Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kolla Theriyavillai!
Kolla Theriyavillai!
Kolla Theriyavillai!
Ebook145 pages28 minutes

Kolla Theriyavillai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Kolla Theriyavillai!

Read more from Devibala

Related to Kolla Theriyavillai!

Related ebooks

Related categories

Reviews for Kolla Theriyavillai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kolla Theriyavillai! - Devibala

    20

    1

    மருதமலை பஸ்ஸிலிருந்து ஜனங்கள் பொடிப்பொடியாக உதிர்ந்தார்கள். ஏறக் காத்திருக்கும் அடுத்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெளியே வருவதற்குள் சட்டையின் மேல்பித்தான் நொறுங்கி மூச்சு வாங்கியது சத்தயமூர்த்திக்கு.

    காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் முடிச்சு முடிச்சாக ஜனங்கள்.

    மேலே மோதிய ஆட்களை விலக்க முடியாமல் ஸ்தூலசரீரத்தோடு பஸ்ஸுக்குள் தவித்த மரகதத்தைப் பார்க்க எரிச்சலாக இருந்தது.

    அளவா திங்கணும். ஒடம்பு இப்படி ஊதினா இதான் கஷ்டம்!

    ஒரு வழியாக இறங்கிப் பக்கத்தில் வந்து நின்றாள்.

    என்னங்க, பசிக்குது!

    மணிக்கட்டை பார்த்தார் சத்தயமூர்த்தி, குவார்ட்ஸ் டிஜிட்டல் 1:05:27 என்றது.

    பதறிப்போனார்.

    அதுக்கெல்லாம் நேரமில்லை. கோவை எக்ஸ்பிரஸுக்கு இன்னும் முழுசா ஒரு மணி நேரம்கூட இல்லை. இங்கிருந்து போய் க்ளோக் ரூம்ல சாமானை எடுத்துட்டு மேல பிளாட்பாரம் போய்.. எழவே... அடிச்சிக்கிட்டேன் அங்கியே, சீக்கிரம் பொறப்படுடீ... சீக்கிரம் பொறப்படுனு. தரிசனம் முடிச்சு ரெஸ்ட் என்ன வேண்டிக்கிடக்குது?

    இந்த ரயில் போனாப் போகட்டுங்க. நிதானமா நீலகிரி எக்ஸ்பிரஸ் போயிக்கலாம்!

    உதை படுவ! அடுத்த வார்த்தை பேசினா பல்லுமேல போடுவேன். ரிசர்வேஷன் உங்கப்பன் தருவானாடீ நீலகிரி எக்ஸ்பிரஸ்ல? கோவைக்கே நான் பட்ட பாடு நாய்ப்பாடு.. ஜல்தியா வா!

    டாக்ஸியைப் பிடிப்பதற்குள் அடுத்த ஐந்து நிமிடம் ஓட...

    மரகதம் தன் தொண்ணூறு கிலோ உடம்பை அதற்குள் திணித்து...

    டாக்ஸி புறப்பட...

    சீக்கிரம் போப்பா, ரயிலைப் புடிக்கணும்.

    கோவைதானே! அரை அவருக்கு மேல இருக்குதே!

    க்ளோக் ரூம்ல போய் சாமானை வேற எடுக்கணும், அதுக்கு எவ்ளோ நேரமாகுமோ?

    டாக்ஸி பதினைந்து நிமிடங்களில் கோவை ரயில் நிலையத்தின் முன் போய் நிற்க...

    இறங்கிப் பணத்தைக் கொடுத்துவிட்டுத் திரும்பினார் சத்தயமூர்த்தி.

    என்னங்க!

    என்னடீ, சொல்லித் தொலை!

    வயித்துவலி தாங்கமுடியலை. இங்க எங்காச்சும்...

    சனியனே... கருமாந்திரப் பீடை! அர்ச்சனை செய்து கொண்டே, யாரிடமோ விசாரித்து டாய்லெட்டைக் காட்டி விட்டு, தோ பாரு, நான் போய் க்ளோக் ரூம்ல இருக்கற சாமான்களை எடுத்துட்டு வந்திர்றேன். நீ இதே எடத்துல நில்லு, நேரமாச்சு, சீக்கிரம் வா!

    க்ளோக் ரூமை நெருங்கிய போது சின்னதாக ஒரு வரிசை இருந்தது.

    அய்யோ... 1:35

    தன் முறை வந்ததும் தயாராக வைத்திருந்த ரசீதைக் கொடுத்து விட்டு உள் பக்கமாகப் போய் தன் பெட்டியை வாங்கிக் கொண்டார்.

    வீலர் பொருத்தப்பட்ட அந்த இடுப்புயர வி.ஐ.பி. பெட்டி நகரமுடியாமல் நகர்ந்தது. அதை உருட்டிக் கொண்டு வந்து மெயின் ஹாலில் வைத்துவிட்டு நிமிர்ந்த போதுதான் தன் தவறு புரிந்தது.

    ‘மரகதத்தை இங்க நிக்கச் சொல்லியிருக்கணும்! நான் சொன்ன இடத்தை விட்டு ஒரு அங்குலம் நகர மாட்டா. இதையும் எடுத்துட்டா போக முடியும்? ரயிலுக்குப் பத்து நிமிடம் கூட இல்லையே!’

    பக்கத்தில் திரும்பிப் பார்த்தபோது தன்னைப் போலவே பெரிய பெட்டியை வைத்துக் கொண்டு திருதிருவென ஒருவன் விழித்துக் கொண்டிருந்தான்.

    எக்ஸ்க்யூஸ் மீ, ஒரு நிமிஷம் என் பெட்டியைப் பார்த்துக்க முடியுமா?

    அவன் மெள்ளச் சிரித்து, நோ ப்ராப்ளம்! என்றான்.

    சத்தியமூர்த்தி அகலமாகக் கால்களைப் பதித்து டாய்லெட்டை நெருங்கினார். அப்போதுதான் மரகதம் வெளியே வந்து கொண்டிருந்தாள்.

    சீக்கிரம் வாடீ... அஞ்சு நிமிஷம்தான் இருக்கு!

    அவள் மூச்சிரைக்கப் பின்னால் ஓடிவர, அவனிடமிருந்து பெட்டியை வாங்கி, அவசர தேங்க்ஸை உதிர்த்து விட்டு அதைச் சரசரவென இழுத்துக் கொண்டு ஏறத்தாழ ஓடத் தொடங்கினார்.

    படிக்கட்டுகளில் மரகதம் மூச்சிரைக்க, முட்டியைப் பிடித்துக் கொண்டு ஏற...

    பயணிகள் கவனத்திற்கு! சென்னை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் இன்னும் சில நிமிடங்களில்...

    அத்தனை படிக்கட்டுகளையும் கடந்த சத்தியமூர்த்தி, எந்தக் கோச் என்பது சட்டென நினைவுக்கு வராமல் போக, சரி வெஸ்டிப்யூல் இருக்கே, போயிரலாம்! சீக்கிரம் வா மரகதம்!

    கதவை மொய்த்திருந்த கூட்டத்தை விலக்கி, மரகதத்தைத் திணித்துவிட்டுப் பெட்டியை உள்ளே நுழைத்ததும் ரயில் நகரத் தொடங்கியது.

    அவரும் தாவி ஏறிக் கொண்டார்.

    பர்ஸைப் பிரித்து டிக்கெட்டை எடுத்தார். ‘டி’ கோச்.

    இது என்ன கோச்?

    ஜி என்றது ஒரு குரல்.

    இடது பக்கமா நட மரகதம்!

    அசைந்து அசைந்து நகர்ந்தாள் மரகதம்

    சரியான கோச்சை அடைந்து சீட் நம்பர் 42, 43 ஐத் தேர்ந்தெடுத்து, ஏற்கனவே தவறாக உட்கார்ந்திருந்த நபரை எழுப்பி, அதில் உட்காருவதற்குள் ரயில் திருப்பூரை நெருங்கி விட்டது.

    அப்பாடா, முடியலை!

    எரிச்சலோடு அவளைப் பார்த்தார். தாழ்ந்த குரலில், ஸூட் கேஸாடீ இது? பொண கனம்! ஒரு நாலு நாள் டூருக்கு வீட்ல இருக்கற சகல துணிமணிகளும் வேணுமா? கை விட்டுப் போச்சு!

    கோயில் குளம்னு போனா பட்டுப் புடவைங்க வேணாம்? தோளில் அவள் ‘ணங்’கென்று இடித்துக் கொள்ள சிரிப்பு வந்தது சத்தயமூர்த்திக்கு.

    என்னங்க... பசிக்குது!

    சாகாதே... கொண்டு வருவாங்க.

    காபியும், வடை, கட்லெட் இத்யாதிகளும் வர, மரகதம் மளுக்கென்று முறித்து முறித்து உள்ளே தள்ள ஆரம்பித்தாள்.

    என்னங்க பெட்டிய வெளில எடுங்க, வாட்டர் பேக், டவல் எல்லாம் எடுக்கணும்!

    கீழே தள்ளியிருந்த பெட்டியை ஸீட்டுக்கடியிலிருந்து இழுத்து முன் பக்கம் வைத்தார் சத்தியமூர்த்தி... "இந்தா சாவி, தொறந்து

    Enjoying the preview?
    Page 1 of 1