Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sooriyan Sudavillai
Sooriyan Sudavillai
Sooriyan Sudavillai
Ebook95 pages48 minutes

Sooriyan Sudavillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465780
Sooriyan Sudavillai

Read more from Devibala

Related to Sooriyan Sudavillai

Related ebooks

Reviews for Sooriyan Sudavillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sooriyan Sudavillai - Devibala

    14

    1

    "என்னைக் கேக்காம எதுக்காக என் கல்யாண ஏற்பாடுகளை செய்யறீங்க?"

    சீறினாள் ரம்யா!

    அம்மா அருகில் வந்தாள்.

    ரம்யா! உனக்கு வயசு இருபத்தி அஞ்சு. இந்த வயசுல நான் மூணு குழந்தைங்களை பெத்தாச்சு. புரியுதா?

    உன் காலம் வேறம்மா!

    இதப்பாரு! நாளைக்கு பெண் பார்க்க வர்றாங்க. பரஸ்பரம் புடிச்சாத்தான் எதுவுமே முடிவாகும். ஏன் பதட்டப்படற?

    நான் புடிக்கலைனு சொல்லிட்டா?

    இதப்பாருடி! உங்கப்பா கோபக்காரர். குடும்பத்துல குழப்பம் வர நீ காரணமா இருக்காதே!

    இது என்னோட வாழ்க்கை! நாளைக்கு யாரும் வர வேண்டாம். வந்தா என்னைப் பாக்க முடியாது. நான் ஆபீஸ் போயிடுவேன்.

    அவ போகட்டும் மரகதம். விட்டுடு! நீ புறப்படு. நாளைக்கே நீயும் நானும் எங்கியாவது போயிடலாம். இவ எப்படியோ போகட்டும்.

    இல்லீங்க! அவ சொல்றதை பெரிசா எடுத்துக்க வேண்டாம்.

    நிறுத்தும்மா! நான் சொல்றதுல மாற்றமில்லை.

    அப்பா அருகில் வந்தார்.

    உனக்கு என்ன பிரச்னை? யாராவது மனசுல இருக்காங்களா? உன் ரெண்டாவது அக்கா காதல் கல்யாணம்தான். நாங்களே நடத்தி வைக்கலையா? சரியான இடமாயிருந்தா, நாங்க தடுக்க மாட்டோம் ரம்யா!

    இல்லைப்பா!

    பின்ன?

    அப்பா! என் உணர்வுகளை மதிக்க முயற்சி பண்ணுங்க. தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க.

    கையெடுத்துக் கும்பிட்டாள். உள்ளே போய் விட்டாள்.

    அப்பா அப்படியே உட்கார்ந்து விட்டார்.

    அம்மா அருகில் வந்தாள்.

    என்னங்க! அவ திடமா, தீர்மானமா இருக்கா. விட்டுப்பிடிங்க. விருப்பமில்லாம பலவந்தப்படுத்தினா, யாருக்குமே நிம்மதி இருக்காது. கோவப்படாதீங்க. புரிஞ்சுக்குங்க.

    இதப்பாருடி! நான் எல்லா ஜோசியமும் தெரிஞ்சவன். எனக்கு ஆயுள் அறுபத்தி ரெண்டு வயசுதான். இப்ப அறுபத்தி ஒண்ணு. ஒரு வருஷத்துல நான் சங்கு புடிச்சிடுவேன்.

    அப்படியெல்லாம் சொல்லாதீங்க!

    நெருப்புன்னா வாய் வேகாதுடி. மூணு பொண்ணுங்களைப் பெத்தோம். ரெண்டு பேரைக் கரை சேர்த்துட்டோம். இவளுக்கும் ஒரு வாழ்க்கை அமைஞ்சிட்டா, நிம்மதியா சாகலாம்னு பாக்கறேன். இது தப்பா?

    நல்லதையே பேசுங்க.

    சரி! அந்தக் குடும்பத்துக்கு இப்ப என்ன பதில்?

    ஒரு அசம்பாவிதம் நடந்து போச்சு! நாங்க அவசரமா ஊருக்குப் போறோம். மறுதேதியை நாங்களே சொல்றோம்னு நாசூக்கா தவிர்த்திடலாம்.

    சரி! பெத்தவங்க இந்தக் காலத்துல வேஸ்ட்!

    சகலமும் உள்ளே இருந்தபடி ரம்யா கேட்டுக் கொண்டிருந்தாள்.

    ஒரு நிம்மதி பெருமூச்சை விட்டாள்.

    ரம்யா - எம்.காம். படித்து விட்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள்.

    ஓரளவுக்கு அழகான பெண். புத்திசாலி. கற்பூர புத்தி. மாதம் இருபதாயிரம் வரை சம்பளம். தனக்கென ஒரு வாகனம் வைத்திருக்கிறாள். அதிகமாக யாரிடமும் ஒட்ட மாட்டாள். ‘தான் உண்டு தன் வேலை உண்டு’ என்ற ரகம்.

    நிறைய புத்தகம் படிப்பாள்.

    ஆழ்நிலை தியானம், யோகா என வகுப்புகளுக்கு விடாமல் போவாள்.

    ஏன் பெண் பார்க்க வருபவர்களை தடுக்கிறாய்?

    மறுநாள் காலை அலுவலகம் வந்ததும், அவளுக்கு நெருக்கமான ஒரே தோழி மனிஷா கேட்டாள்.

    ரம்யா சிரித்தாள்.

    இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்? உன் மனசுல யாராவது இருக்காங்களா? அதுக்கும் உங்க வீட்ல தடை இல்லையே? சொல்லிடேன்.

    ரம்யா பேசவில்லை.

    உன் மனசு ஆழ்கடலை விட மோசம்டி. எங்கிட்டக் கூட சொல்லாம மறைச்சா எப்படி? ஒருநாள் நீ வெளில வந்துதானே தீரணும் ரம்யா?

    அதற்கும் சிரிப்பு!

    மாலை அலுவலகம் முடிந்ததும் தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு ரம்யா புறப்பட்டாள்.

    நேராக அந்தத் தனியார் மருத்துவமனையில் கொண்டு வந்து நிறுத்தினாள்.

    மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்ததானம் செய்வாள் ரம்யா. அதனால், டோனர் பட்டியலில் அவளது பெயரும், விலாசமும் உண்டு.

    நாளை ஞாயிறு.

    ரத்தம் தருவதாக பதிவு செய்து கொள்ள வந்திருந்தாள்.

    ரம்யா! நான் இங்கே இருக்கேன்.

    குரல் கேட்டுத் திரும்ப, அந்த மனிதன் சிரித்தபடி நின்றான்.

    சீக்கிரமே வந்துட்டீங்களா?

    பத்து நிமிஷமாச்சு.

    சரி! நான் ரிஜிஸ்டர் பண்ணிட்டு வந்துர்றேன்.

    ரம்யா பதிவு செய்து விட்டு வந்தாள். இருவரும் சிரித்தபடி வெளியே வந்தார்கள்.

    அவன் காருக்குள் ஏற, நான் என் வண்டில வந்துர்றேன் பாஸ்கர்.

    ஒரு உயர்தர உணவகத்தில் இருவர் வண்டிகளும் நிற்க, பூட்டி விட்டு இருவரும் உள்ளே வந்தார்கள்.

    ஏஸி இருட்டு மூலையைத் தேர்ந்தெடுத்து, ஒரு சூப்புக்கு சொல்லி விட்டு நிமிர்ந்தார்கள்.

    என்னாச்சு உன் கல்யாண ஏற்பாடுகள்?

    கிண்டலா? நான்தான் சம்மதிக்க மாட்டேன்னு உங்களுக்குத் தெரியுமே!

    ரம்யா! இப்படி எத்தனை நாள் சாக்கு சொல்லுவே?

    தெரியலை! இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கும் உண்டு பாஸ்கர்.

    கேன் ஐ ஸ்மோக்?

    தாராளமா!

    ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற

    Enjoying the preview?
    Page 1 of 1