Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neeyenbathu Naanallavo
Neeyenbathu Naanallavo
Neeyenbathu Naanallavo
Ebook106 pages53 minutes

Neeyenbathu Naanallavo

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

R.Sumathi, an exceptional Tamil novelist, written over 100 novels, 250 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465827
Neeyenbathu Naanallavo

Read more from R.Sumathi

Related authors

Related to Neeyenbathu Naanallavo

Related ebooks

Reviews for Neeyenbathu Naanallavo

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neeyenbathu Naanallavo - R.Sumathi

    19

    1

    "வள்ளி... ஏய் வள்ளி..."

    கணவனுடைய குரல் படுக்கையறையிலிருந்து ஒலித்தது.

    மதியச் சமையலுக்காக உலைபானையை அடுப்பில் ஏற்றிய வள்ளி அங்கிருந்தே குரல் கொடுத்தாள்.

    இதோ வர்றேன்...

    அடுத்த நிமிடம் வள்ளி கணவனின் எதிரே நின்றாள்.

    கட்டிலில் காலாட்டியபடி அன்றைய தினசரியில் மூழ்கிச் சாய்ந்திருந்த கருணாகரன் மனைவியைப் பார்த்ததும் செய்தித்தாளைத் தூக்கிப் போட்டுவிட்டு மனைவியை நோக்கிக் குரல் கொடுத்தான்.

    இங்க வா... உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்றான்.

    என்ன... முக்கியமான விஷயம்? எதுவாயிருந்தாலும் அப்புறம் சொல்லுங்க. இப்ப அடுப்படியில் வேலை இருக்கு.

    என்ன பெரிய வேலை?

    உங்களுக்கு என்ன... பத்து மணிக்கு எழுந்து குளிக்கக் கூட இல்லாம டிபன் சாப்பிட்டுட்டு மறுபடியும் கட்டில்ல வந்து ஹாயா படுத்துட்டீங்க. நான் அப்படி இருக்க முடியுமா? காலையிலிருந்து உட்காரச் சித்த நேரம் இல்லை. காபி போட்டு, டிபன் செய்து இப்ப வீட்டைக் கழுவிவிட்டு குளிச்சு சமையலுக்குத் தயார் செய்துக்கிட்டிருக்கேன். இனிமே சமைச்சு முடிச்சு சாப்பிட்டுட்டு சித்த படுக்கக் கூட முடியாது. துணி கிடக்கு துவைக்கணும் என்றாள்.

    ரொம்பத்தான் அலுத்துக்கறே. நான் என்னமோ, தினம் இப்படி சாப்பிட்டுட்டு ஹாயா வீட்ல தூங்கிக்கிட்டா இருக்கேன்? தினமும் ஏழு மணிக்கெல்லாம் ஓடி ஆடி திரிஞ்சு ராத்திரி பத்து மணிக்கு வந்தா மனுஷன் பாவம் கஷ்டப்பட்டு அலைஞ்சு திரிஞ்சு வந்திருக்கானேன்னு கால் கையைப் பிடிச்சு விடறியா நீ பொண்டாட்டின்னு எதுக்கு இருக்கே? கையைத் தொட்டா போதும், அங்க வலிக்குது, இங்க வலிக்குதுன்னு என்னைக் கால் அமுக்கிவிடச் சொல்றே. என்ன பண்றது? பொண்டாட்டி தாசனாட்டம் நானும் உனக்குக் கால் அமுக்கி விடறேன். என்னமோ இவதான் வேலை செய்யற மாதிரி அலுத்துக்கறா... இப்ப வரப்போறியா இல்லையா? என்றான்.

    அவனுக்கு அருகே வந்தாள் வள்ளி. நெருங்கிய மனைவியை நிமிர்ந்து பார்த்தான்.

    வள்ளி நல்ல சிவந்த நிறம். அளவான உயரம். அழகான தேகம். மஞ்சள் முகத்தில் கரிய புருவமும் விழிகளும் அழகூட்டின. நெற்றியில் பளிச்சென்று வைத்த குங்குமம். காதிலும், மூக்கிலும் கற்கள் பதித்த நகைகள் சுடர்விட்டன. சிவப்பு நிறச் சேலையும், ரவிக்கையும் அவளுடைய அழகையும், நிறத்தையும் மேலும் எடுப்பாக்கியிருந்தது.

    வளைவாக அழகாக கொஞ்சமாகத் தெரிந்த இடை கவர்ச்சிகரமாக அவனுடைய கண்களை உறுத்தியது.

    அவனருகில் வந்து அமர்ந்தாள்.

    என்ன... சொல்லுங்க... என்றாள்.

    சொல்றேன்... என்று அவளுடைய கையை எடுத்து மெல்ல, வருடினான்.

    இதுதான் முக்கியமான விஷயமா?

    ஆமா... இதுதான் முக்கியமான விஷயம். ராத்திரி... இடுப்பை வலிக்குதுன்னு தூங்கிட்டே. இப்ப குளிச்சு முழுகி அலங்காரமா நிக்கும் போது எப்படியிருக்கு, தெரியுமா? சட்டென்று அவளை இறுக்கி அணைத்தான்.

    ஐயோ... ச்சை... விடுங்க. எனக்குத் தலைக்கு மேல வேலை கிடக்குன்னு சொல்றேன். இப்பத்தான் இவர் நேரம் பார்த்திருக்கார்! என்று அவனிடமிருந்து விலகினாள்.

    இதுக்கு அப்புறம்தான் எல்லாமும், என்ன பெரிய வேலை. கலெக்டர் வேலையா பார்க்குறே? சோறாக்கிப் போடறது பெரிய, வேலையா? இதுக்கே இப்படி அலுத்துக்கறே... ஒவ்வொருத்திங்க நாலு அஞ்சுன்னு பெத்து வச்சுக்கிட்டு அதுங்களோட படாதபாடு பட்டுக்கிட்டு வீட்டு வேலையும் செய்துக்கிட்டு கஷ்டப்படறாங்க. நீ அப்படியா?

    விளையாட்டாகக் கணவன் சொன்ன வார்த்தைகள் வள்ளியின் அழகான முகத்தில் திடீரென ஒரு சோகத்தைக் கவிழ்த்தது.

    கணவன் ஆசையாக அழைத்தது நெஞ்சுக்குள் மகிழ்ச்சியையும் கிளுகிளுப்பையும் ஏற்படுத்தியது. ஆனால், வெளியில் அலுத்துக் கொண்டு அவனைத் திட்டினாள். அந்தக் குதூகலமும், கலகலப்பும், கிளுகிளுப்பும் நிமிடத்தில் இருந்த இடம் தெரியாமல் போனது.

    சட்டென்று விழிகள் கலங்கிச் சிவந்துவிட்டன. நீர் கோத்துக் கொண்டு கீழ் இமையில் தேக்கமிட்டு நின்றது.

    திடீரென முகம் வாடிச் சிவந்து கண்ணீருடன் காட்சியளித்த அவளைப் பார்த்தவனுக்கு மனதில் திடுக்கென்றானது. அவளுடைய கையை அழுத்தமாகப் பற்றினான்.

    வள்ளி... என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியா ஆயிட்டே? என்றான்.

    எனக்கு... எனக்குப் புள்ளை இல்லைங்கறதைக் குத்திக் காட்டறீங்களா? அழுகை நெஞ்சையடைக்க அவள் திணறினாள்.

    ஸாரிடா. நான் சாதாரணமா விளையாட்டுக்குச் சொல்ல... அதை சீரியஸா எடுத்துக்கிட்டியே... கண்ணைத் துடை என்றான்.

    அவனே துடைத்தும் விட்டான்.

    வள்ளி... உன் கண்ணுல கண்ணீரே வரக் கூடாதுன்னு நினைக்கறவன் நான். ஆனா நீ தொட்டதுக்கெல்லாம் அழறே சரியான அழுமூஞ்சி. ஆளைப் பாரு... என்று அணைத்துக் கொண்டான். முகம் நிமிர்த்தி வேண்டினான்.

    கொஞ்சம் சிரியேன்!

    அவள் கோபம் மறந்து குழந்தை போல் சிரித்தாள். பின் அழகான அவள் சிரிப்பில் அவன் தன்னை இழந்தான். அணைப்பை நெருக்கமாக்கி இறுக்கமாக்கினான்.

    வள்ளி... கன்னத்தில் உதட்டால் சூடேற்றினான்.

    ம்... சிணுங்கினாள்.

    ரொம்ப அழகாயிருக்கேடி. முப்பது வயசாயிட்டு உன் உடம்புல ஒரு சோர்வு இல்லை. அனாவசியச் சதை இல்லை. அன்னைக்குப் பார்த்த மாதிரியே சிலை மாதிரி இருக்கேடி... அவன் மனைவியின் அழகை ஆச்சரியத்துடன் புகழ்ந்தான். தன்னுடைய புகழ்ச்சியில் அவள் மயங்குவாள் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால், அவன் வெளியிட்ட வார்த்தைகள் அவளுடைய மனதைப் புண்படுத்தின.

    ஆமா, புள்ளை பெத்து இருந்தா அழகு போய் உடம்பு தளர்ந்திருக்கும். வயிறு ஊதிப் போயிருக்கும். பார்க்கக் குதிரு மாதிரி இருந்திருப்பேன். புள்ளை பெத்தெடுக்காத உடம்பு சிலை மாதிரிதான் இருக்கும். குழந்தை பெத்துக்காம அழகு இருந்து என்ன புண்ணியம்?

    "வள்ளி...

    Enjoying the preview?
    Page 1 of 1