Pesum Ullam Pesaatha Kankal
By R.Sumathi
4/5
()
About this ebook
Read more from R.Sumathi
Maaya Thottrangal Rating: 0 out of 5 stars0 ratingsSinnakkili Rating: 4 out of 5 stars4/5Uravillai Pirivillai Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Eppadi Solvenadi Rating: 4 out of 5 stars4/5Puthiraaga Oru Poo Rating: 5 out of 5 stars5/5Theeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsEn Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5Povomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Kannoram Minsaaram Rating: 0 out of 5 stars0 ratingsKaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsKathal Suvadukal Rating: 0 out of 5 stars0 ratingsInimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Paarvaikal Puthithaa Rating: 0 out of 5 stars0 ratingsMalare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Ilamaane Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Ennai Thodu Rating: 5 out of 5 stars5/5Ketkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsPaasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsMayakkathirkuriya Manthirame Rating: 5 out of 5 stars5/5Manoratham Rating: 4 out of 5 stars4/5Kunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsKannaalane Rating: 5 out of 5 stars5/5Niram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsOreedam Nee Tharuvaai Rating: 4 out of 5 stars4/5Nenjukku Nee Azhzgu Rating: 0 out of 5 stars0 ratingsMangala Isai Rating: 3 out of 5 stars3/5Kaaththiruppen Kanna Rating: 0 out of 5 stars0 ratingsKaiyarukil Poomaalai Rating: 4 out of 5 stars4/5
Related to Pesum Ullam Pesaatha Kankal
Related ebooks
Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsUllukkulle Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Pani Padarntha Paathaigal Rating: 5 out of 5 stars5/5Povomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Kadhal Sirakukal Rating: 0 out of 5 stars0 ratingsYugangal Marumpothu Rating: 0 out of 5 stars0 ratingsInaiyaana Ilamaane Rating: 4 out of 5 stars4/5Kannukkoru Vannakkili Rating: 5 out of 5 stars5/5Vizhigal Ezhuthiya Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsMattrumoru Maalai Neram Rating: 0 out of 5 stars0 ratingsPaasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsJayanthi Vandhal Rating: 0 out of 5 stars0 ratingsMalargalile Aval Malligai Rating: 0 out of 5 stars0 ratingsVilagatha Sirakugal Rating: 5 out of 5 stars5/5Paarvai Ondre Poothumey Rating: 0 out of 5 stars0 ratingsOndru Serntha Ullam Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Veralla Rating: 5 out of 5 stars5/5Nenjaththil Nee Rating: 0 out of 5 stars0 ratingsPogumidam Vegu Thooramillai Rating: 5 out of 5 stars5/5Poo Viluntha Saththam Rating: 4 out of 5 stars4/5Kodu Rating: 0 out of 5 stars0 ratingsAanandamadi Aanandhi! Rating: 0 out of 5 stars0 ratingsEn Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsKunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Varai Nanaigirathey! Rating: 0 out of 5 stars0 ratingsEllaam Penne Unnaale Rating: 5 out of 5 stars5/5Indru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsEnkengum Un Vannam Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Inba Irave Nee Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsNeeyindri Naanillai Rating: 5 out of 5 stars5/5
Reviews for Pesum Ullam Pesaatha Kankal
4 ratings0 reviews
Book preview
Pesum Ullam Pesaatha Kankal - R.Sumathi
24
1
வகுப்பு முடிந்ததற்கான மணி ஒலித்த போது மிதிலா பாடத்தை நிறுத்தி இடது கையை உயர்த்திப் பார்த்தாள். அவள் அப்படி கையை உயர்த்தி அபிநயமாகப் பார்த்த அந்த அழகை ரசிக்கும் மனநிலையில் இல்லை அந்த வகுப்பு மாணவிகள் மாணவர்கள். மின்சாரம் கிடைத்த விசிறியைப் போல் சுழன்றார்கள். பரபரவென புத்தகங்களை வாரிக் கொண்டனர்.
மாணவர்கள் கண்களை தாவணிப் பறவைகளின் மீது தவழவிட்டு தேடிய புத்தகங்களை நழுவ விட்டார்கள். கிசுகிசுப்பான ஒலிகள், பரபரப்பான பேச்சுக்கள். கொஞ்சம் சத்தமாய் சிரிப்பொலிகள்.
தாங்க்யூ மேடம்.
குட் ஈவினிங் மேடம்...
விட்டால் போதும் என்ற தொணியில் இந்த வாக்கியங்களை உதிர்த்து விட்டு ஓடினர்.
மிதிலா கண்ணிமைக்காமல் அந்த மாணவ - மாணவிகளையே பார்த்தாள்.
ஒரு மணிநேரமாய் தன்னையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டு தன் பாடத்தை காதில் வாங்கிக் கொண்டு சிலையாய் வீற்றிருந்த இவர்களுக்குள் எங்கிருந்து வந்தது இப்படி ஒரு சுறுசுறுப்பு.
கட்டை அறுத்துக்கொண்டு ஓடும் காளைகளைப் போல்…
அப்படியே இருக்கையில் அமர்ந்தாள்.
கையில் ஒட்டியிருந்த சுண்ணாம்புக் கட்டித்தூளை கவனியாதவளாய் கையை கன்னத்தில் வைத்துத் தாங்கிக் கொண்டாள்.
இந்த மணி சத்தத்திற்குத்தான் எத்தனை சத்தி இருக்கிறது? ஒரு விடுதலையின் நாதத்தைப் போல் அல்லவா இருக்கிறது.
இந்த மாணவர்கள் மட்டுமா? நானே எனது கல்லூரி நாட்களில் இந்த மணி சத்தம் காதில் ஒலிக்கும் நிமிடத்திற்காக எப்படிக் கிடப்பேன்?
மணி சத்தத்தைப் பற்றி நினைத்ததும் அவளுக்கு சிவாவின் ஞாபகம் வந்தது. அவனை எண்ணியதுமே மனம் ஒருவித பாசத்தால் சுழன்றது.
பள்ளி நாட்களில் இந்த மணி சத்தம் கேட்டதும் அவளும் சிவாவும் என்ன வேகத்தில் வகுப்பை விட்டு ஓடி வருவார்கள்? விழுந்தடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடி வருவார்கள்? முதலில் யார் வீட்டை சென்றடைவது என போட்டி. அதுவே பெரியவர்கள் ஆனதும் சைக்கிளில் பறப்பார்கள். பலமுறை அவனை ஜெயிக்க வேண்டும் என்ற வெறியில் சைக்கிளோடு விழுந்திருக்கிறாள். ஒரு முறை விழுந்ததில் வலது கை முறிந்து விட பாவம் சிவா தான் அவளுக்கு பாடங்களை எழுதிக் கொடுத்தான்...
சிவாவும் அவளும் அடித்த லூட்டிகள்தான் எத்தனை எத்தனை. கல்லூரிப் பருவத்தில் மட்டுமா சின்னஞ்சிறு வயதிலிருந்தே அவர்களின் குறும்புத்தனமான சேட்டைகள் எத்தனை எத்தனை?
கேலியும் கிண்டலுமாய் வளைய வரும் அந்த சிவா தான் இப்பொழுது எப்படியெல்லாம் மாறிவிட்டான்?
பணம் பணம் என எந்திரமாய் உழைக்கிறான். எதிர் வீட்டிலிருந்தாலும் அவனைப் பார்க்க முடியவில்லை. பேச முடியவில்லை. அவனைத் தேடிப் போனால் கூட அவன் இருப்பதில்லை.
அவனைப் பற்றி எண்ணியதும் அவன்மேல் இரக்கம் வழக்கம் போல் சுரந்தது.
பாவம். வாழ்க்கையில் மிகவும் அடிப்பட்டவன். இன்று உழைக்கின்றான். அளவுக்கு மீறி சம்பாதிக்கிறான்.
அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவன் பணக்காரனாகி விட்டான். எந்த நேரமும் பிஸினஸ் என அலைகிறான்.
கல்லூரி நாட்களில் அவனோடு அரட்டையடித்ததைப் போல் இன்றும் அரட்டையடிக்க ஆசைதான். ஆனால் அவனுக்கும் நேரம் இல்லை. இவளுக்கும் நேரம் இல்லை.
தன் ஆருயிர் தோழன் சிவாவை எண்ணியபடியே அவள் அமர்ந்திருக்க அவளின் நினைவைக் கலைப்பதைப் போல் அந்தக் குரல் ஒலித்தது.
மேடம்...
சட்டென பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டு நிமிர்ந்தாள். அவளின் சோர்வு நிரம்பிய விழிகளில் ப்யூன் பட்டான்.
என்ன?
என்றாள். பதிலுக்கு அவன் நீட்டிய நோட்டை வாங்கிப் பார்த்தாள்.
புதிதாக அந்தக் கல்லூரிக்கு வேலைக்கு வந்திருக்கும் லெக்சரர் ஒருவருக்கு இன்று மாலை வரவேற்பு விழா என்றும், அனைத்து பேராசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கல்லூரியின் முதல்வர் தட்டச்சு செய்த வாக்கியங்களின் கீழ் கையெழுத்திட்டு கூறியிருந்தார்.
புதிதாக வந்திருந்த அந்தப் பேராசிரியரின் பெயரை பார்க்க மறுபடியும் அதைப் படித்தாள். ‘மதியழகன்’ என்றிருந்தது.
மெல்ல தன் உதடுகளைப் பிரித்து சொல்லிப் பார்த்தாள். ‘மதியழகன்’ நல்ல பெயர்? கையெழுத்திட்டு ப்யூனிடம் கொடுத்தாள். அவன் சென்றதும் இருக்கையை விட்டு எழுந்தாள். கைப்பையை எடுத்துக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியே வந்தாள்.
காத்திருந்த காதலனைப் போல் காற்று சேலையைத் தீண்டியது.
மாணவ - மாணவிகள் கலைந்து சென்று கொண்டிருந்தனர்.
அவளின் பாதங்கள் எதிர் கட்டிடத்திலிருந்த அறையை நோக்கி சென்றது. உள்ளே நுழைந்த போது இருக்கைகளில் அந்தக் கல்லூரியின் பேராசிரியைகள் அமர்ந்திருந்தனர்.
அனைவரும் முப்பது வயதிற்கும் மேற்பட்டவர்கள். மடிப்பு விழுந்த இடுப்பும், சதைப் போட்ட தோளும், லேசாய் தொங்கிய கன்னத்து சதையும் முதுமையின் படியில் அவர்கள் காலடி எடுத்து வைத்து விட்டதைப் பறைசாற்றியது. ஒருசில பெண்மணிகள் நரையை முதுமையின் போனஸாய் பெற்று விட்டு வருத்தப்பட்டனர்.
அந்த முதுமை சூழலில் மிதிலா உள்ளே நுழைந்ததும் மிகவும் இளமையாகத் தெரிந்தாள். மாலை நேரச் சோர்விலும் அவளின் முகம் அழகாக இருந்தது. சின்ன செவ்விதழ்களை பிரித்து குட் ஈவினிங்...
என்றாள் பொதுவாக.
மிதிலா காலியாய் இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தாள். கைப் பையிலிருந்து கைக் குட்டையை எடுத்து முகத்தை அழுத்தி துடைத்தாள்.
அறிவுக்களை சுடர்விடும் நெற்றியை உடைய அத்தனை அரிவையரும் அந்த ஓய்வு நேரத்திலும் ஒவ்வொரு வேலையில் ஈடுபட்டிருந்தனர். நாற்பது வயதை தொட்டுக் கொண்டிருந்த ஒருத்தி தன் சோடாபுட்டி கண்ணாடி வழியே வினாக்களை தேடிப் பொறுக்கிக் கொண்டிருந்தாள் தேர்விற்காக.
நெடுநெடுவென உயரமாய் நீண்ட கூந்தலைக் கொண்ட மாது ஒருத்தி பாலகுமாரனின் ‘சிநேகமுள்ள சிங்கத்துடன்’ சிநேகமாயிருந்தாள்.
சற்று எடுப்பான உடலமைப்புக் கொண்ட இன்னொருத்தி இடது கையில் உள்ளங்கையளவு கண்ணாடியை பதித்துக் கொண்டவளாய் முகத்தில் பவுடர் ஒற்றினாள்.
மிதிலாவும் தன் கைப்பையிலிருந்து உள்ளங்கையளவு கண்ணாடியை எடுத்து தன் அழகான முகத்தைப் பார்த்தாள். ஒட்டுப் பொட்டை ஒற்றை விரல் கொண்டு அழுத்தினாள். அவளின் விழிகள் இமைக்காமல் கண்ணாடியையே பார்த்தது. வளைந்த புருவத்திற்கு கீழே காலையில் வைத்த மையை தொலைத்து விட்டு தேடிய விழிகள், கண்டுபிடித்து தருவதைப் போல் பாவனைப் புரிந்து கொண்டு துடிக்கும் இமைகள். மூக்கு சரிவில் பூத்த ஒற்றை குறிஞ்சி மலராய் மூக்குத்தி. ஒளி அடங்கத் தொடங்கிய மாலையில் கூட ஒளிர்ந்தது. தவறி விழுந்த இரு ரோஜா இதழ்களாய் உதடுகள். கழுத்தை சுற்றிப் பார்த்து விட்ட மார்பில் விழுந்து மயங்கிய முத்து மாலை.
இப்படி கண்ணாடிப் பார்க்கும்போது மட்டுமே ஞாபகம் வரும் தன் முகம்...
மற்ற நேரங்களில் புத்தகமும்... பேனாவும் சாக்பீஸும்.
எத்தனை நாளைக்குத் தான் நீயே உன் அழகான முகத்தை ரசிச்சுக்கிட்டிருக்கப் போறே? எப்ப ஒருத்தனுக்கு சான்ஸ் தரப் போறே...?
திடுக்கென இந்தக் குரலில் அதிர்ந்த மிதிலா சட்டென கண்ணாடியிலிருந்து முகத்தை எடுத்தாள். குரலுக்கு உரிய உருவைப் பார்த்தாள். அது - வினாக்களை தடித்தப் புத்தகத்திலிருந்து பொறுக்கிக் கொண்டிருந்த அந்த நாற்பது வயது நரைத்த நங்கை தான் இந்த வார்த்தைகளையும் பொறுக்கி எடுத்து எறிந்தவள்.
மிதிலா பதிலுக்கு பேசத் தெரியாமல் லேசாய் புன்னகைத்தாள்.
அந்த நரைத்த நங்கை கண்ணாடி வழியே தன் பெரிய விழிகளால் அவளைப் பார்த்து தடித்த உதடுகளால் சிரித்தாள்.
சிநேகமுள்ள சிங்கத்தில் ஆழ்ந்திருந்தவள் சட்டென அதை விரோதித்துக் கொண்டவள் போல் புத்தகத்தை மூடி வைத்து விட்டு குறும்பாய் குதர்க்கமாய் ஆரம்பித்தாள்.
சான்ஸ் கொடுக்காம என்ன? அதான் பர்மனன்ட்டா சிவாவுக்கு கொடுத்திருக்காளே...
விழிகளை அனைவரின் மீதும் சுற்றியபடியே அவள் இப்படி சொன்னதும் கொதித்த எண்ணெயை நெஞ்சில் கொட்டியதைப் போல் துடித்தாள் மிதிலா. துடிக்கும் நாக்கை கடித்துக் கொண்டாள். ஆனால் பேசியவள் மறுபடியும் நொடித்துப் பேசினாள் தடித்த வார்த்தைகளால்.
எத்தனை நாளுக்குத்தான் முகத்தை மட்டும் ரசிப்பான். மத்ததையும் ரசிக்க எப்ப அவனை அனுமதிக்கப் போறே...
மிஸஸ். கல்யாணி போதும் நிறுத்துங்க. படிக்கிற புத்தகத்துக்கு தகுந்த மாதிரி பேசுங்க.
கோபம் கொப்பளிக்க மிதிலா கத்த அந்த நரைத்த நங்கை நகைத்தாள்.
அவள் சொன்னதுல என்னடி தப்பு? உனக்கும் இருபத்தெட்டு வயசாயிட்டு. சிவாவை எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறே?
மேடம் நீங்களும் இப்படி பேசறீங்களே. உங்களுக்கே தெரியும். சிவா என்னோட நண்பன்.
இதத்தான் இந்த காலேஜ்க்கு வேலைக்கு வந்ததிலேர்ந்து சொல்லிக்கிட்டிருக்கே. நாங்களும் நம்பிக்கிட்டிருக்கோம். கடைசி வரை சிவாவும் நீயும் நண்பர்கள்னு எப்படி நம்பறது?
ஏன் நம்பக் கூடாது.
உனக்கு கல்யாணம் ஆகலியே.
கல்யாணம் ஆகாதது என் தலையெழுத்து. அதுக்காக சிவாவுக்கு எனக்கும் உள்ள நட்பை தயவுப் பண்ணிக் கொச்சைப் படுத்தாதீங்க.
கண்ணீர் கொப்பளிக்க சட்டென தன் கைப்பையை எடுத்துத் தன் தோளில் மாட்டிக் கொண்டு விறுவிறுவென அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.
பின்னால் சிரிப்பொலி கலவையாகக் கேட்டது. அவமானத்தால் அவளின் மனம் சிறுத்தது.
2
இந்த உலகில் விதி தரும் துன்பங்களை விட பிறரின் குத்தல் பேச்சு தரும் துன்பம் மிகவும் கொடுமையானது. விதி தரும் துன்பம் கழுத்தை