Ayiram Muthangaludan
5/5
()
About this ebook
அன்புள்ள உங்களுக்கு....
வணக்கம்! வெறும் வசனங்களை மட்டும் பயன்படுத்தி, வர்ணனைகளே இல்லாமல் ஒரு சிறுகதையில் முயன்று பிறகு பல நாவல்களே எழுதி இருக்கிறேன்... ஒரு தொடர்கதை உள்பட!
முழுக்க ஒரே ஒரு கடிதத்தையே நாவலாக்கி இருக்கிறேன், அதைப் போல், 'ஒரு காதலனும், காதலியும் தங்களுக்குள் எழுதிக்கொள்ளும் சில கடிதங்களை மட்டுமே வைத்து ஒரு கதை எழுத முடியுமா?' என்று யோசித்தேன். அதன் விளைவுதான் 'ஆயிரம் முத்தங்களுடன்...'
இந்தக் கதையில் காதலுக்கு எதிரி என்று ஜாதியையோ, மதத்தையோ, அந்தஸ்தையோ சொல்லாமல் வேறு ஒன்றைக் கொண்டு வந்து அவர்கள் நடுவில் நிறுத்தினேன்.
அது என்ன என்பதை இங்கே சொன்னால் சுவாரசியம் கெட்டுவிடுமே! எனவே, படியுங்கள். தெரிந்துகொள்ளுங்கள். இதுவும் காதலுக்கு முக்கியமான எதிரிதான் என்று நிச்சயம் ஆமோதிப்பீர்கள்...
Read more from Pattukottai Prabakar
Bharath VS Susila Rating: 4 out of 5 stars4/5Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsIravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsOor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Narukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsSeptember, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Thottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Puthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Mazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Thappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Pushpa Rating: 5 out of 5 stars5/5Yaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsKuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsIni... Iniya... Rating: 5 out of 5 stars5/5Uyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Ner Meley Nila Rating: 5 out of 5 stars5/5Tick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Varuvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsThirumbi Vaa! Theerpai Thaa! Rating: 0 out of 5 stars0 ratings...Enavey, Ennodu Vaa! Rating: 5 out of 5 stars5/5
Related to Ayiram Muthangaludan
Related ebooks
Kanavugal Kalaikindrana Rating: 0 out of 5 stars0 ratingsSandikuthirai Rating: 0 out of 5 stars0 ratingsAtho Ange Aarambam Rating: 5 out of 5 stars5/5Avargal Artham Purinthavargal Rating: 0 out of 5 stars0 ratingsVillan Engira Kadhanayagan Rating: 0 out of 5 stars0 ratingsIndiargal Kaadhalikkirargal! Rating: 5 out of 5 stars5/5Oru Nijamana Poi Rating: 0 out of 5 stars0 ratingsThodarkathai Rating: 0 out of 5 stars0 ratingsImaikkum Nerathil Rating: 5 out of 5 stars5/5Oru Kaadhalin Climax Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku Indhu... Rating: 0 out of 5 stars0 ratingsMakeup Punnagai Rating: 5 out of 5 stars5/5Ore Oru Karanam Rating: 0 out of 5 stars0 ratingsAimbathu Latcham Dosai! Rating: 0 out of 5 stars0 ratingsNalamillai... Nalama? Rating: 0 out of 5 stars0 ratingsInnum Sila Nimidangalil... Rating: 5 out of 5 stars5/5Kadaisi Athiyaayam Rating: 0 out of 5 stars0 ratingsVithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5En Peyar Dhayalan Rating: 0 out of 5 stars0 ratingsOru Koodai Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsIniyavaley Iranthu Po! Rating: 0 out of 5 stars0 ratingsOoraar Rating: 0 out of 5 stars0 ratingsVazhigal Moodapattullana Rating: 0 out of 5 stars0 ratingsPunnagai Sei Thozhi Rating: 5 out of 5 stars5/5Puthi Munai Kutram Rating: 0 out of 5 stars0 ratingsOru Thuppakiyum Sila Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsAarambaththil Appadiththaan Rating: 5 out of 5 stars5/5Pathaiyellam Pookkalittu... Rating: 5 out of 5 stars5/5Yedu Un Vaalai Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Arambikkalam Rating: 5 out of 5 stars5/5
Reviews for Ayiram Muthangaludan
1 rating0 reviews
Book preview
Ayiram Muthangaludan - Pattukottai Prabakar
http://www.pustaka.co.in
ஆயிரம் முத்தங்களுடன்
Ayiram Muthangaludan
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
கதையைப்பற்றி...
அன்புள்ள உங்களுக்கு....
வணக்கம்! வெறும் வசனங்களை மட்டும் பயன்படுத்தி, வர்ணனைகளே இல்லாமல் ஒரு சிறுகதையில் முயன்று பிறகு பல நாவல்களே எழுதி இருக்கிறேன்... ஒரு தொடர்கதை உள்பட!
முழுக்க ஒரே ஒரு கடிதத்தையே நாவலாக்கி இருக்கிறேன், அதைப் போல், 'ஒரு காதலனும், காதலியும் தங்களுக்குள் எழுதிக்கொள்ளும் சில கடிதங்களை மட்டுமே வைத்து ஒரு கதை எழுத முடியுமா?' என்று யோசித்தேன். அதன் விளைவுதான் 'ஆயிரம் முத்தங்களுடன்...'
இந்தக் கதையில் காதலுக்கு எதிரி என்று ஜாதியையோ, மதத்தையோ, அந்தஸ்தையோ சொல்லாமல் வேறு ஒன்றைக் கொண்டு வந்து அவர்கள் நடுவில் நிறுத்தினேன்.
அது என்ன என்பதை இங்கே சொன்னால் சுவாரசியம் கெட்டுவிடுமே!எனவே, படியுங்கள். தெரிந்துகொள்ளுங்கள். இதுவும் காதலுக்கு முக்கியமான எதிரிதான் என்று நிச்சயம் ஆமோதிப்பீர்கள்...
நன்றி!
பிரியங்களுடன்,
பட்டுக்கோட்டை பிரபாகர்.
1
உங்களை பெயர் சொல்லி விளிக்கும் உரிமை இன்னும் எனக்குக் கிடைக்காததால், 'அன்புள்ள உங்களுக்கு...' என்றுத் தொடங்குகிறேன்.
இந்தக் கடிதம் உங்கள் கையில் இருக்கும்போது, உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது?
சிடுசிடுத்த உங்கள் தந்தை எதற்காகவோ உங்களைத், திட்டிவிட்டதற்காக வெளிக்காட்டிக் கொள்ள முடியாத ஆத்திரத்திலா...? ஏதோ கவனத்தில் செய்த புதுப் பதார்த்தம் சரியாய் அமையாமல் போனதற்கு உங்கள் அம்மா கிண்டல் செய்துவிட்டதால் உண்டான எரிச்சலிலா? உங்கள் அண்ணன்... பத்து 'பேண்ட், பத்து சட்டையை ஒரே நாளில் துவைக்கப் போட்டுவிட்டதால் ஏற்பட்ட சலிப்பிலா? கல்லூரியில் படிக்கிற சலுகையில் வீட்டு வேலைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளும் தங்கையின் அலட்சியத்தின் மேல் கொஞ்சம் கோபத்திலா?
எனில்... தயவுசெய்து நீங்கள் இந்தக் கடிதத்தை இப்போது படிக்க வேண்டாம். மடக்கி மறுபடி ‘கவரில்’ போட்டு பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
அதிகாலையில் மார்கழிப் பனியைப் பற்றி கவலைப்படாமல் குளித்து, ஒரு புது மலராக உங்கள் வீட்டு வாசலில் ஏராள வர்ணப் பொடிகள் வைத்து... ஒரு மணி நேரத்துக்கும் மேலாக எடுத்துக்கொண்டு 'மெகா' கோலம் போட்டு முடித்த பிறகு, தள்ளி நின்று ஒரு பாதசாரியின் பார்வையில் நீங்கள் போட்ட கோலத்தை இடுப்பில் கை வைத்தபடி ரசிப்பீர்களே... அந்த உற்சாகம் நிரம்பின மனநிலையில் படிக்கலாம்.
அல்லது... உங்கள் வீட்டுப் பின்புறம் கிணற்றையொட்டிய நந்தியாவட்டை, செம்பருத்தி செடிகளில் இருந்து அப்பாவின் பூஜைக்காக மலர்களைப் பறிப்பர்களே! அந்த சலனமற்ற நெஞ்சுடன் படிக்கலாம்.
அல்லது... துவைத்த துணிகளை ‘பக்கெட்’டில் அள்ளிப் போட்டுக்கொண்டு மொட்டைமாடிக்கு வந்ததும் உடனே உதறி கொடியில் போட்டு ‘கிளிப்' வைக்காமல், கைப்பிடிச் சுவரில் கைகளை ஊன்றி... தெருவின் இயக்கங்களை ரசித்துவிட்டு, ஆகாயத்தில் 'டிசைன்' போட்டுப் பறக்கும் பறவைகளை சூரிய ஒளியில் ஒற்றைக் கல் மூக்குத்தி ஒளிர பார்த்துவிட்டு, கீழே இருந்து வானொலியில் வரும் கொஞ்சநாள் பொறு தலைவா'வுடன் சேர்ந்து பாடியபடி துணிகளை உதறிப் போடுவீர்களே... சமயங்களில் அந்த உதறவின்போது உங்கள் முகத்தில் ஈர ஊசிகள் பாய்கையில் சிலிர்த்துக்கொள்வீர்களே! அந்த ரசனையான திமிடங்களில் படிக்கலாம்.
அல்வது... வெள்ளிக்கிழமைகளில் அப்பா, அண்ணன், தங்கை மூவரும் அவரவர் வேலைக்குப் புறப்பட்டுச் சென்ற பிறகு... நிதானமாக குளியலறையில் ரொம்ப நேரம் தலைக்குத் குளித்துவிட்டு, புடவை கட்டி தலையின் ஈரம் காய... துவைக்கும் சுல்லில் அமர்ந்து கையில் ஒரு ‘ராணிமுத்து’ இதழை வைத்து... அதன் கதாநாயகிகளுக்கு என்ன ஆகுமோ? என்று பதற்றமாகப் படிப்பீர்களே... அந்த சந்தர்ப்பத்தில் படிக்கலாம்.
இப்போது உங்களுக்கு ‘முணுக்’கென்று ஒரு கோபம் வந்திருக்க வேண்டுமே... 'யாரிவன்?’ எப்போது என் நடவடிக்கைகளை ரகசியமாகப் பார்த்தான்?’ என்று ஒரு ஆத்திரக் கேள்வி பிறந்திருக்க வேண்டுமே!
சக்கர வண்டி காய்கறி ஆசாமி தக்காளிக்கு இரண்டு ரூபாய் விலை அதிகம் சொல்லிவிட்டால், அந்த தக்காளி நிறத்துக்கு உங்கள் முகம் மாறி படபடப்பாகப் போவீர்களே... அப்படியொரு நிலைக்கு இப்போது உங்கள் முகம் மாறியிருக்கும் என்று நினைக்கிறேன்.
ஒருவித 'டென்ஷன்'! மேலே படியுங்கள். தயவுசெய்து அன்றொரு நாள் 'அயர்ன்' நபர், ஓட்டை போட்டுவிட்ட உங்கள் புதுப் புடவையை கிட்டத்தட்ட அவன் முகத்தில் விசிறியடித்து திட்டினது நினைவு இருக்கிறது.