Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mamanar Kathaigal
Mamanar Kathaigal
Mamanar Kathaigal
Ebook129 pages1 hour

Mamanar Kathaigal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112303673
Mamanar Kathaigal

Read more from Bakkiyam Ramasamy

Related authors

Related to Mamanar Kathaigal

Related ebooks

Related categories

Reviews for Mamanar Kathaigal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mamanar Kathaigal - Bakkiyam Ramasamy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மாமனார் கதைகள்

    Mamanar Kathaigal

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. மாமனாரின் கோரோஜனை கர்ஜனை!

    2. புழக்கடையில் மாமனாரின் யாகம்!

    3. மாமனார் ஒரு டியூப் குழந்தை

    4. மாமனார் விட்ட பட்டம்

    5. மாமனாரின் எடை

    6. மாமனாரின் அரிசியல்

    7. மாமனாரின் பைண்டிங்

    8. முருகேசுடன் மோதுகிறார் மாமனார்!

    9. நான் - மாமனார் - நாய்க் குட்டி!

    10. சூப்பில் மாமனார்

    1. மாமனாரின் கோரோஜனை கர்ஜனை!

    E:\Priya\re-gen\மாமனார் கதைகள்\1-min.jpg

    அவனை உண்டு இல்லைன்னு ஆக்கிடறேன் என்று என் மாமனார் டென்ஷன் பட்டுக்கொண்டிருந்தார். ஆனால் லயன் கிடைத்தால்தானே?

    ஏ, ஜெயா! இப்படிக் கொண்டா அந்தச் சனியனை!

    கார்ட்லெஸ் போனுக்குத்தான் அவர் சனியன் பட்டம் வழங்கியது. உண்டு இல்லைன்னு ஆக்கப் போவதாகச் சொன்னது வாஷிங்மிஷின்காரனை.

    மாமனாரின் திருப்பெயர் பி.பி. ந்ருஸிம்ஹ வதனம்; ‘பைங்காநாடு பூர்ண போத ந்ருஸிம்ஹ வதனம்’ ரொம்பவும் சினேகிதமானவர்கள் பி.பி. அய்யங்கார் என்பார்கள்.

    நிச்சயதார்த்தம் நடைபெறுவதற்கு முன் அப்பாவிடம், பயம்மாயிருக்கு என்று காலேஜிலிருந்து வந்ததும் சொன்னேன். டூவீலரில் பீக் அவர்ஸில் காலேஜ் போய் வருகிறவள்தான் என்றாலும் ஆயுளுக்கும் வாழ்க்கைப் படற விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வு வரத்தானே செய்யும்?

    பையனை எனக்குப் பிடித்திருந்தது. (அச்யுத்தை யாருக்குத்தான் பிடிக்காது)

    தளதளவென்று பெரிய காலிஃபிளவர் கெட்டியாகக் காய்கறிக்காரனிடம் இருக்கும். அதிர்ஷ்டமுள்ளவர்கள்தான் அதைப் பேரம் செய்து வாங்கிப்போக முடியும்.

    அச்யுத் சகலவித மணமகன் தகுதிகளுடன் அற்புதமான பர்ஸனாலிடியுடனிருந்தும் ஜாதகம் எனக்கும் அவருக்குத்தான் பொருந்தியிருந்தது. ஆகவே அவரை யாரும் கொத்திப் போகவில்லை. பி.பி. அய்யங்கார் (என் மாமனார்) ஜாதகத்துக்காக உயிரை விடுகிற ரகம். பத்து பொருத்தமாமே - அத்தனையும் பொருந்தியிருக்கணும் என்று அலைந்ததாகத் தெரிந்தது.

    நிச்சயதார்த்தத்துக்கு முன், அப்பாவிடம் ஒரு வார்த்தை போட்டேன்.

    பி.பி. குடும்பத்திலே போய்ச் சம்பந்தம் வைத்துக் கொள்கிறோமே… யோசனை பண்ணுங்கோ அப்பா என்றேன். அப்பா சிரித்தார். பி.பி-ன்னா பிளட் பிரஷர் இல்லேம்மா. பைங்காநாடு பூரணபோதம் வகையறா!

    என் அச்சம் ஓரளவுதான் அகன்றது.

    எங்க வீட்டிலே எல்லாரும் மெதுவாகவே பேசுவோம். கலகலப்பு என்ற பெயரில் உரக்கப் பேசுவதோ, அட்டகாசமாகச் சிரித்துப் பேசுவதோ, வளவளப் பேச்சோ எங்கள் பரம்பரை அறியாத ஒன்று.

    மாமனார் குடும்பம் நேர் எதிர். தனது லவுட் ஸ்பீக்கர் குரலில் தானே நிச்சயதார்த்தப் பத்திரிகையைப் படித்தார்.

    மறுநாள் அடுத்த தெருவிலிருக்கிறவர்கள் எல்லாம்கூட வீட்டுக்கு வந்து, உங்க பெண்ணுக்கு நிச்சயமாகிவிட்டதா, சந்தோஷம் என்று அப்பாவை கன்கிராஜுலேட் செய்து விட்டுப் போனார்கள்.

    உங்க அப்பா, எங்கப்பாவை ஹார்ட் ஹியரிங்னு நினைச்சுனுட்டாரா என்ன? தப்பா நினைச்சிக்காதீங்க என்றேன் அச்யுத்திடம்.

    நாட் அட் ஆல்! அச்யுத் அழகாகச் சிரித்தார்.

    E:\Priya\re-gen\மாமனார் கதைகள்\2-min.jpg

    அந்த நாளில் குழந்தைகளுக்குத் தொண்டை பிரியணும்னு ஒரு சங்குப் பாலிலே துளி கோரோஜனம் கலந்து புகட்டுவார்கள். எங்க அப்பாவுக்குக் கோரோஜனையில் துளிப் பால் விட்டுப் புகட்டி விட்டார்கள். அவ்வளவுதான்… என்று பெரிசாகச் சிரித்தார். அத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை. என்னைப் பிடித்து சடாரென்று ஒரு கிஸ் அடித்தும் விட்டார்!

    அதிர்ந்து போன எனக்கு விளக்கம் வேறு - வழவழா குழகுழாவென்று!

    பழைய கதையை விடுங்கள்!

    கார்ட்லெஸ் போனைக் கொண்டு போய் மாமனார்கிட்டே கொடுத்தேன்.

    அண்ணாசாலை டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் எரிந்ததாலே பல லயன்கள் எரிந்து போய்விட்டதில்லையா? அதிலே அந்த வாஷிங் மெஷின் கம்பெனி நம்பரும் சேர்ந்திருக்கணும்னு நான் முனகியது மாமனார் காதிலே விழவே இல்லை.

    இவன்களையெல்லாம் தூக்கிலே போடணும் நம்பர்களை அழுத்தினார்.

    நீங்கள் டயல் செய்யும் எண் உபயோகத்தில் இல்லை!

    முகத்திலடித்தாற்போல் ஒரு பெண் (பதிவுக் குரல்) பதிலளித்தாள்.

    ஏன், ஏன்? ஏன்னு கேட்கிறேன்? என்று பதிவு மேல் அர்த்தமில்லாமல் பாய்ந்தார். பதிவு அதே பதிலை இரண்டாம் தரம் சொன்னது.

    கஸ்டமர்களைச் சமாளிக்க தில் இல்லாமல் இதென்ன பயந்தாங்கொள்ளி ஏற்பாடு? டெலிபோன் இலாகா பதிலைத் திட்டினார்.

    மறுபடி டயல் செய்தார். இந்தத் தடவை ‘ஙீஙீ’ என்று சிணுங்கிவிட்டு, இந்தத் தடத்திலுள்ள எண்கள் அனைத்தும் உபயோகத்தில் உள்ளன. சிறிது நேரம் கழித்து டயல் செய்யுவும் என்ற பதிவுக் குரல் அவர் காதில் விழுந்தது போலும்.

    பார்த்தியா பார்த்தியா? கொஞ்சம் முன்னே உபயோகத்தில் இல்லைனு சாதிச்சாங்க. இப்போ அனைத்தும் உபயோகத்தில் உள்ளனவாம். அக்கிரமம்… என்று உறுமிவிட்டு உன் வீட்டுக்காரன் புறப்பட்டுப் போயிட்டானாக்கும்… என்று என்னைப் பார்த்து ஒரு செறுமல்.

    மிஷின் கெட்டுத் தொலைஞ்சு பத்து நாளாகிறது. கம்பெனிக்கு நேராகப் போய் ஒரு வார்த்தை கேட்கக் கூடாதா – ‘இப்ப ஆளை அனுப்பி எடுத்துண்டு போறியா இல்லையான்’னு…

    மூணாம் தேதி அவர் ஹைதராபாத் போகணுமாம் செலக்ஷனுக்கு என்றேன்.

    மாமனார் காதில் அது விழவில்லை. கொஞ்சம் வாயை இன்னும் நாலு சென்டி மீட்டர் அகலத் திறந்துதான் பேசறது… அதென்ன மனசுக்குள்ளேயே பேசிக்கிற மாதிரி உங்க குடும்பத்துல எல்லாரும் பேசறது? எதிராளி கேட்டால் என்ன, கேட்காவிட்டால் என்னன்னு ஒரு அகம்பாவம், அலட்சியம்… ஒரு மனுஷன் எதுக்குப் பேசறான்? பிறத்தியார் காதுல விழணும்னுதானே?

    மாமனாருக்கு நிஜமாகவே ப்ளட் பிரஷர் ஏறிவிட்டது. நான் உள்ளே போய்விட்டேன்.

    கண்ணுக்கு லட்சணமாக இருந்தால் தீர்ந்ததாக்கும்?

    அவர் வாஷிங் மெஷினை வைகிறாரா, என்னை வைகிறாரா தெரியவில்லை.

    இரண்டு நாள் கழித்து ஒரு சுபயோக சுபதினத்தில் டெலிபோன் நம்பர்கள் சீரடைந்தன.

    வாஷிங் மெஷினைக் கண்டுபிடித்தவன் அடைந்த சந்தோஷத்தைவிட மேற்படி கம்பெனியின் டெலிபோன் எண் கிடைத்ததில் அடைந்த என் மகிழ்ச்சி அதிகமாகவே இருந்திருக்கும்.

    கடைக்காரனின் நம்பர் கிடைத்ததும் நான் ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1