Appusamikkul Kuppusami
()
About this ebook
Read more from Bakkiyam Ramasamy
Marumagal Rajyathil... Rating: 0 out of 5 stars0 ratingsMamanar Kathaigal Rating: 5 out of 5 stars5/5Bakkiyam Ramasamyin 100 Suvaiyana Nagaichuvai Kathaigal Rating: 5 out of 5 stars5/5Koondukkul Appusami Rating: 0 out of 5 stars0 ratingsAppusami 80 Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Africa Azhagiyum Rating: 5 out of 5 stars5/5Come on Appusamy Come on Rating: 0 out of 5 stars0 ratingsMahabalipurathil Marupadi Narasimma Pallavan Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Thairiyasami Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyin Colour TV Rating: 0 out of 5 stars0 ratingsAayirathoru Appusamy Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsSirippum Sinthanaiyum Rating: 0 out of 5 stars0 ratingsAakasavaniyil Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsBits(saa) Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Paritchai Ezhuthukirar! Rating: 0 out of 5 stars0 ratingsHuman Bomb Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAppusami 80 Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Azhagi Pottiyum Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Padam Edukkirar Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Virumbiya Arputha Kattalaigal Rating: 0 out of 5 stars0 ratingsOru Dozen Keerthanai Enna Vilai? Rating: 0 out of 5 stars0 ratings'Ink'eetham Therinthavara Neegal? Rating: 0 out of 5 stars0 ratingsSagunam Sariyillai Rating: 0 out of 5 stars0 ratingsSundakkai Sithar Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsAppusamiya? Sirippu Samiya? Rating: 0 out of 5 stars0 ratingsAppusamiyum Bharathi Naarkaaliyum Rating: 0 out of 5 stars0 ratings
Related to Appusamikkul Kuppusami
Related ebooks
Paper Padikkum Erumbu Rating: 0 out of 5 stars0 ratingsAppusamiyin Thaali Bakkiyam Rating: 0 out of 5 stars0 ratingsAppusami 80 Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsRaasi Rating: 5 out of 5 stars5/5Human Bomb Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsMaanavar Thalaivar Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsPallisaamyin Thuppu Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Arputha Vilakkum Rating: 0 out of 5 stars0 ratingsVishwa Thulasi! Rating: 0 out of 5 stars0 ratingsSumai Thaangi Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyin Colour TV Rating: 0 out of 5 stars0 ratingsHema! Hema! Hema! Rating: 0 out of 5 stars0 ratingsDabbaji Bansleyudan Appusami Rating: 0 out of 5 stars0 ratingsKuppaikku 'Good Bye'! Rating: 0 out of 5 stars0 ratingsCome on Appusamy Come on Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Padam Edukkirar Rating: 0 out of 5 stars0 ratingsAanukkum Undu Ingey Agni Paritchai!! Rating: 0 out of 5 stars0 ratingsUngal Bhagyarajin Kelvi-Pathilgal – Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsKamalam Solgiraal Rating: 0 out of 5 stars0 ratingsNenjamellam Nee! Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Naan Ennodu Nee Rating: 4 out of 5 stars4/5Innoru Karanam Rating: 0 out of 5 stars0 ratingsMarma Veedu Rating: 0 out of 5 stars0 ratingsSirikka Sindhikka 100 Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMythili Rating: 0 out of 5 stars0 ratingsJustice Jaganathan Rating: 0 out of 5 stars0 ratingsViji - Adventure Naadgangal! Rating: 0 out of 5 stars0 ratingsVaa... Pon Mayile Rating: 5 out of 5 stars5/5Inippin Vetri Rating: 0 out of 5 stars0 ratingsThirumana Parisu Rating: 1 out of 5 stars1/5
Related categories
Reviews for Appusamikkul Kuppusami
0 ratings0 reviews
Book preview
Appusamikkul Kuppusami - Bakkiyam Ramasamy
http://www.pustaka.co.in
அப்புசாமிக்குள் குப்புசாமி
Appusamikkul Kuppusami
Author:
பாக்கியம் ராமசாமி
Bakkiyam Ramasamy
For more books
http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. அப்புசாமிக்குள் குப்புசாமி
2. எங்கே குழவி?
3. கமான் அப்புசாமி கமான்
4. எல்
5. செலவுக்கு 144
6. சீதே, நான் காணோம்!
7. ஆபரேஷன் அப்புசாமி
8.'லோ கட்' டுண்டோம் பொறுத்திருப்போம்!
9. சிலை எடுத்தான்
10. ஸயண்டிஸ்ட் அப்புசாமி
11. தலைவர் அவர்களே!
12. முறுக்கிக்கொண்டார் அப்புசாமி
13. லார்ட் பெட்லிங்டனும் அப்புசாமியும்
14. ஆகாசவாணியில் அப்புசாமி
1. அப்புசாமிக்குள் குப்புசாமி
'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது' என்பது பழமொழி. அப்புசாமி ஒரு புலியல்லவாதலால் அவர் புல்லைக் கிள்ளிக் கிள்ளித் தின்று கொண்டிருந்தார்.‘சீதாவுடன் ஓரொரு வேளைக்கும் டிபன் போராட்டம் நடத்துவதைவிட (வரும்போதுகூட ஒரு கடினமான மெது பக்கோடா போராட்டம்) இப்படி அக்கடாவென்று பார்க்கில் வந்து உட்கார்ந்து புல்லைத் தின்பது எவ்வளவோ மேல்' என்று எண்ணிய வாறு புல்லைக் கிள்ளி அதன் பசுமையான பால் ருசியை அனுபவித்தவாறிருந்தார்.
சிந்தனை வசப்பட்டு இருக்கிறேன் என்ற சாக்கில் ஓர் இரண்டு கால் பிராணி புல்லை இப்படி மேய்வதைப் பார்த்துக்கொண்டு பார்க் வாட்ச்மேன் சும்மா இருப்பானா?
என்ன பெரியவரே, உங்க தலை மாதிரி பார்க்கைப் பண்ணிட்டீங்களே கொஞ்ச நேரத்தில்? கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்கமுடியலையா?
என்று அவருக்குக் கண்டனம் தெரிவித்தான் அருகில் வந்து.
அப்புசாமி ஹி ஹி! இது... இது... ஏற்கெனவே சொட்டையாகத் தானப்பா இருந்தது...
என்றவாறு எழுந்தார்.
நல்ல ஆளு சார் நீங்க. இதுக்குத்தான் கதைப் புஸ்தகமும் கையுமாக வர்றவங்களைப் பார்க்குக்குள்ளே நான் விடறதில்லை. அதுவும் துப்பறியும் கதைப் புஸ்கத்தை எடுத்திட்டு யாராச்சும் வந்தாங்கன்னா விடவே மாட்டேன். அவங்க பாட்டுக்குத் தலையைக் குனிஞ்சு கதையைப் படிச்சுக்கிட்டே புல் பூராவையும் பட்டுங்கிக் தள்ளிடுவாங்க... சரி... சரி. இந்தாங்க உங்க புஸ்தகம். பொருத்திட்டுப் புறப்படுங்க.
புஸ்தகமா?
என்ற ஆச்சரியப்பட்ட அப்புசாமியின் கையில் பளபளவென்று அட்டை மின்னும் ஒரு புத்தகத்தை பார்க்வாட்ச்மேன் திணித்தான்.
'என்னடா இது! எதிர்பாராத அதிர்ஷ்டமாக இருக்கிறதே. எந்தப் பயலோ மறந்து வைத்துவிட்டுப் போனதை வாட்ச்மேன் என்னுடையது என்று எண்ணி விட்டான் போலிருக்கிறது,' என்று நினைத்து மறுப்புச் சொல்லு முன் புத்தகத்தை அவர் கையில் கொடுத்து விட்டுக் காவல்காரன் போய்விட்டான். அந்தக் கதைப் புத்தகத்தை ஒருமுறை கண்ணால் பார்த்தார் அப்புசாமி.
வழவழவென்று அட்டை இருந்தாலும் பயங்கரமான மண்டை யோட்டுப் படமாக இருந்தது. படத்தைவிடக் கதையின் தலைப்பு பின்னும் பயங்கரமாயிருந்தது; அந்தப் பிசாசின் பெயர் கழுகுமலை.'
அப்புசாமிக்குத் துப்பறியும் கதைகள் படிப்பது என்றால் சின்ன வயசில் அவ்வளவு பிரியம். ஆரணி குப்புசாமி முதலியார் ஒரு ரூமுக்குள் போய்க் கதவைத் சாத்திக் கொண்டாரானால் வெளியே வரும்போது இரண்டு தலையணைகளுடன் வருவாராம். ஒன்று, அவர் கையில் எடுக்கப்போன அசல் தலையணை;இன்னொன்று அவர் ஒரே மூச்சில் எழுதிய துப்பறியும் நாவல்!
'அந்தக் காலத்துத் துப்பறியும் புத்தகங்களை இப்படிப் பாக்கெட்டில் போட்டுக்கொள்ள முடியுமா? ஆள் வைத்துத் தூக்க வேண்டும். அட அட... வடுவூர் என்ன, ஆரணி என்ன, என்று தன் வாலிபப்பிராயத்தை நினைத்துக்கொண்டவருக்கு மெய் சிலிர்த்தது.
காரணம்: திடுமென்று அவருக்குத் தன் அண்ணா குப்புசாமியின் நினைவு வந்துவிட்டது. அப்புசாமிக்கு குப்புசாமி என்று ஓர் அண்ணா இருந்தார். மகா பொல்லாதவர். அப்புசாமிக்கு நேர் எதிரிடையான சுபாவம் அவருக்கு. முரடர் என்றால் அப்படி முரடர். அப்புசாமிக்கு அரும்பு மீசை முளைத்திருந்தபோது குப்புசாமிக்கு இரும்பு மீசையாக இருந்தது.
ஒருதினம். டேய்! என் வேட்டியைத் துவைத்துக் கொண்டு வந்தாயாடா கழுதை!
என்று ஆற்றிலிருந்து அப்போதுதான் வந்த அப்புசாமியைப் பார்த்து, அண்ணா குப்புசாமி மிரட்டினார்.
அப்புசாமி எரிச்சலுடன், போடா.. நான்... ஒண்ணும் உனக்கு வேலைக்காரனில்லை...
என்று சொல்லிவிட்டு முன்தினம் தான் படித்துக்கொண்டிருந்த துப்பறியும் புத்தகத்தைக் கையிலெடுத்தார்.
அடுத்த நிமிடம் அவ்வளவு பெரிய தடிப் புத்தகமும் டர்ரென்று இரண்டாய்க் கிழித்தெறியப்பட்டது குப்புசாமியால்.
'வரட்டும்டா! அப்பா வந்தால் சொல்கிறேன்' என்று அரும்பு மீசை அப்புசாமி அழ, இரும்பு மீசை குப்புசாமி இடிக்குரலில் சிரிக்க, அப்பா வர, அவரே குப்புசாமியைக் கண்டு பயந்தவராக,‘அட அட! நம்ம குப்புவுக்கு என்ன பலம், என்ன பலம். ஆயிரம் பக்கமுள்ள இந்தப் புத்தகத்தை வாழை நாரைக் கிழிக்கிற மாதிரி அவ்வளவு சுலபமாகக் கிழித்துவிட்டானே?' என்று புகழுரைகள் கூறிவிட்டு நழுவிவிட்டார். புத்தகத்தைக் கிழித்ததுடன் குப்புசாமிக்கு அப்புசாமி மேலிருந்த கோபம் போகவில்லை. அப்புசாமி, தான் போட்டுக்கொள்வதற்காகத் துவைத்து மடித்துத் தலையணை இஸ்திரி போட்டு வைத்திருந்த வேட்டி சட்டையைப் பலாத்காரமாகத் தானே எடுத்துப் போட்டுக்கொண்டு விட்டார்.
அப்புசாமிக்கும் கோபம் தாளவில்லை. மடையா, இன்னிக்கு என்னைப் பெண்பார்க்க வரப்போகிறாங்க... இல்லை... நான் பெண் பார்க்கப் போகணும். நீ இப்படி என் வேட்டி சட்டையை எடுத்துக் கொண்டு....!
என்று கத்தினார்.
உன் முகரைக் கட்டைக்குக் கல்யாணம் ஒண்ணுதான் குறைச்சல். நிக்கர் பனியன் போட்டுக் கொண்டுதான் பெண்ணைப் போய்ப் பாரேன். எனக்கே கல்யாணம் ஆகலையாம். உனக்கென்னடா அதற்குள்
என்று கறுவினார் குப்புசாமி.
உன் திருட்டு முழியையும், பரட்டைத் தலையையும் பார்த்தா எந்தப்பெண் சம்மதிப்பாள்? அப்படியே உனக்குக் கல்யாணம் நடந்தாலும் எந்த ஊர் ஜெயிலிலாவதுதான் நடக்கும். ரெளடி. கேடி.
ஆத்திரத்தில் நன்றாகத் திட்டிவிட்டார் அப்புசாமி.
என்னடா சொன்னே? என்னைப் பார்த்தா ரெளடி, கேடின்னு சொன்னே?
அப்புசாமி சற்றே வளைந்த தன் மூக்கை இப்போது தொட்டுப் பார்த்துக்கொண்டார். படுபாவிப் பயல் என்னமாகக் குத்தி உடைத்து விட்டான்!
அப்புசாமிக்கு மூக்கு என்று ஒன்று உருப்படியாகத் தேறுமா, அவர் பிற்காலத்தில் மூக்கால் அழ முடியுமா என்று அவருடைய அப்பா படாத கவலையும்பட்டு ஒரு வழியாக அவருடைய மூக்கு, தண்டிலே கொஞ்சம் நெளி இருந்தாலும் குணமாகிவிட்டது.
அந்தக் குப்புசாமி கடைசியில் கொள்ளிடம் வெள்ளத்தில் நீந்துகிறேன் என்று ஊரில் யார் யாரிடமோ பந்தயம் கட்டிவிட்டு முரட்டுத்தனமாக நீந்தி, கடைசியில் கரை ஏறிவராமல், எந்தத் தகவலும் இல்லாமல் போய்விட்டார்.
'கிழவி எப்போது கழகத்திலிருந்து வந்து சோறு போடப் போகிறாளோ தெரியவில்லையே?' என்று முணு முணுத்தவாறு மேஜை விளக்கைப் போட்டுக்கொண்டு, தனக்குத் கிடைக்க ஓசிக் கதைப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினார்.
அந்தப் பிசாசின் பெயர் கழுகுமலை.
தலைப்பை மட்டும் கவர்ச்சியாக வைத்து விட்டான். அந்த நாளைய துப்பறியும் கதைமாதிரி இருக்குமா?
பக்கங்கள் மெதுவாகப் புரண்டன. ஏதோ பரவாயில்லை மாதிரி தானே இருக்கிறது? இன்னும் கொஞ்சம் படித்தார்.
கழுகுமலைப் பிசாசு கதைக்கும் அவர் வாழ்க்கைக்கும் மிகவும் நெருக்கமான உறவு இருக்கும் போலிருக்கிறதே...
கழுகுமலையும் ஏழுமலையும் இரு சகோதரர்கள். கழுகுமலை பொல்லாத ரெளடி. போக்கிரி. கொலைகாரன். ஏழுமலை ரொம்பப் பயந்த சுபாவமுள்ள நல்லவன். கழுகுமலை திடுமென்று ஒருநாள் யாராலோ கத்தியால் குத்தப்பட்டு இறந்துபோனான்.
ஏழுமலைக்கு அண்ணன் செத்தது நிம்மதியாக இருந்தது. கொஞ்ச நாளைக்குத்தான். ஏன்?
கழுகுமலை செத்துப் போய்விட்டாலும், அவனுடைய ஆவி ஓயாமல் ஏழுமலையிடம் வந்து தொந்தரவு செய்து மிரட்டிக் கொண்டேயிருந்தது.
'என்னைக் கொன்றவனை நான் பழி வாங்கணும். எனக்கு உன் உடம்பிலே இடம் கொடு, எனக்கு இடம் கொடு' என்று அந்தஆவி கேட்டது.
அப்புசாமி கதைப் புத்தகத்தை மூடினார். மேற்கொண்டு படிக்க அவருக்குத் துணிவில்லை.
உள்ளே தனியே உட்கார்ந்து படிக்கப் பயமாயிருந்தது. வாசலுக்குப் போய்விட்டார்.
ஐயோ சீதே, வேண்டாமே, வேண்டாமே...
என்று அப்புசாமி அலறினார் ராத்திரி பதினொரு மணிக்கு.
சீதாப்பாட்டி கடும் கோபத்துடன் ஏன் இப்படி இந்த மிட் நைட்டில் அலறுகிறீர்கள்? அக்கம் பக்கத்துப் பங்களாக்காரர்கள் நான் ஏதோ உங்களுக்குச் சூடு போடுவதாக நினைத்துக் கொண்டுவிடப் போகிறார்கள்?
என்றாள்.
தாயே சீதே...
என்றார் அப்புசாமி கையைக் கூப்பி, எனக்குச் சூடு வேணுமானாலும் போடு. தயவுசெய்து விளக்கை மட்டும் அணைக்காதே.
சீதாப்பாட்டி கண்களை உருட்டிப்பார்த்து, சுத்த அட்ராஷஸாக இருக்கிறது. விடிய விடிய உங்கள் ரூமிலே விளக்கு எரியவேண்டுமா? நான் இதை அலெள செய்வதா? நெவர்! நெவர்!
எலக்ட்ரிஸிடி பில்லை எங்க ஃபாதர் இன்லாவா வந்து கட்டுகிறார்கள்?' என்று சொல்லி விளக்கைப் பட்டென்று அணைத்த மறுவிநாடி அப்புசாமி,ஐயோ, குப்புசாமி! குப்புசாமி! குப்புசாமி!
என்று அலறியவாறு பாட்டிமீது பாய்ந்து பாட்டியை ஒரே கட்டாய்க் கட்டிக்கொண்டு விட்டார்.
சீதாப்பாட்டி அரண்டு மிரண்டுபோய் மறுபடி விளக்கைப் போட்டாள்.
அப்புசாமியின் கையும் காலும் உடம்பும் மணல் சலிக்கிற மிஷின் மாதிரி உதறிக்கொண்டிருந்தன.
வாட் ஹாப்பண்ட் டு யூ...ஏன் இப்படி உங்களுக்கு உடம்பு நடுங்குகிறது?
என்று கேட்ட சீதாப்பாட்டி நிஜமாகவே கொஞ்சம் பயந்துதான் போய்விட்டாள்.‘பெராலிடிக் அட்டாக்' ஆனவர் மாதிரி கை இப்படித் தொள தொளவென்று நடுங்குகிறதே?
எங்கே... எங்கே... என்னைப் பாருங்கள்... ஸீ மீ ஸ்ட்ரெய்ட் ஷாக் அடிச்சமாதிரி அப்படி ஏன் கத்தினீர்கள்? உங்களுக்கென்ன கேடு காலம்! ஏதாவது கெட்ட கனா கினா கண்டீர்களா என்ன? ப்ளீஸ்... ட்ரிங்க் திஸ் ஃபர்ஸ்ட்...
என்று அருகிலிருந்த மண் கூஜாவின் குழாயைத் திருப்பி, குளுமையான தண்ணீர் ஒரு டம்ளர் அவரிடம் நீட்டினாள்
அப்புசாமி கை நடுங்க அதை வாங்கியதால் டம்ளர் லொட லொடவென ஆடி, கொஞ்சம் குளிர்ந்த நீர் அவருடைய ஜிப்பாவுக்குள் சிந்தி அவரைக் கிச்சு கிச்சு மூட்டியது. ஆனாலும் அவரது மிரட்சி நீங்கவில்லை.
சீதே... தயவுசெய்து விளக்கை அணைத்துவிடாதே. ராத்திரி பூரா எரியட்டும். அப்போதுதான் குப்புசாமி என்கிட்டேவரமாட்டான்... ஆமா. சீதே... குப்புசாமி பொல்லாதவன்.
சீதாப்பாட்டி திகைத்துப்போனவளாக, குப்புசாமியா? ஹு இஸ் தட் சேப்?
என்றாள்.
ஐயோ, அந்த ஜன்னலைக் கொஞ்சம் சாத்தேன்..... குப்புசாமி பொல்லாதவன்.
சீதாப்பாட்டி ஒன்றும் புரியாமல், ஒய் டு யூ ஷிவர்? ஹு இஸ் தட் குப்புசாமி?
என்றாள் சற்றுக் கோபத்துடன்.
ஐயோ... என்னை ஒண்ணும் கேட்காதேயேன்...
என்றவர். குப்புசாமி... அடே குப்புசாமி... என்னை மன்னித்துவிடுடா... விளக்கை அணைச்சப்புறம் வந்து என்னை மிரட்டாதே...
என்று அலறினார்.
சீதாப்பாட்டிக்கு ஒன்றும் விளங்கவில்லை.
ஹூ இஸ் தட் குப்புசாமி?
என்று அதட்டுவது போலக் கேட்டாள். யு ஆர் க்ரியேடிங் அன்னெஸஸரி ஸீன்!
குப்புசாமியைத் தெரியாதா சீதே... என் சொந்த அண்ணன் குப்புசாமியைத்தான் சொல்கிறேன். அந்தப் படுபாவிதான் என்னை வந்து மிரட்டுகிறான்.
ஓ மை காட்!
என்று சீதாப்பாட்டி வியந்தாள். யுவர் ப்ரதர் குப்புசாமியா? அந்த ட்ராம்ப் மண்டையைப் போட்டு ஹாஃப் எ செஞ்சுரி ஆகப் போகிறதே?
ஆமாம் சீதே..... ஆமாம்... அந்த முரட்டுப் பயலேதான். அவன் ஆவி வந்து என்கிட்ட‘ரூம்' கேட்கிறது.‘டேய் இடமில்லைடா' என்கிறேன். நீ கொடுக்காட்டா பல்லைத் தட்டிவிடுவேன் என்று மிரட்டுகிறான். சீதே, இப்போ குப்புசாமி என்ன குண்டாக ஆகிவிட்டான் தெரியுமா?
சீதாப்பாட்டி அலட்சியமாகச் சிரித்தாள். ஐயோ பாவம். ரியலி நீங்கள் உங்கள் ப்ரதரைப்பற்றி ஏதோ கனவுதான் கண்டிருக்கிறீர்கள்!
அப்புசாமி,கனவா? கனவில்லை சீதே. நிஜமாகத்தான் குப்புசாமி வந்திருந்தான். என் மார்மேலே ஏறி உட்கார்ந்துகொண்டு, இறங்கவே மாட்டேன் என்றான்.
ஐ பிடி யூ... ஓல்ட் ஏஜ் இல்லையா? காஸ் ட்ரபிள்,
என்று தோப்பாட்டி அனுதாபமாகக் கூறிவிட்டு, படுத்துக் கொள்ளுங்கள். நான் பக்கத்திலேயே இருக்கிறேன்..... எந்தக் குப்புசாமியும் வரமாட்டார். நிம்மதியாகத் தூங்குங்கள்,
என்று அவருக்குத் துப்பட்டியை இழுத்துப் போர்த்து விட்டு அவரருகேயே உட்கார்ந்திருந்தாள்.
சீதாப்பாட்டிக்குத் தூக்கம் கலைந்தால் மறுபடியும் பிடிப்பதற்குக் குறைந்தபட்சம் மூன்று மணி நேரமாவது ஆகும்.
அப்புசாமி அருகே தூங்கிக்கொண்டிருக்க, சீதாப்பாட்டி மேஜை விளக்கின் வெளிச்சத்தில் சிறிது படிக்கலாமென்று தீர்மானித்தாள்.
அப்புசாமியின் தலையணை அடியிலிருந்த சிவப்பு நிறத்தில் பளபளவென்று ஒரு சிறிய புத்தகம் சீதாப்பாட்டியின் கவனத்தைக் கவர்ந்தது.
'வாட் இஸ் திஸ் ட்ரேஷ்' என்றவாறு எடுத்துப் பார்த்தாள். மர்மக் கதைப் புத்தகம். பெயர்: அந்தப் பிசாசின் பெயர் கழுகுமலை.
சீதாப்பாட்டி சிரித்துக்கொண்டாள்:‘சரிதான். இந்த மாதிரி சீப் த்ரில்லரெல்லாம் இப்போ படிக்கத் தொடங்கி விட்டார் போலிருக்கிறது. அதனால்தான் அனாவசியமான நைட்மேர் ஸெல்லாம் அவருக்கு வருகிறது போலும், என்று எண்ணிக் கொண்டவள், என்னதான் இந்த மாதிரி புக்ஸ்களில் கதை இருக்கும் பார்க்கலாமே என்று படிக்கத் தொடங்கினாள்.
தமிழில் படிக்கக் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் பொருட் படுத்தாது படித்துப் பார்த்தாள்.
படிக்கப் படிக்கச் சுவாரசியமாக மட்டுமில்லாமல் பாட்டிக்கே கொஞ்சம் திகில் கொடுக்க ஆரம்பித்துவிட்டது.
சீதாப்பாட்டி அந்தப் புத்தகத்தைப் பட்டென்று மூடி வைத்தாள்.
எத்தனையோ ஹிச்காக் மிஸ்டரிகளையெல்லாம் படித்தவளானாலும்கூட ராத்திரியில் தனியாக இந்தக் கதையைப் படிக்கும்போது என்னவோ மாதிரி இருந்தது.
தன் கட்டிலைக் கணவரின் கட்டிலுக்கு அருகே கொஞ்சம் இழுத்துப் போட்டுக்கொண்டு, ஜன்னலையெல்லாம் திரும்பத் திரும்பப் பார்த்தபடியே சாத்திவிட்டு வந்து படுத்தாள். துப்பட்டியைப் போர்த்துக் கொண்டாள். மேஜை விளக்கைக்கூட அணைக்கவில்லை.
சீதே!
என்றார் அப்புசாமி.
தூக்கிவாரிப் போடத் திரும்பினாள் சீதாப்பாட்டி. யூ ஹாவ் நாட் எட் ஸ்லெப்ட்?
அப்புசாமி சீதாப்பாட்டியையே உற்றுப் பார்த்தார். அவருடைய கண்கள் மெதுவாக விரிந்தன. அகலமாயின. உதடுகளில் ஒரு விகாரமான புன்னகை தோன்றியது.
பாட்டியின் குரல் நடுங்கியது. ஒய் டு யூ ஸ்டேர் மி? ஏன் என்னவோ மாதிரிப் பார்க்கிறீர்கள்?
என்ற சீதாப்பாட்டியின் குரல் நடுங்கியது.
அப்புசாமி படுக்கையில் எழுந்து உட்கார்ந்தவர், துப்பட்டியை வீசி எறிந்தார். ஹ ஹ ஹ! என்னைத் தெரிகிறதா உனக்கு?
கடகட வென்று சிரித்தார் அப்புசாமி.
சீதாப்பாட்டி வெலவெலத்துப் போய் விட்டாள்.
சற்று முன் பயந்து நடுங்கின அப்புசாமியா