Neeyiruntha Manasu
By R.Sumathi
4.5/5
()
About this ebook
Read more from R.Sumathi
Maaya Thottrangal Rating: 0 out of 5 stars0 ratingsSinnakkili Rating: 4 out of 5 stars4/5Eppadi Solvenadi Rating: 4 out of 5 stars4/5Kathal Suvadukal Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Theeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsKannoram Minsaaram Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Ennai Thodu Rating: 5 out of 5 stars5/5Puthiraaga Oru Poo Rating: 5 out of 5 stars5/5Uravillai Pirivillai Rating: 0 out of 5 stars0 ratingsInimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Malare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsManoratham Rating: 4 out of 5 stars4/5En Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5Ketkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Ilamaane Rating: 0 out of 5 stars0 ratingsKunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsKaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsPaarvaikal Puthithaa Rating: 0 out of 5 stars0 ratingsPaasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsOreedam Nee Tharuvaai Rating: 4 out of 5 stars4/5Unakke Uyiraanen Rating: 0 out of 5 stars0 ratingsMayakkathirkuriya Manthirame Rating: 5 out of 5 stars5/5Sinthanaiye... En Siththame! Rating: 0 out of 5 stars0 ratingsPovomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Anbu Malarkal Rating: 5 out of 5 stars5/5Vaazhnthaal Unthan Madiyil Rating: 5 out of 5 stars5/5Thaai Paravai Rating: 5 out of 5 stars5/5
Related to Neeyiruntha Manasu
Related ebooks
Anbin Niram Maarathu Rating: 0 out of 5 stars0 ratingsNeelakuyile Kannamma Rating: 5 out of 5 stars5/5Enakkenave... Nee… Kidaithai! Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukkum Poo Maalai Rating: 0 out of 5 stars0 ratingsEllaik Kodukal Rating: 5 out of 5 stars5/5Poove Unnai Nesippen Rating: 4 out of 5 stars4/5En Mazhaye... En Mayilirage!... Rating: 0 out of 5 stars0 ratingsKannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Nenjil Nindrai Kaaviyamai! Rating: 0 out of 5 stars0 ratingsNetru Varai Nee... Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsIlamai Kaatru Rating: 5 out of 5 stars5/5Suvaril Nuzhaintha Vergal Rating: 4 out of 5 stars4/5Azhagin Sirippu Rating: 0 out of 5 stars0 ratingsUllangal Ondragi... Rating: 0 out of 5 stars0 ratingsSol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsMegangal Illatha Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsEnnul Nee Pathitha Suvadu Rating: 0 out of 5 stars0 ratings'Nilavai Maraitha Megam...!' Rating: 0 out of 5 stars0 ratingsMaya Enum Poonchiragu Rating: 0 out of 5 stars0 ratingsMinmini Poochikal Rating: 0 out of 5 stars0 ratingsPazhamozhi Kathaigal Rating: 5 out of 5 stars5/5Kaatrukenna Veli Rating: 0 out of 5 stars0 ratingsOru Vaanam Iru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsNetru Nila Indru Nee Rating: 5 out of 5 stars5/5Panneril Nanaintha Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsManam Virumbuthe Unnaiye! Rating: 4 out of 5 stars4/5Kangal Solkindra Kavithai Rating: 4 out of 5 stars4/5Nallathor Veenai Seithe...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5Thavamindri Kidaitha Varame Rating: 0 out of 5 stars0 ratingsMinmini Pookkal Rating: 5 out of 5 stars5/5
Reviews for Neeyiruntha Manasu
3 ratings0 reviews
Book preview
Neeyiruntha Manasu - R.Sumathi
13
1
அந்தப் பெரிய பங்களாவின் முன் காரை நிறுத்தினான் யோகேஷ்.
பணியாள் ஓடிவந்து கதவைத் திறந்தான். காரை உள்ளே செலுத்திய யோகேஷ் அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கி நடந்தான்.
கண்ணாடியாய்ப் பளபளத்த வராண்டாவில் நின்று அழைப்பு மணியில் விரல் வைத்து அழுத்த, கதவு திறந்தது.
என்ன சீக்கிரம் வந்துட்டீங்க? கான்ஃபரன்ஸ் முடிய லேட்டாகும்னு சொன்னீங்க?
என்றபடியே எதிர் கொண்டாள் ஸ்ரீமதி.
சீக்கிரம் முடிஞ்சுட்டது. அதான் சீக்கிரம் கிளம்பிட்டேன்!
என்றபடியே கையிலிருந்த சூட்கேஸைக் கொடுத்தான்.
"என்ன டிபன் செய்திருக்கே? ரொம்பப் பசிக்குது ஸ்ரீ.. என்றான்.
டிபன் ஏதும் பண்ணலை!
ஏன்டா... தினமும் ஏதாவது சூடா செய்து வச்சிருப்பியே...
நீங்க வர லேட்டாகும்னு செய்யலை. பழம் இருக்கு. கொண்டு வரட்டா?
வேண்டாம். சூடா டீ போட்டுக் கொண்டு வா... நான் டிரஸ் சேஞ்ச் செய்துட்டு வர்றேன்!
பசிக்குதுன்னு சொன்னிங்களே...
பிரட் இருந்தா நாலு துண்டு எடுத்து வை. அது போதும்,
என்றபடியே தன் அறைக்குள் நுழைந்தான்.
ஆடை மாற்றிக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கை, கால், முகம் கழுவிக் கொண்டு வந்தான்.
ஸ்ரீமதி அவனுக்கும் தனக்குமான டீயுடன் பிரட் துண்டுகளைக் கொண்டு வந்து வைத்தாள். இருவரும் பேசிக் கொண்டே சாப்பிட்டார்கள்.
தேநீர் பருகிய உற்சாகத்தில் யோகேஷ் அன்றைய கருத்தரங்கைப் பற்றிப் பேசத் தொடங்கினான்.
ஆனால் ஸ்ரீமதியின் கவனமெல்லாம் எதையோ தீவிரமாகச் சிந்திப்பதைப் போல் இருந்தது.
அதைக் கவனித்த யோகேஷ், என்ன யோசனை? எதையோ தீவிரமா யோசிக்கற மாதிரியிருக்கே!
என்றான்.
கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.
என்னங்க... உங்களுடைய அறிவு, அனுபவம் இதெல்லாம் நம்ம இந்திய மக்களுக்குப் பயன்படணும். உங்க மருத்துவ சேவை நம்ம தாய் மண்ணுக்குப் பயன்படணும். மேற்படிப்புக்காக வந்த நீங்க படிப்பு முடிஞ்சும் இன்னும் அமெரிக்காவிலேயே இருக்கறது எனக்குப் பிடிக்கலை. மனுஷனைத் தடுமாற வைக்கற சக்தி பணத்துக்கு மட்டும்தான் உண்டு. தேவைக்கு மீறிய பணம், வசதி இதெல்லாம் உங்க லட்சியத்தை மாத்தியமைச்சுட்டதோன்னு எனக்குச் சந்தேகமாயிருக்கு.
யோகேஷ் சிரித்தான். அவளுடைய கூந்தலை மெல்ல வருடினான்.
நீ... நீ என்னைப் பத்தி புரிஞ்சுகிட்டது இவ்வளவுதானா? என்னோட படிப்பு, லட்சியம், அனுபவம் எல்லாத்தையும் நம்ம இந்திய மக்களுக்கே அர்ப்பணிக்கணும்கற என்னோட கருத்துல எந்த மாற்றமும் இல்லை. என்னோட மேற்படிப்பு முடிஞ்சுட்டது. ரெண்டு வருஷம் இங்கேயே நான் வேலை பார்க்க நினைக்கிறேன். நிரந்தரமாயில்லை. ரெண்டு வருஷம் இங்க இருக்க நினைக்கறதுக்குக் காரணம் என்னோட அறிவைப் பட்டை தீட்டிக்கவும் அனுபவத்தைப் பலப்படுத்திக்கவுந்தான்.
ரெண்டு வருஷம் கழிச்சு இந்தியா போறதா? வேண்டாமா? என்னால அவ்வளவு நாள் காத்திருக்க முடியாது.
எதுக்காகக் காத்திருக்க முடியாது? உங்க அம்மா அப்பாவைப் பார்த்துக்கறதுக்காகவா?
இல்லை. வந்து... சொன்னா கோபப்பட மாட்டிங்களே...
என்ன நீ இது? உன்கிட்ட கோபப்படுவேனா?
என்னங்க... என் மனசுக்குள்ளே ஒரு ஆசை...
அவளை அருகே அழைத்து நெஞ்சில் போட்டுக் கொண்டான்.
என்ன ஆசை? சொல்லு... என் மகாராணியின் ஆசையை உடனே நிறைவேற்றி வைக்கிறேன்!
செல்லமாக அவளுடைய கூந்தலை வருடினான்.
நான் இந்தியாவுக்குப் போகணும்னு சொல்றது, நீங்க அங்கதான் வேலை செய்யணும்ங்கறதுக்காக மட்டும் இல்லை...
பின்னே?
நாம் ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கவும்தான்.
யோகேஷின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.
நீ... என்ன சொல்ற நீ?
ஆமாங்க! எனக்குத்தான் குழந்தை பிறக்காதுங்கறது முடிவான ஒரு விஷயம். அதனால இந்தியாவுக்குப் போய் நாம ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கலாம்!
யோகேஷின் முகம் இறுக்கமானது. அவனுடைய கையை மெல்ல வருடியபடி கலங்கும் விழிகளுடன் அவனைப் பார்த்தாள்.
என்னால் குழந்தையில்லாம ஒரு எதிர் காலத்தை நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை. நீங்க வெளியில போயிடறிங்க. நினைச்ச நேரத்துல என் கூட உங்களால் இருக்க முடியாது. என்னால தனியா இருக்க முடியலை. நமக்கும் எதிர்காலத்துல ஒரு பிடிப்பு வேணும். என்ன சொல்றிங்க? தத்து எடுத்துக்கலாமா?
யோகேஷ் மனைவியின் முதுகை வருடியவாறே... நீ... எந்தச் செயலையும் திடுதிப்புன்னு செய்யக் கூடாது... ஒரு தடவைக்குப் பல தடவை யோசிக்கணும். எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடு.
கணவனை வியப்பாகப் பார்த்தாள்.
அவள் ஆசைப்பட்ட எதையும் நிறைவேற்றாமல் இருந்ததில்லை, அவன். முதன் முறையாக யோசிக்க அவகாசம் கேட்கிறான்.
ஸ்ரீ... எனக்கு டயர்டா இருக்கு. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கறேன். என்னை டிஸ்டர்ப் பண்ணாதே!
ஸ்ரீமதிக்கு என்னவோ போலிருந்தது. எப்பொழுது வந்தாலும் அவளை எங்காவது வெளியில் அழைத்துப் போவான். இன்றைக்கு ரெஸ்ட் எடுக்கப் போவதாகக் கூறுகிறான். என்னாயிற்று?
‘என்னுடைய தத்தெடுக்கும் திட்டம் அவனுக்குப் பிடிக்கவில்லையோ?’ நினைக்கவே கலக்கமாக இருந்தது.
யோகேஷ் படுக்கையறையில் நுழைந்து படுக்கையில் சரிந்தான்.
யோகேஷ்... நாம் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம்.
வேதனை, தவிப்பு, ஏக்கம் கலந்து ஒலித்த அந்தக் குரல் அவன் உடலைத் தூக்கிப் போடுவதைப் போலிருந்தது. கண்ணை இறுக மூடினான். அந்தக் குரல் அறை முழுவதும் ஒலிப்பதைப் போலிருந்தது. மூடிய கண்களுக்குள் ஒரு உருவம் வந்து நின்றது.
யோகேஷ்... நாம் ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கலாம்!
அந்த உருவம் பேசியது.
தூரிகா... தூரிகா...!
அவன் உதடுகள் மென்மையாக உச்சரித்த நொடியில் உள்ளம் உருகியது.
தூரிகாவைப் பற்றிய எண்ணங்கள் அவனைத் துரத்தத் தொடங்கின.
2
தொலைபேசி ஒலித்தது.
சமையலறையில் சாம்பாரைத் தாளித்துக் கொண்டிருந்த கோதை அதை இறக்கி வைத்து விட்டு, கேஸை நிறுத்திவிட்டு, வெளியே வந்தாள்.
தன் அறையில் மெத்தை மீது குப்புறப் படுத்துக் கொண்டு வார இதழ் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த நந்தினியை ஜன்னல் வழியாகப் பார்த்த