Pesum Rojakkal
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Ularaatha Raththam Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsUchi Nila Rating: 0 out of 5 stars0 ratings
Related to Pesum Rojakkal
Related ebooks
Vivek In Tokyo Rating: 0 out of 5 stars0 ratingsThalai Illaatha Silai Rating: 5 out of 5 stars5/5Athirum Uthiram Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Kuttrangal Rating: 0 out of 5 stars0 ratingsL Board Murder Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Hospital, Marupadiyum Iranthavan and Oru latsam Vinaadikal Rating: 2 out of 5 stars2/5Vellai Roja Karuppu Poonai Rating: 0 out of 5 stars0 ratingsInbavin Irandavathu Nizhal Rating: 5 out of 5 stars5/5Only Vivek! Rating: 0 out of 5 stars0 ratingsAabathukku Oru Azhaipithazh Rating: 1 out of 5 stars1/5Vaaimaiye Kollum Rating: 5 out of 5 stars5/5Oru Theeppantham Theebamagirathu and Pasparas Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Kovaiyil Oru Kutram Rating: 5 out of 5 stars5/5Arai Vinaadi Aniyaayam Rating: 0 out of 5 stars0 ratingsMatroru Mahaabaratham Rating: 3 out of 5 stars3/5Kanavugal Inge Virkkapadum Rating: 0 out of 5 stars0 ratingsDecember Nila and Irandil Ondru Paarthu Vidu Rating: 0 out of 5 stars0 ratingsPachai Poiyum Sivappu Unmaiyum Rating: 0 out of 5 stars0 ratingsLast Bullet Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Alligal Rating: 0 out of 5 stars0 ratingsMiss Devathai 1996 Rating: 0 out of 5 stars0 ratingsVivekin 1000 Nimishangal Rating: 5 out of 5 stars5/5Iruttil Irandu Per Rating: 5 out of 5 stars5/5Pulip Pori Rating: 0 out of 5 stars0 ratingsSivappu Iravu Rating: 0 out of 5 stars0 ratingsRatthathil Oru Kelvikuri! Rating: 4 out of 5 stars4/5Muthal Pagal Rating: 5 out of 5 stars5/5Sivappu Thendral Rating: 0 out of 5 stars0 ratingsNirangal Rating: 3 out of 5 stars3/5
Related categories
Reviews for Pesum Rojakkal
0 ratings0 reviews
Book preview
Pesum Rojakkal - Rajeshkumar
ராஜேஷ்குமார்
தாவரங்களின் மொழி
காற்று வீசினால் மட்டும்தான் செடிகொடிகள் அசையும் என்று எல்லோரும் நம்பிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் காற்று வீசாத நேரங்களில்கூட செடிகொடிகள் அசைகின்றன என்றும், அந்த அசைவுகள் மூலம் மனிதர்கள் உணர முடியாத சில சத்தங்களை எழுப்பி தங்களுக்குள் பேசிக் கொள்கின்றன என்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாவர ஆராய்ச்சி வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர். அப்படி பேசிக் கொள்ளும் போது அல்ட்ராசோனிக் மூலமாக மட்டும் உணரக்கூடிய சில சப்தங்கள் உண்டாகின்றன. பூமிக்கு அடியில் உள்ள வேர்பாகங்கள் நீர் ஆதாரம் சரியாக இல்லாத பட்சத்தில் தாவரத்தின் மற்ற பாகங்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை கொடுக்குமாம். இந்த எச்சரிக்கை வந்ததுமே செடிகள் புதிதாய் தளிர் இலைகளை உருவாக்காமல் எல்லா வேலைகளையும் நிறுத்தி வைக்குமாம்.
1
சென்னையின் ஒரு முற்பகல் நேரம். அமிலத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட மாதிரி வெய்யில் உடம்பை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் அமெரிக்க தூதரகத்துக்கு முன்பு ஒரு நீண்ட க்யூ - விசா வாங்குவதற்காக -- தலைகளில் கர்ச்சீப்களைப் போட்டபடி காத்துக் கொண்டிருந்தது. அண்ணாசாலையில் வாகனங்கள் ஒரு அவசர வேகத்தோடு தலைதெறிக்க ஓட, வேதிகா தன்னுடைய பிங்க் நிற ஸ்கூட்டியை டூ வீலர் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு தன் தோளில் தொங்கிக் கொண்டிருந்த கைப்பையிலிருந்து செல்போனை எடுத்தாள். 23 வயதாகும் வேதிகாவுக்கு அழகான முகம். அதில் தேன் நிறக் கண்கள். பீட் ரூட் சாறுபட்ட தினுசில் சதைப்பிடிப்பான ஈரம் மின்னும் உதடுகள். சின்னச் சின்ன தங்கத்துணுக்குகளோடு மெலிதான காது மடல்கள்.
செல்போனில் எண்களை ஒற்றிவிட்டு நிதானமான குரலில் பேச ஆரம்பித்தாள்:
ஸ்வாதி! நான் வேதிகா...!
மறுமுனையில் அந்த ஸ்வாதி பேசினாள்:
என்ன வேதி...! எம்பஸிக்கு முன்னாடி வந்துட்டியா?
வந்துட்டேன்..!
சரி...! பின்பக்கம் ஒரு கேட் இருக்கு... அங்கே வந்துடு...! கேட்ல செண்ட்ரி இருப்பார். நான் ஏற்கெனவே செண்ட்ரிகிட்டே உன்னைப் பத்தி சொல்லிட்டேன். வேதிகான்னு உன்னோட பேரைச் சொல்லு. அவர் அலவ் பண்ணிடுவார்... நீ நேரா காரிடார்க்கு வந்துடு... வெயிட் பண்ணிட்டு இருப்பேன்...! ஒரு அரைமணி நேரத்துக்குள்ளே நீ உன்னோட வேலையை முடிச்சுட்டு போயிட்டே இருக்கலாம்!
ரொம்ப தேங்க்ஸ் ஸ்வாதி...!
இதுக்கெல்லாம் போய் யாராவது தேங்க்ஸ் சொல்லுவாங்களா?
எனக்கு என்னோட மேட்டர் இமயமலை மாதிரி தெரியுது. உனக்கு அது பரங்கி மலை... நான் அன்னிக்கு உன்னை ‘ஸ்கை வாக்’ மாலில் பார்த்தது என்னோட அதிர்ஷ்டம்...!
புலம்பாமே எம்பஸிக்கு பின்பக்கம் வா...! எல்லா டாக்குமெண்ட்ஸும் ஒரிஜினலாய் அப்டேட் பண்ணியிருக்கணும். ஏதாவது ஒண்ணு இல்லேன்னாலும் ரிஜக்ட் முத்திரையைக் குத்திடுவார் விசா அத்தாரிடி ஆபீஸர்.
டோண்ட் ஒர்ரி ஸ்வாதி! நீ கேட்ட எல்லா டாக்குமெண்ட்ஸும் சுடச்சுட இருக்கு...
எல்லாத்தையும் ஒழுங்கா ஃபைல் பண்ணியிருக்கியா?
பண்ணியிருக்கேன்!
வந்து சேரு...!
வேதிகா செல்போனின் இணைப்பைத் துண்டித்துவிட்டு அதை கைப் பைக்குள் போட்டுக் கொண்டு எம்பஸியின் பின்பக்கம் இருந்த கேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
பத்தடி நடந்து இருப்பாள்.
அவளுக்கு பின்பக்கம் அந்தக் குரல் கேட்டது.
அம்மா...! ஒரு நிமிஷம்!
வேதிகா திரும்பினாள்.
பார்வைக்கு வெள்ளை யூனிஃபார்ம் தரித்த அந்த நடுத்தர வயது டிரைவர் தட்டுப்பட, என்ன என்பது போல் பார்த்தாள். டிரைவர் தயக்கமான குரலில் கேட்டார்:
நீங்க ‘ஜென்யூன் ஹாஸ்பிடல்’ல வேலை பார்க்கிற நர்ஸ்தானே?
ஆமா...
பேரு வேதிகா..?
ஆமா...!
டிரைவர் திரும்பிப்பார்த்து சாலையின் இடது பக்கம் ஒதுங்கி நின்றிருந்த அந்த க்ரீம் நிற மெர்ஸிடஸ் காரைக் காட்டினார்.
முதலாளியம்மா கார்ல இருக்காங்க. உங்களைப் பார்த்து பேசணும்ன்னு சொன்னாங்க.
யாரு... உங்க முதலாளியம்மா?
பேரு ஞானாம்பிகை. நீங்க வேலை பார்க்கிற ஹாஸ்பிடலில் ஆறுமாசத்துக்கு முன்னாடி அவங்க ஒரு நோயாளியாய் அட்மிட்டாகியிருந்தாங்க. நீங்கதான் பார்த்துகிட்டீங்களாம்.
வேதிகா மலர்ந்தாள். ஓ! அந்த அம்மாவா...? இப்போ எப்படி இருக்காங்க...?
நல்லா இருக்காங்கம்மா...! உங்களைப் பார்த்ததும் காரை ஓரமாய் நிறுத்தச் சொன்னாங்க...!
வேதிகா எம்பஸிக்கு வந்த வேலையை மறந்துவிட்டு அந்தக் காரை நோக்கி வேக வேகமாய் போனாள். காரின் கதவைத் திறந்து வைத்து இருந்த அந்த அறுபத்தைந்து வயது அம்மாள் ஒரு பெரிய புன்னகையோடு கேட்டாள்.
வேதிகா! எப்படியிருக்கே?
நான் நல்லா இருக்கேன்மா..! உங்களுக்கு வயித்துல அந்த ஆப்ரேஷன் நடந்த பின்னாடி எப்படி ஃபீல் பண்றீங்கம்மா?
அந்த வலியெல்லாம் காணாமே போய் ரொம்ப நாளாச்சும்மா. நான் அந்த ஹாஸ்பிடல்ல ஒரு பேஷண்ட்டாய் அட்மிட்டாகியிருந்தப்ப டாக்டர் பன்னீர் செல்வம் கொடுத்த ட்ரீட்மெண்ட்டைக் காட்டிலும் உன்னோட அன்பான, கனிவான கவனிப்புத்தாம்மா என்னை முழுமையாய் குணப்படுத்தி வீட்டுக்கு நல்லபடியா அனுப்பி வெச்சது..!
வேதிகா சிரித்தாள். நான் அப்படி என்னம்மா பெரிசா பண்ணிட்டேன்...? ஒரு பேஷண்ட்கிட்டே ஒரு நர்ஸ் எப்படி நடந்துக்கணுமோ அப்படித்தான் நடந்துகிட்டேன்... அது என்னோட ட்யூட்டி...!
சரி... சரி... நீ ரொம்பவும் தன்னடக்கத்தோடு பேசிட்டிருக்கே! கார்க்குள்ளே வந்து உட்காரு...! ஒரு ரெண்டு நிமிஷம் பேசலாம்.
வேதிகா ஒரு சின்ன தயக்கத்துடன் கார்க்குள் ஏறி உட்கார்ந்தாள். ஞானாம்பிகை அவளுடைய தோளை பரிவாய்த் தொட்டாள்.
இந்த வெய்யில் நேரத்துல இந்தப் பக்கமாய் வந்திருக்கே? என்ன விஷயம்...?யாரையாவது பார்க்க வந்தியா?
ஆமாம்மா...
யாரை?
அமெரிக்கன் எம்பஸியில் என்னோட ஃப்ரண்ட் ஒருத்தி இருக்கா. அவளைப் பார்க்க வந்தேன்... ஒரு விசா சம்பந்தமாய் பேசணும்.
விசாவா..? யார்க்கு?
எனக்குத்தாம்மா...! நான் அடுத்த மாசம் அமெரிக்காவுக்குப் போறேன். அங்கே நியூஜெர்ஸியில் இருக்கிற ‘ஃபர்ஸ்ட் விஷன்’ என்கிற ஒரு கண் ஹாஸ்பிடலில் வேலை கிடைச்சிருக்கு...!
அப்படியா...? கேட்கவே சந்தோஷமாய் இருக்கு! இருந்தாலும் உன்னை மாதிரியான வேலை அர்ப்பணிப்பு எண்ணம் கொண்ட பெண்கள் நம் நாட்ல இருக்கணும்...
நீங்க சொல்றது வாஸ்தவம்தாம்மா..! இருந்தாலும் என்னோட குடும்பத்து பொருளாதார நிலைமையை மேன்மைக்கு கொண்டு வரணும்ன்னா நான் வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிக்கணும்... எனக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும் தான். தம்பி ஒருத்தன் ஃபர்ஸ்ட் இயர் என்ஜினிரிங் படிச்சிட்டிருக்கான். அவன் படிப்பை முடிச்சு வேலைக்குப் போகிறவரைக்கும் குடும்பத்து பொருளாதார சுமையை நான்தான் சுமக்கணும்... தம்பி தலை தூக்கிட்டான்னா அதுக்கப்புறம் நான் இந்தியாவுக்கு வந்துடுவேன்...!
"நீ இங்கேயே