Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pathavi Neekkam
Pathavi Neekkam
Pathavi Neekkam
Ebook96 pages43 minutes

Pathavi Neekkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465780
Pathavi Neekkam

Read more from Devibala

Related to Pathavi Neekkam

Related ebooks

Reviews for Pathavi Neekkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pathavi Neekkam - Devibala

    19

    1

    கல்யாண அழைப்பிதழ்கள் வந்துவிட்டன!

    ரங்கராஜன் அதைப் பிரித்து எடுத்து பார்வையிட்டார்.

    திவ்யா! இப்படி வாம்மா!

    திவ்யா ஓடி வந்தாள்.

    எப்படி இருக்கு? ஒரு பீஸ்... இருபது ரூபா!

    அவர் மனைவி மங்களம் வெளியே வந்தாள்!

    இதெல்லாம் ரொம்ப அதிகம்!

    எதுடி அதிகம்? நம்ம ஒரே பொண்ணு திவ்யா! ஒவ்வொண்ணுலேயும் ஒரு ஆடம்பரம் தெரியணும். இதுமாதிரி யாரும் கல்யாணம் நடத்தலைனு ஊரே மூக்குல விரல வைக்கணும்!

    சரிங்க! எனக்கு மட்டும் அந்த சந்தோஷம் இல்லையா? இருந்தாலும் எதிலும் ஒரு நிதானம் வேணும்!

    சரி! உன் பையன் எப்ப லீவுல வர்றான்?

    அவனுக்கு படிக்க நிறைய இருக்கு. கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாலதான் வருவான்!

    மெதுவா வரட்டும். அவன் வந்துதான் இங்கே வேலை நடக்கணும்னு இல்லை!

    ரங்கராஜன் போனைப் போட்டார்.

    ஆமாம் மாது! நீயும் வா - கூட பாலுவைக் கூட்டிட்டு வா! இன்விடேஷன்கள் யார் யாருக்கு தபால்ல, நேர்ல - இதுக்கெல்லாம் பக்கா லிஸ்ட் தயாரிச்சு வச்சிருக்கேன். அதை சரி பார்த்து அனுப்பிடணும்!

    வைத்தார்.

    மங்களம்! நான் புறப்படறேன்!

    ரங்கராஜன் தனியார் நிறுவனமொன்றில் ஜெனரல் மேனேஜர்! அந்த நிறுவனத்தில் இருபது வருடங்களாக வேலை பார்ப்பவர். அதி புத்திசாலி. அவர் இல்லாவிட்டால் ஒரு நாள் கூட ஓடாது!

    நிறைய சம்பாதித்து விட்டவர்! சொந்தமாக இந்தப் பெரிய வீடு, கார் எல்லாம் உண்டு.

    திவ்யா முதலில் பிறந்தவள். படிப்பை முடித்துவிட்டு, வீட்டில் இருப்பவள்.

    அடுத்தது மகேஷ். வெளியூரில் என்ஜினியரிங் படிப்பவன்.

    இதோ திவ்யாவுக்குக் கல்யாணம்.

    ஓரளவுக்கு பெரிய இடம்தான். பணத்தைக் கொட்டிக் கொட்டி செய்கிறார் ரங்கராஜன்!

    திவ்யா கல்யாணம் முடிந்த ஒரு வாரத்தில் லண்டனுக்குப் போய் விடுவாள்.

    ரங்கராஜன் சுயமாக தன் பலத்தில் வளர்ந்தவர்!

    அகங்காரம் அதிகம்!

    சட்டென தூக்கி எறிந்து பேசி விடுவார். அதனால் நண்பர்களை விட, எதிரிகள் அதிகம்.

    அதற்காக கவலைப்படவே மாட்டார்.

    மங்களம் புலம்புவாள்.

    நமக்கும் நாலு மனுஷங்க வேணும். நீங்க - இப்படி இருக்கக் கூடாது!

    எப்படி இருக்கக் கூடாது? எல்லார் காலையும் பிடிக்கச் சொல்றீயா? அதுக்கு வேற ஆளைப்பாரு! இந்த ரங்கராஜன் யாருக்கும் அடங்க மாட்டான்!

    அவர் மகள் திவ்யாவும் அதேதான்.

    அகங்காரம், முன்கோபம், எடுத்தெறிந்து பேசும் தன்மை!

    அப்பா ஆம்பளை! அப்படி இருந்தாலும் தப்பில்லை! நீ இன்னொரு இடத்துக்கு வாழப் போறவள். அடக்கி வாசிக்கணும். இல்லைனா வாழ்க்கைல பிரச்னை வந்துடும்!

    அம்மா! நான் காசு, பணத்தோட கம்பீரமா ஒருத்தருக்கு மனைவியாத்தான் போறேன். அடிமையாய் போகலை! அதை மறந்துடாதே!

    "சரி! நான் பேசலை! இன்னிக்கு நம்ம சக்கரம் உச்சில இருக்கு. நாளைக்கே அது கீழே இறங்கலாம்!

    அந்த உணர்வு வேணும். மனுஷ வாழ்க்கைல ஏற்ற, இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும்!"

    உன் உபதேசம் போதும். காது செவிடாகுது!

    நான் பேசலைமா!

    இதோ - கல்யாணத்துக்கு ஒரு வாரம்தான் பாக்கி! பெரிய மண்டபம் - ஏஸி அறைகள் - போக்குவரத்துக்கு கல்யாணம் முடியும்வரை நாலு கார்கள் ஓடும்படி செய்திருந்தார்!

    ஆள், அம்பாரி என எந்த ஏற்பாட்டுக்கும் குறைவில்லாமல் பார்த்துப் பார்த்து செய்திருந்தார்.

    நகை, துணிமணிகள் எதற்கும் பஞ்சமில்லை!

    சம்பந்தி வீட்டாரை மட்டும் அவரும், மங்களமும் நேரில் போய் அழைத்து வந்தார்கள்.

    மற்ற எந்த உறவுக்காரர்கள் வீட்டுக்கும் ரங்கராஜன் போகவில்லை!

    கல்யாணத்துக்கு மூன்று நாட்கள் மட்டுமே என்ற நிலை வந்துவிட்டது!

    பரபரப்பு கூடிப் போனது!

    ரங்கராஜன் காலை அலுவலகம் புறப்பட்டு விட்டார்.

    நீங்க லீவெடுக்கலையா?

    நாளைலேருந்து லீவுதான் மங்களம். நான் இல்லைனா வேலை நடக்கறதில்லை! போக வேண்டிய கட்டாயம். என்ன செய்ய? சேர்மன்கிட்ட சொல்லிட்டேன்! இன்னிக்கு பொறுப்புகளை ஒப்படைச்சிட்டு வந்துரணும்!

    காரில் ஏறிவிட்டார்.

    அலுவலகம் போய்ச் சேர்ந்தபோது வாசலில் சேர்மனின் கார் நின்றது.

    ‘சேர்மன் இத்தனை சீக்கிரம் வந்துட்டாரா? என்ன விஷயம்?’

    வேகமாக ரங்கராஜன் சேர்மனின் அறையை நோக்கி நடந்தார்.

    வாசலில் பியூன்!

    சேர்மன் எப்ப வந்தார்?

    ரங்கராஜன் கதவைத் திறக்கப் போக, இருங்க சார். அவர் கூப்பிடறவரைக்கும், யாரும் வரக் கூடாதுனு சொல்லிட்டார்!

    நீ யார்கிட்டப் பேசறேனு தெரியுதா? நான் இங்கே ஜியெம். உனக்கு வேலை போயிடும்!

    மன்னிக்கணும் சார். மேலிடத்து உத்தரவு. நான் கட்டுப்படணும்!

    பெல் அடிக்க, பியூன் ஓடினான்.

    சில நிமிடங்களில் வெளிப்பட்டான்.

    உங்களை வரச் சொல்றார்!

    ரங்கராஜன் குழப்பத்துடன் உள்ளே நுழைந்தார்.

    சேர்மன், ரங்கராஜனின் ஜூனியர் அதிகாரிகள் இருவர், புது பி.ஏ. ஷீலா நால்வரும் இருந்தார்கள்.

    "குட்மார்னிங்

    Enjoying the preview?
    Page 1 of 1