Thadaiyai Udai
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsOru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5
Related to Thadaiyai Udai
Related ebooks
Vivek In Tokyo Rating: 0 out of 5 stars0 ratingsEnna Satham Indha Neram? Rating: 4 out of 5 stars4/5Velvet Kuttrangal Rating: 0 out of 5 stars0 ratingsMugamatra Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsKraim Dot Kaam Rating: 0 out of 5 stars0 ratingsPiragu Naan Kondren Rating: 5 out of 5 stars5/5Sivappu Udai Thevathai! Rating: 0 out of 5 stars0 ratingsAugust 5 Athikalai Rating: 0 out of 5 stars0 ratings50kg Tajmahal Rating: 4 out of 5 stars4/5Cyanide Saamraajjiyam Rating: 5 out of 5 stars5/5Ini Varum Nimishangal Rating: 0 out of 5 stars0 ratingsVithi Puthithu Rating: 5 out of 5 stars5/5Vanakkathukkuriya Kutram Rating: 5 out of 5 stars5/5Muyandral Madivai! Rating: 3 out of 5 stars3/5Call From Tokyo Rating: 0 out of 5 stars0 ratingssaagavaram Rating: 0 out of 5 stars0 ratingsTheepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsEllam Poi Rating: 0 out of 5 stars0 ratingsTajmahal Nizhal Rating: 0 out of 5 stars0 ratingsUthra! Uyir Thaa! Rating: 0 out of 5 stars0 ratingsKannamoochi Rating: 0 out of 5 stars0 ratingsSorry, Konnutten! Rating: 3 out of 5 stars3/5Paarkathey! Patharathey! Rating: 5 out of 5 stars5/5Marupadiyum Oru Thadavai! Rating: 0 out of 5 stars0 ratingsPenney Anitha Rating: 2 out of 5 stars2/5Appuram... Anitha...? Rating: 5 out of 5 stars5/5Antha 69 Naatkal! Rating: 0 out of 5 stars0 ratingsL Board Murder Rating: 0 out of 5 stars0 ratingsUrainthu Pona Unmai Rating: 0 out of 5 stars0 ratingsNamruthavin Naal Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Thadaiyai Udai
0 ratings0 reviews
Book preview
Thadaiyai Udai - Rajeshkumar
ராஜேஷ்குமார்
‘புகை பிடித்தல் உடல் நலனுக்கு தீங்கானது’ என்னும் வாசகத்தை சிகரெட் பாக்கெட்டுகளின் மீது முதல் முதலாய் அச்சடித்த நாடு எது என்ற கேள்விக்கு பெரும்பாலானவர்கள் சொல்லும் பதில் ‘இந்தியா’ என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அந்த பெருமைக்குரிய நாடு நம் நாடு அல்ல. அமெரிக்காதான்! நுரையீரல் சுவாசக் கோளாறுகளுக்கும், தொண்டை புற்றுநோய்க்கும் புகை பிடிக்கும் பழக்கம்தான் காரணம் என்பதை அமெரிக்க மருத்துவ வல்லுநர்கள் உறுதிபடத் தெரிவித்ததும் அப்போது - அதாவது 1970-ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நிக்ஸன் சிகரெட் பாக்கெட்டுகளின் மீது எச்சரிக்கை வாசகம் எழுதும் சட்டத்தைக் கொண்டு வந்தார். அதன்பிறகு அடுத்த கட்டமாக சிகரெட் தொடர்பான விளம்பரங்களைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்காவின் தடை உத்தரவுக்கு பெரும்பாலான நாடுகள் பச்சைக் கொடி காட்டினாலும் சில நாடுகள் மட்டும் ‘சர்த்தான் போய்யா......நீயும் உன்னோட சட்டமும்’ என்று சொல்லிவிட்டது. அது எந்த எந்த நாடுகள் என்பதை இரண்டாவது அத்தியாயத்தில் பார்ப்போம்.
1
"அம்மா... குழலி!"
உள்ளறையில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த தன் மாமனார் வேதாச்சலத்தின் குரல் கேட்டு சமையலறையினின்றும் எட்டிப்பார்த்தாள் குழலி.
என்ன மாமா...?
வாசல்ல யாரோ குரல் தர்றாங்க... போய் யார்ன்னு பாரம்மா.
கேஸ் ஸ்டவ்வை நிதானமாய் எரியவிட்ட குழலி, ஈரக்கையை சேலைத்தலைப்பால் ஒற்றிக்கொண்டே சமையலறையினின்றும் வெளிப்பட்டாள். அந்த சிறிய ஹாலைக் கடந்து வாசலில் இருந்த கேட்டுக்குப் பார்வையைக் கொண்டு போனாள்.
அந்த நடுத்தர வயதுப் பெண் பார்வைக்குக் கிடைத்தாள். வயது நாற்பத்தைந்து இருக்கலாம். சிவந்த நிறம். நேர்த்தியாய் தலை சீவப்பட்டு மினுமினுப்போடு நரையோடிய கொண்டை தெரிந்தது. அளவாய் சதை பிடித்த முகத்தில் வெள்ளி பிரேமிட்ட கண்ணாடி இடம் பிடித்து முகத்துக்கு ஒரு தனி அழகைக் கொடுத்துக் கொண்டிருந்தது. காம்பௌண்ட் கேட்டுக்கு வெளியே ரோட்டோர வேப்பமரத்தின் நிழலில் ஒரு மாருதி ஆல்டோ சிவப்பு நிறத்தில் நின்றிருந்தது. யார் இது? யோசித்துக் கொண்டிருக்கும்போதே-
அந்தப் பெண் குழலியைப் பார்த்ததும் கை குவித்தாள்.
வணக்கம்... குழலி!
வணக்கம்... நீ... நீங்க...-?
என்னோட பேரு ஜமுனா ராணி! மேல்மருவத்தூர்க்குப் பக்கத்தில் ‘குட் ஹோப்’ ஆர்ட்ஸ் காலேஜில் பிரின்ஸிபாலாய் இருக்கேன்!
குழலியின் முகம் மலர்ச்சிக்குப் போயிற்று. நான் இந்த காலேஜ் பேரைக் கேள்விப்பட்டிருக்கேன். பப்ளிக் மத்தியில் இந்த காலேஜுக்கு நல்ல பேர் இருக்கு... உள்ளே வாங்க...!
தேங்க்யூ!
ஜமுனா ராணி உள்ளே வந்தாள்.
பேப்பர் படித்துக் கொண்டிருந்த தன் மாமனார் வேதாச்சலத்திற்கு ஜமுனா ராணியை அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு காலியாய் இருந்த நாற்காலியைக் காட்டினாள்.
உட்காருங்க மேடம்!
அவள் உட்கார்ந்தாள்.
"நல்ல வெய்யில் நேரத்துல வந்து இருக்கீங்க...? மோர் தரட்டுமா...?
அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்...! நான் எதுக்காக உன்னைப் பார்க்க வந்திருக்கேன்னு சொல்லிடறேன்...!
சொல்லுங்க மேடம்!
குழலியும் ஒரு நாற்காலிக்குப் போய் சாய்ந்தாள்.
ஜமுனா ராணி தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டு பேச்சை ஆரம்பித்தாள்.
குழலி! உனக்கு என்ன வயது?
இருபத்தேழு!
ஜனனி கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியையாய் ஒர்க் பண்ணிகிட்டே பட்டிமன்ற மேடைகளிலேயும் பங்கெடுத்துக்கிறே போலிருக்கு?
குழலியின் உதடுகளில் ஒரு புன்முறுவல் ஒட்டிக் கொண்டது.
ஆமா!
உன்னோட பட்டிமன்றப் பேச்சுக்களைக் கேட்டிருக்கேன். நல்லாயிருக்கு. நீ எடுத்து வைக்கிற கருத்துக்கள் கொஞ்சம் புரட்சிகரமாய் இருந்தாலும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அவையெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியவையாய் இருக்கு!
உங்க பாராட்டுக்கு நன்றி! ஆனா நீங்க என்னைப் பார்க்க வந்தது எதுக்காகன்னு இன்னமும் சொல்லவேயில்லையே?
இதோ விஷயத்துக்கு வந்துட்டேன்... நான் பிரின்சிபாலாய் இருக்கிற ‘குட் ஹோப்’ ஆர்ட்ஸ் காலேஜ் வெள்ளிவிழா ஆண்டு இந்த வருஷம் வருது. இந்த விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தப்போறோம். அதுல ஒரு நிகழ்ச்சி பட்டிமன்றம். அந்த பட்டிமன்றத்துக்கு நீதான் தலைமையேற்று நடத்தித் தரணும்.
குழலி மௌனமாய் இருந்தாள்.
ஜமுனா ராணி கேட்டாள். என்னம்மா! பேச்சையே காணோம். நான் வேலை பார்க்கிற கல்லூரியில் ஆயிரத்து அறுநூறு மாணவிகளுக்கு மேல் படிக்கறாங்க. பெரும்பாலான மாணவிகள் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் உன்னோட பட்டிமன்றம் இருக்கணும்னு விரும்பறாங்க. நீ எந்த மறுப்பும் சொல்லாமே ஒத்துக்கணும்.
அதுவரைக்கும் ஒன்றும் பேசாமல் இருந்த வேதாச்சலம் ஜமுனா ராணியை ஏறிட்டார்.
நீங்க விஷயம் தெரியாமே வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்.
விஷயமா... என்ன விஷயம்?
குழலி இப்போ பட்டிமன்றங்களிலோ விவாத மேடைகளிலோ கலந்துக்கறது இல்லை!
என்ன சொல்றீங்க...?
உண்மையைச் சொல்லிட்டிருக்கேன்...!
ஏன்... என்ன காரணம்..?
வீணான பிரச்சினைகளை தவிர்க்கத்தான்!
அப்படி என்ன பிரச்சினைகள்?
குழலி குறுக்கிட்டாள். மேடம்...! நான் மேடை ஏறிட்டா என்னோட மனசுக்கு எது சரின்னு படுதோ அதைத்தான் பேசுவேன். பட்டிமன்றங்கள் வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாய் இல்லாமல் அறிவுபூர்வமான நல்ல சிந்தனைகளை உள்ளடக்கியதாய் இருக்கணும்ங்கிறது என்னோட எண்ணம். ஆறுமாசத்துக்கு முன்னாடி நான் விவாதமேடையில் பேசும்போது ஆண்களுக்கு எதிராய் சில கருத்துக்களைச் சொன்னேன். அது ஒரு பெரிய பிரச்சினையாயிடுச்சு. அந்த பிரச்சினையை மதரீதியாகவும், இன ரீதியாகவும் பார்த்த சில பேர் என் வீட்டுக்கு முன்னாடி வந்து மறியல், ஆர்ப்பாட்டம்ன்னு பண்ண - விஷயம் போலீஸ்வரைக்கும் போயிடுச்சு. அதனால இனிமேல பட்டிமன்றம், விவாத மேடை போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக்கிறது இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன்.
ஒரு பெண் துணிச்சலாய் இருந்தாலே ஆண்களுக்குப் பிடிக்காது... என்னைப் பொறுத்தவரைக்கும் பெண்கள் மனம் திறந்து பேச வேண்டும். ஆனால் மனதில் பட்டதையெல்லாம் பேசக்கூடாது. ஆனா உன்னைப் பொறுத்தவரைக்கும் நீ பேசினது எல்லாமே சரின்னுதான் சொல்வேன்...!
உங்க பாராட்டுக்கு நன்றி!
நன்றி இருக்கட்டும். நா ஒண்ணு சொன்னா நீ தப்பா எடுத்துக்கக்கூடாது.
சொல்லுங்க மேடம்... எனக்கு அம்மாவும் கிடையாது. அத்தையும் கிடையாது. எனக்கு இந்த உலகத்துல இப்ப இருக்கிற உறவுகள் ரெண்டே ரெண்டுதான். ஒரு உறவு என்னுடைய கணவர். இன்னொரு உறவு என்னோட மாமனார். நீங்க என்ன சொல்லப் போறீங்க... சொல்லுங்க...!
"உன்னை மாதிரியான பெண்கள் இது மாதிரியான சில சில்லறை சலசலப்புகளுக்கெல்லாம் பயப்படக்கூடாது. சாதிக்க நினைப்பவர்கள்தான் அதிகமாக சோதிக்கப்படுகிறார்கள்ன்னு சொல்லுவாங்க. ஏன், நீ கூட ஒரு பட்டிமன்ற மேடையில் பேசியிருக்கே! ‘பெண்கள் தண்ணீர் மாதிரி! ஓடிக்கொண்டே இருந்தால் ஆறு. ஓடாமல் இருந்தால் தேங்கிய சாக்கடை.’- இந்த வாசகம் நீ சொன்னது. உனக்கு ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்...!"
நல்லாவேயிருக்கு!
அப்புறம்... ஏன் பயப்படறே?
நான் பயப்படலை மேடம்..... மேடையில் நான் எடுத்து வைக்கிற கருத்துக்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காதபோது நாம் விலகி இருக்கிறது நல்லது இல்லையா...?
இதுதான் உன்னோட முடிவா...?
எஸ் மேடம்...! உங்களுடைய கல்லூரி இந்த வெள்ளிவிழா மட்டும் இல்லை. பொன்விழா, வைரவிழா, நூற்றாண்டு விழான்னு பெரிய அளவில் விழா கொண்டாட என் வாழ்த்துக்கள்!
"நீ எங்களோட கல்லூரி விழாவில்