Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sokkuthe Manam
Sokkuthe Manam
Sokkuthe Manam
Ebook95 pages37 minutes

Sokkuthe Manam

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465780
Sokkuthe Manam

Read more from Devibala

Related to Sokkuthe Manam

Related ebooks

Reviews for Sokkuthe Manam

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sokkuthe Manam - Devibala

    14

    1

    "ஒரு வருடத்துக்கு நான் வெளிநாட்டுலதான் இருப்பேன் ராதா. இன்னும் நாலு நாள்ல புறப்படணும்."

    இப்படி திடீர்னு அதிர்ச்சி குடுத்தா எப்படி என்னால தாங்கிக்க முடியும் பாலா?

    வேற வழியில்லை. இந்த வாய்ப்புக்காக நான் காத்துக்கிட்டிருக்கேன். இதுல நான் சம்பாதிச்சிட்டு வந்தாத்தான் அக்கா கல்யாணத்தை நடத்த முடியும். அக்கா கல்யாணம் நடந்தாத்தான் நமக்கு நடக்கும்! ராதா அவனையே பார்த்தாள்.

    நமக்கு மத்தில எல்லாமே நடந்தாச்சு பாலா! அதை நீ மறக்கக் கூடாது!

    சொல்லும் போது குரல் இடறி, கண்கள் கலங்கின. பாலா அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

    உன்னை நான் ஒதுக்கிருவேன்னு நினைக்கறியா?

    அப்படி இல்லை பாலா! ஆயிரம்தான் ஆனாலும் நான் பெண்தானே? உள்ளே ஒரு பயம் இருக்காதா?

    அதைப் போக்க நான் என்ன செய்யணும்?

    நான் உன் மனைவிங்கற உணர்வு உனக்குள்ளே இருக்கணும் பாலா!

    அது இப்பவும் இருக்கு ராதா.

    அது அழுத்தமா உனக்குள்ளே இறங்க, ஏதாவதொரு அச்சாரம் வேணும் பாலா!

    எப்படி? புரியலை.

    நீ விமானத்துல ஏறுறதுக்கு முன்னால் நமக்கு ரகசியமா ஒரு கல்யாணம் நடந்தாகணும்.

    பாலா திடுக்கிட்டான். ரகசியக் கல்யாணமா? எதுக்கு ராதா?

    ஒரு வருஷம் கழிச்சு நிறையப் பணத்தோட நீ திரும்புவே. அப்ப உன் மனசு எப்படி வேணும்னாலும் மாறலாம். இங்கே உங்கக்கா கல்யாணம் நடக்கும். அது முடிஞ்சதும், உன் கல்யாணப் பேச்சு வரும். என்னை உன் குடும்பம் ஒருவேளை புறக்கணிச்சா?

    நான் விடமாட்டேன் ராதா!

    இல்லை பாலா! நான் ஆட்டோ ஓட்டறவர் மகள். என் குடும்பத்துக்கு பெரிசா சமூக அந்தஸ்து இல்லை.

    ஆனா நீ படிச்சு வேலை பார்க்கறியே?

    போதாது பாலா! உன் குடும்பம் அதை ஏற்குமா? அக்கா காரணமா நம்ம காதலை நீ பேச வாய்ப்பு வரல்லை. எனக்குள்ளே பெரிய பயம் இருக்கு பாலா! நான் உன் மனைவி ஆயிட்டா, உனக்குள்ளே ஒரு தார்மீக பொறுப்பு வந்துடும்.

    பாலா வேகமாக யோசித்தான்.

    ஒரு நாள் அவகாசம் குடு.

    எதுக்கு? நான் வேணுமா, வேணாமான்னு முடிவெடுக்கவா?

    ராதா! உனக்குள்ளே பயம் இருந்தாலும், நம்பிக்கையும் அவசியம்.

    நிச்சயமா நம்பறேன். அது சிதறாம இருக்க நல்ல பதிலாச் சொல்லு பாலா!

    இருவரும் எழுந்து விட்டார்கள்.

    ஏறத்தாழ ஒரு வருட காலமாகப் பழகுகிறார்கள்.

    ஒரு விபத்திலிருந்து ராதாவை பாலா காப்பாற்ற - நன்றி காதலாக மாறிவிட்டது. உரிமையில் அத்துமீறலும் நடந்துவிட்டது.

    ராதாவின் அப்பா ஆட்டோ ஓட்டுநர். அம்மா இட்லி, ஆப்பம் சுட்டு சம்பாதிக்கும் பெண்மணி. இரண்டு தம்பிகள் - பெரிதாக வரவில்லை. ராதா மட்டும் படித்துப் பட்டதாரியாகி, ஒரு சுமாரான வேலையிலும் அமர்ந்து விட்டாள்.

    பாலாவின் அப்பா வங்கியில் அதிகாரி. அம்மா கல்லூரியில் பேராசிரியர். அக்காவும் தனியார் நிறுவனத்தில் பணி புரியும் பெண். பாலா ஒரு வருடத்துக்கு முன்பு எம்.டெக். முடித்து பிரபல வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து விட்டான்.

    அக்காவுக்கு செவ்வாய் தோஷ ஜாதகம் - அதனால் கல்யாணத்தில் சிக்கல். பழைய கடன்கள் அடைபடத் தொடங்கி, குடும்பம் சீராகும் நேரம் இது.

    ஏற்றத் தாழ்வுள்ள இரு குடும்பங்களிலிருந்து வெளிவரும் பாலா - ராதா காதல் கைகூடுமா?

    காதலிக்கத் தொடங்கும் போதே இருவருக்கும் சந்தேகம்தான்.

    பாலா வீடு திரும்பினான்.

    முதன் முறையாக அவன் வெளிநாடு போவதால், குடும்பமே பரபரப்பில் - அதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தது.

    ஒரு வருட காலம் பிரிய வேண்டுமே என்ற வேதனையில் அம்மா.

    கணிசமான தொகையுடன் அவன் வந்தால் மகளுக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்குமே என்ற ஆனந்தமும் இருந்தது.

    இரவு உணவுக்கு நாலு பேரும் கூட, பாலா நாசூக்காக பேச்சை ஆரம்பித்தான்.

    எனக்குத் தெரிஞ்ச - ஆட்டோ ஓட்டற ஒருத்தர் இருக்கார். அவர் மகனுக்கு நல்ல உத்யோகம். பாக்கவும் அழகா இருப்பான். அவனுக்கும் செவ்வாய் தோஷ ஜாதகம். அக்காவுக்குப் பாக்கலாமா?

    ஆட்டோ ஓட்டறவர் மகனுக்கா?

    ஏம்மா? அதுவும் கௌரவமான தொழில் தானே?

    இல்லைனு நான் சொல்லலை பாலா! நம்ம குடும்பத்துக்கு வேண்டாம்!

    அதான் ஏன்?

    வேற மாப்பிள்ளையே கிடைக்காதா பாலா? நமக்குனு சமூகத்துல ஒரு தகுதி இருக்கு. வங்கி அதிகாரிக்கு ஆட்டோ டிரைவர் சம்பந்தியா இருக்க முடியாது. எதுக்கு? நமக்கும் உறவுகள் இருக்கு. உங்கப்பாவை நாலு பேர் மதிக்க வேண்டாமா?

    வாழப் போறது அக்காதானேம்மா?

    அப்பா குறுக்கிட்டார்.

    பாலா! உங்கம்மா சொல்றதுல தப்பில்லை. ஜாதி மத பேதமில்லாத சமூகம் அமையணும்னு மேடைல பேசலாம். தனக்குனு வரும்போது, எல்லாரும் எல்லாத்தையும் பாக்கத்தான் செய்யறாங்க!

    அக்கா அருகில் வந்தாள்.

    எனக்குக் கல்யாணமே நடக்காதுனு நீ பயப்படறியா பாலா?

    அய்யோ! சத்தியமா அப்படி இல்லைக்கா!

    "நடக்கும்டா. உனக்கும் சரி - எனக்கும் சரி - தகுதியுள்ள சம்பந்தம் வரும். அது வர்றவரைக்கும் காத்திருப்போம். அப்பா - அம்மா தலை குனிய நாம காரணமா இருக்கக் கூடாது பாலா! இந்தப் பேச்சை விடு. உன் லண்டன் பயணம் பற்றிப்

    Enjoying the preview?
    Page 1 of 1