Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mangala Isai
Mangala Isai
Mangala Isai
Ebook106 pages45 minutes

Mangala Isai

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

R.Sumathi, an exceptional Tamil novelist, written over 100 novels, 250 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465827
Mangala Isai

Read more from R.Sumathi

Related authors

Related to Mangala Isai

Related ebooks

Reviews for Mangala Isai

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mangala Isai - R.Sumathi

    16

    1

    அவர்கள் கவலை படர்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள். விழிகள் வெளுத்து, சோகம் அப்பி, ‘திக்திக்’கென்ற உணர்வு அவர்களை ஆக்கிரமிக்க... அவஸ்தையாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

    அவர்கள் மாதவியும், ராஜராஜனும்!

    அவர்களின் முகம் சோகத்தில் சிக்கி சிதைய காரணம், நாயகி.

    நாயகி அவர்களுக்கு ஒரே மகள்.

    தன் நினைவை இழந்து ஒரு பிணம் போல் கிடக்கிறாள்.

    ஆறு மாதமாகிவிட்டது.

    எத்தனையோ வைத்தியம் செய்தும் எந்தப் பலனும் இல்லை.

    இடிந்து போயிருந்தவர்களுக்கு திடீர் என மருத்துவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி, புதிய நம்பிக்கை நட்சத்திரங்களை பூக்கச் செய்தது.

    வேறு மருத்துவர் கொடுத்த சிகிச்சை மூலம் நாயகிக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் கூறினார்.

    தொடர்ந்து சிகிச்சை கொடுக்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் அவளுக்கு நினைவு திரும்பும் என்று கூறினார்கள்.

    அந்த தருணத்திற்காக அவர்கள் காத்திருந்தனர். தங்கள் அன்பு மகள் மீண்டும் பேசப்போகும் நிமிடங்களுக்காகத் தவமிருந்தனர்.

    மருத்துவர் கொடுத்திருந்த நம்பிக்கையில் உற்சாகமும் எதிர்பார்ப்பும் நிறைய இருந்தது. ஆனால் ஒரு சில நிமிடங்களில் அந்த நம்பிக்கை பொய்த்துப் போவதைப் போலவும் உற்சாகம் குன்றி அவநம்பிக்கை சூழ்வதைப் போலவும் தெரிந்தது.

    என்னங்க...

    வெளியே பெஞ்சில் அமர்ந்து, சுவரில் சாய்ந்திருந்த ராஜராஜனை அழைத்தாள், மாதவி.

    மூடியிருந்த இமைகளைத் திறந்தார், ராஜராஜன்.

    ம்... என்றார்.

    என்னங்க... நாயகிக்கு நினைவு இதோ திரும்பும் அதோ திரும்பும்கிறாங்க. நாட்கள்தான் போய்க்கிட்டிருக்கே தவிர, அவளுக்கு நினைவு திரும்பினபாடில்லை. இன்னைக்கு நாளைக்குன்னு எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். எனக்கென்னமோ நம்பிக்கை இல்லைங்க. என் பொண்ணு என்கிட்ட பேசுவாளா? என்னை அம்மான்னு மீண்டும் கூப்பிடுவாளா? நாம ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு பெத்தது இதுக்குத்தானா? இந்தக் கோலத்துல பார்க்கத்தானா?

    பேசிய மாத்திரத்திலேயே பொல பொலவென கண்ணீர் சிதறியது அவளது கன்னத்தில்.

    வேதனை பொங்க கணவரைப் பார்த்தாள். அவளுடைய கையை ராஜராஜன் ஆறுதலாகப் பற்றினார்.

    மாதவி... நம்பிக்கைதான் மனுஷனுக்கு உயிர்மூச்சு மாதிரி. நம்பிக்கையை இழந்தவன் செத்த பிணத்துக்குச் சமம். டாக்டர் நமக்கு இந்தளவுக்கு உத்திரவாதம் கொடுத்திருக்கும் போது நீ இப்படி நம்பிக்கை இழக்கலாமா? அவளுக்கு நிச்சயம் நினைவு திரும்பும். கவலைப்படாதே!

    அவர் சொன்ன அதே நிமிடம் மெல்லிய காலடி ஓசையை எழுப்பிக் கொண்டு வெண்ணிற புறாவைப் போல் ஒயிலாக ஒரு நர்ஸ் வந்தாள்.

    சார்...

    அவளுடைய குரலுக்கு வசப்பட்டு, சட்டென்று ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் இருவரும் எழுந்தனர்.

    சார்... உங்களுக்கு போன்...

    யாரு?

    உங்க மருமகன் சதாசிவம்.

    இதோ வர்றேன் என அவசரமாக வரவேற்பறையை நோக்கி விரைந்தார்.

    அங்கு கிடத்தி வைத்திருந்த தொலைபேசி ரிசீவரை எடுத்து, வரவேற்புப் பெண் அவரிடம் நீட்டினாள். வாங்கி, அலோ என்றார்.

    மாமா... நான் சதாசிவம் பேசறேன்.

    சொல்லுங்க மாப்பிள்ளை.

    நாயகிக்கு ஏதாவது முன்னேற்றம் தெரிஞ்சுதா?

    இதுவரை இல்ல தம்பி. ஆனா... நிச்சயம் நினைவு திரும்பிடும்னு டாக்டர் சொல்றார். ராஜராஜன் இப்படி சொன்னதும் எதிர் முனையிலிருந்து எந்த பதிலும் இல்லை.

    மீண்டும் அலோ என்றார். அவரிடம் ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.

    ம்...இன்னைக்கு நாளைக்குன்னு காத்து... காத்து... சதாசிவத்தின் குரல் கம்மியது.

    வருத்தப்படாதீங்க, தம்பி. கடவுள் நிச்சயம் நம்ம மேல் இரக்கப்படுவார். நம்பிக்கையை விட்டுடாதீங்க.

    மாமா ஒரு முக்கியமான விஷயம்.

    என்ன... சொல்லுங்க?

    கம்பெனி விஷயமா நான் அவசரமா வெளியூர் போறேன் வர ஒரு வாரம் ஆகும். நாயகியை நீங்கதான் பார்த்துக்கணும்.

    அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். நீங்க பத்திரமா போயிட்டு வாங்க.

    நன்றி மாமா! குழந்தை எப்படி இருக்கான்?

    நல்லா இருக்கான். அவனைப் பத்தி நீங்க ஒண்ணு கவலைப்படாதீங்க...

    மாமா! அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்...

    சொல்லுங்க தம்பி.

    நாயகிக்கு நினைவு திரும்பினா என்னைப் பத்தி எதுவும் சொல்ல வேண்டாம். நினைவு திரும்பின உடனே அவளுக்கு அதிர்ச்சியான செய்தி எதையும் சொல்றது அவ்வளவு நல்லதில்லை.

    புரியுது. நாங்க எதையும் சொல்லலை.

    சரி வச்சுடுறேன் மாமா.

    எதிர்முனையில் தொலைபேசி வைக்கப்பட்டதும், ராஜராஜன் ரிசீவரை வைத்துவிட்டு தளர்வாக நடந்தார். மனைவி உட்கார்ந்திருந்த இடத்துக்கு வந்து சோர்வாக அமர்ந்தார்.

    மாதவி, அவரைப் பார்த்தாள்.

    என்ன சொன்னார்?

    நாயகிக்கு நினைவு திரும்பிடுச்சான்னு கேட்டார். ஆபீஸ் விஷயமா வெளியூர் போறாராம். நாயகியை கவனமா பார்த்துக்கச் சொன்னார்.

    ம்... பாவம் அந்த மனுஷன். நம்ம பொண்ணை கட்டிக்கிட்டு என்ன பாடுபடுறார். எவ்வளவு வேதனை அவருக்கு? தன்னந்தனியா கிடந்துக்கிட்டு கஷ்டப்படுறார். ம்... இவளுக்கு நினைவு திரும்பணும்னு வேண்டிக்கிட்டு அவர் காத்துக் கிடக்கிறார். இந்தப் பொண்ணு, நினைவு திரும்பினாலும் அவரைப் புரிஞ்சுக்கணுமே... அதுதான் என் பயம்!

    புரிஞ்சுப்பா... புரிஞ்சுக்காம எங்கே போவா? ம்... பைத்தியக்காரப் பொண்ணு! யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்ட மாதிரி நோயைத் தேடிக்கிட்டு இந்தளவுக்கு முத்தவிட்டு, இப்ப தன் நினைவை இழந்து புருஷன் பிள்ளையை மறந்து கிடக்கிறா...

    மாதவி... அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்...

    என்ன...?

    நாயகிக்கு நினைவு திரும்பினா அவகிட்ட எதையும் சொல்ல வேண்டாம்னு மாப்பிள்ளை சொல்றார் அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மறுபடியும் அதே நர்ஸ் அங்கே வந்தாள்.

    சார்... டாக்டர் உங்களைக் கூப்பிடுறார். உங்க மகளுக்கு நினைவு திரும்பிடுச்சு...

    2

    காத்திருத்தல்!

    காதலைப் பொறுத்தவரை சுகம்.

    கல்யாணத்தைப் பொறுத்தவரை தவிப்பு! தவம்!

    கர்ப்பத்தைப் பொறுத்தவரை ஏக்கம்?

    Enjoying the preview?
    Page 1 of 1