Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kathavu Thiranthathu
Kathavu Thiranthathu
Kathavu Thiranthathu
Ebook106 pages51 minutes

Kathavu Thiranthathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465766
Kathavu Thiranthathu

Read more from Devibala

Related to Kathavu Thiranthathu

Related ebooks

Reviews for Kathavu Thiranthathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kathavu Thiranthathu - Devibala

    15

    1

    மருமகள் கவிதாவுடன் கோயிலுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் அம்மா!

    ஆட்டோ கொண்டு வரட்டுமா அத்தே?

    வேண்டாம்மா! நடந்தே போயிடலாம்!

    பதினைஞ்சு நிமிஷம் ஆகுமே! உங்களுக்கு நடக்க முடியுமா?

    முடியும்மா. எனக்கும் ஒடம்புல வியாதிகள் இருக்கு! நடந்தா நல்லதுதானே?

    சரி அத்தே!

    வீட்ல என்னை எந்த வேலையும் நீ செய்ய விடறதில்லை! வர வர நான் சோம்பேறி ஆயிட்டேன் கவிதா!

    இத்தனை நாள் உழைச்சாச்சு! போதும். கொஞ்ச நாள் ஓய்வெடுங்க அத்தே!

    மருமகளைப் பார்த்து ஆனந்தப்பட்டாள் அம்மா!

    கல்யாணம் முடிந்து ஆறு மாதங்கள் தான் ஆகியிருந்தது!

    கற்பகம்மாவுக்கு ராஜா ஒரு மகன். ரஞ்சனி ஒரு மகள். சிறுவயதில் கணவரை இழந்து தையல், சமையல் என பலவித வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு இடைவிடாது உழைத்து இரண்டு குழந்தைகளையும் கரையேற்றி விட்டாள் கற்பகம்!

    ராஜா பி.டெக்., எம்.பி.ஏ., - ரஞ்சனி எம்.ஏ., பிரமாதமாகப் படித்து உபகாரச் சம்பளம் வாங்கி, இருவரும் தாயின் கனவுகளை வீணாக்கவில்லை!

    இரண்டு பேருக்குமே பெரிய உத்யோகம் கிடைத்தது! பல ஆயிரங்கள் சம்பளம். ஒரே வருடத்தில் குடும்பத்தின் நிலை எங்கோ உயர்ந்து விட்டது! அடுத்த ஒரு வருடத்தில் மாறி மாறி இருவரும் வெளிநாட்டுக்குப் போனார்கள். பணத்தைக் குவித்தார்கள். இங்கு வந்து வீடு வாங்கினார்கள்.

    கற்பகம் பூரித்துப் போனாள்.

    மகனுக்கும், மகளுக்கும் கல்யாணத்தை முடித்துவிட வேண்டும் என நினைக்க,

    ராஜா தன் முதல் நிபந்தனையை போட்டு விட்டான்.

    படிச்ச, பதவிசான பெண் வேணும். ஆனா வேலைக்குப் போக வேண்டாம். வீட்டோட இருந்து நிர்வாகத்தைப் பாக்கட்டும்!

    ஏண்டா ராஜா?

    நம்ம ரஞ்சனி பெரிய வேலை பாக்கறா. காலைல போனா, ராத்திரி 12மணி ஆகுது வீடு திரும்ப. இப்படி இருந்தா குடும்பத்தை எப்படி கவனிக்கறது?

    ரஞ்சனி குறுக்கிட்டாள்.

    கை நிறைய காசு வருதில்ல? வேலைக்கு ஆளைப் போட்டுக்கணும்!

    ஆட்கள் இருந்தாலும் பற்றுதலோடு செய்வாங்களா? கூலிக்கு மாரடிப்பாங்க!

    அம்மா! அதையெல்லாம் பார்த்தா முடியாது! வேலை நடக்கணும்!

    சரிம்மா! பெத்த அம்மா நான் கண்டுக்க மாட்டேன். உனக்கு மாமியார்னு வந்தா, இதை ஏத்துப்பாங்களா?

    விருப்பமிருந்து, எனக்கு அனுசரணையா இருந்தா இருக்கட்டும்! இஷ்டமில்லைனா, போகட்டும்!

    என்னடீ பேசறே? நீ போன மறுநாளே, மாமியாரை விரட்டுவியா? நான் பெத்த பெண்ணா நீ?

    நிறுத்தும்மா! நான் சந்தோஷமா வாழணும். அதுக்கு இடையூறா யார் வந்தாலும், விடமாட்டேன்!

    சரி விடும்மா! சூழ்நிலைக்குத் தக்க வேண்டியதை செஞ்சுகலாம்! ராஜா எதிலும் பட்டுக் கொள்ள மாட்டான். ஆனால் ரஞ்சனி முகத்தில் அடித்த மாதிரிப் பேசி விடுவாள்.

    சுயநலத்தின் மொத்த உருவம்!

    தன் மகளாக இருப்பதால் விட்டுத் தரவும் வழியில்லை!

    அம்மா தரகரை அழைத்து இரண்டு பேர் ஜாதகங்களையும் ஒப்படைத்தாள்.

    ராஜாவின் விருப்பப்படியே அம்மா வரன் பார்க்க, ஒரு ஜாதகம் பிரமாதமாகப் பொருந்தியது!

    எம்.சி.ஏ. படித்த கவிதா, நல்ல உத்யோகத்தில் இருந்தாள். அப்பா, அம்மா இருந்தார்கள். இவள் ஒரே பெண்.

    பெண் பார்க்கப் போனார்கள்.

    கவிதா அழகாக இருந்தாள். ராஜாவுக்குப் பிடித்து விட்டது!

    நான் மாசம் ஒரு லட்சம் சம்பாதிக்கிறேன். நீ வேலைக்குப் போக வேண்டாம். ராஜினாமா பண்ணிடு!

    கலந்து பேச ஒரு நாள் அவகாசம் கேட்டார்கள்.

    என்னம்மா சொல்ற?

    நானும் மாசம் நாப்பதாயிரம் சம்பாதிக்கறேனேப்பா!

    பரவால்லைமா! நல்ல வரன் வருது! இப்ப ராஜினாமா பண்ணிடு. அப்புறம் ஒப்புக்கிட்டா, வேலை தேடிக்கோ! உனக்குத்தான் படிப்பு இருக்கே! நல்ல வரனை விடணுமா?

    சரிப்பா!

    தாம்பூலம் மாற்றப்பட்டது!

    தங்கைக்கும் ஒரு வரன் முடிவான பிறகு கல்யாணம் நடக்கட்டும் - என்றான் ராஜா!

    ரஞ்சனி சம்மதிக்கவில்லை!

    என்னை உன்னோட பிணைக்காதே! உன் கல்யாணம் நடக்கட்டும். எனக்கு அமையும் போது அமையட்டும்!

    அவர்கள் சம்மதித்து விட,

    ஒரே மகள் என்பதால் கவிதாவுக்கு பிரம்மாண்டமாக கல்யாணம் நடத்தினார்கள்.

    கவிதா மருமகளாக வலது காலை எடுத்து வைத்து விட்டாள். அவளது இயல்பான பேச்சும், பாசமும், குடும்பத்தில் ஒருத்தியாக தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதும் முதல் இரண்டு நாட்களில் அவளை உணர்த்தி விட்டது.

    தேனிலவுக்கு எங்கே போகலாம் என திட்டமிடும் நேரம், அலுவலக வேலையாக மூன்று மாதங்களுக்கு ஜெர்மனிக்குப் போகும் பணி ராஜாவுக்கு வந்து விட்டது.

    இதை நிறுத்த முடியாதா ராஜா? இப்பத்தானே கல்யாணம் நடந்திருக்கு?

    ரஞ்சனி குறுக்கிட்டாள்.

    என்னம்மா உளர்ற நீ? கல்யாணமாயிட்டா, பொண்டாட்டி முந்தானையைப் புடிச்சிட்டே நடக்கணுமா? அவனோட எதிர்காலம் முக்கியமில்லை?

    கற்பகம் முகம் மாறியது.

    கவிதா காபி கொண்டுவர உள்ளே போக,

    நீ இப்படி பேசினா, அவ என்ன நினைப்பா?

    உண்மையை நான் பேசும் போது, யார் என்ன நினைச்சாலும் எனக்குக் கவலையில்லை!

    கற்பகம் ஆடிப் போனாள்.

    அத்தே... அவர் போயிட்டு வரட்டும். நான் இங்கே சந்தோஷமா இருப்பேன்!

    ராஜா புறப்பட்டுப் போய் விட்டான்!

    கவிதா தான் வீட்டு வேலைகள் மொத்தத்தையும் செய்தாள். ரஞ்சனி ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட மாட்டாள். படக் படக்கென பேசுவாள்!

    கற்பகம் பொறுக்க முடியாமல், அவ அப்படித்தான். நீ மனசுல வச்சுக்காதேம்மா!

    எனக்குப் புரியும் அத்தே! நீங்க கவலைப்படாதீங்க!

    ரஞ்சனிக்கும் வேகமாக வரன் பார்க்க,

    ஒருநாள் இரவு ரஞ்சனி, அம்மா - அண்ணி இருவரையும் அழைத்தாள்.

    எனக்கு வரன் பார்க்க வேண்டாம்!

    ஏன்?

    "என்

    Enjoying the preview?
    Page 1 of 1