Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilamaikku Perumai 2
Ilamaikku Perumai 2
Ilamaikku Perumai 2
Ebook99 pages32 minutes

Ilamaikku Perumai 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465759
Ilamaikku Perumai 2

Read more from Devibala

Related to Ilamaikku Perumai 2

Related ebooks

Reviews for Ilamaikku Perumai 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilamaikku Perumai 2 - Devibala

    19

    1

    "உங்க கைல இருக்கறது அந்தப் பையனோட நிஜமான ஜாதகமே இல்லை"

    சுந்தரேசன் ஆடிப்போனார்.

    அப்படி சொல்லாதீங்க! ஒரு பொய்யைச் சொல்லிக் கல்யாணம் நடத்தற அளவுக்கு அந்தக் குடும்பம் கேவலமான குடும்பம் இல்லை. நீங்க எனக்குக் குடும்ப ஜோசியர்தான். அதுக்காக நல்லதொரு குடும்பத்தை இந்த மாதிரி கேவலமா விமர்சனம் பண்றது தப்பு!

    சுந்தரேசனின் வார்த்தைகள் தீயாக வெளிப்பட்டன.

    என் மனசுல பட்டதைச் சொல்லிட்டேன். அப்புறமா உங்க விருப்பம்!

    இன்னொரு முகூர்த்தத் தேதி?

    நான் குறிச்சு வைக்கறேன். நாளைக்கு வந்து வாங்கிக்குங்க!

    சுந்தரேசன் வெளியே வந்தார்.

    ‘உங்க கைல இருக்கிறது அந்தப் பையனோட நிஜமான ஜாதகமே இல்லே!’

    ‘நீங்க தகவல் கேட்டப்ப, பையனோட அப்பா தரலை! ஏன்?’

    சுந்தரேசன் நிமிர்ந்தார்.

    ‘நீங்க கேட்டும் தரலைனா, ஏதோ ஒரு விவகாரம் இருக்கு!’

    ஜோசியரின் வார்த்தைகள் சுந்தரேசன் காதில் திரும்பத் திரும்ப ஒலித்தது!

    அதில் ஒரு நியாயம் இருந்தது!

    பதில் சொல்ல முடியாத கேள்விகள்.

    ‘சரி! எதுக்காக பொய் ஜாதகம் தயாரிக்கணும்?’

    ‘மருமக வேணும்னு வரன் பாக்க, ஜாதகம் தர, மீரா பொருத்தமான பெண்ணைப் புடிச்சுக் குடுங்கனுதானே கேட்டா. அவளே பொருத்தம்னு ஜோசியர்தானே சொன்னார்?’

    ‘எதுவுமே இதுல பலவந்தமா நடக்கலியே?’

    ‘எல்லாம் இயல்பாத்தானே நடந்திருக்கு? அப்புறம் எங்கே பிரச்னை?’

    சுந்தரேசனுக்கு மண்டை குழம்பியது.

    வீட்டுக்கு வந்தார். நேரம் மாலை ஏழுமணி!

    மீரா வந்துட்டாளா?

    இல்லீங்க!

    ஆஸ்பத்திரி - தெரிஞ்சவங்க வீட்ல சாவுனு மீரா பிஸியா இருக்கா! கல்யாணம் தீர்மானிக்கப்பட்ட பிறகு இப்படி ஒரு பொண்ணு ஊரை சுற்றக் கூடாது! வந்ததும் சொல்லி வைக்கணும்!

    சரி! ஜோசியர் புதுத் தேதியைக் குறிச்சுத் தந்தாரா?

    நாளைக்குத் தருவார். அவர் புது வெடிகுண்டைத் தூக்கிப் போடறார் மீனு!

    என்ன?

    என் கைல இருக்கறது வேணுவோட நிஜமான ஜாதகமே இல்லேன்னு சந்தேகப்படறார்!

    மீனாட்சிக்கு அதிர்ச்சி!

    ‘உண்மை வெளில வந்துடுமா? கடவுளே! என்னல்லாம் விபரிதங்கள் வரப்போகுதோ?’

    ஜோசியரை நான் கண்டிச்சேன். ஆனாலும், உள்ளுக்குள்ளே எனக்கே ஒரு உறுத்தல் இருக்கு. பிறந்த தேதி, தகவல்களை வெச்சு புதுசா ஜாதகம் எழுதிப்பார்க்கலாம்னா, வேணுவோட அப்பா கோவப்படறாரே?

    மீனாட்சிக்கு பேச நாக்கே எழவில்லை!

    ‘துப்பறியத் தொடங்கிட்டாரா? உண்மை வெளிய வந்துடுமா?’

    தொலைபேசி அழைத்தது.

    சுந்தரேசன் போய் எடுத்தார்.

    நான் ஜோசியர் பஞ்சாபகேசன் பேசறேன்!

    சொல்லுங்க?

    சமீபத்துல காலமான ஜோசியர் தண்டபாணி குடும்பத்தோட உங்க மகள் மீரா ரொம்ப நெருக்கமா? எத்தனை வருஷப் பழக்கம்?

    தெரியலையே!

    இதுக்கு பதில் தெரிஞ்சா பல உண்மைகள் வெளிவரும் சார்!

    தண்டபாணி உங்க வர்க்கம். நீங்களே கேட்டுக் சொல்லுங்களேன்!

    சரி! சொல்றேன்!

    ரிசீவரை வைத்தார். சுந்தரேசன் அவசரமாக பல கணக்குகளை போடத் தொடங்கிவிட்டார்.

    அதே நேரம் மீரா, வேணுவின் அருகில் ஆஸ்பத்திரியில் இருந்தாள்.

    தண்டபாணியின் மரணம் பற்றிய விவரங்களை மீரா சொன்னாள்.

    வேணு கேட்டுக் கொண்டிருந்தான்.

    சல்லிக்காசு சேர்த்து வைக்கலை! வாடகை வீடு! கல்யாண வயசுல மகள் கௌசல்யா! நாளைய விடியல் என்னான்னு அந்தம்மாவுக்குத் தெரியலை. குடும்பம் உருக்குலைஞ்சு நிக்குது!

    பாவம்தான்!

    நோயே வராதவர், மாரடைப்புல செத்திருக்கார்!

    அப்படியா?

    மாரடைப்பு வரக்காரணம், மன உளைச்சல். தப்பு செஞ்சிட்டேன்னு கொஞ்ச நாளா புலம்பினாராம். ஆனா என்னதப்புன்னு சொல்லலை!

    அப்பாடா!

    என்ன வேணு நீங்க? நம்மை அவர் மாட்டிவிடலை! ஆனா ஒரு பொய் காரணமா, அவர் பலியாகியிருக்கார். பொய்க்குக் காரணம் நாம்தானே? அந்தப் பொய்தானே அவர் குடும்பத்தைத் தெருவுல நிறுத்தியிருக்கு. ஒரு வகைல தண்டபாணி மரணத்துக்கு நாமதான் தார்மீகப் பொறுப்பை எடுத்துக்கணும்!

    மீரா பேசப்பேச வேணுவுக்கு கலவரமாக இருந்தது. அவளை பீதியுடன் பார்த்தான்.

    இப்ப நீ என்னதான் சொல்ற?

    அந்தக் குடும்பத்துக்கு ஏதாவது உதவி செஞ்சாகணும் வேணு.

    என்ன உதவி?

    புரியலை. அந்தப் பொண்ணு என்ன படிச்சிருக்கானு தெரியலை! பெரிசா படிக்கலைனு அம்மா சொன்னாங்க! ஒரு வேலை வாங்கித் தரணும் வேணு!

    மீரா...என்னைக் கொஞ்சம் பேச விட்றியா?

    சொல்லுங்க!

    ஜோசியர்கிட்ட பொய் ஜாதகம் குறிச்சுத்தர நாம கேட்டது நிஜம். ஆனா கட்டாயப்படுத்தலை. ஒரு காதலை வாழ வைக்க அவர் ஒத்துழைச்சார். மாட்டேன்னு அவர் சொல்லியிருந்தா, நாம வேற எடம் பார்த்திருப்போம். அவரை பலவந்தப்படுத்தி நாம ஜாதகம் வாங்கலை! அதனாலே அவரோட மரணத்துக்கு நாம பொறுப்பை ஏத்துக்க முடியாது!

    என்ன வேணு இப்படி பேசறீங்க?

    பேசாம? இதப்பாரு! அவர் பணம் சேர்த்து வைக்கலைன்னா அது நம்ம தப்பா? அவர் குடும்பம் தெருவுல நிக்க நீ காரணமில்லை மீரா!

    வேணு!

    "வேண்டாத வேலைகளை தயவு செஞ்சு இழுத்துப் போட்டுக்காதே! சொல்லிட்டேன். அது

    Enjoying the preview?
    Page 1 of 1