போய் பயப்படறே...? இது கிராமத்துப் பொண்ணு. வசதியில்லாத குடும்பம். எது நடந்தாலும் விசயம் வெளியே போகாது... எத்தனை முரட்டுக் குதிரைகளை நீயும் நானும் அடக்கிப் பழக்கியிருக்கோம்...

    சரி... கிழவனுக்கு பெத்தடின் ஊசியைப் போட்டுட்டு... உடனடியா மருந்து குடோனுக்கு வந்து சேரு... நான் அவளைக் கூட்டிட்டுப் போறேன்...

    அவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள மாட்டாத பெரியசாமி நெஞ்சுவலியில் கண் மூடி படுத்திருக்க - வாசன் வெளியே வந்தார்.

    வசந்தி மார்புக்குக் குறுக்காய் - கைகளைக் கட்டிக் கொண்டு குளிரில் ஒடுங்கியபடி - சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள். மருத்துவரைப் பார்த்ததும் பக்கத்தில் வந்தாள்.

    அய்யா...

    என்கூட கொஞ்சம் வாம்மா... உங்கப்பாவை வேற அறைக்குக் கொண்டு போக தள்ளுவண்டி வேணும். நர்சு யாரும் வேலைக்கு வராததினால... அந்த வேலையை நீயும் நானுந்தான் பண்ணனும்... வா...

    வாசன் சொல்லிவிட்டு - அந்த அரையிருட்டான வராந்தாவில் நடக்க, வசந்தி அவரைப் பின் தொடர்ந்தாள்.

    மழை இப்போது பெரிதாய் - பெய்யத் தொடங்கியிருந்தது.

    அதே விநாடிகளில் -

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தார்கள், கண்ணனும் சாந்தமதியும் பயணக் களைப்பிலும் அழகாக இருந்தார்கள்.

    ரெயில்... இன்னிக்கு எக்கச்சக்க தாமதம்.

    வழி பூராவும் மழை. டிரைவர் என்ன பண்ணுவார்? மெதுவாய்த்தானே விரட்டணும்...

    ரெண்டு பேரும் ஒரு வாடகைக்காரில் போயிடலாமா சாந்தா?

    வேண்டாம் கண்ணன்... நீங்கள் ஒரு ஆட்டோவை பிடிச்சு உங்கள் வீட்டுக்குப் போங்க... நான் அப்பாவைப் பார்த்துட்டு அப்புறம்தான் வீட்டுக்குப் போகணும்.

    மழை பெய்யற இந்த இராத்திரியில் தனியா போறீயா...? உன்னோட அப்பாவைப் பார்க்க நாளைக்கு காலையில போய்க்கலாமே...?

    இல்லை... இல்லை... அப்பாவைப் பார்த்துட்டு வீட்டுக்குப் போனால்தான் தூக்கம் வரும்... நீங்கள் கிளம்புங்க கண்ணன்! நாளைக்குப் பார்க்கலாம்...

    ஓகே... குட்நைட்... கண்ணன் பெட்டியுடன் நகர்ந்து எதிர்த்திசையில் ஆட்டோ பிடிக்கப் போக - சாந்தமதி தன் தோள்பையை தோளில் சுமந்து - மழையில் நனைந்தபடி வாடகைக்கார் நிறுத்தத்தை நெருங்கினாள். நின்றிருந்த டிரைவரிடம் கேட்டாள்.

    டாக்சி வருமா...?

    எங்கேம்மா போகணும்?

    கருணா மருத்துவமனை...

    2

    மருத்துவர் வாசன் அந்த மருத்துவமனையின் அரையிருட்டான வராந்தாவில் வசந்தியோடு நடந்தபடியே பார்வையால் அவளை மென்றார். மழையில் நனைந்து ஈரமாகியிருந்த சேலை வசந்தியின் உடம்போடு ஒட்டி - சதையின் திரட்சிகளை துல்லியமாய் எடுத்துக் காட்டியது. மருத்துவர் உடம்பில் வெப்பம் பரவியது.

    உன் பேர் என்ன சொன்னே?

    வசந்திங்க.

    Enjoying the preview?
    Page 1 of 1