Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paatha Poojai
Paatha Poojai
Paatha Poojai
Ebook112 pages59 minutes

Paatha Poojai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465858
Paatha Poojai

Read more from Devibala

Related to Paatha Poojai

Related ebooks

Reviews for Paatha Poojai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paatha Poojai - Devibala

    16

    1

    ஆறு மணிக்கு குளித்து முடித்து சமையல்கட்டுக்குள் நுழைந்து விட்டாள் தீபா! காபியை தயாரித்து எடுத்துக் கொண்டு கூடத்துக்கு வந்து விட்டாள்!

    அத்தே காபி! மாமா எங்கே?

    குளிக்கறார் தீபா! நீ அந்த வளைகாப்புக்கு வரலியா?

    பாதி ஷேவிங்கில் இருந்த ராஜேஷ் இந்தப் பக்கம் வந்தான்!

    அவதான் வரலைனு சொல்லிட்டாளே! ஏன் நீ தொந்தரவு பண்ற?

    ஏண்டா எரிஞ்சு விழற? உன்னோட அத்தை பொண்ணுக்கு வளைகாப்பு! அத்தை நம்ம குடும்பத்துல எல்லாத்துக்கும் வருவா! நாமும் குடும்பத்தோட போனா நல்லாருக்கும்!

    அத்தே! எனக்கு லீவு இல்லையே?

    இல்லை தீபா! அது காரணமில்லை! நினைச்சா உன்னால லீவு போட முடியாதா?

    ராஜேஷ் மறுபடியும் வந்தான்!

    அம்மா! மத்தவங்க புரிஞ்சுக்கமாட்டாங்க! நீயுமா? லீவு இல்லைனு நாசூக்கா அவ சொன்னா, விட்ரணும்! எங்களுக்குக் கல்யாணமாகி மூணு வருஷமாச்சு! இன்னும் குழந்தை பிறக்கலை. இப்பக் கல்யாணமான பூமிகாவுக்கு வளைகாப்பு வந்தாச்சு! நம்ம குடும்ப மனுஷங்களுக்கு நல்ல புத்தியே கிடையாது! கேள்வி மேல கேள்வியாக் கேட்டு தீபாவை துளைப்பாங்க! பரிதாபப் படுவாங்க! உபதேசம் தருவாங்க! இதெல்லாம் வேணுமா! யோசனை பண்ணு!

    எனக்கும் இதெல்லாம் தெரியும்டா!

    தெரிஞ்சும் ஏன் கூப்பிடற?

    ராஜேஷ்! வெளிய ஒரு விசேஷம்னு போனா, நாலு பேர் நாலு விதமா பேசத்தான் செய்வாங்க! நாம இந்தக்காதுல வாங்கி, அந்தக்காதுல விட்டுட்டு போயிட்டே இருக்கணும்!

    குளித்து விட்டு ராஜாராம் வெளியே வந்தார்!

    இந்தபாரு ருக்கு! ராஜேஷ் - தீபாவுக்கு கல்யாணமாகி மூணே வருஷங்கள்தான் ஆச்சு! நம்ம மருமகளுக்கு இருபத்திரெண்டு வயசுல கல்யாணம்! இப்ப இருபத்தி அஞ்சு! இதெல்லாம் ஒரு வயசா? இதப்பாரும்மா! ராஜேஷுக்கு இருபத்தேழு வயசு! ருக்குவோட பதினாறாவது வயசுல அவன் பிறந்தாச்சு! ருக்குவுக்கு இப்ப நாப்பத்திநாலு - எனக்கு நாப்பாத்தி ஏழு, எங்களுக்கே வயசாகலை. நீங்க சின்னப் புள்ளைங்க! இப்ப வளைகாப்பு பண்ணிக்கற என் தங்கச்சி மகளுக்கு இருபத்தி ஆறு! தீபாவை விட அவ பெரியவ!

    சரி மாமா! நீங்க சொல்றது நிஜம்! ஆனா இங்கே வயசை யாரும் பாக்கறதில்லை! கல்யாணமாகி ரெண்டு வருஷம் கடந்துட்டாலே, குழந்தை உண்டாகலைனா, தேவவையில்லாத விமர்சனங்கள் வருதே! இது தேவையா!

    விடும்மா! மனுஷங்களை மாத்த முடியாது! இதையெல்லாம் பெரிசா எடுத்துக்க முடியாது! நீங்க ரெண்டு பேரும் வந்தா நல்லாயிருக்கும்!

    இல்லைப்பா! நாங்க வரலை! நீங்க போயிட்டு வாங்க!

    சரிப்பா!

    அவர்கள் இருவரும் புறப்பட்டு போக, தீபா சாப்பாடு கட்டத் தயாராக....

    ராஜேஷ் நெருங்கினான்!

    இன்னிக்கு ஆபீசுக்கு லீவு போடு!

    எதுக்கு? நாமதான் வளைகாப்புக்குப் போகலையே!

    இல்லை! டாக்டர்கிட்டப் போறோம்!

    ஏன்?

    நல்ல ஒரு கைனகாலஜிஸ்ட்கிட்ட பாத்துடலாம்! நான் முன்பதிவு வாங்கியாச்சு!

    மாமா - அத்தைகிட்ட சொல்ல வேண்டாமா?

    பாத்துட்டு வந்து சொன்னாப் போதும்!

    ஏன்? அவங்ககிட்ட சொன்னா என்ன?

    தீபா! எல்லாத்துக்கும் பெரியவங்க அனுமதி தேவையில்லை! நாமும் பச்சப் புள்ளைங்க இல்லை!

    அப்படி இல்லீங்க! நீங்க ஒரே பிள்ளை! அவங்ககிட்ட சொல்லாம எதுக்கு செய்யணும்! ‘நீயாவது சொல்லக் கூடாதா’னு கேப்பாங்க! மாமா கண்டுக்கமாட்டார். அத்தை எங்கிட்ட கோவப்படுவாங்க! புரியுதா!

    நீ பதில் சொல்லு!

    என்னை மாட்டி விடப் பாக்கறீங்களா? ஒரே பிள்ளையைப் பெற்ற தாய்மார்களுக்கு - குறிப்பா ஆம்பிளப் பையனா இருந்தா - ஒரு பொஸஸிவ் குணம் அதிகமா இருக்கும்! அதுல உள்ள கோபங்கள் மருமகள் மேல பாயும்!

    என்ன சொல்ற?

    அத்தை நல்லவங்க! அதை நானும் மறுக்கலை! என்மேல பாசமாத்தான் இருக்காங்க! ஆனா உங்க சொந்தக்காரங்களோட ஆதிக்கம் ரொம்ப அதிகம்! அத்தை, சித்தி, பெரியம்மானு ஆளுக்கொரு கருத்தைச் சொல்லுவாங்க! அந்த நேரத்துல உங்கம்மா என்னை ஆதரிச்சுப் பேச மாட்டாங்க! அவங்க பக்கம் சரிஞ்சிடுவாங்க! விட்டுடுங்க! இங்கே உள்விவகாரம் நிறைய இருக்கு! எல்லாத்தையும் சொன்னா உங்களுக்கு கோவம் வரும்! கோபம் ஜாஸ்தியானா எதையாவது பேசிடுவீங்க! இப்ப நேரமாச்சு! புறப்படுங்க!

    தீபா நடுத்தர வர்க்கத்தில் பிறந்த பெண்!

    உடன் பிறப்புகள் மூவர்!

    மூத்தவள் ஒரு அக்கா! சுமாரான இடத்தில் கல்யாணமாகி, ஒரு குழந்தையும் உண்டு!

    அடுத்தது தீபா! பட்டதாரி! தனியார் அலுவலகம் ஒன்றில் மாதம் முப்பதாயிரம் சம்பளம்! தீபாவின் அப்பா பள்ளிக்கூட வாத்தியார்! ரிடையராகும் நிலை!

    தீபாவுக்கு பிறகு ஒரு தம்பி! அவன் ஒரு ஆட்டோ மொபைல் ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்!

    அம்மா நோயாளி!

    அவ்வப்போது கணவர் அனுமதியுடன் தீபா தன் பிறந்த வீட்டுக்கு உதவி செய்வாள்!

    அதை இங்கு யாரும் எதிர்த்ததில்லை!

    ராஜேஷ் ஐ.டி. கம்பெனியில் வேலை! இங்கே அப்பா மத்திய அரசு ஊழியர். அம்மா குடும்பத்தலைவி! பணத்துக்கு பஞ்சமில்லை! சொந்த வீடு, கார் என எல்லா வசதிகளும் உண்டு!

    நல்ல குடும்பம்! சில சில்லறை சங்கதிகளைத்தவிர பெரிதாகக் குறை எதுவும் இல்லை!

    கல்யாணமாகி மூன்று வருடங்கள்! குழந்தை இல்லை என்பது வெடிக்கத் தொடங்கி விட்டது!

    வெளிவட்டாரத்திலும் கேள்வி புறப்பட்டு விட்டது!

    பெண்ணாகப் பிறந்ததால் அது கொஞ்சம் உறுத்துகிறது!

    அன்று மாலை வீடு திரும்பி, இரவு உணவுக்காக தீபா தயார் செய்து கொண்டிருக்க...

    ருக்மணி அருகில் வந்தாள்.

    தீபா! ‘ஏன் மருமகளைக் கூட்டிட்டு வரலை?’னு கேக்காதவங்க பாக்கியில்லை!

    யாரும் பதில் சொல்லவில்லை!

    நம்ம குடும்ப வட்டத்துல சமீபத்துல கல்யாணமான எல்லாருக்கும் புள்ளை உண்டாயாச்சு! அதான் என்னைப் போட்டுத் துளைச்சு எடுத்திட்டாங்க!

    போதுமா! இதுக்குத்தான் நாங்க வரலை!

    நீ ஏண்டா கோவப்படற?

    நாங்க ரெண்டு பேரும் இன்னிக்கு ஒரு நல்ல கைனகாலஜிஸ்ட் டாக்டர்கிட்ட போயிட்டுத்தான் வந்தோம்!

    ஏன் எங்கிட்ட சொல்லலை?

    "தீபா இதைக் கேட்டா! நான்தான் வந்து சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்! இப்ப

    Enjoying the preview?
    Page 1 of 1