Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaathalaai Vanthu Pogiraai
Kaathalaai Vanthu Pogiraai
Kaathalaai Vanthu Pogiraai
Ebook117 pages1 hour

Kaathalaai Vanthu Pogiraai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

R.Sumathi, an exceptional Tamil novelist, written over 100 novels, 250 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465810
Kaathalaai Vanthu Pogiraai

Read more from R.Sumathi

Related authors

Related to Kaathalaai Vanthu Pogiraai

Related ebooks

Reviews for Kaathalaai Vanthu Pogiraai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaathalaai Vanthu Pogiraai - R.Sumathi

    14

    1

    ஏ.வி.சி. கல்லூரி!

    மயிலாடுதுறையில் மாணவர்களின் மதியை மாணிக்கமாகச் சுடர்விடச் செய்யும் மகத்தான கல்விப் பட்டறை.

    விழாக்கோலம் பூண்டிருந்தது. விடிந்ததிலிருந்தே விழாவைப் பார்க்க ஆசை கொண்டிருந்த விரிகதிர் பாதிக்கு மேல் பார்க்க முடியாததால் பாவமாக மங்கி மறைந்தது.

    மாலை நேர மஞ்சள் ஒளியில் மாணவர்கள் இங்குமங்கும் தென்பட்டது, பொன் வண்டுகள் பறப்பதைப் போலிருந்தது அதிலும் பெண்கள்! கண்கள் நிறைந்தன. கலர் கலராய் விதவிதமாய் அழகழகாய்...

    பார்க்கப் பார்க்கத் தொலைக்காட்சி கண்ணைப் பாதிக்கும் படிக்கப் படிக்கப் புத்தகங்கள் கண்களுக்குச் சோர்வு கொடுக்கும். பார்க்கப் பார்க்கப் பாதிக்காத ஒன்று இன்று இந்த அழகுதான்.

    பூக்களின் அழகைப் போல், புதுக்கவிதையின் அர்த்தத்தை போல்... பரவசப்படுத்திப் புத்துணர்வு பெருக்கெடுத்து, ஓடவைத்து விழிகளுக்கு விழிப்புணர்வைத் தருபவை.

    கசப்பு மருந்து குடிக்கக் கதறும் குழந்தைகளுக்குச் சர்க்கரையைக் கலந்து குடிக்க வைப்பதைப் போல...

    கல்வி கசக்கும் மாணவர்கள் கூட இந்த இனிப்புகளைப் பார்த்துத்தான் ஏதோ படித்து வைக்கிறார்கள்.

    ச்சே... இந்த பிரின்ஸிபல் அறுக்க ஆரம்பிச்சு அரைமணி நேரமாச்சு. இன்னும் மைக்கை ‘மை’ கையாவே நினைச்சுட்டார் போலிருக்கு. எடுக்கமுடியாது போலிருக்கேடா... விஷ்ணு - விவேக் பாணியில் அலுத்துக் கொண்டான்.

    டேய்... அதுக்குத்தான் அப்பவே நான் சொன்னேன். இந்த இலக்கிய மன்ற விழாவெல்லாம் நமக்குச் சரிவராது. பேசாம பக்கத்துல இங்கிலீஷ் படம் ஓடுது. தியேட்டருக்குள்ள புகுந்துடலாம்னு. இவன் கேட்டானா? சுந்தர் - வடிவேல் பாணியில் கைகால்களைக் கண்டபடி ஆட்டி ஆக்ஷன் காட்டினான்.

    ஆமாண்டா! சுத்த போர்... பேசாம நீ இந்த விழாவுல ஒரு மிமிக்ரி ப்ரோக்ராம் பண்ணியிருக்கலாம். அதையாவது கேட்டு வயிறு குலுங்கச் சிரிச்சு என்ஜாய் பண்ணியிருக்கலாம். ஆமாண்டா மச்சான். இப்பவெல்லாம் நீ ஏன் மிமிக்ரியே பண்ணமாட்டேங்கறே! ஸ்ரீதர் மிகவும் விசனத்துடன் வினவ...

    நான் சொல்றேன்டா அந்த சோகக்கதையை... என விஷ்ணு சிரித்தான்.

    என்னடா... ஆ ஊன்னா அதுக்குப் பின்னாடி ஒரு கதை, இதுக்குப் பின்னாடி ஒரு கதைன்னு சினிமா பாணியில ஆரம்பிச்சிடறீங்க? குண்டு ராகவ் கோபத்தில் அலுத்துக் கொள்ள, மச்சான், இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. நீ சொல்லுடா, - என ஸ்ரீதர் விஷ்ணுவை உற்சாகப்படுத்தினான்.

    அது ஒண்ணுமில்லடா மச்சான்.

    ஒண்ணுமில்லையில்லே... அப்ப சொல்லாதே! சுந்தர், விஷ்ணுவின் வாயடைத்தான்.

    ஏய்... அவனைச் சொல்ல விடுடா... மற்றவர்கள் போராட்டம் நடத்த, விஷ்ணு வாயைத் திறந்தான்.

    என் மானத்தை வாங்கணும்னே முடிவு பண்ணிட்டான் சுந்தர் முணுமுணுத்தான்.

    மச்சான். இவன் ரொம்ப நாளா நம்ம சுசிலாவுக்கு தூண்டில் போட்டுக்கிட்டிருந்தான்.

    யாரு... நம்ம பென்சிலா? - அவன் பென்சில் என்று குறிப்பிட்டது சுசிலாவின் உருவத்தை.

    அவளேதான். கண்ணாலேயே இவன் வீசின வலையில அந்த மீனும் சிக்கிகிச்சு. ஆனா இவனோட துரதிர்ஷ்டம் அந்தக் காதல் புட்டுகிச்சு!

    அட... டா! எப்படிடா? அனைவரும் துக்கம் விசாரித்தனர்.

    எல்லாம் இவனோட மிமிக்கிரியால வந்த வினை! அவ முதல் முதலா தன் காதலைச் சொல்ல வந்த சமயம் பார்த்து இவன் பிரண்ட்ஸுங்க மத்தியில அரவாணி குரல்ல மிமிக்ரி பண்ணிக்கிட்டிருந்தான். பாவம், அவ உண்மையில் ஆள் அப்படியோன்னு நினைச்சு ஓடிப் போய்ட்டா... அன்னைக்கு விட்டவன்தான்... எல்லாரும் கோரஸாகச் சிரிக்க.

    சில பேருக்கு இப்படித்தான்டா! திறமை வாழ்க்கைக்கு வழி காட்டாம வாழ்க்கையையே திண்டாட்டத்துல விட்டுடும்!

    பெண் தட்டு நிறையக் காபிக் கோப்பைகளுடன் நெருங்க... தேடி வந்து காபி கொடுக்கறதுக்கு ரொம்ப நன்றி! ஒரு காபிக் கோப்பையைச் சுந்தர் எடுக்கக் கை நீட்ட,

    அடச்சீ... வழியை விடு. காபி விழாவுக்கு வந்திருக்கிற விருந்தினர்களுக்கு. அவள் கடந்து போனாள்.

    பார்த்தியாடா! இந்த ஈவ்டீசிங் தடைச் சட்டம் போட்டாலும் போட்டாங்க. இதுங்களுக்கு ஏகத்துக்கும் துளிர்விட்டுப் போச்சு. சும்மா கிடந்தா சிங்கம் மேலேயே ஏறிச் சீண்டி விளையாடும் சுண்டெலி. அது மாதிரி இருக்கு. சீனியரான நம்மளை எவ்வளவு ச்சீப்பா பேசிட்டுப் போறா பார்.

    டேய் வாங்கடா, பேசாம வெளியில போய்ச் சூடா ஒரு தம்ளர் காபியும், சூப்பரா ஒரு தம்மும் அடிச்சுட்டு வரலாம்.

    எத்தனை தடவை கூப்பிட்டாலும் இவன் வர மாட்டான்டா. இவனோட ஆளுக்காகத்தானே இந்த விழாவே... விஷ்ணுவின் தோளில் கைபோட்டு ஸ்ரீதர் சொல்ல...

    ஆமாம்டா! உண்மையைச் சொல்லப் போனா இது இலக்கிய விழாங்கற பேர்ல ஆதிராவுக்கு நடக்கிற பாராட்டு விழா. அதைப் பார்க்கத்தானே நான் காத்துக்கிடக்கறேன். விஷ்ணு பெருமிதமாகத் தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.

    ஆமா... பெரிசா என்னமோ கதை எழுதிட்டாளாம். எந்தப் புத்தகத்திலிருந்து திருடினாளோ... சுந்தர் அலட்சியமாகச் சிரித்தான்.

    பிட் அடிக்கறது காப்பியடிக்கிறதெல்லாம் உன்புத்தி, அவளை உன் லிஸ்ட்ல சேர்க்காதப்பா...

    ஆமா! என்னமோ சாகித்ய அகாடமி வாங்கிட்டா. அதை நான் பாராட்டலைன்னு வருத்தப்படறே...

    டேய்... அவளோட எழுத்துத் திறமைக்கு நிச்சயம் அவ அதை எதிர்காலத்துல வாங்கத்தான் போறா. நீ வேணா பாரேன் அவ பெரிய ஆளா வரப்போறா.

    டேய்... டேய்... அவ உன் ஆளுங்கற ஒரே காரணத்துக்காக அவளை நீயே பெரிய ஆளா ஆக்கிடாதடா...

    மத்தவங்ககிட்ட உள்ள திறமையை மதிக்கக் கத்துக்கங்கடா! போட்டு மிதிக்காதிங்க. நம்ம மாவட்டத்தில் உள்ள அத்தனை கல்லூரிகளும் கலந்துகிட்ட சிறுகதைப் போட்டியில பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கியிருக்கான்னா அது உண்மையிலேயே பெரிய விஷயம்தானே!

    டேய்... டேய்... போதும்டா! ரொம்ப வழியாதே!

    மச்சான் ஆதிராவோட எழுத்துத் திறமையில உனக்கு சந்தேகம்னா அதை நிரூபிக்க ஒரு வழியிருக்கு. ஸ்ரீதர் சொன்னதும் பரபரத்தான் சுந்தர்.

    சொல்லு சொல்லு, நக்கீரன் கேள்வி கேட்ட மாதிரி அவளோட கதையில ஏதாவது சொற்குற்றம் பொருட்குற்றம் பார்த்து நானும் நாலு கேள்வி கேட்கட்டுமா?

    அந்தச் சிரமமெல்லாம் உனக்கு வேண்டாம். சுசிலா உன் காதலைத் தூக்கியெறிந்த கதையை அவகிட்ட சொல்லி, கதையா எழுதச் சொல்லு. எப்படி எழுதறான்னு பாரு.

    எல்லாரும் கொல்லெனச் சிரிக்க, சுந்தர் கோபத்துடன் ஸ்ரீதரைக் குனிய வைத்து கும்மாங்குத்துக் குத்த, அதே சமயம் ஒலி பெருக்கியில்...

    ‘இந்த இலக்கிய விழாவின் நாயகி... எதிர்கால எழுத்து நிலா ஆதிராவை அன்புடன் மேடைக்கு அழைக்கிறேன்...’ என்று ஒலிக்க...

    விஷ்ணு விழுந்தடித்துக் கொண்டு அரங்கத்திற்குள் ஓடினான்.

    Enjoying the preview?
    Page 1 of 1