Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Uyire Vaa
En Uyire Vaa
En Uyire Vaa
Ebook80 pages46 minutes

En Uyire Vaa

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465742
En Uyire Vaa

Read more from Devibala

Related to En Uyire Vaa

Related ebooks

Reviews for En Uyire Vaa

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Uyire Vaa - Devibala

    12

    1

    நிமிர்ந்து பார்த்த போது ‘ஹா’ வென்று வாய் பிளக்கத் தோன்றியது. வெளித்தோற்றத்தில் வீடு அற்புதமாக அமைந்திருந்தது.

    கட்டிக்கொண்டிருக்கும் போது அதன் அழகு புலப்படவில்லை. இப்போது பிரமாதமாகத் தெரிகிறது. முன் வாசலுக்குத் தேக்குக் கதவில் வேலைப்பாடு அமைத்து, சுவர்களுக்கு சூப்பர் ஸெம் அடித்து அந்த சிட் அவுட்டில் இருந்த வளைவு கூட கலை அம்சத்துடன் இருந்தது.

    பெரிய ஒரு ஹால், மூன்று படுக்கையறைகள், உணவு அறை, அடுக்களை ஒரு பூஜை ரூம் என்று ஆயிரம் சதுர அடிகளில் அள்ளிக் கொண்டு போயிற்று அழகு.

    வீடு முடிந்து விட்டது.

    என்ன ஏதாவது விட்டுப் போயிருக்கா சாரதா?

    ‘சிட் அவுட்ல சின்னதா ஒரு ஊஞ்சல் போட்டா அழகா இருக்கும் மன்னி’ன்னு கணேஷ் சொன்னான்.

    முன்னாலேயே யோசனை பண்ணியிருக்கணும். சங்கிலி கோர்க்க கொக்கி வேண்டாமா? இப்பப் பதிக்க முடியுமா?

    கேட்டுப் பாருங்கோ!

    உனக்கு உன் மச்சினன் சொல்லிட்டா உடனே செஞ்சாகணும்!

    அப்புறம் ஒரு க்ரில் கேட் போடணும். திருட்டு பயம் இல்லாம இருக்கலாம்!

    அதையும் கணேஷ் சொன்னானா?

    இல்லை. நான் சொல்றேன்பா!

    ராதிகா வேண்டாம்னு சொல்றா! ‘க்ரில் கேட் பாதுகாப்புதான். ஆனா அழகு போயிடும் அத்திம்பேர் போடாதீங்க’ன்னு எங்கிட்ட பிரத்யேகமா சொன்னா!

    அவ சொல்லுவா! திருட்டுப் போனா இன்னும் அழகா இருக்கும்! அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டின் தேவைகளை, நிறைகளை அலசிவிட்டு, இருவரும் வீடு திரும்ப ராதிகா வாசலில் நின்றாள்.

    நீ என்னடீ சீக்கிரமா ஆபீஸ்லேர்ந்து வந்துட்டியா?

    சளி அதிகமாகி, கொஞ்சம் ஜுரம் மாதிரி இருக்குக்கா. அதான் அரைநாள் லீவு போட்டுட்டு வந்துட்டேன்.!

    என்னடா கண்ணா பண்றது உனக்கு?

    பாஸ்கர் அவசரமாக ராதிகாவின் நெற்றி, கழுத்து என்று தொட்டுப் பார்த்தான்.

    ஒண்ணுமில்லே அத்திம்பேர் எல்லாருக்கும் வர்ற மாதிரி வைரஸ் ஃபீவரா இருக்கும்!

    நான் டாக்டரை கூட்டிட்டு வர்றேன் இப்பவே!

    போறுமே! ஒரு க்ரோஸின் போட்டுண்டு படுத்தா சரியாகும். மச்சினிக்கு ஏதாவது ஒண்ணுனா மனுஷன், பதறிப் போயிடுவார்!

    ஏன்... என் தம்பிக்கு வந்தா நீ பதட்டப் படறதில்லையா?

    அதென்ன என் தம்பி? கணேஷைப் பிரிச்சுப் பேசினா நான் சும்மா இருக்கமாட்டேன். எனக்கு மூத்த பிள்ளை அவன்தான். தெரியுமா?

    சரி சரி அடிக்க வந்துராதே சிரித்தபடி பாஸ்கர் உள்ளே போனான்.

    நாலு சகோதரிகளுக்கு மத்தியில் பிறந்தவன் பாஸ்கர். மூன்று பேரைக் கரையேற்றி விட்டு அவன் நிமிரும்போது வயது முப்பது. நாலாவது தங்கைக்கு பெண் பார்க்கும் சமயம் அம்மாவும் இறந்துவிட்டாள். அந்தத் தங்கைக்கும் முடித்து விட்டுத் திரும்பினால் மிஞ்சியது ஒரே கடைசி தம்பி கணேஷ்தான். கணேஷுக்கும் பாஸ்கருக்கும் பதினைந்து வயது வித்யாசம்.

    தனக்கு வரப்போகும் மனைவி தம்பியை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டுமே என்ற கவலை பாஸ்கருக்கு நிறையவே உண்டு. அந்தக் கவலையை சாரதா இந்த அளவுக்குப் போக்குவாள் என்று பாஸ்கரே எதிர்பார்க்க வில்லை.

    யாரோ உறவுக்காரர் மூலம் கிடைத்த வரன்தான்.

    தங்கைகளின் கல்யாணக் கடன் ஏராளமாக இருந்ததால் வேலைக்குப் போகும் பெண் வேண்டும் என்றான் பாஸ்கர்.

    கிடைத்தாள் சாரதா.

    ஆயிற்று! பாஸ்கர் சாரதாவை மணந்து எட்டு வருடங்கள் ஒடிவிட்டன. இந்த எட்டு வருடங்களில் சாரதா அந்த வீட்டில் பழகிய விதமும், குறிப்பாக கணேஷிடம் அவள் காட்டிய பரிவும், பாசமும் பாஸ்கரை நெகிழ வைத்து விட்டது.

    முதல் குழந்தை பிறந்தபோதும் கூட அவள் தன் மகனைவிட கணேஷுக்காக அதிகம் கவலைப்பட்டாள்.

    இரண்டாவது குழந்தை பிறந்தும் கணேஷை ஜெயிக்க முடியவில்லை.

    ஆறும், நாலும் வயதான அந்தக் குழந்தைகளை விட சலுகை இருபத்தி நாலு வயதான கணேஷுக்குத்தான்.

    ‘மன்னி... மன்னி...’ என்று சாரதா இல்லாமல் அவனால் ஒரு நொடி கூட அந்த வீட்டில் இருக்க முடியாது.

    பள்ளிப்படிப்பு முடித்து நகரக் கல்லூரியில் இடம் கிடைக்க இங்கு வந்து சேர்ந்தாள் ராதிகா சாரதாவின் தங்கை.

    Enjoying the preview?
    Page 1 of 1