Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neengatha Ennam Ondru
Neengatha Ennam Ondru
Neengatha Ennam Ondru
Ebook122 pages55 minutes

Neengatha Ennam Ondru

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

R.Sumathi, an exceptional Tamil novelist, written over 100 novels, 250 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465827
Neengatha Ennam Ondru

Read more from R.Sumathi

Related to Neengatha Ennam Ondru

Related ebooks

Reviews for Neengatha Ennam Ondru

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neengatha Ennam Ondru - R.Sumathi

    9

    1

    பொழுது விடிந்ததுமே தந்தியின் முகத்தில் தான் விழிக்க வேண்டியிருந்தது. கிருஷ்ணனுக்கு.

    பாட்டி இறந்து விட்டாள். அதிர்ச்சி உண்டாகவில்லை. எதிர்பார்த்ததுதான். இன்றைக்கா நாளைக்கா என எல்லோருமே எதிர்பார்த்ததுதான்.

    பாட்டி எண்பது வயதைத் தாண்டி விட்டாள். வியாதி வெக்கை என எதுவம் வந்து தீண்டாதவள். குச்சி போல் உடம்பை வைத்துக் கொண்டு கோடி வேலை செய்வாள். தலைவலி என்று யாராவது சொன்னா போக்கை வாயைக் காட்டி நக்கலாகச் சிரிப்பாள். வீட்டு வேலைகளை பதினாறு வயசுப் பெண் போல் செய்வாள்.

    அப்படிப்பட்ட பாட்டி ஒரு மாதமாகப் படுத்த படுக்கையானாள். இத்தனைக்கும் இயற்கையாக அவளுக்கு எந்த நோயும் வரவில்லை. மாடியில் கோதுமையைக் காய வைத்து விட்டு இறங்கி வரும்போது தடுமாறி விழுந்து காலை ஒடித்துக் கொண்டவள்தான். அப்டியே படுத்த படுக்கையானாள். தொடர்ந்து வைத்தியம் செய்தும் எழுந்து நடமாட முடியவில்லை. நாளைக்கொரு வைத்தியம், பொழுதிற்கொரு வழியும் அவளை ஆட்கொண்டன. பாட்டிக்கு பணிவிடை செய்ய யாரும் அலுத்துக் கொள்ளவில்லை. காரணம் பாட்டி அத்தனை பேருக்கும் பம்பரமாக உழைத்தாள்.

    அம்மாவாகட்டும், அப்பாவாகட்டும் தங்கை சௌவ்ந்தர்யாயாகட்டும் போட்டி போட்டுக் கொண்டுதான் பாட்டியைக் கவனித்தனர். கிருஷ்ணனும், அடிக்கடி சென்று பார்த்து விட்டு வருவான். பத்து நாட்களுக்கு முன்புதான் சென்று பார்த்துவிட்டு வந்தான். பாட்டி நினைவை இழந்திருந்தாள். உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருந்தது.

    இதோ இறந்து விட்டாள்.

    மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் லேசான வலி உண்டானது, கிளம்பிவிட்டான்.

    அலுவலகத்திற்கு விடுப்பு கொடுத்துவிட்டுப் பேருந்து பிடித்து காரைக்கால் நோக்கி பயணப்பட்டான்.

    காரைக்காலில் இறங்கி ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்ததும் வீட்டு வாசலில் சொற்ப கூட்டம் கவலையேந்தி அமர்ந்திருக்க உள்ளிருந்து அம்மா தங்கை இருவரின் அழுகுரலும் மற்ற பெண்களின் அழுகையை விட உச்ச வேகத்தில் வெளியே கேட்டது.

    ஆட்டோவிலிருந்து இறங்கியவனின் கையைப் பற்றினான் பரமு. பரமானந்தம், கிருஷ்ணனின் பால்ய சிநேகிதன். இன்று வரை அதே சிநேகம். அதே பரிவு அவனை விட பாட்டிக்குத்தான் அவன் நல்ல சிநேகிதன். பாட்டியும் அவனும் பேச ஆரம்பித்தாள் அவனே ஓர் பாட்டியாகிவிடுவான். பாட்டியின் கன்னிப் பருவக் கதையிலிருந்து எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்கும் குணம் அவனுக்கு.

    எவ்வளவு நல்ல பிள்ளை எத்தனை அன்பாப் பேசறான். நீயும்தான் இருக்கியே. பரமுவின் முகத்தை வழித்து திருஷ்டி கழிப்பாள் பாட்டி.

    உனக்கும் வேலை இல்லை அவனுக்கும் வேலை இல்லை என்பான்.

    பரமுவிற்கு காரைக்காலிலேயே சொந்த பிசினஸ், டெலிபோன் பூத், பால்பூத், ஃபர்னிச்சர் மார்ப் என அவனுடைய பிசினஸ் வளரும் நிலையில் இருந்தது.

    கிருஷ்ணனின் தோளில் தட்டிக் கொடுத்தவாறே அவனை உள்ளே அழைத்து சென்றான்.

    பாட்டி ரோஜா மாலைகளுக்குள் புதைந்து கிடந்தாள். முகத்தைத் தேடுவதே சிரமமாயிருந்தது.

    அம்மாவும், தங்கையும் கிருஷ்ணனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதனர். அப்பா பின்புறம் கைகளைக் கட்டிக்கொண்டு தலைகுனிந்தபடி நின்றிருந்தார். பாட்டியின் சமகால கிழத்தோழிகள் ஒப்பாரி வைத்தனர். அதில் இலக்கிய நயம் நிரம்பியிருந்தது.

    பரமுதான் ஆக வேண்டிய காரியங்களை முன்னின்று செய்து கொண்டிருந்தான். பம்பரமாகச் சுழன்றான். அப்பா ஆக வேண்டிய செலவுக்கான பணத்தை பாராமுவிடம் கொடுத்திருப்பது தெரிந்தது. அவனே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய செயல்பாடுகளில் அந்த வீட்டில் அவன் பழகியிருக்கும் விதம் தெரிந்தது. கிருஷ்ணனிடம் அவன் கொண்டிருக்குப் நட்பு புரிந்தது. பாட்டி வயதானவளாகயிருந்தாலும் சாக வேண்டிய வயதுதான் என்றாலும் எல்லோரையும் சோகம் அழுத்தியது. பாட்டி வீட்டிற்கு மட்டுமல்ல தெருவிற்கே பாசத்திற்குரியவள்.

    ஆச்சு.

    இதோ பாட்டி பிரமாதமாகக் கிளம்பி விட்டாள். புதுசு கட்டி மாலை போட்டு தூக்கியபோது பாட்டி சிரித்த முகத்துடன் உறங்குவதை போலிருந்தது.

    காடுவரை சென்று வழியனுப்பி விட்டு வீட்டிற்குத் திரும்பி வந்தபோது வீடு பளிச்சென அலசிவிடப்பட்டிருந்தது.

    பாட்டியின் பெருமைகள் பேசப்பட்டன. கிருஷ்ணன் பரமுவை மாடிக்கு அழைத்துச் சென்றான்.

    இருவரும் மௌனமாக எதிரெதிரே அமர்ந்திருந்தனர். பரமு திடீரெனக் குலுக்கினான். கிருஷ்ணன் அதிர்ச்சியோடு நிமிர்ந்தான்.

    பாட்டியின் இறப்பு இவனைப் பெருமளவு பாதித்துவிட்டது போலும், பாட்டியிடம் மிகவும் நெருக்கமாக பழகியவனாயிற்றே, காலையிலிருந்து எல்லாவற்றையும் தன் தலை மேல் போட்டுட்க் கொண்டு செய்தவன், இப்பொழுது தனிமையில் அழுகிறான். நான் கூட இந்தளவிற்கு அழவில்லை. இவன் இப்படி அழுகிறானே என்று நினைத்த கிருஷ்ணன், நண்பனின் தோள்களை ஆதரவுடன் பற்றினான். நண்பனின் கரம் பட்டதும் பெண் பிள்ளைப் போல் அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டு கதறி கதறியழுதான்.

    அவனுடைய அழுகை பாட்டிக்காக இல்லை என்பதைப் போல் தோன்றியது கிருஷ்ணனுக்கு.

    ஏனோ அவனுடைய மனம் திக்திக்கென அடித்துக் கொண்டது.

    பரமு...என்னயிது? ஏன் இப்படி அழறே? என்றான்.

    ரத்னா...ரத்னா...

    ரத்னாவுக்கு என்னாச்சு? பயத்தோடு வினவினான். பரமுவால் பேச முடியவில்லை. சில நிமிடங்கள் மௌனமாக இருந்தான். மிகப் பெரியதொரு வேதனையை ஜீரணிக்க முடியாமல் திணறுவதைப் போலிருந்தது. அவனுடைய செய்கை. அமைதி காத்தவன் அடுத்த சில நிமிடங்களில் கூறினான்.

    கிருஷ்ணா - ரத்னாவுக்கு சித்தபிரமை மாதிரி இருக்கு கிருஷ்ணனின் முகத்தில் அதிர்ச்சி பரவியது.

    பரமு...எப்படி இது?

    "தெரியலை. நல்லாத்தான் இருந்தா. சொந்தக்காரங்க கல்யாணத்துக்காக வேணாங்கண்ணிக்குப் போய்ட்டோம். அவளைக் கூப்பிட்டதுக்கு காலேஜ்ல முக்கியமான க்ளாஸ் இருக்கு நான் வரலைன்னு சொல்லிவிட்டுப் போய்ட்டா. நாங்க கல்யாணம் முடிஞ்சு சாயந்தரம் ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தா சிலை

    மாதிரி உட்கார்ந்திருக்கா. பேசினா பேச மாட்டேங்கறா. இங்கேயே வெறிச்சுப் பார்த்துகிட்டு உட்கார்ந்திருக்கா. வீட்ல சாவு நடந்த மாதிரி ஒரே அழுகை ஆர்ப்பாட்டம். பத்து நாளாகுது. அவகிட்ட எந்த முன்னேற்றமும் இல்லை. டாக்டர்கிட்ட கொண்டு காட்டினோம். ஏதோ அதிர்ச்சி ஏற்பட்டிருக்கு அது பலமா மனசைத் தாக்கியிருக்குன்னு சொல்றாரு. ஆஸ்பிடல்ல இருக்கிறதால வீட்ல இருந்த அவளோட நிலை மாறும்னு சொல்றார். அதனால வீட்லதான் இருக்கா. எனக்கு வீட்டுக்குப் போகவே பிடிக்கலை. அம்மா, அப்பா ரெண்டு பேரும் இடிஞ்சு போயிட்டாங்க" கண்ணீர் கசிய கசிய பரமு சொல்லிக் கொண்டே போக கிருஷ்ணாவின் இதயம் பெரிய அழுத்தத்திற்குள்ளானது.

    ரத்னா...ரத்னா...ரத்னா... அலுப்பில்லாமல் அழைத்துப் பார்த்தாள் ரங்கநாயகி.

    இந்தப் பத்து நாட்களில் அவள் ஓராயிரம் முறை அழைத்துப் பார்த்துவிட்டாள். செவி இழந்த சிலையாக வீற்றிருந்தாள் ரத்னா. ஏதோ ஒரு அழைப்பிற்காகவாவது அவளிடம் ஒரு சலனம் உண்டாகாதா என்ற நப்பாசை அவளிடம் நிறைந்திருந்தது.

    மணியோசை, அர்ச்சனைப் பாடல், பக்தர்களின் வேண்டுதல் இவை யாவற்றையும் காதில் வாங்காமல் அலங்கார சிலையாக அமர்ந்திருக்கும் தெய்வத்தைப் போல் அமர்ந்திருந்தாள் ரத்னா.

    அம்மா நிறைய அழுதுவிட்டாள், ஆனாலும் கண்ணீர் வற்றவில்லை.

    Enjoying the preview?
    Page 1 of 1