Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mannil Iranguthu Aakaayam
Mannil Iranguthu Aakaayam
Mannil Iranguthu Aakaayam
Ebook98 pages43 minutes

Mannil Iranguthu Aakaayam

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465841
Mannil Iranguthu Aakaayam

Read more from Devibala

Related to Mannil Iranguthu Aakaayam

Related ebooks

Reviews for Mannil Iranguthu Aakaayam

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mannil Iranguthu Aakaayam - Devibala

    18

    1

    "எங்களுக்கு உங்க பொண்ணை புடிச்சிருக்கு!"

    அம்மா சொல்ல, ரேவதியின் அப்பா முகம் மலர்ந்தது!

    ஆனா நான் உங்க பொண்ணுகிட்ட தனியா கொஞ்சம் பேசணும்!

    தாராளமா பேசுங்கம்மா! உங்களுக்கு இல்லாத உரிமையா? அவ உங்க மருமகள் ஆகப் போறவ!

    அம்மா எழுந்தாள்.

    பிரகாஷ் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தான்.

    ரேவதி எழுந்து அம்மாவை பின்பற்றினாள். உள்ளே வந்தார்கள்.

    ரேவதி! எனக்கு எதையும் மனசுல வச்சுகிட்டு பேசத் தெரியாது! நான் உடைச்சு சொல்லிடுவேன்!

    அது நல்லதுதானே?

    பிரகாஷுக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் கிடையாது! நான் சொல்றது அவனுக்கு வேதம்! பிரகாஷோட அப்பா உயிரைவிடும்போது அவனுக்கு 12 வயசு! அவனோட ரெண்டு தங்கச்சிகளுக்கு ஏழு வயசும், அஞ்சு வயசும்! எங்க குடும்பம் தெருவுல நின்னுது! நான்தான் சமையல்வேலை, பத்துப் பாத்திரம் தேய்க்கிறதுன்னு வேலைகள் செஞ்சு புள்ளைங்களை வளர்த்தேன்!

    ......!

    பிரகாஷை காலேஜ்லவிட்டு படிக்க வைக்க முடியலை! பதினெட்டு வயசுல ஒரு பேக்டரில வெல்டரா சேர்ந்தான். இந்த எட்டு வருஷத்துல சூபர்வைஸரா பதவி உயர்வு கிடைச்சிருக்கு! இப்ப அவனுக்கு இருபத்தி ஆறு வயசு. ரெண்டு பொண்ணுங்க 21 வயசுலேயும், 19 வயசுலேயும் வீட்ல நிக்குது! அதுங்களை விட்டுட்டு நான் ஏன் பிரகாஷுக்குக் கல்யாணம் செய்யறேன் தெரியுமா?

    சொல்லுங்க!

    பணப்பற்றாக்குறை! அவன் ஒருத்தன் சம்பாதிக்கற பணம் குடும்பச் செலவுக்கே சரியா இருக்குது! நாளைக்கு புள்ளைங்க கல்யாணத்துக்குக் கடன் வாங்கினா, எப்படி அடைக்கறது?

    கஷ்டம்தான்!

    அதனாலதான் உத்யோகம் பாக்கற உன்னைத் தேர்ந்தெடுத்தேன். உன் சம்பளத்துல கடனை அடைக்கலாம். தைரியமா கடன் வாங்கலாம்! உன் பணம் எனக்கு ரொம்ப முக்கியம். நீ வேலையை எந்தக் காரணத்தைக் கொண்டும் விடக்கூடாது!

    கண்டிப்பா மாட்டேன்!

    அவ்ளோதான். இனிமே மேற்கொண்டு பேசலாம்!

    இருவரும் வெளியே வந்துவிட்டார்கள்.

    நாங்க பேசியாச்சு!

    நிச்சயதார்த்த தேதியைக் குறிச்சிடலாமா?

    அதுக்குனு தனியா ஒரு நாள் எதுக்கு? இப்பவே பாக்கு வெத்தலையை மாத்திக்கிட்டா ஆச்சு! கல்யாணத் தேதியை இன்னிக்கே குறிச்சிடலாமே!

    அம்மா... சொந்தக்காரங்க நிச்சயத்துக்கு வரவேண்டாமா?

    அவசியம் இல்லை! வேலையை முடிங்க! மருமகள் சீக்கிரம் எங்க வீட்டுக்கு வரணும்!

    அப்பா, உள்ளே வந்து அம்மாவிடம் கலந்தார்.

    பீரோவில் மூவாயிரம் ரூபாய் இருந்தது. அதை வெள்ளித் தட்டில் தாம்பூலத்துடன் வைத்தார்கள். சில நொடிகளில் தாம்பூலம் மாற்றப் பட்டது!

    பிரகாஷின் அம்மா அங்கேயே பஞ்சாங்கம் பார்த்தாள்.

    இந்த மாசக் கடைசில அருமையான முகூர்த்தம் இருக்கு!

    இன்னும் மூணு வாரம்தான் இருக்கம்மா! எங்களுக்கு அவகாசம் போதாது! ஏற்பாடுகளைச் செய்யணுமில்லையா? அடுத்த மாசக் கடைசில வச்சுக்கலாம்!

    அம்மா அதை மறுத்து மாதத்தின் மத்தியில் ஒரு தேதியைக் குறித்தாள்.

    ரேவதியின் வசதியை மட்டும் கேட்டுக் கொண்டாள்.

    மற்ற லௌகீக சங்கதிகள்?

    இருபது சவரனுக்கு நகை போட்ருங்க! கையில இருபது ரூபா ரொக்கம் குடுத்துருங்க! கல்யாணத்தை நல்லா நடத்துங்க! மத்தபடி பாத்திர பண்டம், துணிமணிகளை நல்லா வாங்குங்க! வேற ஒண்ணுமில்லை!

    புறப்பட்டுப் போய்விட்டார்கள்.

    உள்ளே வந்ததும்,

    ரேவதி படபடத்தாள்.

    அப்பா! அவசரப்பட்டு தாம்பூலம் மாத்திட்டோம்

    ஏன்மா? அந்தப் பையன் நல்லா இருக்கான். கண்ணியமா சம்பாதிக்கறான். என்ன குறை?

    அந்தம்மா என்னை மருமகளா ஆக்கிக்கறதே எனக்காக இல்லை! நான் சம்பாதிக்கற பணத்துக்காக!

    ஏன்மா அப்படி சொல்ற?

    அந்தம்மா தனியாகப் பேசியதை ரேவதி அப்பாவிடம் ஒப்பித்தாள்.

    அம்மா குறுக்கிட்டாள்.

    தப்பில்லையே ரேவதி? மத்திய தரக் குடும்பத்துல ஒரு வருமானம் வர்றதுக்கு முன்னாலயே அதை வச்சு பட்ஜெட் போடறது இயல்புதானே? நம்ம வீட்ல நடக்கலையா?

    நான் தப்புனு சொல்லலைமா! ஆனாலும் இப்பவே கணக்கு போடத் தொடங்கினா, வாழ்க்கை வியாபார ரீதியா ஆகாதா?

    அப்படியெல்லாம் நினைக்காதேம்மா! இங்கேயும் சம்பளத்தை அப்படியே கொண்டு வந்து உங்கம்மா கைல குடுத்துட்டு, செலவுக்கு வாங்கிட்டுப் போவே! அம்மாவுக்கு பதிலா மாமியார். உன்னால ஒரு குடும்பம் நன்மை அடையப் போகுதுன்னா, நீ பெருமைப்படணும் ரேவதி!

    அது சரிப்பா! அவங்க கேட்டதுக்கெல்லாம் சரினு சொல்லிட்டீங்க! பணத்துக்கு என்ன செய்யப் போறீங்க?

    கொஞ்சம் கைல இருக்கு! மீதிக்கு கடன் வாங்கிக்கறது! சொல்லி வச்சிருக்கேன்!

    அப்பா! உங்க சம்பளத்துல கடனை அடைக்கணும். குடும்பம் பிழைக்கணும். என் சம்பளமும் கட் ஆகுது! எனக்குப் பின்னால கல்யாணத்துக்கு பாரதி நிக்கறா. தம்பி படிக்கறான்.

    இருக்கட்டுமேம்மா! எனக்கு இன்னும் அஞ்சு வருஷம் சர்வீஸ் இருக்கே!

    ரேவதி பேசவில்லை!

    அம்மாடீ! இனிமே நீ பட வேண்டியது புகுந்த வீட்டுக் கவலைகளை! புரியுதா?

    "அப்பா! பொண்ணாப் பொறந்துட்டா, அவ சாகறவரைக்கும் பொறந்த வீட்டுப்

    Enjoying the preview?
    Page 1 of 1