Velicham Veliye Illai
By Devibala
()
About this ebook
Read more from Devibala
Amma Ammamma Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Thevathai Rating: 4 out of 5 stars4/5Manmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsSokkuthe Manam Rating: 5 out of 5 stars5/5Vizhikkul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsAssai Oonjalil Aadum Velaiyil Rating: 0 out of 5 stars0 ratingsSeetha Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire Vaa Rating: 5 out of 5 stars5/5Paatha Poojai Rating: 0 out of 5 stars0 ratingsCharumma Rating: 0 out of 5 stars0 ratingsPennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsVara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5Deepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsSu(sa)gavasam Rating: 0 out of 5 stars0 ratingsJodi Thevai Rating: 5 out of 5 stars5/5Oru Thai Oru Magan Rating: 5 out of 5 stars5/5Veliye Sonnaal Vetkam Rating: 4 out of 5 stars4/5Poorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 2 Rating: 0 out of 5 stars0 ratingsKathal Varam Rating: 0 out of 5 stars0 ratingsIndru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsSeerum Sirappum Rating: 5 out of 5 stars5/5Azhaiththaal Varuven Rating: 0 out of 5 stars0 ratingsVarunkaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsVidiyum Varai Rating: 5 out of 5 stars5/5Avalukku Peyar Agni Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 1 Rating: 0 out of 5 stars0 ratingsUn Solle Vedham Rating: 0 out of 5 stars0 ratingsOru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjalil Rating: 0 out of 5 stars0 ratings
Related to Velicham Veliye Illai
Related ebooks
Indru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsKonjum Mainaakkale 2 Rating: 0 out of 5 stars0 ratingsMayaana Malarkal Rating: 0 out of 5 stars0 ratingsபுது அவதாரம் Rating: 0 out of 5 stars0 ratingsAdutha Idhazhil Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsKai Serum Neram Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 2 Rating: 0 out of 5 stars0 ratingsKaatraluththa Mandalam Rating: 5 out of 5 stars5/5Kan Simittum Kaathal Rating: 0 out of 5 stars0 ratingsParakkatha Sittukkal Rating: 5 out of 5 stars5/5Kadhali Ilavasam Rating: 0 out of 5 stars0 ratingsThendral Sudum Rating: 0 out of 5 stars0 ratingsMounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratingsநதிக்கரையோரம்! Rating: 0 out of 5 stars0 ratingsPoovukkul Puyal Rating: 0 out of 5 stars0 ratingsNaane Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsNee Mattum Azhagu Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Kaathiru! Rating: 0 out of 5 stars0 ratingsPanama... Pasama... Rating: 0 out of 5 stars0 ratingsPor Megangal Rating: 0 out of 5 stars0 ratingsSooriyan Sudavillai Rating: 0 out of 5 stars0 ratingsEppavum Naan Raja Rating: 0 out of 5 stars0 ratingsஅதிகாலைச் சூரியன் Rating: 0 out of 5 stars0 ratingsAthirchi Vaithiyam Rating: 0 out of 5 stars0 ratingsNaathanar 2 Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsThaanaagath Thriyum Rating: 0 out of 5 stars0 ratingsAzhaiththaal Varuven Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 1 Rating: 0 out of 5 stars0 ratingsKaalathin Kattalai! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Velicham Veliye Illai
0 ratings0 reviews
Book preview
Velicham Veliye Illai - Devibala
22
1
தேவாலயத்தில் தன் தொழுகையை முடித்துக் கொண்டு எழுந்தார் ஃபாதர் அருமை நாயகம்.
சர்ச்சுக்கு வெளியே வந்தார்.
எதிர்ப்பட்டவர்கள் எல்லாம் வணங்க, பதிலுக்கு ஒரு தலையசைப்பில் அதை ஏற்றுக் கொண்டு நடந்தார். தேவாலயத்தை ஒட்டிய சின்னஞ்சிறு வீடு ஒன்று இருந்தது. அதுதான் ஃபாதர் தங்கும் இல்லம். அதற்குள் நுழைந்தார்.
காலை உணவாக அவரே தயாரித்து வைத்திருந்த கஞ்சியை எடுத்துப் பருகினார். அன்றைய ஆங்கில நாளிதழைப் பிரித்தார். கதவு தட்டப்பட்டது.
ம்! திறந்து தான் இருக்கு!
அந்த இளைஞன் நுழைந்தான்.
உங்களைப் பார்க்க இன்ஸ்பெக்டர் மதன் வந்திருக்கார் ஃபாதர்!
வரச் சொல்லு!
ஐந்து நிமிடம் கழித்து மதன் உள்ளே நுழைந்தான். போலீஸ் உடையில் நல்ல உயரத்தில் கம்பீரமாக இருந்தான்.
குட்மார்னிங் ஃபாதர்!
வா மதன்! உட்கார்.
உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க. அதான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன் ஃபாதர்!
இனிமே உடம்பு எப்பவுமே சரியா இருக்காது மதன்!
அவன் சற்றே சங்கடத்துடன் அவரைப் பார்த்தான்.
ஏதாவது சாப்பிடறியா மதன்? கஞ்சி தான் இருக்கு!
வேண்டாம் ஃபாதர். ரொம்ப தேங்க்ஸ்!
அவன் தண்டனையில் எந்த மாற்றமும் இல்லையா?
இல்லை ஃபாதர். அது முடிவான ஒண்ணுதான். இன்னும் ரெண்டு வாரத்துல அது நிறைவேறப் போகுது. டாக்டர் பிடிவாதமா இருக்கார்- அவனைத் தூக்குல ஏத்தாம தூங்கறதில்லைன்னு!
ஃபாதரின் முகம் வேதனையால் சுருங்கியது.
நீங்க சுப்ரீம் கோர்ட்டுக்கு முயற்சி செய்யலையா?
செய்யாம இருப்பமா ஃபாதர்? ஜனாதிபதிக்கு கருணை மனு வரைக்கும் போட்டாச்சு. நான் என் சொந்த முயற்சியில் அவனை மீட்க எத்தனை பாடுபடறேன் தெரியுமா?
அவனிடமும் அந்த வேதனை ஒட்டிக் கொண்டது.
அவன் அருகில் நெருங்கி, தோளில் கை போட்டார் ஃபாதர்.
மை டியர் மதன்! நீயும் அவனும் ஒரு தட்டுல சாப்பிட்டு வளர்ந்தவங்க. அவனை ரட்சிக்கற பொறுப்பு உனக்கும் உண்டு!
நான் அதை ஒப்புக்கறேன் ஃபாதர். ஆனா சட்டம்னு ஒண்ணு இருக்கே ஃபாதர்!
.......!
நாலு கொலைகளைச் செஞ்ச அவனை சட்டம் விட்டு வைக்குமா? கையும், களவுமா பிடிபட்ட அவனை, சட்டம் எப்படி ஃபாதர் விட்டு வைக்கும்?
அவன் ஏன் மதன் அந்தக் கொலைகளை செஞ்சான்?
சரி ஃபாதர், அது நமக்குத் தெரியுது. கொலை செஞ்சிட்டு போலீஸ்ல அவனே அதை ஒப்புக்கிட்டு சரணடைந்து விட்டான். இந்த நிமிஷம் வரைக்கும் ஏன் அந்தக் கொலைகளை செஞ்சோம்ன்னு அவனுக்கு உறுத்தல் இல்லை. அவன் அது பற்றி உங்ககிட்டக்கூட பேசலை!
சீனு சாகத் தயாரா இருக்கானா மதன்?
அப்படித்தான் தெரியுது. ஒரு போலீஸ் அதிகாரியா இல்லாம, கூட வளர்ந்தவனா இருந்து பலமுறை நான் கேட்டுப் பார்த்துட்டேன். எந்த பதிலும் இல்லை!
கஷ்டம்! அவனே பேசலைன்னா ரொம்பக் கஷ்டம். அவன் பேசினாத்தான் சட்டத்தை நம்மால பிரயோகப்படுத்த முடியும்!
மணிக்கட்டைப் பார்த்தான் மதன்.
ஓ... நேரமாச்சு. நான் புறப்படறேன் ஃபாதர். உடம்பு ஜாக்ரதை!
மதன் வெளியேறினான்.
ஃபாதர் இடது பக்கச் சுவரைப் பார்த்தார். அதில் இரண்டு புகைப்படங்கள். ஒன்றில், நடுவில் ஃபாதர் - இரு பக்கமும் அந்த இரண்டு இளைஞர்கள். ஒருவன் மதன். அடுத்தவன் சீனு என்ற சீனிவாசன்.
ஃபாதர் எழுந்து வெளியே வந்தார். சர்ச்சுக்குள் நுழைந்தார். அங்கு அலுவலக அறை ஒன்று இருந்தது. அதற்குள் இருந்த தொலைபேசியை எடுத்தார்.
எதிர் முனையில் பிஷப்.
ஃபாதர் பவ்யமாக பேசிக்கொண்டே வந்தார்.
வரப்போகும் கிறிஸ்துமஸ் விழாக் கொண்டாட்டங்கள் தொடர்பாக ஏதோ விவாதிக்க வேண்டும் என்று பேராயர் விரும்புவதாகத் தெரிவித்தார்.
நான் அங்கே வந்துட்டே இருக்கேன்!
அருமை நாயகம் ரிசீவரை வைத்து விட்டுப் புறப்பட்டார்.
அவரது தேவாலய வேன் ஒன்று தயாராகக் காத்திருந்தது.
ஏறி உட்கார்ந்தார். இடம் சொன்னார்.
சாமி!
என்ன அந்தோணி?
டிரைவரைப் பார்த்துக் கேட்டார்.
சீனுவைத் தூக்குல போடத்தான் போறாங்களா?
இந்த நிமிஷம் வரைக்கும் அந்தத் தீர்ப்பு மாறலை!
ஆண்டவர் அவனை ரட்சிக்க மாட்டாரா சாமி?
அவன் நாலு கொலைகளைச் செஞ்சான் அந்தோணி!
அவன் காரணமில்லாம செய்ய மாட்டான் சாமி... பாவம் சீனு!
காரணத்தை யார்கிட்டேயும் அவன் சொல்லலை!
நீங்க அவன் மனசை உடைக்க முடியலியா? உங்ககிட்டக் கூடவா சொல்லலை?
என்னைப் பாக்கறதையே தவிர்க்க நினைக்கிறான் சீனு. நானும் அதைப் புரிஞ்சுக்கிட்டேன்!
இன்னும் ரெண்டு வாரத்துல தூக்கு தண்டனை சாமி!
தெரியும்!
சர்ச் வாசலில் வண்டியை அந்தோணி நிறுத்த, ஃபாதர் இறங்கி படிகளில் ஏறினார்.
அவள் முக்காடிட்ட தலையுடன் இறங்கிக் கொண்டிருந்தாள்.
ஃபாதரைப் பார்த்ததும் ஒரு குற்ற உணர்ச்சியுடன் விலகி வேறு புறமாக நடந்தாள்.
ஃபாதர் ஒருநொடி நின்றார். பின் ஒன்றும் பேசாமல் படிகளை ஏறிக் கடந்தார் வேகமாக.
2
கடுங்காவல் அறை கீழே இருந்தது. ஏழெட்டு ஸெல்கள். தூக்கு தண்டனைக் கைதிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடம். கையில் சாப்பாட்டுத் தட்டுடன், ஒரு கான்ஸ்டபிள் துணைக்கு வர, அவன் இறங்கி வந்தான்.
முதல் சிறையில் முதுகு காட்டிப் படுத்திருந்தான் அவன்.
கான்ஸ்டபிள் சிறைக் கதவைத் திறக்க, திரும்பிப் பார்த்தான் மெள்ள.
சீனு! சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்.
ம்! வச்சிட்டுப் போ!
சீனு! இப்படி வாயேன்!
சீனு எழுந்து வந்தான்.
என்ன பிச்சை?
இன்ஸ்பெக்டர் மதன் உன் ஸ்நேகிநர். அரசாங்க வக்கீல் ஏகாம்பரம் மதனுக்கு வேண்டப்பட்டவர். சட்டத்துல ஆயிரம் சந்து பொந்துகள். நினைச்சா, உன்னை வெளில கொண்டு வர முடியாதா?
வேண்டாம்!
ரெண்டு வாரத்துல உனக்குத் தூக்கு!
தெரியும்.
நாலு கொலைகளைச் செஞ்சதுக்குக் காரணம் சொல்லு! இல்லைன்னா வக்கீல் சொல்லித் தர்றதைச் சொல்லு. அது போதும்!
வேண்டாம்!
என்ன வேண்டாம்? நீயா கொலைகளை செஞ்சதைச் சொல்லி சரணடைஞ்சிருக்கே! அதுக்கான காரணத்தை சட்டத்தோட துணையோட முறையாச் சொல்லு.
"உன் வேலை என்ன