Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vara Pirasaatham
Vara Pirasaatham
Vara Pirasaatham
Ebook97 pages45 minutes

Vara Pirasaatham

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465865
Vara Pirasaatham

Read more from Devibala

Related to Vara Pirasaatham

Related ebooks

Reviews for Vara Pirasaatham

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vara Pirasaatham - Devibala

    16

    1

    அகல் விளக்குகளில் எண்ணெய் ஊற்றி திரியை சரிசெய்து கொண்டிருந்தாள் பாக்யம்!

    மாலை ஆறுமணியிருக்கலாம். அம்மன் கோயிலில் சரியான கூட்டம் இருந்தது! அது தை வெள்ளிக்கிழமை! பெண்கள் கூட்டம் அலைமோதியது!

    பதினொரு விளக்குகளை பாக்யம் சரி பார்த்து நிமிர்ந்த போது, ஆண்டாளம்மா உள்ளே நுழைந்தாள்!

    பாக்யம்! உங்களைப் பார்க்கலாம்னுதான் இந்த நேரத்துக்கு இங்கே வந்தேன்! விளக்குகளை ஏத்திட்டு வாங்க! பேசணும்!

    இல்லீங்க! நேரமில்லை... நான் வீட்டுக்குப் போகணும்! உமா ஆபீஸ்விட்டு வந்துடுவா!

    அட இருங்க! உங்க பொண்ணு பச்சப் புள்ளையா?

    சரிங்க! வீடு பூட்டியிருக்கே?

    உமா கைல இன்னொரு சாவி இல்லையா? திறந்துட்டு உள்ளே போக மாட்டாளா?

    பாக்யம் தீப்பெட்டியை உரசி, விளக்குகளைப் பற்ற வைத்துக்கொண்டே பேசினாள்.

    அப்படி இல்லீங்க! புள்ளை காலை போனா, உழைச்சிட்டு களைச்சு வீடு திரும்பும். ஒரு காபி தண்ணி போட்டுக் குடுக்கக்கூட அம்மா இல்லையேனு ஆதங்கம் வராதா?

    நீங்க சினிமாவுக்கா போயிட்டீங்க! அந்தப் பொண்ணு நல்லா வாழணும்னுதானே கோயில், கோயிலா அலையறீங்க? அதை அவ புரிஞ்சுக்க மாட்டாளா?

    எட்டாவது விளக்கு நெருப்பை வாங்கிக்கொள்ள,

    ஞாயிற்றுக்கிழமைல காளிகோயில், திங்கள் - ராகு, கேதுவுக்கு, செவ்வாய் - துர்க்கைக்குனு தொடங்கி, சனிக்கிழமை - சனீஸ்வரன், ஆஞ்சநேயர்னு எதை நீங்க விட்டீங்க? சொல்லுங்க! உங்க பொண்ணு சம்பாதிச்சுக் கொண்டுவர்றதுல பாதிப் பணம் கோயிலுக்கே போயிடுமே?

    பாக்யம் சிரிப்புடன் திரும்பினாள்!

    ஆண்டாளம்மா! ஒரு அம்மா என்னால தெய்வத்தைத்தான் நம்ப முடியும். இல்லையா?

    அது நெசம்தான்! பெத்தப் புள்ளையைக்கூட இந்தக் காலத்துல நம்புறது தப்புத்தான்!

    பாக்யம் படக்கென திரும்பினாள்!

    அது மட்டும் சொல்லாதீங்க! என் மகன் ரங்கா வைரம்! அம்மா, அக்கா மேல உசிரையே வச்சிருக்கான். தெரியுமா?

    அதைப் பற்றிய பேசத்தான் நான் இங்கே வந்தேன்! எங்கே பேச விட்டீங்க?

    என்ன பேச வந்தீங்க?

    நீங்க விளக்குகளை ஏத்திட்டு என்கூட பத்தே... பத்து நிமிஷம் ஒக்கார்ந்தா பேசலாம்! இது உங்க குடும்பக் கவலைக் குறிச்சு நான் தரப் போற தகவல்!

    இதோ வந்துட்டேன்!

    விளக்குகளை பாக்யம் அந்தந்த சன்னிதிகளில் வைத்து விட்டு வேகமாக வந்தாள்!"

    சொல்லுங்க!

    உங்க உமாவுக்கு என்ன வயசு?

    இருபத்தியெட்டு முடியப் போகுது!

    ஏன் கல்யாணமாகலை?

    ஜாதகத்துல தோஷம்! அதே தோஷமுள்ள பையன் கிடைக்கணும்! படிச்ச, தகுதியுள்ள, இவளுக்குப் பொருத்தமான பையனா அமையணும்! அமையலையே? இந்த வருஷத்துக்குள்ள கல்யாணம் நடக்கும்னு ஜோசியர் சொல்றார்!

    யாருக்கு?

    என்ன ஆண்டாளம்மா! நாம இப்பப் பேசறது உமாவைப் பற்றித்தானே?

    புரியுதுங்க! உங்க மகள் உமாவுக்கு நடக்கறதுக்கு முன்னால, உங்க மகன் ரங்காவுக்குக் கல்யாணம் நடந்துடும் போல இருக்கே?

    என்ன உளறுறீங்க? ரங்கா உமாவை விட மூணு வயசு இளையவன்! இப்பத்தான் இருபத்தி அஞ்சு முடிஞ்சிருக்கு!

    இருக்கட்டும்! இருபத்தி அஞ்சுல ஆம்பிளை கல்யாணம் செஞ்சுக்கக் கூடாதா?

    பாக்யம் படக்கென எழுந்துவிட்டாள்!

    ரங்காவுக்கு கல்யாணம் இப்பப் பண்றதா எனக்கு உத்தேசம் இல்லை!

    ஆனா உங்க ரங்காவுக்கு இருக்கே?

    என்ன உளறல் இது?

    நேத்திக்கு பெசன்ட்நகர் பீச்ல உங்க ரங்கா, அழகான ஒரு பொண்ணோட இழைஞ்சு இழைஞ்சு பேசறதை, இவன் மடில அவ தலைசாஞ்சு கொஞ்சறதை நானே என் கண்ணால பார்த்தேன்! சொல்ல வேண்டாம்னுதான் எங்க வீட்டுக்காரர் சொன்னார். மனசு கேக்கல! உமா அவனுக்குத் தங்கச்சியா இருந்தா, இது ஒரு பிரச்னையே இல்லை! அக்காவாச்சே! அதுதான் சங்கடமா இருக்கு! பாத்துக்குங்க! ஜாதகதோஷம் கூட நிவர்த்தி ஆயிடும்! தம்பிக்கு முதல்ல கல்யாணம் நடந்துட்டா, அக்கா நின்னு போயிடுவா! சரிங்க... எனக்கு நேரமாச்சு! நான் வர்றேன்.

    அந்தம்மா, நடையைக் கட்ட, பாக்யம் நிலைகுலைந்தாள்.

    ‘இது நிஜமா?’

    ‘இந்தம்மா மெனக்கெட்டு ஏன் பொய் சொல்லணும்?’

    ‘கடவுளே! இது என்ன புதுசோதனை! இதை எப்படி ரங்காகிட்ட கேக்கறது?’

    ‘நிம்மதிக்காக கோயிலுக்கு வந்து, கோயிலில் நிம்மதியைத் தொலைத்துவிட்டு பாக்யம் புறப்பட்டாள்! ஒரு மாதிரி தடுமாற்றமாக இருந்தது!

    வீடு பக்கத்தில்தான்!

    வீட்டை அடைய, உள்ளே உமா தென்பட்டாள்!

    என்னம்மா? கோயில்ல கூட்டமா?

    ஆமாம்மா!

    நானும் இப்பத்தான் வந்தேன். முகம் கழுவி, ட்ரஸ் மாத்திட்டு வர்றேன். காபி ரெடி பண்ணும்மா! பசிக்குது... சாப்பிட ஏதாவது இருக்கா?

    தர்றேன்மா!

    உமா முகம் கழுவிக் கொண்டு, நைட்டிக்கு மாறி, பொட்டு வைத்து, தலைவாரிக் கொண்டு வர பாக்யம் காபியை நீட்டினாள்.!

    கை நடுங்கியது!

    ஏன் உன் கை நடுங்குது? முகம் பேயரைஞ்ச மாதிரி இருக்கு?

    இல்லையே?

    உமா காபியை வாங்கி உறிஞ்சினாள்!

    உடனே துப்பினாள்!

    என்ன டீ?

    சர்க்கரைக்கு பதிலா காபில உப்பைப் போட்டிருக்கேம்மா!

    அப்படியா?

    "உமா எழுந்தாள். அம்மாவின் கைகளை பிடித்து உட்காரவைத்தாள்.

    என்னாச்சு ஒனக்கு?

    "விடு! வேற

    Enjoying the preview?
    Page 1 of 1