Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pallavi Anupallavi Maranam
Pallavi Anupallavi Maranam
Pallavi Anupallavi Maranam
Ebook104 pages1 hour

Pallavi Anupallavi Maranam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465858
Pallavi Anupallavi Maranam

Read more from Devibala

Related to Pallavi Anupallavi Maranam

Related ebooks

Reviews for Pallavi Anupallavi Maranam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pallavi Anupallavi Maranam - Devibala

    18

    1

    கதவைத் திறந்ததும் முதலில் கண்ணில் பட்டது அந்தக் கடிதம் தான்.

    குனிந்து விரல்களால் கவ்விக் கொண்ட பிரசன்னா அதைப் பிரித்த போது,

    டெலிபோன் அடித்தது.

    ஹலோ... பிரசன்னா ஹியர்!

    நான் இன்ஸ்பெக்டர் ராம் என்றது எதிர் முனை.

    அவர் ஏதோ சொல்லச் சொல்ல, கூர்மையாகக் காதுகளை ரிசீவருக்குத் தந்து செய்தியை மனதுக்குள் எழுதிக் கொண்ட பிரசன்னா,

    இதோ வர்றன் இன்ஸ்பெக்டர்!

    இவன் பேசும் சுவாரசியத்தில் விரலிடுக்கில் ஊசலாடிக் கொண்டிருந்த காகிதம் படபடத்து, மெல்ல நழுவி, டேபிள் ஃபேன் காற்றில் பறந்து, பிடிமானம் தேடி அலைந்து சுவரோரம் மரூன் நிற கார்ப்பெட்டோடு ஒட்டிக் கொண்டு பிரிந்து நின்றது.

    அதைத் துப்புரவாக மறந்து போன பிரசன்னா, செய்தி தந்த சுவாரசியத்தில் அவசரமாகச் செருப்பை மாட்டிக் கொண்டு வாசலில் இறங்கிக் கதவை இழுத்துச் சாத்தி, வெளியே பூட்ட,

    அந்த அதிர்ச்சியில் அந்தக் கடிதம் ஓரங்குலம் நகர்ந்து, நன்றாக விரிந்து...

    புத்தாண்டை நான் சந்திக்கப் போறதில்லை. என்னை மரண பயம் சூழ்ந்திருக்கிறது. காப்பாற்றுவீர்களா? - பல்லவி.

    டேபிள் காலண்டரில் கறுப்பு நிற எழுத்துக்களில் சிரித்தது டிசம்பர் 31.

    2

    ‘பாத்டப்’பிலிருந்து குழந்தைபோல எழுந்த பல்லவி, பஞ்சுப் பாதங்களை மொஸைக்கில் பதித்து நீர்த்துளிகளால் கறுப்புச் சலவைக்கல்லில் கோலம் போட்டுக் கொண்டே ஹாலுக்குள் வந்தாள்.

    தன்னை முழுமையாகக் காணும் ஆவலில் டிரஸ்ஸிங் டேபிளின் முன்னால் வந்து நின்றாள்.

    கண்ணாடி வெட்கப்பட்டது.

    தன் கண்ணே பட்டு இளமை கரைந்து விடுமோ என்ற பயத்தில், தூக்கிக் கட்டிய தலை முடியை சரேலென அவிழ்த்து விட, அது ஆடையாகி முழங்கால்வரை சென்று முத்தமிட்டது.

    கூந்தல் உடம்பில் மையாகப் பூசிக் கொள்ள - இடையிடையில் தெரிந்த அந்த வெண்மை, எக்குத் தப்பாகக் கண்களைச் சிமிட்ட,

    எசகு பிசகான இடங்களில் கண்ணடிக்க,

    ஃபோனும் அடித்தது.

    கையை நீட்டி ரிசீவரை பல்லவி எடுக்க,

    குலுங்கியது... (?)

    டிரஸ்ஸிங் ஸ்டூல்.

    ஹலோ, பல்லவி ஹியர்!

    மேடம், நான் கணேஷ் பேசறேன். இன்னிக்கு ஸ்டார் நைட் இருக்கு, அதோட சோழால நியூ இயர் ஸெலப்ரேஷன் இருக்கு. மறந்துற வேணாம்னு ரிமைண்ட் பண்ணேன். நௌ இட்ஸ் ஃபைவ்.

    அவன் ரிசீவரை வைத்து வெகு நேரமாகியும் பல்லவி வைக்கவில்லை.

    பிடித்திருந்த கைகள் நடுங்கின.

    ஸ்டார் நைட்!

    ஸோ, இன்னிக்கு டிசம்பர் 31.

    வியர்த்தது.

    அதுவரை அனுபவித்த தன் அழகே அந்த நொடியில் அவலட்சணமாகத் தோன்றியது.

    ‘டிசம்பர் 31.’

    அவசரக் கால்களைப் பதித்து, வார்ட்ரோபைக் கலைத்து, கைக்கு அகப்பட்ட ஒரு ஹவுஸ் கோட்டை அணிந்து கொண்டு சோபாவில் சரிந்தாள்.

    ‘போய்த்தான் ஆகணுமா?’

    ‘தெரிஞ்சும் ரிஸ்க் எடுக்கலாமா?’

    ‘போகாம இருந்துட்டா?’

    ‘ஓ... நோ, எதுவானாலும் சந்திச்சுத்தான் ஆகணும். இத ஒரு சவாலா எடுத்துட்டா என்ன?’

    நேரம் ஆறு என்பதை சுவர்க் கடிகாரம் அறிவிக்க, பரபரப்பாக எழுந்தாள்.

    சரியாக ஒன்பது மணிக்கு சோழால இருக்கணும். ஒன்பதரைக்கு ஸ்டார் நைட் தொடங்கி, நள்ளிரவு வரை நீண்டு, பன்னிரண்டு அடிக்கும்போது பிறக்கும் புது வருடத்துக் கொண்டாட்டம் அது.

    டெலிபோனை எடுத்து எண்களைச் சுழற்றிக் காத்திருந்தாள்.

    மறுமுனை உயிர்த்ததும்,

    கணேஷா? நான் பல்லவி பேசறேன். எட்டரைக்குக் கிளம்பணும். நீங்க இன்னும் அரை மணி நேரத்துல இங்க இருக்கீங்க... உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசணும்.

    அவன் ஏதோ சொல்ல,

    நோ... யூ மஸ்ட் பி ஹியர் அட் ஸிக்ஸ் தர்ட்டி!

    பஸ்ஸரை அடித்ததும்,

    காவேரி ஓடிவந்து ஸ்கிரீன் விலக்கி எட்டிப் பார்த்தாள்.

    உள்ள வா!

    கதவும்மா?

    திறந்துதான் இருக்கு, தள்ளிட்டு வா!

    வந்து, பயத்தோடு எதிரே நின்றாள்.

    நான் சொல்றதை கவனமாகக் கேட்டுக்கோ. சொல்லத் தொடங்கினாள்.

    காவேரி கேட்கத் தொடங்கினாள்.

    ஆறிலிருந்த முள், இருபது நிமிடங்களை விழுங்கும்வரை காவேரிக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. நீ என்ன பண்றேன்னா, நான் உனக்குச் சொன்னதை, வாட்ச்மேன் லோகநாதனுக்கும், சமையல்காரப் பிச்சுமணி அய்யருக்கும் சொல்லிடு.

    காவேரி அழுதாள்.

    ஏண்டி அழறே?

    ஏம்மா இன்னிக்கு இப்படியெல்லாம் பேசறீங்க? எனக்கு சந்தேகமா இருக்கும்மா!

    என்ன சந்தேகம்?

    ஒங்களுக்கு ஒடம்பு, கிடம்பு சொகமில்லியோன்னு?

    காவேரி, நெருப்புனா வாய் வெந்துராது. நடக்கப் போறதை யாராலும் தடுத்து நிறுத்தவும் முடியாது. திடீர்னு என் கதை முடிஞ்சு போச்சுன்னா, இந்த வீட்ல தலை, கால் தெரியாத ஒரு நிலை உருவாயிடும். அதுக்காகத்தான் எல்லாத்தையும் சொல்லி விளக்கிட்டுப் போறேன். புரியுதா? நீ போகலாம்!

    அந்தக் காவேரி போக மனமில்லாமல் இவளையே பார்த்துக் கொண்டு நகர்ந்து - உள்ளே நுழைந்த கணேஷ் மேல் மோதிக் கொண்டு நெற்றி வலிக்க அவசரமாக வெளியேறினாள்.

    ஒக்காருங்க கணேஷ்!

    என்ன அவசரம் மேடம்?

    சில பொறுப்புக்களை உங்ககிட்ட ஒப்படைக்கணும்!

    அதுக்கென்ன இப்ப - அதுவும் இந்த லேட் ஈவினிங்ல - அவசியம் வந்தது?

    "யெஸ் கணேஷ், நான் இன்னிக்கு கலந்துக்கப் போற

    Enjoying the preview?
    Page 1 of 1