Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Meendum Vivekin Visparoopam
Meendum Vivekin Visparoopam
Meendum Vivekin Visparoopam
Ebook189 pages1 hour

Meendum Vivekin Visparoopam

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Meendum Vivekin Visparoopam

Read more from Rajeshkumar

Related to Meendum Vivekin Visparoopam

Related ebooks

Related categories

Reviews for Meendum Vivekin Visparoopam

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Meendum Vivekin Visparoopam - Rajeshkumar

    ராஜேஷ்குமார்

    ஒவ்வொரு மனிதனுக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை அவசியம். ஆனால் மனிதர்களில் சிலர் மகிழ்ச்சியாய் இருப்பது என்றால் மது அருந்துவது, போதை மருந்தை உட்கொள்ளுவதுதான் என்று நினைக்கிறார்கள். மதுவைக் காட்டிலும் மோசமானது போதைப் பொருட்கள். மருந்துப் பொருட்கள் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக இவை விற்கப்படுகின்றன; வாங்கப்படுகின்றன; உபயோகப்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் போதை மருந்து வியாபாரம் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களில் அமோகமாக நடைபெற்று வருகின்றன. போதை மருந்துகளில் எத்தனையோ வகைகள் உள்ளன. இதில் சூப்பர் ஸ்டார் எது தெரியுமோ? இரண்டாவது அத்தியாயத்தில் பார்ப்போம்.

    1

    நேரம் நள்ளிரவு.

    மீனம்பாக்கம் ஏர்போர்ட்.

    டிபார்ச்சர் டெர்மினலில் விவேக்கும் விஷ்ணுவும் காரினின்றும் இறங்கிக் கொண்டார்கள். இரண்டு பேர்களின் கைகளிலும் போர்ட்டபிள் சூட்கேஸ்கள். கொஞ்சம் குளிரோடு இருந்த விமான நிலையம் வெளிச்சப் புள்ளிகளோடு தெரிய, இருவரும் லௌன்ஞ்சில் நடைபோட்டார்கள்.

    பாஸ்...! இந்த அர்த்தராத்திரியில் நாம எதுக்காக டில்லி புறப்பட்டுப் போறோம்...? நான் சின்னப் பையன். சஸ்பென்ஸை தாங்கிக்க முடியாது.

    விவேக் சிரித்தான். நீ குதுப்மினாரைப் பார்த்தது இல்லைன்னு சொன்னதால உன்னைக் கூட்டிட்டுப் போலாம்ன்னு ஆசைப்பட்டேன். டெல்லியிலிருந்து அப்படியே ஆக்ரா போய் தாஜ்மஹாலையும் பார்த்துட்டு...

    விளையாடாதீங்க... பாஸ்...! ‘நாம டெல்லிக்குப் புறப்பட்டுப் போகணும். ஒரு நாலு நாள் வேலை. ஒரு போர்ட்டபிள் சூட்கேஸோடு வீட்டுக்கு வந்து சேரு’ன்னு ராத்திரி பத்து மணிக்கு போன் பண்ணிச் சொன்னீங்க... அப்ப நான் மயிலாப்பூர் மாமி மெஸ்ஸில் ரெண்டாவது ப்ளேட் வடகறியை ஹதம் பண்ணிட்டு இருந்தேன். வடகறிக்கு அப்புறமாய் ஆர்டர் பண்ணியிருந்த பட்டர் அடை தோசையையும், ஆனியன்ரவா தோசையையும், ஸ்பெஷல் ஃப்ரைட் ரைஸையும், பன்னீர் மசாலா நூடுல்ஸையும், லெமன் சேவையையும் கான்சல் பண்ணிட்டு அரக்கப்பரக்க வீடுவந்து சேர்ந்து துணிமணியை பேக் பண்ணிட்டு அரைமணி நேரத்துக்குளே உங்க வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். ரூபலா மேடம் சப்பாத்தி குருமா சாப்பிடச் சொன்னாங்க. எல்லாத்தையும் தியாகம் பண்ணிட்டு கார்ல ஏறினோம். ‘எங்கே போறோம் பாஸ்’ன்னு கேட்டதுக்கு ‘டெல்லி’ன்னு சொல்லிட்டு, கையில் வெச்சிருந்த ஏதோ ஒரு ஃபைலைப் புரட்டிப் பார்த்துகிட்டே வந்தீங்க... நானும் உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு விட்டுட்டேன்... இப்போ ஃப்ரீயா லௌன்ஞ்சில் நடந்துட்டு இருக்கோம். இப்பவாவது சொல்லுங்க பாஸ்... நாம எதுக்காக டெல்லி போறோம்?

    விஷ்ணு கேட்டுக்கொண்டு இருக்கும் போதே விவேக்கின் செல்போன் மெலிதாய் ரிங்டோனை வெளியிட்டது.

    உங்க செல்போனுக்கும் என்னைப் பார்த்தா இளப்பம் பாஸ். நாம ஏதாவது முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசிட்டிருக்கும் போதுதான் அது வாயைத் திறக்கும். இப்பவும் திறந்து இருக்கு. எடுத்துப் பேசுங்க பாஸ்... நாம எதுக்காக டெல்லி போறோம்ங்கிறதை நான் டெல்லி போயே தெரிஞ்சுக்கிறேன்.

    விவேக் செல்போனை எடுத்து இடது காதுக்குக் கொடுத்தான். மறுமுனையில் பேசுகிற நபர் யார் என்று தெரிந்ததும் நடந்து கொண்டிருந்தவன் சட்டென்று நின்றான். எஸ்... ஸார்...!

    .............

    எஸ்... ஸார்...

    .............

    எஸ்... ஸார்...

    .............

    ஓ.கே.... ஸார்... செல்போனை அணைத்தான் விவேக். விஷ்ணுவைத் திரும்பிப் பார்த்தான். இப்ப உனக்குத் தெரிஞ்சிருக்குமே நாம எதுக்காக டெல்லி போறோம்ன்னு...!

    ரொம்பவும் தெளிவாய் தெரிஞ்சுடுச்சு பாஸ். எனக்கு ஒரு இடத்துல கூட சந்தேகம் வரலை... இவ்வளவு தெளிவாய் உங்களைத் தவிர வேற யாரும் சொல்ல முடியாது. தேங்க்யூ வெரிமச் பாஸ்...

    இருவரும் ஸ்கேனிங் பிளாட்பாரத்தில் நின்று அது ஓ.கே. கொடுத்ததும் வெளியே வந்தார்கள்.

    கண்ணாடிச் சுவர்க்கு அப்பால் ரன்வேயின் வெளிச்சப்புள்ளிகளுக்கு நடுவே அந்த விமானம் நின்றிருந்தது.

    பாஸ்! நாம எதுக்காக டெல்லி போறோம், அங்கே என்ன பண்ணப் போறோம்ங்கிறதை ரொம்பவும் விளக்கமாய் சொல்லிட்டீங்க. இருந்தாலும் ஒரு சந்தேகம்.

    என்ன...?

    ஃப்ளைட்ல மொத்தம் எத்தனை பேர்?

    அஞ்சு பேர்

    அஞ்சு பேர்தானா...?

    ஆமா... நீ, நான், பைலட், கோ-பைலட், அப்புறம் ஒரு ஸ்டூவார்ட்...

    ஸ்டூவார்டா... அப்படீன்னா?

    பொதுவா விமானத்தில் ஏர்ஹோஸ்டஸ்தான் உபசரிப்பாளரா வருவாங்க. ஸ்டூவார்ட்ன்னா ஆண் உபசரிப்பாளர். ஏர்ஹோஸ்டஸ்ன்னா பெண் உபசரிப்பாளர்...

    பாஸ்! இந்த ஒரு ராத்திரியில் மற்ற பயணிகள் யாரும் இல்லாமல் நீங்க, நான், பைலட், கோ-பைலட், ஸ்டூவார்ட் அஞ்சு பேரும் எதுக்காக டெல்லி போறோம்...!

    என்னடா இது...! கொஞ்ச நேரத்துக்கு முந்திதான் எனக்கு எல்லாம் தெரியும். புரிஞ்சு போச்சுன்னு சொன்னே?

    அது வயிற்றெரிச்சலில் சொன்னது பாஸ்

    அப்படியா...? சரி... இப்ப சொல்றேன். நாம எதுக்காக டெல்லி போறோம்ன்னா...

    சொல்லுங்க பாஸ்...

    இப்போ மணி பனிரெண்டரை... ஃப்ளைட் சரியாய் ஒரு மணிக்கு கிளம்புது. சென்னையிலிருந்து டெல்லிக்கு ஃப்ளையிங் ஹவர்ஸ் மூணு மணி நேரம். சரியாய் நாலுமணிக்கெல்லாம் டெல்லி போய்ச் சேர்ந்துடுவோம். டெல்லி போய்ச் சேர்ந்ததும் நேரா ஏர்போட்டிலிருந்து...

    எக்ஸ்யூஸ்மீ ஸார்...

    விவேக் தனக்குப் பின்புறம் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தான். ஏர்போர்ட் ஊழியர்களுக்கே உரித்தான யூனிஃபார்மில் இளைஞன் ஒருவன் நின்றிருந்தான்.

    எஸ்!

    ஸார்... ஏர்போர்ட் மானேஜர் உங்ககிட்டே பேசணும்ன்னு சொன்னார்.

    எங்க இருக்கார்?

    ப்ளீஸ் கம் வித் மீ...

    பவ்யமாய் சொல்லிவிட்டு அவன் நடக்க ஆரம்பித்துவிட, விவேக்கும் விஷ்ணுவும் பின்தொடர்ந்தார்கள்.

    பாஸ் விஷ்ணு மெல்ல முனகினான்.

    ம்

    எனக்கு இன்னிக்கு நேரமே சரியில்லை பாஸ். மாவு விக்கப் போனா காத்தடிக்குது. உப்பு விக்கப் போனா...

    மழை பெய்யுதா...?

    ஸாரி பாஸ்... இந்தப் பழைய பழமொழிதான் எனக்குத் தெரியும்...! பாஸ்... நம்ம டெல்லி விசிட் எதுக்காக?

    சொல்றேன்! இப்ப பேசாமே வா! ஏர்போர்ட் அந்த நேரத்துக்கு கும்பல் இல்லாமல் வெறிச்சோடிப் போயிருந்தது. போர்டிங்கை எதிர்பார்த்து சில பயணிகள் தூக்கக் கலக்கத்தோடு பாலிவினைல் நாற்காலிகளில் காத்திருந்தார்கள். பார்க்கிற திசையெல்லாம் வண்ண மயமான விளம்பர எழுத்துக்கள்.

    விவேக்கும் விஷ்ணுவும் அந்த இளைஞனைப் பின்தொடர்ந்து மாடிப்படிகளில் ஏறி திடும்மென்று எதிர்பட்ட அந்த அறைக்குள் நுழைந்தார்கள். இளைஞன் கதவைச் சாத்திக் கொண்டு போய்விட ஏர்போர்ட் ஆபீஸர் அட்சய்குமார் மேசைக்குப் பின்னால் வெள்ளுடுப்பில் கிடைத்தார். நடுத்தர வயது. தொப்பை பெரிதாய் தெரிந்தது.

    ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ் அட்சய்குமார் சொல்லி விவேக்குடன் கை குலுக்கினார். விவேக் ஆங்கிலத்தில் கேட்டான்.

    ஏதோ பேச வேண்டுமென்று...?

    எஸ்... எஸ்... ப்ளீஸ் ஸீட்டட் மிஸ்டர் விவேக்

    விவேக்கும் விஷ்ணுவும் உட்கார்ந்தார்கள். அட்சய்குமாரும் எதிரில் இருந்த நாற்காலியை நிரப்பிக் கொண்டே ஹேவ் சம் டீ என்றார்.

    நோ தேங்க்ஸ்...

    சில விநாடிகள் மௌனமாய் இருந்த அட்சய்குமார் தன் மேஜையின் இழுப்பறையைத் திறந்து ஒரு ஃபைலை எடுத்தார். ஃபைலின் மேல் சிவப்பு ஸ்கெட்ச் பேனாவால் ட்ரிபிள் ‘எக்ஸ்’ போடப்பட்டு அது பார்வைக்கும் பளிச்சென்று

    Enjoying the preview?
    Page 1 of 1