Kathal Minnal
By R.Sumathi
5/5
()
About this ebook
Read more from R.Sumathi
Maaya Thottrangal Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Eppadi Solvenadi Rating: 4 out of 5 stars4/5Kannoram Minsaaram Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Ilamaane Rating: 0 out of 5 stars0 ratingsSinnakkili Rating: 4 out of 5 stars4/5Malare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsKathal Suvadukal Rating: 0 out of 5 stars0 ratingsInimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Theeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsUravillai Pirivillai Rating: 0 out of 5 stars0 ratingsPuthiraaga Oru Poo Rating: 5 out of 5 stars5/5Manoratham Rating: 4 out of 5 stars4/5Niram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Ennai Thodu Rating: 5 out of 5 stars5/5Kaathal Malarum Kaaththiru Rating: 0 out of 5 stars0 ratingsPaarvaikal Puthithaa Rating: 0 out of 5 stars0 ratingsOreedam Nee Tharuvaai Rating: 4 out of 5 stars4/5Mayakkathirkuriya Manthirame Rating: 5 out of 5 stars5/5Kaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsPovomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Paasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsEn Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5Kunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsKoodu Marantha Kuyilkal Rating: 5 out of 5 stars5/5Ketkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsVerinai Verukkum Vizhuthukal Rating: 4 out of 5 stars4/5Karpoora Jothi Rating: 0 out of 5 stars0 ratingsNenjukku Nee Azhzgu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kathal Minnal
Related ebooks
காதல் மின்னல் Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vantha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsதேடி வந்த தென்றல் Rating: 0 out of 5 stars0 ratingsNathiye Pen Nathiye Rating: 0 out of 5 stars0 ratingsநதியே பெண் நதியே Rating: 0 out of 5 stars0 ratingsநட்சத்திரம் இல்லாத இரவு! Rating: 0 out of 5 stars0 ratingsNatchathiram Illaatha Iravu Rating: 5 out of 5 stars5/5ஏனழுதாய் என்னுயிரே! Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsNilavin Marupakkam Rating: 0 out of 5 stars0 ratingsVithiyin Kaigal Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsIvala En Magal? Rating: 0 out of 5 stars0 ratingsVenpuraa Nesam Rating: 5 out of 5 stars5/5En Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsஅக்கறையாய் ஒரு அக்கிரமம் Rating: 0 out of 5 stars0 ratingsAkkaraiyaai Oru Akiramam Rating: 5 out of 5 stars5/5நீயென்பது நானல்லவோ...? Rating: 0 out of 5 stars0 ratingsNeeyenbathu Naanallavo Rating: 5 out of 5 stars5/5Nin Vasamaathal Vendum Rating: 0 out of 5 stars0 ratingsNeeya Naana? and Uyir Uthir Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsநீயா? நானா? & உயிர் உதிர்காலம் Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Niram Maarathu Rating: 0 out of 5 stars0 ratingsவேண்டும் உந்தன் உறவு! Rating: 0 out of 5 stars0 ratingsVendum Unthan Uravu Rating: 0 out of 5 stars0 ratingsIdhu Kaadhalendral Rating: 4 out of 5 stars4/5Poove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Kiliye! Rating: 5 out of 5 stars5/5Unakkaakave Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsஇதயங்களின் சங்கமம்... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kathal Minnal
2 ratings0 reviews
Book preview
Kathal Minnal - R.Sumathi
18
1
பால் பொங்கி வந்ததும் தீயைக் குறைத்தாள் விசாலாட்சி. கும்மென்று மணம் வீசிய காபிப் பொடியை ஒரு ஸ்பூன் போட்டுக் கலக்கிய போது வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.
அப்படியே வைத்துவிட்டு வெளியே வந்தாள். கதவைத் திறந்தபோது அவர் நின்றிருந்தார். மிகவும் குண்டான உருவம், கரிய நிறம், நெற்றியில் விபூதிப் பட்டை, கதர்ச் சட்டை, கதர் வேட்டி, துண்டு, ‘நீங்க...?
என் பெயர் கனகசுப்பு. கல்யாணத் தரகர்.
பெரிதாகப் புன்னகைத்தார். பற்கள் தாறுமாறாக இருந்தது.
வாங்க...
உள்ளே வந்த விசாலாட்சி அவருக்கு இருக்கையைக் காட்டினாள்.
பொத்தென அமர்ந்தார். போட்டிருந்த கண்ணாடியைக் கழற்றித் துண்டால் துடைத்தவாறே, கொஞ்சம் தண்ணீர் தர்றீங்களா?
என்றார்.
காபி சூடாயிருக்கு கொண்டு வரவா...?
தாராளமாக.
விசாலாட்சி காபி கலந்து எடுத்து வந்து அவரிடம் நீட்டினாள்.
நன்றி சொல்லிப் பெற்றுக் கொண்ட அவர் ஒரே மூச்சி குடித்துவிட்டு அவளை ஏறிட்டார்.
ஐயா வீட்ல இல்லையா?
கடையிலேர்ந்து வர்ற நேரம்தான்
என்றபடியே அவருக்கு எதிரேயிருந்த சோபாவில் அமர்ந்தாள்.
ஐயா உங்க பொண்ணோட ஜாதகத்தைக் கொடுத்து நல்ல வரனா பார்க்கச் சொல்லியிருந்தார். அது சம்பந்தமாத்தா வந்தேன்.
அப்படியா? இருங்க. கடையை விட்டு கிளம்பிட்டாரான்னு போன் பண்ணிக் கேட்கறேன்
என்ற விசாலாட்சி தொலைபேசிக்கருகே சென்று எண்களை அழுத்தினாள்.
ஹலோ... நான் விசாலாட்சி பேசறேன். ஐயா இருக்காரா கடையை விட்டுக் கிளம்பி விட்டாரா? வீட்டுக்குத்தான் வர்றாரா? சரி... சரி...
என்று தொலைபேசியை வைத்து விட்டு தரகருக்கருகே வந்தாள்.
"வீட்டுக்குத்தான் வந்துட்டிருக்காராம். இப்ப வந்திடுவார் என்று கூறிவிட்டு உள்ளே வந்தாள். கணவருக்குக் காபி கலந்தாள்.
அடுத்த சில நிமிடங்களில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது.
சுந்தரம் பிள்ளை உள்ளே வந்தார். தரகரைப் பார்த்ததும், வாங்க கனகு,
என்று வரவேற்றார்.
எப்ப வந்தீங்க?
என்றவாறே அவருக்கெதிரே அமர்ந்தார்.
இப்பத்தான் வந்தேன். சூடாக் காபி குடிச்சிட்டு உட்கார்ந்து இருக்கேன்.
அப்படியா, ரொம்ப சந்தோஷம். என்னாச்சு? நல்ல வரனா ஏதாவது அமைஞ்சுதா?
செங்கல்பட்டுல ஒரு வரன் நல்ல இடமா வந்திருக்கு. மாப்பிள்ளைக்கு எல்.ஐ.சி.யில வேலை. நல்ல சம்பளம். பையன் பார்க்கவும் நல்லாயிருக்கான். போட்டோ கூட கொண்டு வந்திருக்கேன், பாருங்க.
தன்னுடைய கைப்பையைத் திறந்து ஒரு புகைப்படத்தை எடுத்து நீட்டினார்.
சுந்தரம் பிள்ளை வாங்கிப் பார்த்தார். பையன் உயரமாக இருந்தான். தரகர் சொன்னதைப் போல் அழகாயிருந்தான்.
பையன் நல்லாதான் இருக்கான். பேர் என்ன?
பையன் பேர் சரவணன். அம்மா அப்பாவுக்கு ஒரே பையன்.
விசாலாட்சி காபியோடு வந்தாள். கணவருடைய கையில் காபியைக் கொடுத்துவிட்டு அந்தப் போட்டோவை வாங்கிப் பார்த்தாள்.
அவளுடைய முகம் மலர்ந்தது.
பையன் நல்லா இருக்கான். நம்ம சுதாமதிக்குப் பொருத்தமாயிருப்பான், இல்லையா?
என்றாள்.
சுவையான அந்தக் காபியால் இன்னும் உற்சாகமானதை போல் சுந்தரம்பிள்ளை தலையசைத்தார்.
ஆமாம், சுதாமதிக்குப் பொருத்தமாகத்தான் இருப்பான்
அப்ப... அவங்களைப் பொண்ணு பார்க்க வரச் சொல்லவா?
தாராளமா...
உங்களுக்கு என்னைக்கு வசதின்னு சொன்னா அன்னைக்கே வரச் சொல்லிடறேன்.
ஞாயித்துக்கிழமை எல்லாருக்கும் வசதியான நாள் அதனால ஞாயித்துக்கிழமை வந்தா நல்லது.
சரி... அவங்க வீட்ல சொல்லிடறேன். ஒரு நாலு மணிக்கு வந்தா போதுமா?
அவங்க வசதிப்படி வரட்டும். எந்த டயத்துக் வர்றாங்கன்னு எங்களுக்குப் போன் பண்ணிச் சொன்னீங்கன்னா நாங்க தயாரா இருக்கோம். ஆமா... என்ன எதிர்பார்ப்பாங்க?
அதையும் கேட்டுக்கறேன். முதல்ல பொண்ணை வந்து பார்க்கட்டும். பிடிச்சுடுச்சுன்னா மேற்கொண்டு அதையெல்லாம் பார்த்துக்கலாம்.
எனக்கு ஒரே பொண்ணு இல்லை, இஷ்டத்துக்குச் செய்ய, மூணு பொண்ணு. பிசினஸும் ஓகோன்னு சொல்ற அளவுக்கு இல்லை. வர்றவங்க ரொம்ப எதிர்பார்த்தா... அப்புறம் சிரமம்.
அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன். பொண்ணோட போட்டோ ஒண்ணு கொடுங்க.
விசாலாட்சி உள்ளே சென்று சுதாமதியின் புகைப்படத்தை எடுத்து வந்து கொடுத்தாள். புகைப்படத்தைப் பார்த்த தரகர் திருப்தியாய்ப் புன்னகைத்தார்.
பொண்ணைப் பார்த்ததுமே பிடிச்சுடும்!
என அவளுடைய அழகிற்கு சர்டிபிகேட் கொடுத்த தரகர் எழுந்தார்.
அப்ப நான் கிளம்பறேன்
என்று விடைபெற்றுச் சென்றார்.
விசாலாட்சி கணவரின் அருகே அமர்ந்தாள்.
என்னங்க... இந்த இடம் நம்ம சுதாமதிக்கு நல்லபடியா முடிஞ்சா அடுத்த வருஷமே கீதாவுக்கும் கல்யாணத்தை முடிச்சுடலாம்
என்றாள்.
முதல்ல சுதாமதியோட கல்யாணம் முடியட்டும். கீதாவோட கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்?
அதே நேரம் வாசலில் காலடி ஓசை கேட்டது. ஓசையைத் தொடர்ந்து உள்ளே வந்தாள் சுதாமதி. அழகான சிலையாக அற்புத ஓவியமாக நடந்து வந்தாள். யாருக்கும் ஆசையைத் தோற்றுவிக்கும் அழகு முகம். நின்றால் எந்தப் பெண்ணையும் மிஞ்சும் உயரம். பெண்தன்மைக்குக் கம்பீரம் கொடுத்ததைப் போன்ற உடல் வாகு. கருகருவென்ற அடர்ந்த கேசம் இடுப்பு வரை இறங்கியிருந்தது.
வாம்மா, இப்படி உட்கார். ஒரு முக்கியமான விஷயம்.
சுந்தரம்பிள்ளை பீடிகையோடு மகளை உட்காரச் சொன்னார்.
என்னப்பா முக்கியமான விஷயம்?
தோள்களைக் குலுக்கிப் புருவங்களை உயர்த்திக் கேட்டாள்.
ஞாயித்துக்கிழமை உன்னைப் பெண் பார்க்க வர்றாங்க.
அப்பா சொன்னதும் துண்டிக்கப்பட்ட மின்சாரம் போல் சுதாமதியின் முகம் இருண்டது.
2
சுதாமதி வீட்டிற்கு மூத்த பெண். முதல் பெண் பார்க்கும் படலம். அதனால் வீடு புது விதமான உற்சாகத்தோடு இயங்கியது.
தரகர் சொன்னதைப் போல் ஞாயித்துக்கிழமை பெண் பார்க்கும் படலத்தை ஏற்பாடு செய்தார். சரியாக மாலை ஐந்து மணிக்கெல்லாம் மாப்பிள்ளை வீட்டார் வருவதாகத் தொலைபேசி செய்து சொன்னார். சுந்தரம் பிள்ளை மதியம் கடைக்குச் செல்லவில்லை. சுந்தரம் பிள்ளை நண்பர் சிலருடன் சேர்ந்து மருந்துக்கடை வைத்திருந்தார்.
ஏற்கெனவே சுத்தமாக இருந்த வீட்டை இன்னும் சுத்தமாக்கிக் கொண்டிருந்தார்.
சோபாக்களை