Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Padma Viyugam
Padma Viyugam
Padma Viyugam
Ebook89 pages37 minutes

Padma Viyugam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465780
Padma Viyugam

Read more from Devibala

Related to Padma Viyugam

Related ebooks

Reviews for Padma Viyugam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Padma Viyugam - Devibala

    14

    1

    தரகர் தந்துவிட்டுப் போன வரன் பிரமாதமாகப் பொருந்தியிருந்தது. பையன் வினோத், எம்.டெக். முடித்து வெளிநாட்டில் எம்.பி.ஏ.யும் படித்து விட்டு அங்குதான் வேலை. இந்திய கரன்சியில் மாதம் நாலு லட்ச ரூபாய் சம்பளம். இங்கே சொந்த வீடு, வசதிகள். அப்பா இல்லை. அம்மா மட்டும். இரண்டு சகோதரிகள். கல்யாணமானவர்கள். அம்மா வருடத்தில ஆறுமாதங்கள் மகனுடன் போய் இருந்து விட்டு வருவார்கள்.

    இப்போது வினோத் ஒரு மாத விடுப்பில் வருகிறான்.

    அதற்குள் கல்யாணம் முடித்து புறப்பட வேண்டுமாம். இவளையும் அழைத்துக் கொண்டு போக வேண்டுமாம்.

    ‘எப்போது பெண் பார்க்க வரலாம்’ என்று தரகர் கேட்டார்.

    நாளைக்கு நல்ல நாள். வரச் சொல்லுங்க! - சுமதி சொல்ல, மூர்த்தி குறுக்கிட்டார்.

    ரேகாகிட்ட கேக்காம நீயே சொல்றியே?

    அவ என்ன சொல்லப் போறா? நான் பேசிக்கறேன்!

    இல்லைம்மா! வாழப் போறவ அவ. அனுமதி கேக்காம முடிவெடுக்கறது அடாவடி சுமதி!

    இதப்பாருங்க! நம்ம பொண்ணோட வாழ்க்கைல நம்மை விட அதிக அக்கறை யாருக்கு இருக்கும்? இவளுக்கு பாஸ்போர்ட் இருக்கு! கல்யாணம் முடிச்சு உடனே போகணும்னா, மற்ற சங்கதிகளுக்கு ஏற்பாடு செய்யணும்!

    மூர்த்தி - சுமதி தம்பதிகளுக்கு ரேகா ஒரே மகள். அவளும் பி.ஈ. முடித்து ஒரு வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனத்தில் மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கிறாள். தான் உண்டு, தன் வேலையுண்டுஎன இருப்பவள். இசையில் ஆர்வம் உண்டு. கொஞ்சம் பிடிவாதமான பெண். அவளது வெற்றிக்கும் அந்தப் பிடிவாதம்தான் காரணம்!

    சுமதி கல்யாண பட்ஜெட்டையே போடத் தொடங்கி விட்டாள்.

    சிறுவயது முதலே சேமிக்கத் தொடங்கி விட்டதால், ரேகாவுக்கு எல்லாமே இருந்தது.

    பல லட்சங்கள் செலவழித்து கல்யாணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தார்கள்!

    கணவரிடம் பட்ஜெட்டைக் காட்டினாள்.

    முடிவாகட்டும் சுமதி!

    இதப்பாருங்க! அந்த நேரத்துல முட்டிக்கணுமா? முன்னெச்சரிக்கை எல்லாத்துலேயும் இருக்கணும். அப்ப கஷ்டப்பட மாட்டோம்! புரியுதா?

    சரி! உன் விருப்பம் போல செய்!

    மாலை ஏழு மணிக்கு ரேகா வந்து விட்டாள். முகம் கழுவி, காபி குடித்தாள்.

    ரேகா! நாளைக்கு லீவு போடு!

    எதுக்கும்மா?

    ஒரு பெரிய வரன் வந்திருக்கு. உன்னைப் பெண் பார்க்க வர்றாங்க! வெளிநாட்டில் வேலை. நாலு லட்சம் சம்பளம். பெரிய படிப்பு! நல்ல குடும்பம். நீ உடனே வெளிநாட்டுக்குப் போக வேண்டிவரும். ஜாதகம் பிரமாதமா பொருந்தியிருக்கு!

    சுமதி மூச்சு விடாமல் சொல்லி முடிக்க,

    ரேகா சிரித்தாள்.

    ஏண்டீ சிரிக்கற?

    கல்யாணம் எனக்கு. என்னைக் கலந்துக்காம நீயே எல்லா முடிவுகளையும் எப்படீம்மா எடுக்கலாம்?

    அப்பா குறுக்கிட்டார்.

    இதைத் தாம்மா நானும் கேட்டேன்!

    நீங்க சும்மாருங்க! இதப்பாரு ரேகா! நான் உன் அம்மா! உன் வாழ்க்கைல உன்னை விட எனக்கு அக்கறை இருக்கும். நாளைக்கே கல்யாணம் நடக்கப் போறதில்லை. பரஸ்பரம் புடிச்சு, எல்லாம் சரியா வந்தாத்தான் நடக்கும். உன்னை எதுக்குமே நான் கட்டாயப்படுத்த மாட்டேன். ஆனா நல்லதைத்தான் செய்வேன்!

    ரேகா பேசவில்லை.

    லீவு போடறியா?

    ரேகா எழுந்தாள். சரிம்மா! எத்தனை மணிக்கு வர்றாங்க?

    காலை பதினொரு மணிக்கு!

    சரி! ஆபீஸ் சாவிகள் எங்கிட்ட இருக்கு! ஏழு மணிக்குப் போய்க் குடுத்துட்டு, பத்துக்குள்ளே வந்துடறேன்.

    தேங்க்யூ ரேகா!

    சுமதி, மகளை முத்தமிட்டாள். ரேகா உள்ளே போக, பாத்திங்களா? அம்மா பேச்சை ரேகா தட்டமாட்டா. நல்ல இடமா வந்திருக்கு! இது அமைஞ்சிட்டா, குழந்தையோட வாழ்க்கை அமோகமா இருக்கும்! கடவுள் கை கொடுக்கட்டும்!

    ரேகா தன் அறைக்குள் வந்து கதவைச் சாத்திக் கொண்டாள். செல்போனை எடுத்து எண்களை அழுத்தினாள்.

    கணேஷ்! நான் ரேகா பேசறேன். ஏழரை மணிக்கு வழக்கமா மீட் பண்ற ஓட்டலுக்கு வந்துரு! அவசரமா சந்திக்கணும். சொதப்பிடாதே!

    அணைத்தாள்.

    முகத்தில் சிந்தனை முகாமிட, ஒரு பாடலை உரக்கப் போட்டுக் கொண்டு கண்களை மூடிப்படுத்து விட்டாள்.

    வெளியே சுமதி, நாளை பொழுதுக்கான திட்டங்களை தீட்டிக்கொண்டிருந்தாள்.

    2

    காலை ஏழரை மணிக்கு ஓட்டல் வாசலில் நின்றாள் ரேகா! கைக்கடிகாரத்தை திரும்பத்திரும்ப பார்த்தாள். மேலும் பதினந்து நிமிடங்கள் ஓடியது. பைக் தடதடத்தபடி வந்து நின்றது!

    ஸாரி ரேகா! அஞ்சு நிமிஷம் லேட்!

    உன் வாட்சை கரெக்ட் பண்ணு கணேஷ். பதினஞ்சு நிமிஷம் லேட். எனக்கு லேட்டா வர்றது பிடிக்காது!

    சரி! எதுக்கு கோவப்படற? கோவப்பட்டா அழகு குறையும்! உள்ளே போகலாம் வா!

    இருவரும் உள்ளே வந்தார்கள்.

    டிபன் சாப்பிட்டியா ரேகா?

    இல்லை!

    நான் ஆர்டர் பண்றேன். ஜில்லுனு தண்ணியைக் குடி! கூல் யுவர் செல்ஃப்!

    பேரர்

    Enjoying the preview?
    Page 1 of 1