Udhaya Neera Theevu
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsMaranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsVivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Vivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5
Related to Udhaya Neera Theevu
Related ebooks
11 Mani 59 NImidangal 59 Vinaadigal Rating: 5 out of 5 stars5/5Meendum August 15 Rating: 0 out of 5 stars0 ratingsThai Manne Vanakam Rating: 0 out of 5 stars0 ratingsNenju Porukkuthillaiye Rating: 0 out of 5 stars0 ratings2000 Sathura Adi Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsSangamithrai Rating: 0 out of 5 stars0 ratingssaagavaram Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Ethiri Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Pommai Nanum Pommai Rating: 0 out of 5 stars0 ratingsOlinthaalum Vidamaatten Rating: 5 out of 5 stars5/5Oosi Munaiyil Oor Uyir Rating: 5 out of 5 stars5/5Ratthathil Oru Raathiri Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsUyrin Oli! and Puthithaaga Oru Boogambam! Rating: 0 out of 5 stars0 ratingsEllam Nanmaikke Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Oru Thadavai Rating: 0 out of 5 stars0 ratingsEn Piriyamana Virothikaley Rating: 0 out of 5 stars0 ratingsAny Time Murder! Rating: 0 out of 5 stars0 ratingsOru Rojavum Sila Thottakkalum Rating: 5 out of 5 stars5/537vathu Elumbu Koodu Rating: 0 out of 5 stars0 ratingsThookkumara Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsThavarukkum Thavaraana Thavaru Rating: 0 out of 5 stars0 ratingsOru Athikaalaik Kolai Rating: 0 out of 5 stars0 ratingsNil Kavani Kol Rating: 0 out of 5 stars0 ratingsMul Illaatha Kadigaram Rating: 5 out of 5 stars5/5Ondrum Ondrum Moondru Rating: 0 out of 5 stars0 ratingsEttu Vanna Vanavil Rating: 0 out of 5 stars0 ratingsKagithapoo Thean Rating: 0 out of 5 stars0 ratingsMathangalil Aval Margazhi Rating: 0 out of 5 stars0 ratingsThigil Thiruvizha! Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Udhaya Neera Theevu
0 ratings0 reviews
Book preview
Udhaya Neera Theevu - Rajeshkumar
23
1
ப்ரசன்ன வெங்கடேசன், சுகாதார அமைச்சர், தமிழ்நாடு" என்ற எழுத்துக்களைத் தாங்கியிருந்த மார்பிள் பலகைக்குக் கீழே காத்திருந்தார் செல்வபாண்டியன்.
காலை ஏழுமணிக்கே வந்துவிட்ட செல்வபாண்டியனுக்கு இப்போது மணி எட்டாகியும் இன்னமும் மந்திரியின் அறைக்குள் சொல்ல அனுமதி கிடைக்கவில்லை.
செல்வபாண்டியனுக்கு தமிழ்நாடு எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டுத் துறையில் ஐ.ஏ.எஸ். கேடரில் பவுர்ஃபுல் உத்யோகம். இந்த நிமிஷம் தமிழ்நாட்டில் எத்தனை எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கிறார்கள, அவர்களில் ஆண்கள் எவ்வளவு, பெண்கள் எவ்வளவு, இரண்டாயிரமாவது வருஷம் முடிவதற்குள் இன்னும் எத்தனை பேர் எய்ட்ஸ் நோயின் கோரப் பிடிக்குள் சிக்குவார்கள் என்பது போன்ற தகவல்கள் எல்லாம் உதட்டு நுனியில் வைத்திருப்பவர். ரிடையர் மெண்ட்டுக்கு இன்னும் ஐந்து வருஷங்களை பாக்கி வைத்திருக்கும் செல்வபாண்டியனுக்கு மனைவியில்லை, ஒரே ஒரு மகன் மட்டும். அவனும் எம்.எஸ். படித்துவிட்டு ஒரு பிரைவேட் நர்ஸிங்ஹோமில் சீஃப் டாக்டராக உத்யோகம் பார்க்க. செல்வபாண்டியனுக்கு பிரச்னையில்லாத வாழ்க்கை.
மேலும் ஒரு பதினைந்து நிமிஷம் காத்திருந்த போது மந்திரியின் செயலாளர் எட்டிப் பார்த்தார்.
வாங்க செல்வபாண்டியன்....
எழுந்து உள்ளே போனார்.
இன்னிக்கு ரொம்ப நேரம் உட்கார வெச்சுட்டீங்க|
என்ன செய்யறது...? காலையிலிருந்தே கட்சிக்காரங்க கூட்டம். உட்கட்சிப் பூசல். ஒவ்வொருத்தனையும் சமாதானம் பண்ணி அனுப்பறதுக்குள்ளே அய்யாவுக்கு போதும் போதும்ன்னு ஆயிடுது.... காலையிலிருந்து பாதி ஹார்லிக்ஸ் பாட்டில் காலி.
எல்லாரும் போய்ட்டாங்களா...?
ம்.... போய்ட்டாங்க. இனிமே நீங்களும், அய்யாவும் நிம்மதியா உட்கார்ந்து பேசலாம்.
செயலாளர் உட்பக்கம் இருந்த அறையைக் கைகாட்டி விட்டு வேறு பக்கம் போய்விட, செல்வபாண்டியன் ஒரு பூஜையறைக்குள் நுழைவது போன்ற பவ்யத்தோடு அந்த அறைக்குள் நுழைந்தார்.
சுகாதார அமைச்சர் ப்ரசன்ன வெங்கடேசன் பளீரென்ற வெள்ளை வேஷ்டியிலும், பனியனிலும் காஷுவலாய் உட்கார்ந்து கையில் அன்றைய காலை பேப்பரை பிரித்து வைத்திருந்தார்,
வணக்கம் ஸார்|
வாய்யா| செல்வபாண்டி......| நல்லாயிருக்கியா?
நீங்க அமைச்சராயிருக்கும் போது என்னோட சௌக்யத்துக்கு என்ன ஸார் குறைச்சல்?
உட்காரு...-
செல்வபாண்டியன் உட்கார –அமைச்சர் பார்த்துக் கொண்டிருந்த பேப்பரை சிரத்தையாய் மடித்து டீபாயின் மேல் வைத்தார்.
உன்னை எதுக்காக கூப்பிட்டேன் தெரியுமா?
சொல்லுங்க ஸார்....
இந்தா... இந்த லெட்டரைப் படி
சொன்னவர் டீபாயின் கீழ்த்தட்டில் வைத்திருந்த ஒரு கவரை எடுத்து நீட்டினார்.
செல்வபாண்டியன் அந்தக் கவரை வாங்கி உள்ளேயிருந்த கடிதத்தை உருவி எடுத்துப் பிரித்தார்.
சாய்வான தமிழ் எழுத்துக்களில் அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது.
மதிப்புக்குரிய சுகாதாரத்துறை அமைச்சருக்கு, நந்தா எழுதிக் கொண்டது. வணக்கம்.
இதுவரைக்கும் உங்களுக்கு ஏழு கடிதங்கள் எழுதி விட்டேன். இது எட்டாவது கடிதம். கடிதங்களுக்கு உங்களிடமிருந்து பதில் வராததால் நேரிலேயே சந்திக்க இரண்டு தடவை முயற்சி செய்தேன். உங்களிடம் முன்னமேயே அப்பாயிண்ட்மெண்ட் வாங்காமல் சந்திக்க முடியாது என்று உங்கள் பி.ஏ. சொல்லிவிட்டார். எனவே இந்த எட்டாவது கடிதத்தை உங்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் என் முந்தைய எழு கடிதங்களில் எந்த விஷயத்தைச் சொன்னேனோ அதையே இப்போதும் சொல்கிறேன். எய்ட்ஸ் நோய்க்கு மருந்து இல்லையென்று டி..வி.யிலும், பத்திரிகைகளிலும் அரசாங்கம் விளம்பரம் செய்து வருகிறது. இது ஒரு தவறான விளம்பரம். எய்ட்ஸ நோய்க்கு மருந்து இருக்கிறது. அது என்ன மருந்து என்பது எனக்குத் தெரியும். அதைப் பற்றி நான் உங்களிடம் ஒரு மணி நேரம் பேசவிரும்புகிறேன். எனக்கு நேரம் ஒதுக்கிக் கொடுங்கள். என் மற்ற கடிதங்களைப் போல் இதையும் அலட்சியம் செய்து விடாதீர்கள். தயவு செய்து, பெரிய மனம் வைத்து என்னுடன் பேச ஒரு மணி நேரத்தை ஒதுக்கிக் கொடுங்கள். உங்கள் பதில் கடிதத்திற்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்க ஆரம்பித்து விட்டேன்.
இப்படிக்கு,
நந்தா
செல்வபாண்டியன் கடிதத்தைப் படித்துவிட்டு கவரைத் திருப்பி ஃப்ரம் அட்ரஸைப் பார்த்தார்.
நந்தா,
A-89 , சிறுவாணி ரோடு,
பூண்டி (போஸ்ட்)
கோவை,
அமைச்சர் கேட்டார்.
லெட்டர் படிச்சியா...?
படிச்சேன் ஸார்....
இதைப்பத்தி என்ன நினைக்கிறே...?
செல்வபாண்டியன் புன்னகைத்தார். இது மாதிரி தினசரி ரெண்டு லெட்டராவது எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு வருது ஸார். அது மாதிரியான லெட்டர்களை எழுதறவங்களெல்லாம் வேறு யாரும் இல்ல ஸார்... பொழுது போகாத சில வைத்தியர்கள்தான். அப்படியும் ரெண்டொருத்தரை என்கொயர் பண்ணிப் பார்த்தோம். எல்லாமே போகஸ் பேர்வழிகள். அரசாங்க மான்யம் ஏதாவது கிடைக்குமான்னு ஒரு நப்பாசையில் எழுதற லெட்டர்ஸ் அது...| அது மாதிரியான லெட்டர்தான் இதுவும்.
அமைச்சர் ப்ரசன்ன வெங்கடேசன் நிமிர்ந்தார்.
எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு வர்ற இது மாதிரியான லெட்டர்ஸ் பூராவும் படிச்சிருவியா....?
படிச்சிடுவேன் ஸார்.
இந்த நந்தாங்கிற பேர்ல கடிதம் வந்திருக்கா...?,
இல்ல ஸார்....
எனக்கொரு சந்தேகம் செல்வபாண்டி.
சொல்லுங்க ஸார்.
இந்த நந்தாகிட்ட ஏதாவது விஷயம் இருக்கலாம். கூப்பிட்டு பேசிப் பார்க்கலாமா...?
ஸார்...| இந்த லெட்டர்களையெல்லாம் நீங்க கண்ணை மூடிட்டு இக்னோர் பண்ணிடலாம். மருத்துவத்துறையிலேயும், விஞ்ஞானத்திலேயும் கொடி கட்டி பறந்துட்டிருக்கிற அமெரிக்க, ரஷ்ய, ஜப்பானிய, ஜெர்மனி டாக்டர்களினாலேயே முடியாத ஒண்ணை இங்கே இருக்கிற ஒரு சாதாரண நந்தா கண்டுபிடிச்சிருக்க முடியுமா?"
லெட்டர் விடாமே வருதே....?
ஸார்...| எல்லாருமே அரசாங்க மான்யத்துக்காக ஆசைப்படற கும்பல்தான்.
என்னால அப்படி இந்த நந்தாவை நினைக்க முடியலை. ஆளை வரவழைச்சு பேசிப் பார்ப்போம். நான் கூடபேசப் போறதில்லை. நீயே நந்தாவுக்கு லெட்டர் போட்டு வரவழை. பேசிப் பாரு. விஷயம் இருக்கிற மாதிரி தோணினா என்கிட்ட கூட்டிட்டு வா... இல்லேன்னா ஊருக்கு போகச் சொல்லிரு.
சரி ஸார்.
இப்போ தமிழ்நாட்ல எய்ட்ஸ் நோயாளிகள் அதிகார பூர்வமா எவ்வளவு பேர் இருக்காங்க...?
பதினேழாயிரம் பேர் ஸார்....
எந்த மாவட்டத்துல அதிகம்...?
சேலம். அதிலும் நாமக்கல்லில் எய்ட்ஸ் நோயாளிகள் எக்கச்சக்கம் ஸார்....
ஏன் அங்கே மட்டும் அப்படி...?
ரோட்டோர ப்ராஸ்ட்யூஷன் ஸார்.
போலீஸ் என்ன பண்றாங்க...?
"போலீஸாலே என்ன பண்ண முடியும்...? ரெய்ட்போனா காணாமே போயிடறாளுக. சேலம் – நாமக்கல் – கரூர் ரோட்ல இந்த ப்ராஸ்ட்யூஷன் டீக்கடை மாதிரி நடக்குது ஸார். மனக்கட்டுப்பாடு இல்லாத லாரி ட்ரைவர்ஸ் சபலப்பட்டுப் போய் இந்த ப்ராஸ்ட்யூட்ஸ்