Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thunaiyiruppaal Durga
Thunaiyiruppaal Durga
Thunaiyiruppaal Durga
Ebook103 pages55 minutes

Thunaiyiruppaal Durga

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465797
Thunaiyiruppaal Durga

Read more from Devibala

Related to Thunaiyiruppaal Durga

Related ebooks

Reviews for Thunaiyiruppaal Durga

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thunaiyiruppaal Durga - Devibala

    20

    1

    விமான நிலையத்தில் மகளை வரவேற்கக் காத்திருந்தார் மௌலி!

    வெளிநாட்டுக்குப் போய் பிஸினஸ் மானேஜ்மென்ட் படித்துவிட்டுத் திரும்புகிறாள் துர்க்கா - மௌலியின் ஒரே செல்ல மகள்!

    ஒரு வாரமாகவே மௌலி படபடப்பாக இருந்தார்.

    மகள் வருவதைத் தொடர்ந்து இங்கே பல ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்! அதற்கான பரபரப்பில் இருந்தார்.

    ஆகாயத்தில் அலுமினியப் புள்ளி தெரிந்தது.

    விமானம் வந்து கொண்டிருப்பதை ஆங்கிலத் தேன் குரல் அறிவித்துக்கொண்டிருந்தது.

    மௌலி பரபரப்பானார்.

    அவரது உதவியாளர்கள் பவ்யமாக முதலாளியின் அடுத்த உத்தரவுக்காகக் காத்திருந்தார்கள்.

    விமானம் பெரிதாகி தாழ்வாகப் பறந்து ஒரு தளத்தைத் தொட்டு சில நொடிகளில் நின்றது.

    எஸ்கலேட்டர் இணைக்கப்பட்டது! கதவு பிளந்தது.

    உச்சியில் பயணிகள் தென்பட்டார்கள்.

    கண்ணுக்கு கறுப்புக் கண்ணாடியைத் தந்து, கூந்தல் முதுகில் பிரிந்திருக்க, சேலையுடன் உச்சியில் நின்றாள் துர்க்கா!

    கையை ஆட்டினாள்.

    மௌலிக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை!

    செக்யூரிட்டி பரிசோதனைகள் முடிந்து, பெட்டிகளுடன் துர்க்கா முழுமையாக வெளியே வர, இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது. மௌலி காத்திருந்தார்.

    துர்க்கா வெளியே வந்தாள்.

    ஓடி வந்து மௌலியைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள்.

    அப்பா!

    வாடா கண்ணு! நல்லாருக்கியா?

    நல்லா இருக்கேன்பா!

    அவர் சில நொடிகள் பேசியபிறகு கம்பெனி சார்பாக, மாலைகள், சால்வைகள் என வருங்கால முதலாளிக்கு மரியாதைகள் செலுத்தப்பட்டன.

    துர்க்கா திணறிப்போனாள்.

    புகைப்பட வெளிச்சங்கள் நாலு திசையிலிருந்தும்!

    ஒரு பிரதான அமைச்சருக்குத் தரும் வரவேற்பு துர்க்காவுக்கு இருந்தது!

    வெளிநாட்டு சொகுசுக் காரில் அப்பா - மகள் ஏறிக்கொள்ள சார் புறப்பட்டது.

    எதுக்குப்பா இத்தனை பெரிய வரவேற்பு?

    வேண்டாமா? நாளைய முதலாளி நீதான். எதுக்கு ரெண்டு வருஷப் படிப்புக்காக உன்னை வெளிநாட்டுக்கு அனுப்பிட்டு நான் இங்கே துடிக்கணும்?

    அதுக்கில்லைப்பா!

    எனக்கு வயசாகுது! இனிமே உழைக்க முடியாது. என் ஒரே மகள் நீ! கோடிக்கணக்கான இந்த சொத்துக்களுக்கு வாரிசு! உங்கிட்ட நான் பொறுப்புகளை முழுமையா ஒப்படைக்கற நேரம் வந்தாச்சு! நாளைய முதலாளிக்கு இந்த வரவேற்பகூட இல்லைனா எப்படி?

    "அப்பா! பொறுப்புகளை நான் எடுத்துக்கறேன். சரிசமமா உழைப்போம். நீங்க இப்ப ஆரோக்யமா இருக்கீங்க. நூறு வயசு வாழ்வீங்க! ரெண்டுபேரும் சேர்ந்து பணியாற்றுவோம்!

    அவளையே பார்த்தார் மௌலி.

    என்னப்பா?

    ஆச்சர்யமா இருக்குடா, உன்னைப் பார்த்தா!

    என்ன ஆச்சர்யம்?

    வெளிநாட்ல போய் வாழ்ந்துட்டும் இப்படி சேலைதான் கட்டறே! அப்பானு என்னைக் கூப்பிட்டு அழகா தமிழ்பேசற! நீ மாறலைமா! தமிழ்ப் பொண்ணா போயிட்டு, தமிழைத்தான் கொண்டு வந்திருக்கே!

    அப்பா! ஆங்கிலமும், அறிவை வளர்க்கறதும் தொழிலுக்காக! அடிப்படைல தமிழ்தானே நமக்கு எல்லாம். ஏன் மாறணும்?

    அவர் சிரித்தார்.

    வீட்டை நெருங்க ஒரு கிலோ மீட்டர் இருக்கும்போதே நாதஸ்வரம், பேண்டு வாத்தியம் எல்லாம் முழங்கத் தொடங்கின!

    சாலையில் கூட்டம் சேர்ந்தது.

    அப்பா! எதுக்கு ஊரைக் கூட்டினீங்க?

    இது என் விருப்பம். நீ பேசாம வா!

    வீட்டுக்குள் கார் நுழைந்து நின்றது. இருவரும் இறங்க கம்பெனி ஆட்கள் மாலைகளுடன்.

    துர்க்கா திணறி விட்டாள்.

    ஆரத்தி எடுத்தார்கள்.

    அந்தக் கூட்டம் கலைய அரைமணி நேரம் ஆனது!

    சரி! எல்லாரும் போங்க! என் பொண்ணு ரெஸ்ட் எடுக்கணும்!

    கூட்டம் கலைந்தது.

    மௌலியின் பிரதான உதவியாளன் மட்டும் தயங்கி நின்றான்.

    சொல்லு!

    பிரஸ் மீட்டுக்கு...?

    வேண்டிய ஏற்பாடுகளைச் செய். அப்படியே விருந்தும் தடபுடலா இருக்கட்டும். நாளைக்கு சாயங்காலம் தான். எந்த மாற்றமும் இல்லை!

    சரி சார்!

    நிறைய - நான் சொன்னபடி பரிசுப் பொருட்களை வாங்கி வை. என் பொண்ணு கையால எல்லாருக்கும் தரணும்!

    அவன் போய் விட்டான்.

    உள்ளே வந்தார் மௌலி!

    துர்க்கா சோபாவில் சுருண்டு கிடந்தாள்.

    என்னம்மா? முடியலியா?

    அப்பா! எதுவுமே எனக்குப் பிடிக்கலை!

    என்னம்மா சொல்ற?

    எளிமையா, எல்லாருக்கும் எட்டும்படியா இருக்கணும்னு நான் ஆசைப்படறேன். நீங்க என்னை எங்கியோ தூக்கி வைக்கப் பாக்கறீங்களே!

    இல்லைம்மா! அதுல எனக்கு உடன்பாடில்லை! ரொம்ப எளிமையா நீ இருக்க வேண்டாம். அது அவசியமில்லை! நீ கோடீஸ்வரி! எல்லாருக்கும் கிடைக்காது இந்த வாழ்க்கை! நீ புண்யம் செஞ்சிருக்கே! கிடைச்சிருக்கு! அதைத் தக்கவச்சுக்கணும். இந்த உலகம் வேற மாதிரி இருக்கு! நீ எளிமையா இருக்க நெனச்சா, உன்னை ஏமாளினு எடை போட்ரும். கண்டிப்பும், கறாருமா இல்லைனா, வித்துடுவாங்க! ஜாக்ரதை! அனுபவத்துல இதை நான் சொல்றேன்!

    துர்க்கா சிரித்தபடி எழுந்தாள். அப்பா! எனக்குனு சில கொள்கைகள் இருக்கு! வாழ்க்கையை இப்படித்தான் வாழணும்னு மனசுக்குள்ள ஒரு கோடு போட்டு வச்சிருக்கேன்.

    சரிம்மா! நீ குளிச்சிட்டு வா! சாப்பிடலாம்!

    துர்க்கா குளித்துவிட்டு, ஒரு காட்டன் சேலையைக் கட்டிக்கொண்டு வந்தாள்.

    தலையில் ஈர டவல்!

    பூஜை அறைக்கு வந்தாள். பதினைந்து நிமிடங்கள் அங்கே கழித்தாள்.

    வெளியே வந்தாள்.

    "அப்பா! சாப்பிடலாமா?

    Enjoying the preview?
    Page 1 of 1