Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mummy Rammy
Mummy Rammy
Mummy Rammy
Ebook102 pages52 minutes

Mummy Rammy

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465858
Mummy Rammy

Read more from Devibala

Related to Mummy Rammy

Related ebooks

Reviews for Mummy Rammy

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mummy Rammy - Devibala

    19

    1

    காலையில் பரபரப்பாக சமையல் கட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்தாள் வனஜா!

    டிபன், சாப்பாடு சகலமும் ஏழரைக்குள் தயாராக வேண்டும்!

    டப்பாவுக்கு சகலமும் மாற்றி, டேபிள் மேல் கொண்டு வந்து வைத்தாள்!

    கிரிஜா படித்துக் கொண்டிருந்தாள்.

    கிரிஜா! டயமாச்சுமா! நீ போய்க் குளி! ஸ்கூலுக்கு நேரமாயிடும்!

    யூனிட் டெஸ்ட்மா! இன்றும் ரெண்டு ஸம்தான். முடிச்சிர்றேன்.

    குளிச்சு ரெடியானப்புறம் படிம்மா! நான் ஆபீசுக்கு புறப்பட வேண்டாமா?

    சரிம்மா!

    டவல், டிரஸ் எல்லாம் பாத்ரூம்ல இருக்கு கிரிஜா!

    பதின்மூன்று வயது கிரிஜா லேசாக சோம்பல் முறித்துவிட்டு பாத்ரூமை நோக்கி நடந்தாள்.

    நடக்கும்போது பக்கவாட்டில் பார்வையைப் போட்டாள்.

    பெட்ரூமில், கட்டிலில் அப்பா கவிழ்ந்து கிடப்பது தெரிந்தது.

    அம்மா! அப்பா எப்ப வந்தார்?

    வனஜா இதற்கு பதிலே சொல்லவில்லை!

    கிரிஜாவுக்கு சமீப காலமாக எல்லாமே தெரியத் தொடங்கிவிட்டது.

    வனஜா கூடுமானவரை மகளுக்குத் தெரியக்கூடாது என்று மறைத்துத்தான் பார்த்தாள்.

    முடியவில்லை!

    கிரிஜா வளர வளர சகலத்தையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கி விட்டாள்!

    குழந்தைக்காலம் தொட்டே கிரிஜா அம்மாவுடன்தான் அதிகம் இருப்பாள். காரணம், அப்பா மூர்த்தியிடம் நெருங்கும் வாய்ப்புகூட அவளுக்குக் கிடைத்ததில்லை!

    காலை ஏழு மணிக்கு மூர்த்தி புறப்படும்போது கிரிஜா விழித்தே இருக்கமாட்டாள். மூர்த்தி வீடு திரும்பும் நேரம் கிரிஜா உறங்கியிருப்பாள்.

    ஒரே வீட்டில் இருந்தாலும் அப்பாவை கிரிஜா நேருக்கு நேர் பார்க்க பல நாட்கள் ஆகிவிடும்!

    அப்படி பார்க்கும் போதும் மூர்த்தி கிரிஜாவை மடியில் வைத்துக் கொஞ்சவோ, வெளியே அழைத்துப் போகவோ, கேட்டதை வாங்கித் தரவோ செய்ததில்லை!

    அவளிடம் பாசம் காட்டியதே இல்லை!

    அந்த நேரத்திலும் மூர்த்தியைப் பார்க்க வீட்டுக்கு நண்பர்கள் வந்துவிடுவார்கள்!

    கிரிஜாவைப் பொறுத்தவரை அப்பா என்ற ஒரு மனிதர் அந்த வீட்டில் இருக்கிறார். அவ்வளவுதான்!

    எல்லாமே அம்மாதான்!

    மற்றவர்கள், அக்கம்பக்கத்தவர், உடன் படிப்பவர்கள் அப்பாவைப் பற்றிப் பெருமையாகப் பேசும்போது கிரிஜாவுக்கு ஏக்கமாக இருக்கும். தனக்கு மட்டும் இது ஏன் வாய்க்கவில்லை என்று தோன்றும்.

    தாள முடியாமல் அம்மாவிடம் ஒரு நாள் வாய்விட்டே கேட்டு விட்டாள்.

    மம்மி! ஏன் அப்பா எங்கிட்ட பாசமாவே இல்லை! மற்ற எல்லா அப்பாக்களும் தன் குழந்தைகிட்ட எத்தனை பாசமா இருக்காங்க?

    வனஜாவின் கண்கள் கலங்கி விட்டன.

    மம்மி! நீ ஏன் அழற? நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா?

    வனஜாவிடம் பதில் இல்லை!

    தன் கேள்வி அம்மாவை அழ வைத்ததால், கிரிஜா அப்பா பற்றிப் பேசுவதை விட்டுவிட்டாள்!

    பாட்டி அவ்வப்போது வருவாள்.

    அப்பா ஒரே பிள்ளை... ஆனால் அத்தைகள் மூன்று பேர் உண்டு. பாட்டி பெரும்பாலும் அத்தைகளிடம் தான் இருப்பாள். பாட்டிக்கு இங்கே இருக்கப் பிடிக்காது. எப்போதாவது வந்து ஒரு மாதம் தங்கும்போது அம்மாவிடம் சண்டை போடுவாள். அம்மாவைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பாள். கிரிஜாவுக்கு பாட்டி பேசுவதே புரியாது. ஆனால் அம்மா எந்த பதிலும் சொல்லமாட் டாள்.மௌனமாக இருந்து விடுவாள்.

    பாட்டியை ஏன் அம்மா எதிர்க்கக்கூடாது என்று ஆத்திரம் கிரிஜாவுக்கு வரும்!

    தாளமுடியாமல் அதை அம்மாவிடம் ஓரிருமுறை கொட்டும்போதுகூட வனஜா சிரித்து மழுப்பி விடுவாள்.

    கிரிஜாவுக்கு பத்து முடிந்து பதினொராவது வயது நடக்கும்நேரம், ஒரு நாள் இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும். கிரிஜாவுக்கு திடீரென உறக்கத்திலிருந்து விழிப்பு வந்துவிட்டது!

    ஒரே சப்தமாக இருந்தது.

    பக்கத்தில் பார்த்தால் அம்மாவைக் காணவில்லை!

    கூடத்தில் விளக்கு எரிந்தது. பேச்சு சப்தம் உச்சத்தில் இருந்தது!

    கிரிஜா மெல்ல எழுந்து வந்து கதவருகில் நின்று கொண்டாள்.

    மூர்த்தி தள்ளாடியபடி நடந்து வந்து சோபாவில் பொத்தென விழுந்தான். சற்று தள்ளி பாட்டி நின்றாள்.

    தெனமும் மூக்கு முட்டக் குடிச்சிட்டு, ராத்திரி பதினொரு மணிக்கு வர்றார். பகல் நேரத்துல சீட்டு விளையாட்டு. மத்தியானத்துக்கு மேல குதிரைப் பந்தயம். வேலைக்கே போறதில்லை! அதனால சம்பளமில்லை! என்னிக்கு வேலையை விட்டுத் துரத்துவாங்களோ தெரியாது. ஊர் முழுக்கக் கடன். கண்டவனெல்லம் வீட்டு வாசல்ல வந்து நின்னு கடனைக் கேக்கறான். அக்கம் பக்கத்துல சந்தி சிரிச்சாச்சு. நான் எத்தனைதான் மூடி வச்சாலும், ஊருக்குத் தெரிஞ்சாச்சு! நான் தனி மனுஷியா இருந்தா, எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியும். இப்ப ஒரு பெண் குழந்தையைப் பெத்து வச்சிருக்கேனே! அவளோட எதிர்காலம் கேள்விக்குறி ஆயிடக் கூடாதுனு எல்லாத்தையும் பொறுத்துக்கறேன்! நான் வேலைக்குப் போகலைனா, நானும் என் குழந்தையும் இப்ப பிச்சை எடுத்துக்கிட்டிருப்போம்!

    பாட்டி எதுவும் பேசவில்லை!

    எல்லாரும் நல்லபடியா வாழும்போது எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை?

    அம்மா அழத் தொடங்கினாள்.

    மூர்த்தியை எதுவும் பாதிக்கவில்லை! அவன் போதையில் ஏதோ உளறிக் கொண்டிருந்தான்.

    கிரிஜாவுக்கு பலத்த அதிர்ச்சி.

    உள்ளே வந்த வனஜா, தன் மகள்

    Enjoying the preview?
    Page 1 of 1