Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilamaikku Perumai 1
Ilamaikku Perumai 1
Ilamaikku Perumai 1
Ebook102 pages35 minutes

Ilamaikku Perumai 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465759
Ilamaikku Perumai 1

Read more from Devibala

Related to Ilamaikku Perumai 1

Related ebooks

Reviews for Ilamaikku Perumai 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilamaikku Perumai 1 - Devibala

    16

    1

    காலையில் குளித்துவிட்டு தலைவாரிக் கொண்டிருந்தாள் மீரா! அப்பாவின் குரல் கூடத்தில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது!

    அம்மா உள்ளே வந்தாள்.

    மீரா! உனக்கு லன்ச்சுக்கு இட்லி வச்சிருக்கேன்!

    அப்பா யார்கிட்ட சத்தம் போட்டுக்கிட்டு இருக்காரு?

    எதிர் வீட்டுக்காரர் வந்திருக்காரு! அவரோட தங்கச்சி மாப்ளை விபத்துல இறந்துட்டாராம். சின்ன வயசாம்! பொண்டாட்டியும் ஒருவயசுக் குழந்தையும் இருக்காங்களாம். அவர் சொல்லி அழறாரு!

    அழறவருக்கு ஆறுதல் சொல்லாம, அப்பா ஏன் சத்தம் போடறார்?

    அந்தக் கல்யாணம் காதல் கல்யாணமாம். ஜாதகம் பாக்கலியாம். அதனாலதான் இப்படி ஆயிருக்குனு உங்கப்பா சொல்றார்!

    சரிம்மா! அதை இந்த நேரத்துலயா சொல்றது?

    உங்கப்பா ஜோசியப் பைத்தியமாச்சே! அப்படித்தான் பேசுவார்!

    அந்த ஆள் புறப்பட்டுப் போய்விட்டார்.

    அப்பா உள்ளே வந்தார்.

    ஜாதகப் பொருத்தம் பாக்காம கல்யாணம் செய்யாதீங்கனு அடிச்சுக்கறேன். கேக்கறாங்களா?

    அப்பா ஒரு சந்தேகம். நீங்க கோவப்படக்கூடாது!

    என்னம்மா?

    ஜாதகம் பார்த்துக் கல்யாணம் செய்யற எடங்கள்ல இந்த மாதிரி விபத்தும், துர்மரணமும் நடக்கறதேயில்லையா?

    பெரும்பாலும் நடக்காது!

    ஆனா நடக்க வாய்ப்பிருக்கு. இல்லையா?

    ஏன் இது மாதிரி குதர்க்கமாக பேசற?

    ஏன்பா கோவப்படறீங்க? ஒரு ஆர்க்யூமென்ட்தானே? தப்பில்லையே?

    இருக்கலாம் மீரா! எல்லாத்துக்கும் விதி விலக்கு உண்டு. ஆனா அதுவும் எப்படி நடக்கும்? பிறந்த நேரத்துல சரியானபடி நேரத்தை துல்லியமா கணக்கிட்டிருக்க மாட்டாங்க! ஒரு நொடி தப்பினாக்கூட லக்னம் மாறலாம். நட்சத்திரம் மாறலாம். அதுக்குள்ள பலன் வேறயா இருக்குமில்லையா?

    இது தப்பிக்கற பதில்!

    "இல்லை! உண்மை! இது எல்லாருக்கும் நடக்கறதில்லை! ஒரு சிலருக்கு நடக்குது! இதப்பாரு! கிரகங்கள் கடவுள்தான்! அதை வணங்கணும். நம்பணும். மதிக்கணும்! அல்லாம, இந்த மாதிரி விதண்டா வாதம் பேசறதுல அர்த்தம் இல்லை! நவகிரகங்களும், அதுக்கான ஆலயங்களும், இடப் பெயர்ச்சியும், பலன்களும் பொய் இல்லை! மத்தவங்களைப் பற்றி எதுக்குப் பேசணும். நான் முழுமையா நம்பறேன். அதைக் கடந்து நான் எதையும் செய்யமாட்டேன்!

    மத்தவங்களை நான் திருத்த முடியாது! சரியா?"

    மீரா! தோசை ஊத்தித் தரட்டுமா?

    குடும்மா! ரெண்டே ரெண்டு! அப்பா! நீங்க ஆபீசுக்குப் போகலை?

    கொஞ்சம் லேட்டாப் போவேன். உன் ஜாதகத்தை நம்ம ஜோசியர்கிட்ட குடுத்திருக்கேன்!

    எதுக்கு?

    உனக்கு வயசு 23. இன்னமும் நான் வீட்ல உன்னை வச்சிருந்தா, ‘மகளோட பணத்துக்காக அவளுக்குக் கல்யாணம் கட்டிக்குடுக்காம வச்சிருக்கான் சுந்தரேசன்’னு பேர் வரும்!

    அப்பா! கட்டிக்கப் போறவ நான். எனக்கு இப்பக் கல்யாணம் வேண்டாம்னா என்ன செய்வீங்க?

    அவர் சிரித்தார்.

    என்ன சிரிப்பு?

    வேண்டாம்னு சொல்ல நீ யாரு? உனக்கு குரு பலம் வந்தாச்சு! அதிக பட்சம் போனா, வர்ற ஏப்ரல் மே’ல உன் கழுத்துல தாலி ஏறியே ஆகணும். நான் சொல்லலை! உன் ஜாதகம் சொல்லுது! இப்ப பிப்ரவரி! ஏப்ரல்ல கல்யாணம்னா, இப்பவே முயற்சி பண்ண வேண்டாமா? கடைசி நேரத்துல தவிக்க முடியுமா?

    டெலிபோன் ஒலித்தது!

    அப்பா போய் எடுத்தார்.

    மீரா இருக்காங்களா?

    நீங்க யாரு?

    அவங்க ஆபீஸ்ல வேலை பாக்கறேன். காலைல சேல்ஸ் டாக்ஸ் ஆபீசுக்கு அவங்க வர்றாங்களானு கேக்கணும்!

    இதோ குடுக்கறேன். மீரா! உனக்குத்தான்!

    மீரா ரிசீவரை வாங்கிக் கொண்டாள்.

    ஹலோ! மீரா ஹியர்!

    நான் தாண்டா! சேல்ஸ் டாக்ஸ்னு உங்கப்பாகிட்ட பீலாவுட்டேன்! பெட்ரோல் பங்க் கிட்ட எட்டரைக்கு நில்லு! நான் வந்து பிக்கப் பண்ணிக்கறேன்! சரியா?

    ஓகே! நான் சேல்ஸ் டாக்ஸ் ஆபீசுக்கு வந்துர்றேன். பைல்களை நீங்க எடுத்துட்டு வந்துடுங்க! கிளம்பிட்டேன்!

    ரிசீவரை வைத்தாள்.

    அம்மா! எனக்கு டைமாச்சு! இப்ப சாப்பிட நேரமில்லை! வர்றேன்!

    கைப்பையோடு வாசலில் இறங்கி, செருப்புகளை மாட்டிக் கொண்டு ஓடினாள்.

    லன்ச் பாக்ஸை விட்டுட்டு ஓடறா. இப்பவும் சாப்பிடலை!

    விட்றி! வெளில பார்த்துப்பா! வேலை நிறைய இருக்கு! சாப்பிட அவளுக்கு நேரமில்லை! எனக்குக் குடு! ஜோசியர் வீட்டுக்குப் போகணும்!

    ஏப்ரல்ல கல்யாணம் நடந்துருமா?

    நிச்சயமா! கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு, உன் கடமைகளைச் செய்! அதது நடக்க வேண்டிய நேரத்துல தானா நடக்கும்!

    அம்மா சமையல் கட்டுக்குள் புகுந்தாள்!

    மீரா அவர்களுக்கு ஒரே மகள். செல்லமாக வளர்க்கப் பட்டவள். பிடிவாதக்காரி. தான் நினைத்தது நடக்க வேண்டும்! ஆனால் அதி புத்திசாலி! படிப்பில் எம்.காம். முடியும்வரை முதலிடம்தான். ஒரு நல்ல இடத்தில் வேலையும் உடனே கிடைத்துவிட்டது. அழகுக்குப் பஞ்சமில்லை!

    மொத்தத்தில் மீரா ஒரு முழுமையான பெண்!

    அவளை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க சுந்தரேசனுக்கு ஆசை!

    அதற்கான முயற்சிகளில் சுந்தரேசன் தீவிரமாக இறங்கிவிட்டார்!

    நாள், நட்சத்திரம், நேரம் எல்லாம் துல்லியமாகப் பார்த்த பிறகே எந்தச் செயலையும் செய்வார்.

    அவருக்கு ஆழமான நம்பிக்கை!

    அவருடன் இத்தனை காலம் வாழ்ந்ததில், அம்மாவுக்கும் மேற்படி நம்பிக்கைகள் வந்துவிட்டது!

    மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமே என்ற கவலை மட்டும்தான்.

    மீரா பெட்ரோல் பங்க் அருகில் வந்து நின்றுவிட்டாள். சுற்றிலும் பார்த்தாள். சாலையின் ஒரு முனையில் அந்த மாட்டிஸ் கார்

    Enjoying the preview?
    Page 1 of 1