Kanavil Vanthaval
By Devibala
()
About this ebook
Read more from Devibala
Amma Ammamma Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Thevathai Rating: 4 out of 5 stars4/5Manmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsVizhikkul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsSokkuthe Manam Rating: 5 out of 5 stars5/5Assai Oonjalil Aadum Velaiyil Rating: 0 out of 5 stars0 ratingsPaatha Poojai Rating: 0 out of 5 stars0 ratingsVara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5Seetha Rating: 0 out of 5 stars0 ratingsPennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsCharumma Rating: 0 out of 5 stars0 ratingsJodi Thevai Rating: 5 out of 5 stars5/5Deepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsSeerum Sirappum Rating: 5 out of 5 stars5/5En Uyire Vaa Rating: 5 out of 5 stars5/5Azhaiththaal Varuven Rating: 0 out of 5 stars0 ratingsVeliye Sonnaal Vetkam Rating: 4 out of 5 stars4/5Poorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsVarunkaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsKathal Varam Rating: 0 out of 5 stars0 ratingsAvalukku Peyar Agni Rating: 0 out of 5 stars0 ratingsSu(sa)gavasam Rating: 0 out of 5 stars0 ratingsVidiyum Varai Rating: 5 out of 5 stars5/5Oru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 1 Rating: 0 out of 5 stars0 ratingsIndru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjalil Rating: 0 out of 5 stars0 ratingsVaruvathu Yaro? Rating: 2 out of 5 stars2/5Poomaalai Poda Vaa 2 Rating: 0 out of 5 stars0 ratingsMadiyil Saayum Neram Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kanavil Vanthaval
Related ebooks
Poomaalai Poda Vaa 2 Rating: 0 out of 5 stars0 ratingsAzhaiththaal Varuven Rating: 0 out of 5 stars0 ratingsAvathum Pennaley...! Rating: 0 out of 5 stars0 ratingsDevan Mozhi Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsIval Oru Mathiri! Rating: 0 out of 5 stars0 ratingsKanthudaippu Rating: 0 out of 5 stars0 ratingsTharasu Mul Rating: 0 out of 5 stars0 ratingsAaniver Rating: 0 out of 5 stars0 ratingsKaal Muzhaitha Sirppam Rating: 0 out of 5 stars0 ratingsAmma Endral Anbu Rating: 0 out of 5 stars0 ratingsதொட்டில் வரை காதலி! Rating: 0 out of 5 stars0 ratingsMummy Rammy Rating: 0 out of 5 stars0 ratingsKetten Thanthaai Rating: 5 out of 5 stars5/5Naathanar 2 Rating: 0 out of 5 stars0 ratingsKadaisivarai Yaaro Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsNetruvarai Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsNaathanaar Rating: 0 out of 5 stars0 ratingsநதிமூலம் Rating: 0 out of 5 stars0 ratingsLinga Bairavi Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Thedathey! Rating: 0 out of 5 stars0 ratingsKan Simittum Kaathal Rating: 0 out of 5 stars0 ratingsNillu Nivedha! Rating: 0 out of 5 stars0 ratingsKadhali Ilavasam Rating: 0 out of 5 stars0 ratingsMayangum Vayathu Rating: 0 out of 5 stars0 ratingsஊர்மிளா - '96' Rating: 0 out of 5 stars0 ratingsKaatraluththa Mandalam Rating: 5 out of 5 stars5/5Chakkalathi Rating: 0 out of 5 stars0 ratingsபுது அவதாரம் Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kanavil Vanthaval
0 ratings0 reviews
Book preview
Kanavil Vanthaval - Devibala
20
1
விசுக்கென எழுந்து உட்கார்ந்தாள் விசாலி!
அவள் உட்கார்ந்த நொடியில் அலாரம் அடித்தது!
காலை மணி நாலரை!
அப்பா அப்போதுதான் பாத்ரூம் போய்விட்டு உள்ளே வருவது தெரிந்தது.
விசாலி எழுந்து அவிழ்ந்த கூந்தலை முடிந்து கொண்டு, உள் நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
‘எத்தனை அழகான பெண்!’
‘கனவில் வந்த பெண் - மகாலக்ஷ்மி போல இருந்தாள். பட்டுச் சேலைகட்டி, தலையில் பூச்சூடி - ஒரு கல்யாணப் பெண் போல களையாக இருந்தாள்!’
‘அவளுடன் ரொம்ப நாள் பழகியதைப் போல இருந்தது!’
‘கனவு கலைந்துவிட்டதே’ என்று ஆதங்கமாக இருந்தது!
‘விசாலி... வா! வா விசாலி!’
தேன் குரலில் அவளது அழைப்பு!
விசாலிக்குப் புரியவில்லை! இந்தக் கனவு விசாலிக்குப் பிடித்திருந்தது.
பல் தேய்த்துக் குளித்துவிட்டு, சமையல் கட்டுக்குள் விசாலி நுழைந்தாள்.
பாலை அடுப்பில் வைத்தாள்.
நேராக பூஜை அறைக்கு வந்து விளக்கை ஏற்றி நமஸ்கரித்தாள்.
அப்பாவின் இருமல் தொடங்கி விட்டது.
பத்தே நிமிடங்களில் சுடு தண்ணீர் தயாரித்துக் கொண்டு வந்தாள்.
அப்பாவிடம் தந்தாள்.
அவர் ஏதோ பேச வர, விசாலி தடுத்தாள்.
எதுவும் பேச வேண்டாம். இருமல் அதிகமாகும்! பேசாமப் படுங்க.!
உள்ளே வந்து வேலைகளை ஆரம்பித்துவிட்டாள்.
வயதான - ரிட்டயரான அப்பா. பணம் எதுவும் சேர்த்து வைக்கவில்லை! குடும்ப பாரம் காரணமாக முடியவில்லை!
அண்ணன் சண்முகம்... தனியாரில் வேலை பார்க்கிறான். சுயமாக எதையும் சிந்திக்காத மனிதன்!
அண்ணி ராஜி வந்தாள். அண்ணனது லேசான கோழைத்தனத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டுவிட்டாள்.
அவனை தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்துவிட்டாள். சுயநலத்தின் மொத்த உருவம் அவள்தான்!
கணவனது கடமை இந்த வீட்டில் உண்டு என்பதை மழுங்கடித்து விட்டாள்.
அதுமட்டுமல்ல! விசாலி வங்கியில் உத்தியோகம் பார்ப்பவள். கணிசமான சம்பளம்.
அது வீட்டுக்கு வசதிகளைக் கொண்டு வருகிறது என்பது தெரிந்து விட்டது. அழகாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தாள்.
விசாலியின் சம்பளத்தில் குடும்பம் நடக்க, சண்முகத்தின் சம்பளம் நகைச் சீட்டு, புடவைச்சீட்டு என உருமாறியது!
டெபாஸிட்டாக வங்கியில் ஏறியது!
ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப்போட மாட்டாள் ராஜி.
அம்மா இறந்த பிறகு சமையல் கட்டு விசாலி கைக்கு வந்துவிட்டது!
இன்னும் விடவில்லை!
அப்பா பொருமத் தொடங்கி விட்டார்.
வீட்ல உழைச்சிட்டு, உத்தியோகமும் பாத்துட்டு வர்ற உனக்கு என்னம்மா தலையெழுத்து?
விசாலி சிரித்தபடி அவரை சமாதானப்படுத்திவிடுவாள்.
அப்பா! இது நம்ம வீடு! செய்யறதுல தப்பே இல்லை! கூடுமான வரைக்கும் சண்டை வேண்டாம்பா! விட்டுக்குடுத்துப் போயிடுவோம். அப்பத்தான் உறவுகள் நல்லா இருக்கும்! மோதிக்கிட்டா, முகம் பார்க்க முடியாதப்பா!
கல்யாண முயற்சிகளை அப்பா எடுத்தார்.
விசாலி அதையும் தடுத்தாள்.
கடன் வாங்கிக் கல்யாணம் நடத்தணும். அண்ணன் அடைக்க மாட்டான். அவ அடைக்க விட மாட்டா! அப்புறம் எதுக்கப்பா பிரச்னை?
அதுக்காக காலம் முழுக்க இப்படியே கன்னிகழியாம நீ இருப்பியா?
தெரியலப்பா!
இப்பவே உனக்கு இருபத்தி ஆறு! வேண்டாம்மா! என்னால ஜீரணிக்க முடியில!
அப்பா! என் கழுத்துல ஒரு தாலி ஏறணும்னு யோகமிருந்தா நிச்சயமா அது ஏறும். யார் தடுத்தாலும் நிக்காது! நீங்க அமைதியா இருங்க! புரியுதாப்பா?
அப்பா அதற்கு மேல் பேசவில்லை!
இதோ விசாலியின் வேலை தொடங்கிவிட்டது.
அண்ணனுக்கு ஏழு வயதில் பெண் குழந்தை உஷா!
அதைக் குளிப்பாட்டி, சீருடை போட்டு, சாப்பாடு ஊட்டி, பாடம் சொல்லித் தந்து, பள்ளிக்கூடத்தில் விட்டபிறகுதான் வங்கிக்குப் போவாள்.
அத்தை என்றால் உஷாவுக்கு உயிர்.
அம்மாகூட இரண்டாம் பட்சம் தான்.
ராஜிக்கு இதில் எந்த ஈகோவும் இல்லை! குழந்தையை கவனிக்கும் பாரம் இல்லையே!
ஏழு மணிக்குள் சமையல் முடிந்து விட்டது.
விசாலி போய் குழந்தையை எழுப்பினாள்.
அதை பல்தேய்க்க வைத்துக் குளிப் பாட்டிய பிறகுதான் ராஜியே எழுந்து வந்தாள்.
குழந்தைக்கு இட்லி ஊட்டத் தொடங்கினாள் விசாலி.
அத்தே! நாளைலேருந்து லீவு. வெளியூருக்கு எல்லாரும் போறாங்க! நாமளும் போகலாம் அத்தே!
யோசிக்கலாம்டா கண்ணு! முடிஞ்சா திருப்பதிக்காவது போயிட்டு வரலாம்!
குழந்தையை தயார் செய்து அனுப்பி விட்டு உள்ளே வர, தரகர் அழைத்தார்.
அப்பா வரவேற்றார்!
"விசாலி ஜாதகத்தை அலசிட்டேன். இன்னும் நாலு மாசத்துல கல்யாணம் நடக்கணும். தவறினா ஆறு வருஷம் கழிச்சுத்தான்!
அப்பா பதறினார்.
தவறக்கூடாது! உடனடியா வரன் பாருங்க! இன்னும் ஆறு வருஷம்னா, என் மகள் கல்யாணத்தை பார்க்க நான் உயிரோட இருக்கமாட்டேன்! நானும் போயிட்டா, என் மகள்கிட்ட யாருமே அக்கறை காட்டமாட்டாங்க!
ராஜி விசுக்கென திரும்பினாள்.
தரகருக்கு காபி தந்தாள் விசாலி. உள்ளே வந்து சேலை மாற்றிக் கொள்ளத் தொடங்கினாள்.
ராஜி அருகில் வந்தாள்.
விசாலி! என்னோட நகைச்சீட்டு முடியுது இன்னிக்கு! சாயங்காலம் தங்கமாளிகை போகலாம்னு இருக்கறேன்! நீ பர்மிஷன்ல வர்றியா?
சரி அண்ணி!
ராஜி தங்கமாளிகைக்கு விசாலியை அழைக்கக் காரணம் அங்கு தெரிந்தவர் உண்டு. அதிகமாக சேதாரம், வரி, செய்கூலி போடாமல்