Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manmatha Jaadai
Manmatha Jaadai
Manmatha Jaadai
Ebook95 pages34 minutes

Manmatha Jaadai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465841
Manmatha Jaadai

Read more from Devibala

Related to Manmatha Jaadai

Related ebooks

Reviews for Manmatha Jaadai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manmatha Jaadai - Devibala

    13

    1

    ரோகிணியை அவர்களுக்குப் பிடித்து விட்டது. பார்த்ததும் அதை வாய்விட்டே சொல்லி விட்டார்கள்.

    உங்களுக்கும் மனசுக்கு திருப்தினா, இன்னிக்கே நாள் நல்லா இருக்கு. தாம்பூலத்தை மாத்திடலாமா? பிள்ளையின் அம்மா கேட்டாள்.

    இவர்களிடம் ஒரு தயக்கம் இருந்தது.

    எதுவானாலும் சொல்லுங்க.

    எங்க மூத்த பொண்ணு ராதிகா வெளிநாட்ல இருக்கா. எங்க குடும்பத்தை நடத்தறவளே அவதான்! அவகிட்ட அனுமதி கேக்காம நாங்க எதையும் செய்ய மாட்டோம்.

    போன்ல இப்பப் பேச முடியுமா?

    முயற்சி செய்யறோம்.

    ரோகிணி உடனே போன் செய்தாள். சட்டென இணைப்பு கிடைத்து விட, யாரிடமோ அந்தப் பெயரைச் சொல்லி, கொஞ்சம் காத்திருந்து, ராதிகா ‘ஹலோ’ என்க, அப்பாவிடம் தந்தாள் ரோகிணி!

    நான் அப்பா பேசறேன்மா! ரோகிணியைப் பெண் பார்க்க வந்திருக்காங்க. பரஸ்பரம் ரெண்டு பேருக்கும் புடிச்சுப் போச்சு. தாம்பூலம் மாத்திக்கலாமானு கேக்கறாங்க.

    என்னப்பா எதிர் பார்க்கறாங்க?

    உங்களால முடிஞ்சதைச் செய்ங்கணு சொல்றாங்க. ரொம்ப நல்ல மனுஷங்க. குடும்ப கௌரவத்தை மட்டுமே பெரிசா நினைக்கறவங்க.

    சரிப்பா! ரோகிணிக்குப் புடிச்சிருந்தா உடனே தாம்பூலம் மாத்திடுங்க.

    தேதி எப்பம்மா குறிக்கறது?

    சீக்கிரமே குறிச்சிடுங்கப்பா!

    நீ வர முடியாதாம்மா?

    அப்பா! என் சூழ்நிலை இங்கே எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது. நல்லது சீக்கிரம் நடக்கணும். நடத்திடுங்க.

    அம்மா, ரோகிணி இருவரிடமும் பேசினாள்.

    போனை வைத்து விட்டு வந்தார்கள்.

    சரிங்க! எங்க மகள் பச்சைக் கொடி காட்டிட்டா. இப்ப நல்ல நேரம். தாம்பூலத்தை மாத்திடலாம்.

    அனைவருக்கும் உற்சாகம்.

    பத்தே நிமிடங்களில் லக்னப் பத்திரிகை எழுதப்பட்டு, படிக்கப்பட்டது. தாம்பூலம் மாற்றப்பட்டது. பஞ்சாங்கம் வைத்துக் கொண்டு முகூர்த்தத் தேதிகளைக் கணக்கிட்டார்கள்.

    அடுத்த மாதமே மூன்று தேதிகள் கிடைத்தன.

    ஒன்றைக் குறித்து விட்டார்கள்.

    தாம்பூலம் மாத்தியாச்சு. சாப்டுட்டுத்தான் போகணும்.

    அப்பா சொல்லிவிட அவர்கள் தலையாட்டினார்கள்.

    உங்க மூத்த மகள் எப்ப வெளிநாடு போனாங்க? பிள்ளையின் அம்மா கேட்டாள்.

    அவ வெளிநாட்டுக்குப் போய் நாலஞ்சு வருஷம் ஆச்சு.

    பெரிய படிப்போ?

    இல்லீங்க! சாதாரண பட்டதாரிதான். கம்ப்யூட்டர் படிச்சிருக்கா. இங்கே ஒரு கம்பெனில வேலை பார்த்துக்கிட்டிருந்தா. இவ திறமையைப் பார்த்து ஒரு வெளிநாட்டு வாய்ப்பு தேடி வந்தது. உடனே புடிச்சுகிட்டா.

    அவ கல்யாணம்?

    நாங்க சொல்லிக்கிட்டே இருக்கோம். இதுவரைக்கும் அவ பிடி கொடுக்கலை. அடுத்த தங்கச்சிதான் ரோகிணி. மூணாவதுரேணுகா, கடைசி வருஷம் பி.காம். படிக்கறா. எல்லாத்துக்கும் கடைசி 12வது படிக்கற எங்க பையன் பரணி. ‘எல்லாரையும் ஆளாக்கின பிறகு என் வாழ்க்கை பற்றி யோசிக்கலாம்’னு சொல்லிட்டா.

    அப்பா கண்கலங்கி விட்டார்.

    மாப்பிள்ளை மதன் ஆச்சர்யப்பட்டான்.

    அவன் பொறியியல் பட்டதாரி. இங்கே ஒரு நல்ல தனியார் நிறுவனத்தில் மாதம் ஐம்பதாயிரம் வரை சம்பாதிப்பவன். இருமுறை வெளிநாட்டுக்குப் போய் வந்தவன்.

    உங்க மகளோட விலாசம் குடுங்க. அடுத்த முறை அமெரிக்கா போகும் போது நான் அவங்களை சந்திக்கறேன்.

    விலாசம் எங்களுக்கே தெரியாது. வாரம் ஒரு முறை போன்ல பேசுவோம்.

    விருந்து சமையல் அடுத்த ஒரு மணி நேரத்தில் தயாராக, எல்லாரும் சாப்பிட்டார்கள்.

    புறப்பட்டு விட்டார்கள்.

    ரோகிணியிடம் வந்தான் மதன்.

    நாளைக்கு நான் வந்து உன்னைப் பிக்கப் பண்ணிக்கறேன். வெளில போகலாம்.

    ரோகிணி, தன் அம்மாவைப் பார்த்தாள்.

    மாப்ளை கூப்பிடும் போது நீதான் பதில் சொல்லணும். என்னைப் பார்த்தா?

    மதன் அம்மா அருகில் வர,

    ரொம்பக் கூச்சப்படுவா. கல்லூரியில் படிக்கற காலத்துலேயே ரொம்ப பயப்படுவா. மூடி மூடி வளர்த்தாச்சு.

    நல்லதுங்க! பெண் குழந்தைங்க அடக்கமா அப்படித்தான் இருக்கணும். மதன்கூட நீ தாராளமா வெளில போகலாம் ரோகிணி. அதுல தப்பே இல்லை.

    ரோகிணி வெட்கத்துடன் தலையாட்டினாள். புறப்பட்டு போனார்கள்.

    வாசல் வரை சென்று வழியனுப்பி விட்டு உள்ளே வந்தார்கள்.

    ஒரு மாசத்துல கல்யாணத்தை நடத்த முடியுமா?

    ஏன் முடியாது? ராதிகா சம்பாதிச்சு அனுப்பின பணத்தைத்தான் நிறைய சேர்த்து வச்சிருக்கோமே! நகைகள் வாங்கியாச்சு. பாத்திர பண்டங்கள் இருக்கு. துணிமணிகள் வாங்கணும். கல்யாண மண்டபம் பதிவு பண்ணணும். தவிர, சாப்பாட்டுச் செலவு.

    அம்மாவும், அப்பாவும் பட்ஜெட் போடத் தொடங்கி விட்டார்கள்.

    இதப்பாரு பார்வதி. முழுசா பட்ஜெட்டைப் போட்டுட்டு, நம்ம கையிருப்பு என்ன, பற்றாக்குறை எத்தனைனு ஒட்டு மொத்தமா கணக்குப் போட்டு ராதிகாவுக்கு... பேக்ஸ் பண்ணிடலாம்.

    ரோகிணி அருகில் வந்தாள்.

    அம்மா! அக்காவை ரொம்பக் கசக்கிப் பிழியக் கூடாது. பாவம் அக்கா.

    அப்பாவுக்குக் கோபம் வந்து விட்டது.

    யாருடி கசக்கறது? என்ன செலவானாலும் நடத்துங்கனு அவ பச்சக்கொடி காட்டிட்டாளே!

    "சரி! அந்தப் பணத்தைத் திரட்ட அவ என்ன பாடுபடறாளோ? ஒருத்திதானே இந்தக் குடும்பப் பாரத்தைத்

    Enjoying the preview?
    Page 1 of 1