Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tharisanam
Tharisanam
Tharisanam
Ebook95 pages36 minutes

Tharisanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465797
Tharisanam

Read more from Devibala

Related to Tharisanam

Related ebooks

Reviews for Tharisanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tharisanam - Devibala

    15

    1

    ரஞ்சனியைப் பெண் பார்த்தவர்களுக்குப் பிடித்து விட்டது!

    முதல் பார்வையில் ‘டிக்’ செய்து விட்டார்கள்.

    ரஞ்சனிக்கு என்ன குறை?

    எம்.காம்.படிப்பு. வங்கியில் கிட்டத்தட்ட இருபதாயிரத்துக்கு மேல சம்பளம். நல்ல அழகு. எடுப்பான உடம்பு. பால்கோவா நிறம். பெரிய கண்கள் - இதமாகப் பழகும் பண்பாடு!

    தரகர் மூலமாகப் பிடித்த வரன்!

    பையன் கோகுல் ஒரு ஐ.டி.கம்பெனியில் அதிகாரி!

    ஐம்பதாயிரத்துக்கு மேல் மாசச் சம்பளம். அப்பா இல்லை. ஒரு விதவைத் தாய் மட்டும்! இரண்டு சகோதரிகளுக்கும் கல்யாணம் முடிந்து விட்டது. சொந்த வீடு - கார். என்ன குறை?

    அவர்கள் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை!

    கல்யாணத்தை கண்ணியமாக நடத்த வேண்டும் என்றார்கள்.

    இங்கே ரஞ்சனி மூத்தவள். அடுத்தவள் மூன்றாவது வருடம் பி.டெக். படிக்கும் கௌசி. கடைக்குட்டி பன்னிரண்டாவது படிக்கும் திவ்யா!

    அப்பா, அம்மா இருவருக்கும் உத்யோகம்!

    அப்பா தனியாரில் ஒரு அதிகாரி; அம்மா பள்ளிக்கூட டீச்சர்.

    ஆயிரம் சதுர அடியில் ஒரு அடுக்கு மாடி வீடு; இரு சக்கர வாகனம்!

    மூன்று பெண்களைக் கரையேற்ற வேண்டிய பொறுப்பு!

    கல்யாண பட்ஜெட் போட ஆரம்பித்து விட்டார்கள்.

    சேர்த்து வைத்த நகைகள் மட்டும் இருந்தன!

    வங்கி சேமிப்பும் இருந்தது. கண்ணியமாகக் கல்யாணத்தை நடத்த பன்னிரண்டு லட்சம் வரை தேவைப்பட்டது!

    நகைகள், கையிருப்பு எல்லாம் சேர்த்து ஏழு லட்சம் வரை தேறியது!

    இருவருமாகச் சேர்ந்து லோன் போட்டால் மூன்று லட்சம் புரட்டலாம்.

    அப்படியும் இரண்டு லட்சம் இடித்தது!

    ரஞ்சனி அப்பாவிடம் வந்து உட்கார்ந்தாள்.

    நான் அந்த ரெண்டு லட்சத்துக்கு லோன் போட்டுத்தர்றேன்பா!

    நீ லோன் போட்டா, சம்பளத்துல பிடிப்பாங்களே?

    பிடிக்கட்டும்பா!

    இல்லைம்மா! நீ இன்னொரு வீட்டுக்கு வாழப் போற பொண்ணு! உன் கல்யாணத்துக்கு நீயே கடன் வாங்கி, பிடித்தம் போனா, அது தப்பா இருக்காது?

    நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்கப்பா? சம்பாதிக்கற பணத்தை பைசா திருத்தமா புருஷன் வீட்ல கணக்குக் காட்ட முடியாது! காட்டவும் கூடாது!

    அம்மா வேதா சிரித்தாள்.

    ஏம்மா சிரிக்கற?

    நானும் இப்பக்கூட டீச்சரா இருந்து சம்பாதிக்கறவதான்! நான் உங்கப்பாவைக் கல்யாணம் செஞ்சுக்கிட்ட புதுசுல, என் சம்பளத்தை பைசா திருத்தமா உங்க தாத்தாக்கிட்ட - அதான் உங்கப்பாவோட அப்பாகிட்டத் தரணும். பஸ்ஸுக்குக்கூட அவங்கதான் தருவாங்க! கல்யாணம் முடிஞ்சு இருபது வருஷமா கொத்தடிமையாத்தானே இந்தக் குடும்பத்துல வாழ்ந்திருக்கேன். இப்பத்தானே நாலஞ்சு வருஷமா - சுதந்திர மனுஷியா இருக்கேன்!

    எங்கப்பா, அம்மா செத்த காரணமா உனக்கு விடுதலையா?

    அதுல என்ன சந்தேகம்?

    நீயும் லேசுப் பட்டவ இல்லை. திருட்டுத்தனமா உங்க குடும்பத்துக்கு உதவி செஞ்சவதானே?

    நான் மறுக்கலையே? கஷ்டப்படுத்தினா, திருட்டுத்தனம் வரத்தான் செய்யும்!

    செத்தவங்களை விமர்சனம் பண்ணாதே!

    உண்மையை இப்பவாவது பேசித்தானே ஆகணும்?

    இருவருக்கும் பேச்சு முற்றி, வாக்குவாதம் அதிகமாகி, சண்டை போடும் நிலைக்கு வந்துவிட,

    ரஞ்சனி கூச்சலிட்டாள்!

    நீங்க ரெண்டு பேரும் சண்டை போடறதை நிறுத்த மாட்டீங்களா? இப்ப என் கல்யாணம் முக்கியமா? கடந்த கால சச்சரவுகள் முக்கியமா?

    உங்கம்மா பேசத் தொடங்கினா நிறுத்தமாட்டா! ஆரம்ப நாட்கள்ல எங்கம்மா கொஞ்சம் படுத்தி வச்சது நிஜம்தான் ரஞ்சனி. கடைசி காலத்துல அவங்களை இவ பழி வாங்கிட்டாளே?

    என்ன பேசறீங்க?

    விடும்மா! நாளைக்கு என்னானு பேசுங்க! உங்க சண்டையை பார்த்துப் பார்த்து அலுத்துப் போகுது. நான் லோன் போடறேன். அதை கோகுல்கிட்ட முன்கூட்டியே சொல்லிக்கிறேன். இது என் பிரச்னை! நீங்க ரெண்டு பேரும் கவலைப்படாதீங்க! செலவுகளைக் குறைச்சுக்குங்க! பின்னால கௌசி, திவ்யா ரெண்டு பேரும் இருக்காங்க!

    இருவரும் ஒரு சமாதானத்துக்கு வந்தார்கள்!

    ஜோசியரை அழைத்து நாள் குறித்தார்கள்.

    அந்த மாதக் கடைசியில் நிச்சயதார்த்தத்துக்கு ஒரு நல்ல நாளைக் குறித்தார்கள். அதை போன் மூலம் சம்பந்தியம்மாவிடம் தெரிவிக்க, அவர்கள் விவாதித்து, மறுநாள் மாலைக்குள் ஒப்புதல் தெரிவித்து விட்டார்கள்!

    அங்கே - மாப்பிள்ளை கோகுலின் வீட்டில் - கோகுலின் சகோதரிகள் கூடி விட்டார்கள்!

    ரஞ்சனி அழகா இருக்கா! கலகலப்பா பழகறா! எல்லா தகுதிகளும் இருக்கு!

    சரிம்மா! மூணு பொண்ணுங்கள்ல இவ மூத்தவளாச்சே?

    அது நல்லது தானே? பொறுப்புகள் கூடுதலா இருக்கும்!

    அவங்க வீட்டுப் பொறுப்புகளை இவ தலைல தூக்கி சுமக்கத் தொடங்கிட்டா, நம்ம கோகுலுக்கு பாரமாகாதா? இவன் மூத்த மாப்பிள்ளை! மத்தவங்களைக் கரை சேர்க்கற கடமை வந்துட்டா?

    என்னடீ சொல்றீங்க?

    பிரச்னைகள் அதிகமில்லாத குடும்பத்துல - பெண் எடுத்திருக்கலாம்!

    இதுல ஜாதகம் பத்துப் பொருத்தமும் பொருந்தியிருக்கே!

    "சரி விடு! நீ அப்பாவித்தனமா எல்லாத்துக்கும் தலையை ஆட்டிட்டு இருக்காதே! பொண்டாட்டினு ஒருத்தி வரும் போது எல்லாருமே மாறுவாங்க! உனக்குனு உள்ள உரிமைகளை விட்டுத்

    Enjoying the preview?
    Page 1 of 1