Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oreedam Nee Tharuvaai
Oreedam Nee Tharuvaai
Oreedam Nee Tharuvaai
Ebook83 pages48 minutes

Oreedam Nee Tharuvaai

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

R.Sumathi, an exceptional Tamil novelist, written over 100 novels, 250 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465827
Oreedam Nee Tharuvaai

Read more from R.Sumathi

Related to Oreedam Nee Tharuvaai

Related ebooks

Reviews for Oreedam Nee Tharuvaai

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oreedam Nee Tharuvaai - R.Sumathi

    16

    1

    வளர்மதி பூஜையறையில் ஏற்றிய தீபத்துடன் வாசலுக்கு வந்தாள். வாசலில் வலது பக்க மாடத்தில் வைத்தாள். சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த தீபச் சுடரையே இமைக்காமல் பார்த்தாள். ஒரு கணம் இமைகளை மூடி மனம் முழுவதும் அமைதியை நிரப்பிக் கொண்டாள். பிறகு விழி திறந்தாள்.

    மாடத்தினின்றும் அகன்று தெருப்படியில் இறங்கி நின்றாள்.

    அவளுடைய பார்வை தெருவை ஒருமுறை அலசியது தெரு அமைதியாக இருந்தது. எல்லா வீடுகளும் அமைதியாக இருந்தன. நெருக்கமில்லாத வீடுகள் கணிசமான இடைவெளி விட்டு கட்டப்பட்டிருந்தன.

    தெருப்படியில் நின்று பார்த்தால் தெருமுனை வரை தெரியும்.

    மணி ஆறாகப் போகிறது. நடராஜனையும் காணோம். மதுராவையும் காணோம்.

    இருவருமே ஐந்தரைக்கெல்லாம் வந்து விடுவார்கள். இன்றைக்கு ஆறாகியும் காணவில்லை.

    வளர்மதிக்கு போரடித்தது. காலையிலிருந்து மாலை வரை இந்த வீட்டில் தனியாக இருக்கிறாள்.

    நடராஜனும், மதுராவும் காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டை விட்டுப் போய் விடுவார்கள்.

    அவர்கள் சென்றபின் வீடு வெறிச்சென்றிருக்கும். வீட்டு வேலைகளை முடித்து விட்டு சற்று நேரம் தொலைக் காட்சியின் எதிரில் அமர்வாள். எவ்வளவு நேரம்தான் தொலைக்காட்சி பார்ப்பது? அக்கம் பக்கம் அவள் வயதுக்கு யாரும் இல்லை. எல்லோரும் வேலைக்கு செல்பவர்கள். அலுத்து சலித்து வரும் அவர்கள் அக்கம் பக்கத்தாருடன் உட்கார்ந்து அரட்டையடிப்பதை விரும்புவதில்லை.

    ஆனால் மதுரா நேர்மாறானவள்.

    அலுவலகத்திலிருந்து வந்ததும் அன்றைக்கு அலுவலகத்தில் வழியில் நடந்த சம்பவங்களையெல்லாம் அவளுக்கு பேசியாக வேண்டும்.

    கலகலப்பான பேர்வழி அவள். நடராஜன் அதற்கு எதிர்மாறானவன். அமைதியிலேயே உருவாக்கப்பட்டவனைப் போல் வளைய வருவான். மதுரா வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பாள். நடராஜனுக்கு அதையெல்லாம் கேட்க பொறுமை இல்லை. அதனால் மாமியார்தான் அவளுக்கு நெருங்கிய தோழி.

    வளர்மதிக்கும் மருமகளை பார்க்காவிட்டால் தலை வெடித்துவிடும். அவள் அலுவலகத்திலிருந்து வர ஐந்து நிமிடம் தாமதமானாலும் தவித்து விடுவாள். மருமகளை மகள் போல் பாவித்தாள். கோவில் குளம் என எங்கு சென்றாலும் மருமகளுடன்தான் செல்வாள். அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் மருமகளைப் பற்றி குறை சொல்ல மாட்டாள். பெருமையாகவே சொல்வாள்.

    உண்மையும் அதுதான்.

    மதுராவை, மனம் போலமைந்த மருமகள் என்றே சொல்ல வேண்டும். மாமியாரின் மேல் அவளுக்கு மிகுந்த மரியாதை. அளவு கடந்த பாசம்.

    காரணம்...

    மதுரா தாய் - தந்தையை இளம் வயதிலேயே இழந்தவள். பெரியப்பா வீட்டில் வளர்ந்தவள். பெரியப்பாவிற்கு மூன்றும் பெண்கள். மூவரும் மதுராவிற்கு இளையவர்கள்தான். மதுராதான் மூத்தவள். அவளை கரையேற்ற பெரியப்பா வரன் தேடியபோது பெரியம்மாவிற்கு மனதில் பெரிய பாரம் அழுத்தியது.

    இவளுக்கு திருமணம் செய்து வைத்தால் அந்த கடனை எப்படி அடைப்பது? தனக்கும் மூன்று பெண்கள் இருக்கிறார்களே என பொருளாதாரத்தை எண்ணி பொருமினாள். மதுராவை மனதளவில் வெறுத்தாள்.

    அவளுடைய வேதனையிலும் தவறில்லை. இன்றைய சூழ்நிலையில் பெற்ற மகளை கட்டிக் கொடுக்கவே அவரவர் திண்டாடும் காலத்தில் மற்றவர் மகளை மணம் செய்து கொடுப்பதென்பது எளிதான காரியமா?

    மதுராவிற்கு செலவு செய்வதை தண்டம் என்று நினைத்தாள்.

    அந்த சமயத்தில்தான் வளர்மதி தன் மகனுக்காக மதுராவைப் பெண் பார்க்க வந்தாள்.

    நடராஜன் படித்து வேலையில் இருந்தும் உலகத்து மாமியார்களைப் போல் வரதட்சணை, சீர் என அடுக்கிக் கொண்டு போகவில்லை.

    பெண்ணைப் பார்த்தாள். அவளது படிப்பும் அழகும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே மணம் பேசினாள்.

    உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று கூறிவிட்டாள்.

    மதுராவின் பெரியப்பாவிற்கும், பெரியம்மாவிற்கும் அளவில்லாத ஆனந்தம்.

    பெரியப்பாவின் ஆனந்தம், நல்ல இடம் வாய்த்ததே என்பது பெரியம்மாவின் ஆனந்தம் அதிக செலவு இல்லையே என்பது.

    திருமணத்தைக் கூட வளர்மதியே செய்தாள். திருமணம் ஆன பிறகும் கூட வளர்மதி மதுராவை ஊர் உலகத்து மாமியார் போல் அதிகாரம் செய்யவில்லை. அன்புடன் நடத்தினாள். இருவரும் தோழிகள் போல் இருந்தனர். பார்ப்பவர்களெல்லாம் பொறாமைப் பட்டனர். மதுரா மாமியாரின் மேல் உயிரையே வைத்திருந்தாள்.

    அதனால்தான் மதுராவை காணவில்லை என்றால் வளர்மதிக்கு தவிப்பு உண்டானது.

    தெருவையே பார்த்துக் கொண்டிருந்தாள் கவலையாக.

    தூரத்தே…

    நடராஜன் தன்னுடைய யமஹாவில் வருவது தெரிந்தது.

    நடராஜன் வருவதற்கு முன்பே எப்பொழுதும் வந்துவிடுவாள்

    Enjoying the preview?
    Page 1 of 1