Uyir Ilavasam
By Devibala
()
About this ebook
Read more from Devibala
Manmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsAmma Ammamma Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Thevathai Rating: 4 out of 5 stars4/5Assai Oonjalil Aadum Velaiyil Rating: 0 out of 5 stars0 ratingsCharumma Rating: 0 out of 5 stars0 ratingsPennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsPaatha Poojai Rating: 0 out of 5 stars0 ratingsJodi Thevai Rating: 5 out of 5 stars5/5Oru Thai Oru Magan Rating: 5 out of 5 stars5/5Seetha Rating: 0 out of 5 stars0 ratingsVizhikkul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsVara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5Sokkuthe Manam Rating: 5 out of 5 stars5/5Veliye Sonnaal Vetkam Rating: 4 out of 5 stars4/5En Uyire Vaa Rating: 5 out of 5 stars5/5Kathal Varam Rating: 0 out of 5 stars0 ratingsPoorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsAzhaiththaal Varuven Rating: 0 out of 5 stars0 ratingsSeerum Sirappum Rating: 5 out of 5 stars5/5Indru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsOru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Kan Theduthe Rating: 0 out of 5 stars0 ratingsVarunkaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsVaruvathu Yaro? Rating: 2 out of 5 stars2/5Poomaalai Poda Vaa 2 Rating: 0 out of 5 stars0 ratingsMadiyil Saayum Neram Rating: 0 out of 5 stars0 ratingsSu(sa)gavasam Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjalil Rating: 0 out of 5 stars0 ratingsVidiyum Varai Rating: 5 out of 5 stars5/5
Related to Uyir Ilavasam
Related ebooks
Konchi Pesak Koodaathaa Rating: 0 out of 5 stars0 ratingsSugamaana Thorogam Rating: 0 out of 5 stars0 ratingsKaduthasi Rating: 0 out of 5 stars0 ratingsThethi Kuruchidunga Rating: 5 out of 5 stars5/5Ithu Konjam Puthusu Rating: 1 out of 5 stars1/5Varamaga Vandhavan Rating: 0 out of 5 stars0 ratingsNanthavana Theru Rating: 0 out of 5 stars0 ratingsNathikkaraiyoram Rating: 0 out of 5 stars0 ratingsPanama... Pasama... Rating: 0 out of 5 stars0 ratingsDevan Mozhi Rating: 0 out of 5 stars0 ratingsJannalora Nila Rating: 0 out of 5 stars0 ratingsKurai Ondrumillai Rating: 0 out of 5 stars0 ratingsKan Simittum Kaathal Rating: 0 out of 5 stars0 ratingsIlamaikku Perumai 1 Rating: 0 out of 5 stars0 ratingsKetten Thanthaai Rating: 5 out of 5 stars5/5நதிமூலம் Rating: 0 out of 5 stars0 ratingsநீதான் என் காதலி Rating: 0 out of 5 stars0 ratingsSandhitha Neram! Rating: 3 out of 5 stars3/5Jannal Seethaigal Rating: 0 out of 5 stars0 ratingsCalifornia Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsGeetham... Sangeetham Rating: 4 out of 5 stars4/5Anthi Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsKaal Raasi Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Nanum Ninaiththaal Rating: 5 out of 5 stars5/5Kan Malar Rating: 5 out of 5 stars5/5Vettai Rating: 5 out of 5 stars5/5Mangala Isai Rating: 3 out of 5 stars3/5Thottal Tholaindhaai! Rating: 0 out of 5 stars0 ratingsParasuraman Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Uyir Ilavasam
0 ratings0 reviews
Book preview
Uyir Ilavasam - Devibala
13
1
"நீ கேக்கற படியெல்லாம் இந்தக் காலத்துல ஒரு பையன் இருப்பான்னு எனக்குத் தோணலை!"
அம்மா வெளிப்படையாகச் சொல்லி விட்டாள்.
இருந்தாகணும்! அப்பத் தான் எனக்குக் கல்யாணம்! இல்லைனா, காலம் முழுக்க நான் இப்படியே இருந்துடறேன்!
என்னங்க! நீங்களும் ஏதாவது பேசுங்க!
சட்டையை மாட்டியபடி அப்பா திரும்பினார்.
கேட்டுட்டுத்தான் இருக்கேன்!
என்னத்தக் கேட்டீங்க? இதுவரைக்கும் இவளுக்கு நீங்க அஞ்சு வரன் கொண்டு வந்தாச்சு, எட்டு மாசத்துல. எல்லாத்தையும் இவ தட்டிக் கழிக்கறா. இவளுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்கும்னு எனக்குத் தோணலை!
அப்பா வெற்றிலைச் சாறைத் துப்பி விட்டு, வாய் கொப்பளித்தார். வந்தார்.
தப்பா ஒண்ணும் கேக்கலையே அனிதா! அவ கேக்கற மாதிரி ஒரு ஆம்பிள அமைஞ்சா நல்லதுதானே?
வாசல் கதவு தட்டப்பட்டது.
திறந்துதான் இருக்கு! உள்ளே வரலாம்!
பக்கத்து வீட்டு வெங்கடேசன் உள்ளே நுழைந்தார்.
போன வாரம் நான் ஒரு ஜாதகம் தந்தேனே! பார்த்தியா நடராஜா?
பார்த்தேன்! ஜாதகம் பொருத்தமா இருந்தது. ஆனா பையனைப் பத்தி விசாரிச்சப்ப, அவன் ரேஸ் பைத்தியம்னு தெரிஞ்சுகிட்டேன்!
விடப்பா! குடும்பம்னு அமைஞ்சிட்டா மாறும்!
இதப்பாரு வெங்கடேசா! அனிதா எதுக்கும் காம்ப்ரமைஸ் ஆக மாட்டா! சிகரெட் பிடிக்கக்கூடாது. வெத்தலை பாக்கு போடக்கூடாது. தண்ணியடிக்கக்கூடாது. பொம்பளை சகவாசம் அறவே கூடாது. சூதாடி வேண்டாம். பொய் சொல்லக் கூடாது. அடுத்தவங்களைக் குறை காணக்கூடாது. இது மாதிரி எம் பொண்ணு ஒரு பெரிய பட்டியலே வச்சிருக்கா! அவ வச்சிருக்கற பட்டியல்ல பல கெட்ட குணங்கள் இருக்கு. அது எதுவும் இல்லாத பையன் எவனோ, அவன் ஓரளவு அழகா, படிச்சவனா, நல்ல உத்யோகம் பாக்கறவனா இருந்தா, ஜாதகமும் பொருந்தினா நிச்சயம் கல்யாணம் நடக்கும்!
வெங்கடேசன் எழுந்து விட்டார்.
நான் வர்றேன்!
என்ன?
உம் பொண்ணு, போகாத ஊருக்கு வழி தேடறா. இப்படியெல்லாம் எவனும் இருக்க மாட்டான். ஏம்மா... அனிதா...!
என்ன அங்கிள்?
உனக்கு கல்யாணம் செஞ்சுக்க இஷ்டமில்லைன்னா, அதை நேரடியா உங்கப்பாகிட்ட சொல்லேன். ஏன் அவனை இப்படிப் போட்டு அலைக்கழிக்கற?
அனிதா சிரித்தாள்.
அங்கிள்! இந்த உலகத்துல நல்ல ஆம்பிளையே இல்லைனு சொல்றீங்களா?
தெரியலைமா! நான் என்ன சொல்றேன்னா, ஓரளவுக்கு நீ பாரு! நாலஞ்சு கெட்ட குணங்கள் உன் லிஸ்ட்ல உள்ளபடிக்கு இருந்தாக் கூட, உன்னை கட்டிக்கிட்ட பின்னால நீ அவனை மாத்தலாம் இல்லையா?
சான்ஸே இல்லை!
சரி! ஒரே ஒரு கேள்வி!
கேளுங்க!
இத்தனையும் இல்லைனு ஒருத்தன் பொய் சொன்னா?
விடமாட்டோமே! அப்பா அவனை ஆட்களை விட்டு விசாரிச்ச பின்னர்தான், அடுத்த கட்டத்துக்கு போறோம். நல்ல புருஷன் வேணும்னு ஒரு பெண் ஆசைப்பட்டா, அது தப்பா அங்கிள்?
இல்லைம்மா! கிடைக்கணுமே!
அவர் போய் விட்டார்.
அனிதா தன் எம்.காம் பட்டத்தை முடிப்பதற்குள், கம்ப்யூட்டரில் கணிசமான அளவுக்குத் தேறியிருந்தாள்.
அப்பா வசதியானவர்!
ஓரளவு சொத்து பத்து உள்ளவர். பிஸினஸ் செய்கிறார். அனிதா ஒரே மகள்.
அவள் வேலைக்குப் போக விரும்பவில்லை!
வீட்டிலேயே இரண்டு மூன்று கம்ப்யூட்டர்களை அப்பா நிறுவிவிட்டார். அதன் மூலம் ஒரு சில பெரிய நிறுவனங்களின் கணக்குகளை வாங்கி செய்து தருகிறாள் அனிதா!
வயது இருபத்திரெண்டு!
ஒரு நல்ல கணவன் அமைய வேண்டும்; வாழ்க்கை அமைதியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவள் ஆசை!
அதற்காக கடந்த பத்து மாதங்களாக அப்பா முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
அனிதா! நான் ஃபேக்டரி வரைக்கும் போயிட்டு வந்திர்றேன்.
அப்பா! இன்னிக்கு ஈவினிங் ஒரு பர்த் டே பார்ட்டி இருக்கு! போகணும்!
ஞாபகம் இருக்கும்மா! நீ ரெடியா இரு! நான் ஆறுமணிக்கு வந்துர்றேன்!
அவர் போய் விட்டார்.
அம்மா அருகில் வந்தாள்.
அனிதா! உங்க மாமா பையன் அசோக் இருக்கான். எம்.பி.ஏ. படிச்சிட்டிருக்கான். குடிக்க மாட்டான். சிகரெட் பிடிக்க மாட்டான். நல்ல பையன்!
அவனா...? ரூபாய்க்கு மூணு பொய் சொல்லுவான். உண்மையே அவன் வாய்ல வராது. வேண்டாம்மா!
உனக்கென்னடி நஷ்டம்? உனக்கு நல்ல புருஷனா இருந்தா, பத்தாதா?
அம்மா! அரிச்சந்திரனும், ராமனும் வாழ்ந்த புண்ணிய பூமி இது! நான் தேடற வகையில ஒருத்தன் கூடவா எனக்குக் கிடைக்க மாட்டான்?
அம்மா உள்ளே போய் விட்டாள்.
அனிதா தன் கம்ப்யூட்டர் அறைக்கு வந்து விட்டாள்.
அதை இயக்கிய பின், அந்த சின்னத்திரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
அதனுள் அஜந்தா, காவ்யா இரண்டு பேரும் வந்து சிரித்தார்கள்.
அந்தக் கடைசி நாள் மறக்காத நாள்.
மூவரும் எம்.காம். முடித்து விட்டு கல்லூரியை விட்டுப் பிரியும் அந்தக் கடைசி நாள்...
இனிமே எப்படீ சந்திக்கப் போறோம்?
தெரியலை!
அனிதா! டயரி எடுத்து மூணு பேரும் குறிப்பிட்ட ஒரு தேதியைக் குறிப்போம். அன்னிக்கு எங்கே இருந்தாலும்,இதே இடத்துக்கு வந்தாகணும்!
வந்து?
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னால மூணு பேர் வாழ்க்கையும் எப்படி இருக்குன்னு அலசணும்!
ருசிகரமான விஷயம்!
என்றாள் அஜந்தா!
யாருக்கு என்னடி லட்சியம்?
நான் நோயாளிகளுக்கு சேவை செய்யக் கூடிய ஒரு பெரிய நர்ஸ் ஆகணும்!
கல்யாணம்?"
கட்டாயமில்லை! என் லட்சியத்துக்கு கல்யாணம் தடையா இருக்குமானா, அதை உதற நான் தயார்!
பளிச்சென அஜந்தா சொன்னாள்.
எதுக்குடி பின்ன எம்.காம் படிச்சே?
இருக்கட்டுமே! ஒரு நர்ஸ் ‘போஸ்ட் கிராஜ்வேட்’டா இருக்கக் கூடாதா? நர்ஸ் பயிற்சிக்கான எல்லா ஏற்பாடுகளையும் நான் செஞ்சாச்சு! பிறந்ததுக்கு எதையோ சாதிச்சோம்னு ஒரு திருப்தி இருக்கும்!
நீ காவ்யா?
பெரிய நடிகை ஆகணும்!
அடிப்பாவி!
ஏன்? என்ன தப்பு? லட்சக் கணக்கான ரசிகர்களோட கனவுக் கன்னியா மாறணும். ராத்திரி என்னை நெனைச்சு அவங்க தூங்கக் கூடாது!
உனக்கு கோயில் கட்டணுமா?
கட்டட்டுமே! நீ கிண்டல் பண்ற அஜந்தா. ஆனா பல பேரோட இதயத் துடிப்பைக் கட்டி, ஏங்க வைக்கற கலை, சாதாரணம்னு நினைக்காதே! அதுல நான் ஜெயிச்சுக் காட்டறேன்!
இதுக்காக நீ எதையெல்லாம் இழக்கப் போறேனு தெரியுமா?
இதப்பாருடி! இழப்புகளோட பட்டியலை ஒரு பெண் போடத் தொடங்கினா, அது எங்கே போய் நிக்கும்னு தெரியாது. லாபக் கணக்கைப் போட்டுப்பாரு! பணம், புகழ் எல்லாத்தையும் நினை! வாழ்க்கையே வர்த்தகம் தானே?
இந்த அளவுக்கு நீ ஏன் படிச்ச? ப்ளஸ் டூ முடிச்சதும் சினிமாவுக்கு போயிருக்கலாம்!
சரி! அனிதா பேசவே இல்லை!
நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகப் போறேன் - உத்தமனா, எந்தத் தப்பும் இல்லாத ஒரு ஆம்பிளையை!
நாங்க ரெண்டு பேரும் எங்க லட்சியத்துல ஒரு வேளை ஜெயிக்கலாம். நீ கேக்கற தப்பில்லாத ஆம்பிள நிச்சயமா கிடைக்கப் போறதில்லை!
பார்க்கலாம் டீ!
அனிதா கலைந்தாள்.
கம்ப்யூட்டரில் கவனம் செலுத்தத் தொடங்கினாள். மாலையில் அப்பா ஆறரைக்கு வந்தார்.
ரெடியாம்மா?
அம்மா... நீ வரலை?
எனக்கு முடியலைமா! நீயும், அப்பாவும் போயிட்டு வாங்க!
பிரபலமான தொழிலதிபர் சொக்கநாதனின் மகள் பிந்தியாவுக்கு பிறந்த நாள்.
பிஸினஸ் வட்டாரம் அதிகமாக புழங்கும் பிரதேசம் இது!
ஏழு மணிக்கு அப்பா, அனிதா இருவரும் நுழைய, வீடியோ வெளிச்சம் பிரமாதமாக வீசிக் கொண்டிருந்தது.
வரவேற்கப் பட்டார்கள்.
ஏழரைக்கு பிந்தியா ஏராளமான அலங்காரத்துடன் கேக் வெட்டினாள்.
வந்திருந்த பெரிய மனிதர்கள் எல்லாம், அழகான பெண்களைக் கண்டு கனவுலகில் மிதந்து கொண்டிருக்க-
ஸ்காட்ச் கோப்பைகள் சகிதம் பார்ட்டி தொடங்கி விட்டது.
அப்பா இது மாதிரி பார்ட்டிக்கு வந்தால், லேசாக மது அருந்துவார்!
அனிதாவுக்கு அந்தச் சூழ்நிலைக்கு தான் ஒட்டவில்லையோ என்று தோன்றியது.
பார்வையை சுழல விட்டாள் ஒரு முறை!
அவளது பார்வை குறிப்பிட்ட