Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vizhikkul Oru Ulagam
Vizhikkul Oru Ulagam
Vizhikkul Oru Ulagam
Ebook100 pages36 minutes

Vizhikkul Oru Ulagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465865
Vizhikkul Oru Ulagam

Read more from Devibala

Related to Vizhikkul Oru Ulagam

Related ebooks

Reviews for Vizhikkul Oru Ulagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vizhikkul Oru Ulagam - Devibala

    11

    1

    மணியைச் சந்தித்த அந்த முதல் நாள், அனுஷாவின் நினைவில் ஊசலாடத் தொடங்கியது.

    கதவைத் திறந்தாள் அனுஷா.

    வெங்கடேஸ்வரா மெஸ் இதுதானா?

    கேட்ட இளைஞனை ஏற இறங்கப் பார்த்தாள்.

    ஆமாம்!

    யப்பா! இதைக் கண்டுபிடிக்க முடியாம நாலு நாளா அலையறேன் நான்.

    உள்ள வாங்க.

    இங்கே தமிழ்நாட்டுச் சாப்பாடு கிடைக்கும்னு கேள்விப்பட்டேன். உண்மைதானா?

    ஆமாம்.

    எனக்கு டெல்லில சப்பாத்தி சாப்பிட்டு அலுத்தாச்சு. நான் தஞ்சாவூர்க்காரன். வத்தக் குழம்பும், சுட்ட அப்பளமும் இருந்தாக்கூட போதும் எனக்கு. நான் உட்காரலாமா?

    உக்காருங்க! ஆயா இப்படி வர்றியா?

    ஒரு கிழவி வெளியே வந்தாள்.

    இவர் நம்ம மெஸ்ஸில் சாப்பாடு வேணும்னு கேக்கறார்.

    நாங்க நாப்பது பேருக்கு மேல போடறதில்லை தம்பி. அதனால நீங்க வேற இடம் பாருங்க.

    அப்படிச் சொல்லாதீங்க. அதிகப்பணம் வேணும்னாலும் உங்களுக்குத் தர்றேன். எனக்கு ரூம் ஒரு பக்கம். ஆபீஸ் வேறொரு பக்கம். நல்ல சாப்பாட்டுக்காக இத்தனை தூரம் வந்திருக்கேன். ஏறத்தாழக் கெஞ்சினான் மணிகாந்த்.

    ஆயா, உள்ள வா!

    அழைத்து வந்தாள் அனுஷா.

    ‘பாவமா இருக்கு. சேர்த்துக்கோ! நம்மூர்க்காரர்."

    கூடுதலா அம்பது ரூபா வாங்கணும்.

    வாங்கிக்கோ. நிபந்தனைகளைப் பேசிக்கோ.

    ஆயா வெளியே வந்தாள்.

    காலைல வந்து டிபன் சாப்பிடுங்க தம்பி. கையில சாப்பாடு எடுத்துட்டுப் போயிடுங்க. ராத்திரி இங்கே வந்து சாப்பாடு.

    தொகையைச் சொன்னாள்.

    அதிகம்தான். ஆனால் மணி பொருட்படுத்தவில்லை. முன்பணம் தந்துவிட்டுப் போனான்.

    மறுநாளிலிருந்தே வரத் தொடங்கி விட்டான்.

    சமையல் அனுஷாதான். கை வெல்லம். அபாரமாக இருக்கும் சாப்பாடு. ஆனால் பரிமாற ஆயாதான் வருவாள். பெரும்பாலும் அடுக்களையைவிட்டு அனுஷா வெளியே வரவே மாட்டாள்.

    ஒருமாத காலம் இதுபோல நடந்தது.

    அன்று சம்பள நாள்! வாங்கிக் கொண்டு மெஸ் பில்லைக் கட்ட மணி வந்தான். ஓவர் டைம் இருந்ததால் அவன் அங்கு வரவே மணி பத்து!

    ஆயா உறங்கிக் கொண்டிருந்தாள்.

    அனுஷா கதவைத் திறந்தாள்.

    ஸாரி, லேட்டாயிடுச்சு!

    இத்தனை லேட்டா யாரும் வர்றதை நாங்க விரும்பறதில்லை. சாப்பாடு எட்டரைக்கே க்ளோஸ் ஆயிடும்னு உங்களுக்குத் தெரியுமில்லையா?

    எனக்கு சாப்பாடு வேண்டாம். அதுக்காக நான் வரலை. மெஸ்ஸுக்கான பணத்தைத் தர வந்தேன்.

    நாளைக்குத் தந்தா போதாதா?

    பிடிங்க பணத்தை!

    அவள் வாங்கிக் கொண்டாள். ஒரு நிமிஷம் உள்ள வாங்க.

    ஏன்?

    வாங்களேன்.

    அவன் உள்ளே வந்தான்.

    உங்களுக்காக ஹாட் கேஸ்ல இட்லி எடுத்து வச்சிருக்கேன். சாப்டுட்டுப் போயிடுங்க.

    ரொம்பத் தேங்க்ஸ்!

    இட்லி கொத்சை ஒரு பிடி பிடித்தான்.

    நான் வர்றேங்க.

    நாளைக்கு அஜ்லேகான் ரோட்ல உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு நான் வருவேன். காலைல பத்து மணிக்கு. உங்களைச் சந்திக்க விரும்பறேன்.

    இரவு முழுக்க மணி உறங்கவில்லை.

    ‘ஏன் என்னை இவள் சந்திக்க விரும்புகிறாள்?’

    ‘எப்படிப்பட்ட பெண் இவள்?’

    ‘ஒரு மாதமாக மெஸ்ஸில் வெளியே கூட வரவில்லை?’

    ‘மோசமான பெண் அல்ல!’

    ‘சரி! போய்த்தான் பார்ப்போமே!’

    காலையில் குளித்துவிட்டு எட்டரைக்கு மெஸ்ஸுக்கு வந்தான்.

    பொங்கல், தோசை சாப்பிட்டான்.

    அனுஷாவின் ஓசை கூட இல்லை அங்கே!

    பத்து மணிக்கு மார்க்கெட் வாசலை நெருங்கினான்.

    நான் இங்கே இருக்கேன்!

    அருகில் குரல் கேட்க, திரும்பினான்.

    வாங்க. அந்த ஓட்டல்ல கூட்டமில்லை. அங்கே உட்கார்ந்து பேசலாம்.

    இருவரும் அந்த ஓட்டலுக்குள் நுழைந்தார்கள்.

    எதுக்காக என்னை இங்கே வரச் சொன்னீங்க?

    நான் ஆபத்துல இருக்கேன்!

    என்ன ஆபத்து?

    டில்லி மந்திரி ஒருத்தரோட பி.ஏ. என் மேல கண் வச்சிட்டான். நிச்சயமாக ஆயாவை அவங்க விலை பேசிடுவாங்க. எனக்கு எப்ப ஆபத்து வரும்னு தெரியலை.

    ஆயா உங்களுக்கு என்ன உறவு?

    எந்த உறவும் இல்லை. என் அக்கா, அத்தானோட நான் இருந்தேன். ஒரு குண்டு வெடிப்புச் சம்பவத்துல அரசியல் ரீதியா சம்பந்தம் ஏற்பட்டு, அத்தான் இப்ப ஜெயில்ல இருக்கார். அந்த அதிர்ச்சில அக்கா இறந்துட்டா. நான் அனாதை ஆனேன். இந்த ஆயாவை எங்களுக்குப் பழக்கமுண்டு குடும்ப ரீதியா. இதுக்குக் கையாளா மெஸ்ல இப்ப வேலை பாக்கறேன். பல ஆண்கள் வர்ற இடம். நான் வெளியே வர்றதே இல்லை. அப்படியும் மந்திரியோட பி.ஏ. கண்ல நான் விழுந்தாச்சு.

    ஆயா எப்படி?

    தெரியலையே! பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு, என்னைக் கைவிட்டுட்டா?

    சரி! நான் உனக்கு என்ன செய்ய முடியும்?

    தெரியலை! நீங்க எங்க ஊர்க்காரர். அந்தப் பற்று முதல்ல. வந்த முதலே உங்களைக் கவனிச்சேன். உங்க அளவுக்குக் கண்ணியமான ஒரு ஆம்பிளையை மெஸ்ல நான் பார்க்கலை.

    அதனால?

    நீங்க உத்யோகம் பாக்கறவர்! இந்த மெஸ்ஸை விட்டு நான் விலகணும். எனக்குப் பாதுகாப்பா ஏதாவதொரு ஏற்பாடு செய்ய உங்களால முடியாதா?

    என்ன படிச்சிருக்கே நீ?

    பி.காம் முதல் வருஷம். அதுக்குள்ளே குடும்பம் சிதறிப் போச்சே!

    டைப்பிங் தெரியுமா?

    லோயர் பாஸ் பண்ணியிருக்கேன்!

    சரி! நாளைக்கு வேண்டாம். அடுத்த வாரத்துல ஒரு நாள் உனக்குத் தகவல் சொல்றேன்.

    சீக்கிரம் செய்யுங்க! உங்க ஆபீஸ், ரூம் அட்ரஸ் குடுங்க!

    Enjoying the preview?
    Page 1 of 1