Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yenazhuthaai Ennuyire
Yenazhuthaai Ennuyire
Yenazhuthaai Ennuyire
Ebook97 pages45 minutes

Yenazhuthaai Ennuyire

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

R.Sumathi, an exceptional Tamil novelist, written over 100 novels, 250 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465841
Yenazhuthaai Ennuyire

Read more from R.Sumathi

Related to Yenazhuthaai Ennuyire

Related ebooks

Reviews for Yenazhuthaai Ennuyire

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yenazhuthaai Ennuyire - R.Sumathi

    11

    1

    காலையில் எழுந்ததுமே மனைவி சிவகாமியின் கலங்கிய கண்களைத்தான் முதலில் சந்தித்தார் பசுபதி.

    சிவகாமி... என்னது பொழுது விடிஞ்சதும் அதுவுமா கண்கலங்கிக் கிட்டு... ராத்திரியெல்லாம் கூட நீ தூங்காத மாதிரி இருக்கு. முகமெல்லாம் அழுது வீங்கின மாதிரி இருக்கு?

    அவள் பதிலேதும் கூறவில்லை. கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டேயிருந்தது.

    அசடு. இன்னைக்கு நான் பதவிலேர்ந்துதான் ஓய்வு பெறப்போறேன். வாழ்க்கையிலேர்ந்து இல்லை. ரிடையர்டு ஆயிட்டா அதுக்கப்பறம் வாழ்க்கையே இல்லையா? சுந்தர் வேலைக்குப் போறான். கை நிறைய சம்பாதிக்கிறான். பணத்துக்குப் பிரச்சனையா? என்னைமோ இப்படி அழுறே? இப்ப கைக்கு கிடைக்கிற பணமே நம்ம வாழ் நாள் முழுமைக்கும் போதும். தோள்களைக் குலுக்கி சிரித்தார் பசுபதி.

    சிவகாமியின் முகத்தில் மட்டும் ஏனோ மகிழ்ச்சி இல்லை. ஆழ்ந்த சோகம் படர்ந்திருந்தது.

    டேய்... சுந்தர், என்ன பண்றே? இங்கே வா... என்ற அவரின் உரத்த குரலுக்கு உடனே வந்து நின்றான் சுந்தர், அரைகுறையாய் செய்த ஷேவிங் முகத்துடன். என்னப்பா...?

    இதென்னடா கோலம்? அவனுடைய தாடையைப் பார்த்து சிரித்தார். பிறகு,

    சுந்தர். உங்கம்மாவைப் பாரு. இன்னைக்கு நான் ரிடையர்டு ஆகப் போறேன்னு அழறா, என்கிறார்.

    ஏம்மா... இதுக்குப் போய் அழறீங்க? இனிமே பென்ஷன் மட்டும் தான் வரும்னா? அதான் கைநிறைய சம்பாதிக்கிறேனே... அப்புறம் என்னம்மா?

    நீ கை நிறைய சம்பாதிச்சா என்ன? நாளைக்கே உனக்கு கல்யாணம் ஆகிட்டா உன் சம்பாத்யத்தை உன் பொண்டாட்டிகிட்டே தான் கொடுப்பே. அதை நினைச்சுத்தான் இவ அழுவறா... என்ன சிவகாமி.

    அப்பொழுதும் சிவகாமி சிரிக்கவில்லை.

    சிவகாமி... சாயந்தரம் நம்ம வீட்ல என் ஆபீஸ் ஸ்டாஃப்ஸ் அத்தனைபேருக்கும் சின்னதா ஒரு பார்ட்டி கொடுக்கலாம்னு இருக்கேன். அதுக்கு வேண்டிய ஏற் பாட்டையெல்லாம் செய்துடு. எதையும் நீ இழுத்துப் போட்டுக்கிட்டு செய்ய வேண்டாம். சுந்தர், நீ இன்னைக்கு ஆபிஸ்லேர்ந்து சீக்கிரம் வந்துடு. ஒரு முப்பது பேருக்கு ஹோட்டல்ல டிபன் சொல்லிடு.

    சரிப்பா...

    அப்புறம்... உன்னோட ஃப்ரண்ட்ஸீங்க யாரையாவது கூப்பிடணும்னு நினைச்சா கூப்பிடு. வரட்டும்.

    எல்லாரையும் கூப்பிட முடியாதுப்பா... ஒரு ஃப்ரண்டை மட்டும் கூப்பிடப்போறேன்.

    யார் அது?

    சாயந்தரம் அறிமுகப்படுத்தறேன் சொல்லிவிட்டு உள்ளே ஓடினான்.

    சிவகாமி... என்ன இவன்... யாரோ ஒரே ஒரு ஃப்ரண்டை மட்டும் கூப்பிடப்போறேங்கறான். எனக் கென்னமோ டவுட்டா இருக்கு! ஃப்ரண்ட் ஆணா பொண்ணா?

    அதற்கும் முகத்தில் எந்த மலர்ச்சியையும் காட்டாமல் இறுகிய முகத்துடனேயே இருந்தாள் சிவகாமி.

    இதப்பார்... சாயந்தரம் நான் ரிடையர்டு ஆகி வீட்டுக்கு மாலையும் கழுத்துமா அமர்க்களமான என் ஆபீஸ் ஸ்டாப்புங்களோடு வரும்போது நீ இப்படி அழுதுகிட்டு நிக்காதே. அழகா பட்டுப்புடவை கட்டுக்கிட்டு தலை நிறைய பூ வச்சுக்கிட்டு கல்யாணப் பொண்ணு மாதிரி ஆரத்தி தட்டோட வாசல்ல நிக்கணும். புரியுதா? சரி, நான் ஆபீஸ் கிளம்பறேன். சாப்பாடு எடுத்து வை.

    சிவகாமி காலை உணவை மேசை மீது பரப்பத் தொடங்கினாள்.

    சுந்தர், அலுவலகத்திற்குள் நுழைந்து தன் இருப்பிடத்திற்கு வந்து இருக்கையில் அமர்ந்ததும் முதல் வேலையாக தன் செல்லை எடுத்து உயிர்ப்பித்தான். மனக் கண்ணில் வானதி வந்து நின்றாள்.

    அவளுடைய எண்ணிற்கு அழைத்ததில் ‘ஹலோ’ என்ற வானதியின் குரல் அவனுள் புத்துணர்வைப் பாய்ச்சியது.

    ஹலோ... என்ன பண்றே?

    ஆபீஸில இருக்கேன். காலையில காட்டியும் எதுக்குப் பேசறீங்க? வேலை செய்யற மூடி போய்டுது.

    அப்ப வேற என்ன மூடுன்னு சொல்லு

    அசிங்கமா பேசினீங்க அடி கிடைக்கும். எதுக்கு கூப்பிட்டிங்க? சீக்கிரம் சொல்லுங்க

    நீ சாயந்தரம் ஆபீஸ் முடிஞ்சதும் கையோட பேக்ல எப்பவும் வச்சிருப்பியே... பவுடர், லிப்ஸ்டிக் இதையெல்லாம் ஆபீஸ்லேயே போட்டுக்கிட்டு பார்க்க அப்படியே தேவதை மாதிரி கிளம்பறே?

    எங்கே?

    என் வீட்டுக்கு வர்றே?

    எதுக்கு?

    இன்னைக்கு எங்க வீட்ல ஒருஃபங்ஷன். அதுக்குத் தான் உன்னைக் கூப்பிடறேன்.

    ஃபாங்ஷனா? என்ன... உன்னை மாப்பிள்ளை பார்க்க யாராவது வராங்களா?

    அப்படி வந்தா உன்னை அதுக்கெல்லாம் கூப்பிடுவேனா? நீ வந்து என் மேல வச்சிருக்கிற காதலை சொல்லி அழுது அவங்களை விரட்டிடமாட்டே?

    ஏன் நீ இல்லாட்டி எனக்கு வாழ்க்கையே இல்லையா? அப்படியெல்லாம் அழுது உன்கிட்ட வாழ்க்கை கொடுன்னு கெஞ்சமாட்டேன் தெரிஞ்சுக்க...

    சிரி. அதை என்னை மாப்பிள்ளை பார்க்க வரும்போது பார்த்துக்கலாம். எங்க அப்பா இன்னைக்கு ரிடையர்டு ஆகிறார்.

    அவர் வேலை பார்த்த ஆபீஸ் இனிமே உருப்படும்னு சொல்லு.

    அடி வாங்கப்போறே! நேர்ல வந்து இப்படி எதை யாவது பேசி வைக்காதே. நம்ம காதலைச் சொல்ல இது ஒரு சந்தர்ப்பம். வீட்ல அப்பாவோட ஆபீஸ் நண்பர்களுக்கெல்லாம் பார்ட்டி தர்றோம். என்னோட ஃபிரண்ட் ஸீங்களையும் அப்பா கூப்பிடச் சொன்னார். நான் உன்னை மட்டும்தான் கூப்பிடறேன்.

    நான் வரலை

    ஏன்?

    வெறும் கிழங்களா வரப்போற ஃபங்ஷனுக்கு நான் வரணுமா? என்னோட அழுகும் இமேஜிம் என்னாகறது?

    "கிழங்களை அவ்வளவு ஈஸியா எடைபோட்டுடாதே! வந்து பாரு எப்படி ஜொள்ளு விடுதுங்கன்னு. வரும் போது வெறும் கையோட வராதே!

    "வருங்கால மாமனாருக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கிட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1