Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

50kg Tajmahal
50kg Tajmahal
50kg Tajmahal
Ebook102 pages49 minutes

50kg Tajmahal

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403656
50kg Tajmahal

Read more from Rajesh Kumar

Related to 50kg Tajmahal

Related ebooks

Reviews for 50kg Tajmahal

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    50kg Tajmahal - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    50kg தாஜ்மஹால்

    50kg Tajmahal

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்று - உலகத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு பெரிய குழுவாக வந்து தாஜ்மஹாலை அலசிப் பார்த்துவிட்டு கொடுத்த சர்டிபிகேட் இது. பளிங்கு உடம்போடு நிற்கும் இந்த தாஜ்மஹாலுக்குள் இப்போது அந்த ஆராய்ச்சியாளர்கள் நுழைந்து பார்த்தால் நொந்து போவார்கள். உட்பக்க சுவர் முழுக்க கரிக்கட்டையால் எழுதப்பட்ட கெட்ட வார்த்தைகள், அரசியல் தலைவர்களின் பெயர்களுக்குக் கீழே 'வாழ்க' 'ஒழிக' கோஷங்கள், மாடிக்குப் போகும் வழியில் வேர்க்கடலைத் தோல்கள், மாங்காய் கொட்டைகள். தாஜ்மஹாலைப் பார்க்கப் போகிறவர்கள் வெளியே இருந்தபடியே பார்த்துவிட்டு வந்து விடுவது மகா உத்தமம்.

    - ஒரு வெளிநாட்டு டூரிஸ்ட் அடித்த கமெண்ட்

    டெலிவிஷனின் சின்னத்திரைப் பரப்பு பூராவும் வியாபித்துக் கொண்டு பளீரென்ற் பல்வரிசையோடு சிரித்தாள் ஜோதிகா. காமிரா, பேட்டி எடுக்கும் பெண்மணியின் முகத்துக்குப் போக அவள் வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு கேட்டாள்.

    ஜோதிகா...! இன்னிக்கு இருக்கிற நிலவரப்படி பரதநாட்டியத்துல நீங்கதான் 'நெம்பர் ஒன்'னுன்னு சொல்லிகிட்டிருக்காங்க. அதைப்பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?

    இப்படி சொல்றது ரொம்பவும் அபுத்தம். ஒரு வகையில் பார்த்தா, அறியாமையும் கூட. ஒவ்வொரு காலகட்டத்திலேயும் ஒவ்வொருத்தர் பேரும் புகழுமா இருந்திருக்காங்க! தட்ஸ் ஆல். இதுல நெம்பர், ஒன் நெம்பர் டூ எதுவும் கிடையாது. பரத நாட்டியத்துல என்னிக்குமே நெம்பர் ஒன் யார் தெரியுமா?

    யார்... பத்மினியா?

    இல்லை...

    வைஜெயந்திமாலாவா?

    கிடையாது...

    பின்னே...?

    சிதம்பரத்தில் இருக்கிற நடராஜர்

    பேட்டி எடுக்கிற பெண் சிரித்தாள். யாருமே மறுக்க முடியாத உண்மை இதுதான். பை...த...பை... ஜோதிகா... உங்களுக்கு அப்பா அம்மா கிடையாது. சொந்தபந்தம் யாரும் இல்லைன்னு சொன்னீங்க. நீங்க எந்த சூழ்நிலையில் யாரால வளர்க்கப்பட்டு இந்த நாட்டியத்துறைக்கு வந்தீங்கன்னு சொல்ல முடியுமா...?

    ஓ... எஸ்...! நான் அஞ்சு வயசு சிறுமியா இருந்தபோதே அப்பாவும் அம்மாவும் ஒரு விபத்துல பலியாயிட்டாங்க. பத்தாம் நாள் காரியம் பண்ண வந்த சொந்தக்காரங்க சிலபேர் ஒண்ணா உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்து கோயமுத்தூர்ல இருந்த ஒரு அநாதை விடுதியில் சேர்த்துட்டு போய்ட்டாங்க. என்னோட பத்து வயசு வரைக்கும் அதே விடுதியில் இருந்தேன். அதுக்கப்புறம்தான் என்னோட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. கோவையில் மிகவும் பிரபலமாயிருக்கிற ஸ்ரீ சக்தி கலா நாட்டிய நிலையத்திலிருந்து ஒரு பெரியவர் வந்து பரத நாட்டியம் கத்துக் கொடுக்கிறதுக்காக ஐந்து பெண்களைத் தேர்ந்து எடுத்தார். அதுல நானும் ஒருத்தி. அந்த நாட்டிய நிலையத்திலேயே தங்கி படிச்சுகிட்டே பரத நாட்டியமும் கத்துகிட்டேன். அஞ்சு பேர்ல என்னால மட்டுமே இந்தக் கலையில் சோபிக்க முடிஞ்சது. பெரியவர் சங்கர நாராயணப்பிள்ளை எனக்கு நாட்டியத்துல இருந்த ஆர்வத்தைப் பார்த்துட்டு அதனோட எல்லா நுணுக்கங்களையும் எனக்குக் கத்துக்கொடுத்தார். அரங்கேற்றமும் பண்ணிவெச்சார். அவர் மட்டும் இல்லேன்னா எனக்கு இன்னிக்கு கிடைச்சிருக்கிற பேரும் புகழும் இல்லை...

    அந்தப் பெரியவர் இன்னும் இருக்காரா?

    ம்... இருக்கார். இப்போ அவர்க்கு வயசு எண்பது. பார்வை அவ்வளவு சரியா தெரியாது. காதும் கேட்கிறதில்லை. ஆனா சாரீரம் மட்டும் அப்படியே கணீர்ன்னு வெண்கல மணியை ஓங்கி அடிச்ச மாதிரி இருக்கு. இன்னிக்கும் அவர்தான் பாடறார்...

    நீங்க இவ்வளவு பிரபலமானதுக்குக் காரணம் ரெண்டு மூணு டி. வி. விளம்பரப் படத்துல நடிச்சதுதான்னு இசை விமர்சகர் கிட்டப்பா சொல்லியிருக்காரே. இதைப்பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?

    ஜோதிகா சிரித்தாள். அவர் சொன்னதில் எந்த தப்பும் இல்லை. ஒரு க்ளுக்கோஸ் நிறுவன விளம்பரப்படம் எல்லா சேனல்களிலும் ஒரு நாளைக்கு ஐம்பது தடவைக்கு மேல் காட்டறாங்க. அதே மாதிரிதான் ஒரு சோப் விளம்பரமும். என்னோட முகம் ஜனங்களுக்கு மத்தியில் இவ்வளவு பிரபல மானதுக்குக் காரணம் விளம்பரப்படங்கள் தான்ங்கிறதுல எந்த விதமான சந்தேகமும் இல்லை.

    இவ்வளவு அழகாயிருக்கிற நீங்க மாடலிங் பண்றதுக்கு பதிலாக சினிமாவுக்குள் போகலாமே?

    "அழைப்பு வந்தது. இன்னிக்கு ஃபீல்டுல பிரபலமாயிருக்கிற

    Enjoying the preview?
    Page 1 of 1