Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vendru Vaa Vivek
Vendru Vaa Vivek
Vendru Vaa Vivek
Ebook154 pages47 minutes

Vendru Vaa Vivek

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Vendru Vaa Vivek

Read more from Rajeshkumar

Related to Vendru Vaa Vivek

Related ebooks

Related categories

Reviews for Vendru Vaa Vivek

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vendru Vaa Vivek - Rajeshkumar

    24

    1

    விவேக் இண்ட்டர் நெட்டில் க்ரைம் ஃபைல் வெப்சைட்டில் சுடச்சுட விபரங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தபோது அந்த அதிகாலையிலேயே குளித்துவிட்டு வந்த ரூபலா சந்தனசோப் வாசனையோடு பின்பக்கமாய் வந்து நின்றாள்.

    ‘என்னங்க...

    ம்...

    உங்களைப் பார்க்கணும்னு சொல்லி யாரோ வந்து வாசல்ல காத்துக்கிட்டு இருக்காங்க...

    யார்ன்னு கேட்டியா...?

    கேட்டேன். பேர் செல்வகுமார்ன்னு சொன்னார். டாக்ஸி டிரைவராம்...

    விவேக் இண்ட்டர்நெட்டுக்கு இடைவேளை கொடுத்துவிட்டு நிமிர்ந்தான்.

    காலங்கார்த்தால டாக்ஸி டிரைவர் வந்திருக்கார். என்ன விஷயம்ன்னு கேட்டியா..?

    அதையும் கேட்டேன். ஸார்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும்ன்னு சொன்னார்.

    விவேக் எழுந்து வாசலை நோக்கிப்போக அந்த டாக்ஸி டிரைவர் போர்டிகோ படியோரம் தெரிந்தார். வயது நாற்பது இருக்கலாம். ஒல்லியான உடம்புவாகு. காதோரங்களில் சுண்ணாம்பைத் தேய்த்தது போல நரை.

    வணக்கம் ஸார்...

    உள்ளே வாங்க...

    அவர் தயங்கிக் கொண்டே படியேறி உள்ளே வந்தார்.

    விவேக் சிட்அவுட்டில் போடப்பட்டிருந்த கூடை நாற்காலியைக் காட்டி உட்காரச் சொல்லிவிட்டு தானும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான்.

    சொல்லுங்க.. என்ன விஷயம்...?

    ஸார்.. என் பேர் செல்வகுமார். சொந்தத்துல டாக்ஸி ஓட்டிக்கிட்டு இருக்கேன். சிந்தாதிரிப்பேட்டை கிழக்கு கூவம் ரோட்லதான் என்னோட வீடு. வீட்டுக்கு பின்பக்கத்தையொட்டின மாதிரி சென்ட்ரல் ஜெயிலோட மதில் சுவர். இன்னிக்குக் காலையில் அஞ்சுமணி சுமாருக்கு குளிச்சு முடிச்சு டாக்ஸியை எடுத்துக்கிட்டு சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு கிளம்பிட்டிருந்தேன். திடீர்ன்னு ஒரு கல்லு ஜெயில் காம்பௌண்ட்டுக்குள்ளேயிருந்து பறந்து வந்து கார் மேல விழுந்தது. விழுந்த கல் வெள்ளையாக இருக்கவும் எடுத்துப் பார்த்தேன். கல்லுக்கு ஒரு பேப்பர் சுத்தி அதைக் கயித்தால கட்டி வீசி எறிஞ்சிருக்காங்க ஸார்.

    விவேக் சுவாரஸ்யமாகி செல்வகுமாரைப் பார்க்க, அவர் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு கல்லையும் கசங்கிப் போன ஒரு காகிதத்தையும் எடுத்தார்.

    சொன்னார்: லெட்டரை ஒரு கைதி எழுதியிருக்கான் ஸார். தன்னோட ரத்தத்தைக் குச்சியால் தொட்டு கோணல் மாணலா உங்க பேரைப் போட்டு நாலு வார்த்தை எழுதியிருக்கான். படிச்சு பாருங்க ஸார்.

    செல்வகுமார் நீட்டிய அந்த கசங்கிய காகிதத்தை வாங்கிப் பிரித்துப் பார்த்தான் விவேக்.

    செங்கல் நிறத்தில் துண்டு துண்டாய் கோணல் மாணலாய் வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன.

    க்ரைம் ப்ராஞ்ச் விவேக் ஸார்!

    நான் ஒரு கைதி

    டெல்லி பாலிகஞ்ச் சிறை.

    இந்த மாதம் 17 ஆம் தேதி.

    விபரீதம்! ஆபத்து.

    தடுக்கவும். உங்கள் உயர் அதிகாரிகளை மட்டும் தொடர்பு கொள்க.

    இதை அலட்சியப்படுத்த வேண்டாம்.

    விவேக் அந்த வார்த்தைகளை இரண்டு தடவை படித்துப் பார்த்துவிட்டு செல்வகுமாரை ஏறிட்டான்.

    கல் எப்போ வந்து விழுந்தது...?

    அரைமணி நேரத்துக்கு முந்தி...

    வேற யாராவது இதைப் பார்த்தாங்களா..?

    யாரும் பார்க்கலை ஸார். என் கைக்கு இது கிடைச்சதுமே உங்க வீட்டுக்கு வந்துட்டேன்.

    விவேக் அந்தக் காகிதத்தில் இருந்த வார்த்தைகளை மறுபடியும் படித்துப் பார்த்துவிட்டு தன் நெற்றிப் பரப்பை லேசாய் கீறிக் கொண்டான்.

    கைதி யார்ன்னு தெரியலையே...? தெரிஞ்சாலாவது ரகசியமா ஜெயிலுக்குள்ளே போய் விசாரணை பண்ணலாம்...

    தன்னை வெளிப்படுத்திக்க அவன் விரும்பலை ஸார். அப்படி வெளிப்படுத்திக்கிட்டா அது அவனோட உயிருக்கு ஆபத்தாகவும் இருக்கலாம்.

    இன்னிக்கு தேதி ஒன்பது. பதினேழாம் தேதி டெல்லி பாலிகஞ்ச சிறையில் ஏதோ ஆபத்து... விபரீதம்...ன்னு எழுதியிருக்கான். ஆபத்து யாருக்கு.. விபரீதம் என்னன்னு இன்னும் ரெண்டொரு வார்த்தை சேர்த்து எழுதியிருக்கலாம்.

    ஸார்.. அது அவனுக்கு தெரியாமேகூட இருக்கலாம் இல்லையா?

    இட்ஸ் ஓ.கே. செல்வகுமார். இந்த லெட்டரை இனி நான் ஃபாலோ அப் பண்ணிக்கிறேன். டீ சாப்பிடுறீங்களா?

    வேண்டாம் ஸார். காலையில வெறும் வயித்துல டீ காப்பி சாப்பிடற பழக்கம் இல்லை...

    உங்க வீட்டு அட்ரஸ் என்ன...?

    கிழக்கு கூவம் ரோட்ல ஃபர்ஸ்ட் க்ராஸ் ஸ்ட்ரீட். வீட்டு நம்பர் முப்பத்தி நாலு - பி. ஸார். செல்வம் வீடு எதுன்னு கேட்டா ஒரு சின்னக் குழந்தைகூட காட்டும் ஸார்.

    ஃபேமிலி...?

    எனக்கு ஃபேமிலி கிடையாது ஸார். ஒண்டிக்கட்டை. அனுமார்மேல பக்தி அதிகம். அதான் கல்யாணமே பண்ணிக்கலை.

    இந்த லெட்டரைப் பத்தி யார்க்கிட்டேயும் சொல்லலையே?

    மூச்சு காட்டலை ஸார்...

    சரி.. நீங்க போங்க... தேவைப்பட்டா நானே வந்து பார்க்கறேன்.

    செல்வகுமார் கைகளைக் குவித்துவிட்டு வெளியே போக, விவேக்கின் பார்வை மறுபடியும் அந்த ரத்தவார்த்தைகளுக்கு போயிற்று.

    17 ஆம் தேதி பாலிகஞ்ச் சிறை

    விபரீதம் ஆபத்து.

    தடுக்கவும்.

    விவேக்கின் பின்பக்கம் ரூபலா வந்து நின்று தொண்டையைக் கனைத்தாள்.

    க்க்கும்...

    விவேக் திரும்பினான்.

    என்ன... டிபார்ட்மெண்ட்டிலிருந்து வர்ற கேஸ்கள் போதாதுன்னு போனஸா இப்படியொரு பப்ளிக் கேஸ். இப்படி நீங்க அலவ் பண்ணீங்கன்னா நாளைக்கு நம்ம வீட்டு வாசல்ல ஒரு பெரிய க்யூ வரிசை நிக்கும்...

    ரூபலா! இந்த லெட்டரைப் பாரு.. எவ்வளவு அவசரம் இருந்தா தன்னோட ரத்தத்தையே குச்சியால தொட்டு ஒருத்தன் லெட்டர் எழுதியிருப்பான்...

    ரூபலா அந்த லெட்டரை வாங்கிப் பார்த்துவிட்டு அலட்சியமாய் தோள்களைக் குலுக்கினாள்.

    எனக்கென்னமோ டவுட்டா இருக்குங்க...

    என்ன டவுட்...?

    "டெல்லி பாலிகஞ்ச் சிறையில், வர்ற பதினேழாம் தேதி ஏதோ ஆபத்து, விபரீதம்ன்னு இவ்வளவு மெனக்கெட்டு கஷ்டப்பட்டு ரத்தத்துல உங்களுக்கு லெட்டர் எழுதியிருக்கிற அந்தக்

    Enjoying the preview?
    Page 1 of 1