Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sinnakkili
Sinnakkili
Sinnakkili
Ebook79 pages27 minutes

Sinnakkili

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

R.Sumathi, an exceptional Tamil novelist, written over 100 novels, 250 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465834
Sinnakkili

Read more from R.Sumathi

Related to Sinnakkili

Related ebooks

Reviews for Sinnakkili

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sinnakkili - R.Sumathi

    15

    1

    திலகவதி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இப்படி நடக்கும் என்று.

    மிகவும் மோசமான அடர்ந்த மரங்கள் அடங்கிய மனித நடமாட்டம் அற்ற அந்த சாலையில் தன்னுடைய கார் காலை வாரி விடும் என்று நினைக்கவில்லை.

    பகலாக இருந்தால் கூடப் பரவாயில்லை. இரவு. யாரோ ஒரு ஓவியன் கைதவறி கருப்பு வண்ணத்தைக் கொட்டியதைப் போல் இருள் அவளுடைய காரை கட்டிப்பிடித்துக் கொண்டது. தூரத்தே ஒரு விளக்குக் கம்பம் எரிந்து கொண்டிருந்தது.

    கையைத் திருப்பிக் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி இரவு பத்து. காருக்குள் சிதறியிருந்த ஒளிவெள்ளத்தில் அழகு வெள்ளமாய் அமர்ந்திருந்த அவளை இப்பொழுதே வர்ணித்தால்தான் உண்டு. இன்னும் சில மணித்துளிகளில் அவள் ஒரு ஆபத்தில் சிக்கிக் கொள்ளப் போகிறாள். அப்பொழுது அவளழகை வர்ணிக்க முடியாது.

    இருக்கையில் அமர்ந்திருக்கும் அந்த இளமயிலுக்கு இருபது அல்லது இருபத்தியோரு வயதுதான் இருக்கும். இளமை இஷ்டத்திற்கு செழித்திருந்தது. அடர்ந்த கூந்தலை அழகாக வெட்டி தோளில் புரளவிட்டிருந்தாள். நேர்த்தியாக வெட்டப்பட்ட முன்னுச்சி முடிகள் புருவத்தை அடிக்கடி நலம் விசாரித்தன. விரல்கள் வில்லனாய் மாறி விரைவில் விரட்டின.

    குற்றால அருவியின் குளிர்ச்சியைச் சுமந்த விழிகளில் தற்சமயம் குழப்பம் குழுமியிருந்தது. கூடவே விசன ரேகைகள் விழியில் விளைந்திருந்தது. வாலிப உள்ளத்தை வசப்படுத்தும் வாகான மூக்கு, சிரிக்காமல் கூட சிந்தையை அள்ளும் சின்ன இதழ்கள் சிரித்தால் மனம் மயங்கும். சிரிக்கும் நிலையில் அவள் இல்லை. எதிராளியைத் திணற வைக்கும் இளமை கவர்ச்சியாய் கவ்விப்பிடித்த சட்டையுடன் இருந்தது. ஆரஞ்சு வண்ணப் புடவை, மாலை நேர மேகமூட்டத்தைப் போல் இருந்தது. வழவழப்பான வளைந்த இடை உட்கார்ந்திருப்பதால் மடிப்புகளை உருவாக்கியிருந்தது.

    ‘ச்சை... இது என்ன கஷ்ட காலம். இப்படி நடுவழியில் உயிரை வாங்குதே. என்னைக்குமே இப்படி நடந்ததில்லையே. ஏற்கனவே தாமதம், அண்ணன் வேற நல்லாத் திட்டப் போகுது. எல்லாம் பிரபுவால வந்தது.’

    மனதிற்குள் நொந்து கொண்டவளாய் காரைவிட்டு வெளியே வந்தாள். கீழே இறங்கியதும் ஒரு கணம் சுற்றும் முற்றும் பார்த்தவள் நெஞ்சில் முதன்முறையாய் அதிர்ச்சியை மெதுவாய் வாங்கினாள். சுற்றிலும் இருள். காரின் முன்பக்க விளக்கொளியினாலும் தூரத்து விளக்கினாலும் சாலை தெரிந்தது. வலது பக்கம் நெல்விளையும் வயல். பம்ப் செட்டிலிருந்து தண்ணீர் இறையும் ஓசை அந்த அமைதியான சூழ்நிலையில் ஒரு பயத்தை பக்க விளைவாய் உண்டு பண்ணியது. இடதுபுறம் திரும்பினாள். இன்னும் அதிர்ந்தாள். பெரிய சவுக்குத் தோப்பு. உயர உயரமான அடர்ந்த மரங்கள் கிராமியத் தோற்றம் கொண்ட அந்தப் பகுதி கிலியை உண்டாக்கியது. சட்டென வியர்த்தது. உடனே இந்த இடத்தை விட்டுப் போய்விட வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேகமாக காரின் முன் பக்கம் வந்தாள். பானெட்டைத் திறந்தாள் அவசர அவசரமாக ஏதேதோ செய்தாள். பின் மூடினாள். உள்ளே வந்து அமர்ந்து இயக்கினாள். சத்தம்தான் வந்தததே தவிர கார் கிளம்பவில்லை.

    ‘ச்சை... இப்படி ஆகிவிட்டதே எல்லாம் பிரபுவால வந்தது’ அவன் மேல் கோபம் வந்தது. ஆனால் மனதில் அவன் முகம் வந்து நின்றதும் அந்தக் கோபமும் மறைந்து போனது. அந்த சூழ்நிலையும் மறந்து போனது.

    பிரபு அவளின் காதலன். அவளுடைய அண்ணன் சிவஜோதிக்கு நண்பன். வியாபாரத்தில் இருவரும் பங்குதாரர்கள். அண்ணனின் நண்பனாய் வந்தவன் அவளுக்கும் நண்பனாகி இறுதியில் காதலனாய் மாறிவிட்டான். அதிலும் இந்த ஆறு மாதமாய் அவளும் அவனும் மிகவும் நெருக்கமாகி விட்டார்கள். அவனைக் காணாமல் அவளால் ஒரு நாளைக்குக் கூட இருக்க முடிவதில்லை. இப்பொழுது கூட அவனை அவன் வீட்டில் சென்று பார்த்துவிட்டு வருகிறாள். இன்று ஞாயிற்றுக் கிழமை அதனால் கம்பெனி விடுமுறை. அவன் வீட்டில் இருப்பான் என்று கிளம்பினாள். அவனோடு பேசிக் கொண்டும், அரட்டையடித்துக் கொண்டும், சின்னச் சின்ன காதல் விளையாட்டுக்கள் விளையாடிக் கொண்டும் இருந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை.

    பயத்தை தரும் அந்த சூழ்நிலையிலேயும் காதலனை பண்ணியபோது அவளுக்குள் ஒரு புது கிளர்ச்சி உருவானது.

    ‘அண்ணனிடம் காதலை கூடிய சீக்கிரத்தில் வெளிப்படுத்திவிட வேண்டும். அண்ணன் என்ன சொல்லுவான்? கண்டிப்பாய் மறுக்க மாட்டான். காரணம் பிரபு அவனுடைய நண்பன்.

    Enjoying the preview?
    Page 1 of 1