Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Konjum Mainaakkale 2
Konjum Mainaakkale 2
Konjum Mainaakkale 2
Ebook91 pages40 minutes

Konjum Mainaakkale 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465773
Konjum Mainaakkale 2

Read more from Devibala

Related to Konjum Mainaakkale 2

Related ebooks

Reviews for Konjum Mainaakkale 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Konjum Mainaakkale 2 - Devibala

    16

    1

    "எப்படியும் உன் புருஷன் வரப் போறதில்லை! வந்தாலும், சட்டத்தோட பிடில சிக்கித்தான் ஆகணும். இந்தப் புதுமலர் எனக்கு சொந்தமாகக் கூடாதா?"

    ருக்கு ஆவேசமாக நிமிர்ந்தாள்.

    ‘முத்துவுக்கு அடுத்த காமுகன்...’

    ‘என்ன செய்யலாம் இவனை?’

    அந்த மனிதன் அருகில் நெருங்கினான். உடம்பு முழுக்க சந்தன வாசம். மது வேறு அருந்தியிருந்ததால், அதன் நெடி குப்பென்று தாக்கியது!

    கிட்ட வராதே!

    இதப்பாரு ருக்கு! நீ புத்திசாலினு எனக்குத் தெரியும். மரியாதையா இணங்கிடு! நாளைக்கே நான் வெளிநாடு போறேன். ஆறு மாசம் கழிச்சுத்தான் வருவேன். இன்னிக்கு உன்னை அனுபவிக்கற சுகம், இந்த ஆறு மாசத்துக்கு நீடிக்கும்! வந்தப்புறம் மற்றதைப் பாத்துக்கலாம்!

    வேண்டாம். இதுக்கு நான் ஒப்புக்க மாட்டேன்!

    ஒப்புக்கலைனா, உனக்கு வேலை போகும்! மானமும் போகும். உன்னை நான் தொட்டுட்டேன்னு ஊர் முழுக்கப் பரப்புவேன். தொடாமலே உனக்குப் பழிவரும். பாக்கறியா?

    ......!

    ஆனா நிஜம்மாவே அனுபவிச்சிட்டா, வெளில சொல்ல மாட்டேன்! கம்பெனில நீ ராணி! சம்பளம் வாங்கற ஊழியை இல்லை! ஒரு பங்குதாரரா ஆக்கறேன். நான் எத்தனையோ அழகான பொம்பளைங்களை அனுபவிச்சிருக்கேன். ஆனா யாருக்கும் இத்தனை பெரிய வாய்ப்பைத் தந்ததில்லை! உன் குடும்பப் பற்று எனக்குத் தெரியும். புருஷன் தலைமறைவா இருந்தும், அவன் குடும்பத்தை நீ தாங்கறே! அவங்களை வாழ வைக்க நீ நெனச்சா, இந்த ராத்திரியை எனக்காக ஒதுக்கு!

    இல்லை. மாட்டேன்! இப்படி ஆசைப்பட்ட ஒரு முத்துவை அவர் அடிச்சுக் கொன்ன காரணமாத்தான் இன்னிக்கு இந்த நிலைமை! அவர் என்னைப் பிரியக் காரணம், என் கற்பு. அதை உங்கிட்ட இழக்க நான் தயாரா இல்லை!

    அவர் சிரித்தார்.

    கற்பா? இந்தக் காலத்துல அது கெட்ட வார்த்தை! பொழைக்கத் தெரிஞ்ச பொம்பளையோட அகராதில அது நீக்கப்பட்ட சொல்!

    வாயை மூடு! பெண்மையை இழிவு படுத்தாதே! உன்னைப் பெத்தவ ஒரு வேசியா?

    இப்படியெல்லாம் சொல்லிட்டா, ஆத்திரப்பட்டு உன்னை விட்ருவேன்னு நெனச்சியா? அதுதான் நடக்காது! காமத்தோட உச்சில இருக்கறவன் கிட்ட, எந்த அம்மா சென்டிமென்டும் எடுபடாது! வாடி! நெருங்கிக் கைகளைப் பற்றி விட்டார்!

    ருக்கு உதறினாள்.

    நீயா இணங்கினா, ரெண்டு பேருக்கும் சுகம்! இல்லைனா, பலவந்தம் தான்!

    அவர் ருக்குவை அணைக்க, அவள் உடம்பில் அந்த ராட்சச பலம் வந்து விட்டது! ஆவேசமாகப் பிடித்துத் தள்ளினாள்.

    அவர் போய் விழுந்தார்.

    விழுந்த வேகத்தில் கட்டில் மேல் அவர் தலை மோதியது! அது பழைய காலத்து இரும்புக் கட்டில். பலமாக மோதியதால் ரத்தம் சொட்ட, கண்களை இருட்டிக் கொண்டு அவர் மயக்கமானார்!

    ருக்கு ஒரு நொடி நின்றாள்.

    ‘காமுகன் - சாகட்டும். நாளை இவனது மரணச் செய்தி வரட்டும்!’

    ‘தப்பு ருக்கு!’

    கதவை நோக்கி நடந்தவள் நின்றாள்.

    ‘முத்துவைக் கொன்றதற்காக உன் புருஷன் தலை மறைவு!’

    ‘இப்ப - இவனைக் கொன்றதற்கு நீயும் சட்டத்தின் பிடியில்!’

    ‘உன்னை நம்பி வாழும் குடும்பத்தின் நிலைமை என்ன?’

    ‘விடாதே! இவனைப் பிழைக்க வச்சிடு!’

    ‘ஏதாவது செய்!’

    கதவைத் திறந்து வெளியே வந்தாள். அங்கே நாற்பது வயது கடந்த ஒரு வேலையாள் இருந்தான்.

    அவனிடம் ஓடி வந்தாள்.

    கையெடுத்துக் கும்பிட்டாள்.

    மொத்த விவரத்தையும் சொன்னாள்.

    அந்த ஆள் சாகக்கூடாது! ஆஸ்பத்திரில சேர்க்கணும். அதை இப்ப நான் செஞ்சா, ராத்திரி நேரத்துல எனக்கு இங்கே என்ன வேலைனு கேள்வி வரும்! நீங்க உதவுங்க அண்ணே!

    அந்த வேலையாள் உடனே ஒரு ஆட்டோவை அழைத்து வந்தான்.

    முதலாளியைப் பிடித்து ஆட்டோவில் ஏற்றினான்.

    நான் பாத்துக்கறேன். நீ வீட்டுக்குப் போம்மா! ஆட்டோ போய்விட்டது!

    நேரம் இரவு பத்துமணி. கலைந்து கிடந்த தன்னை ருக்மணி சரி செய்து கொண்டாள்!

    வேகமாக வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

    பத்தரைக்கு வீட்டை நெருங்க, அத்தனை பேரும் வாசலில் இருந்தார்கள்.

    அண்ணி! ஏன் இத்தனை நேரம்?

    வேலை இருந்தது பத்மினி! ஒரு ஆள் மூலம் தகவல் சொல்லி அனுப்பினேனே! வந்து சொல்லலையா?

    இல்லையே?

    சரி! எல்லாரும் உள்ள வாங்க!

    உள்ளே வந்தார்கள்.

    அண்ணி! சாப்பாடு எடுத்து வைக்கறேன்!

    வேண்டாம் ராணி! பசிக்கலை! குடிக்கத் தண்ணி மட்டும் குடு!

    இப்படி அர்த்த ராத்திரில ஒரு பொம்பளை வீடு திரும்பினா, ஊர் என்ன பேசும்?

    ருக்கு பேச வில்லை!

    "ஊர் பேசறது இருக்கட்டும். கலைஞ்சு போய் வந்து நிக்கற உன்னைப்

    Enjoying the preview?
    Page 1 of 1