Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennangalai Uzhaippakku
Ennangalai Uzhaippakku
Ennangalai Uzhaippakku
Ebook145 pages56 minutes

Ennangalai Uzhaippakku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மு.ப.நடராசன் சிறு வயதிலிருந்து தமிழ் மீது பற்று கொண்டு கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் திரைப்பட பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் காட்டியுள்ளார். இவர் கல்லூரி படிக்கும் காலங்களில், "வானம் வெகு தூரமில்லை" என்ற தன்னம்பிக்கை தரும் புத்தகம் வெளியிட்டு கல்லூரி மாணவர்களிடையே உத்வேகம் பெறவும், கல்வியின் அவசியத்தை உணரும் வகையிலும் சமூக ஏற்றதாழ்வுகளை பிரதிபலிக்கும் விதமாகவும் எழுதியுள்ளார். ஒவ்வொரு தனி நபரிடமும் உள்ளார்ந்த திறமையுள்ளது, அதனை வெளிக்கொணர்ந்து தனக்கென முத்திரைப் பதித்து வெற்றி வாகை சூடிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580124703638
Ennangalai Uzhaippakku

Read more from M.P.Natarajan

Related to Ennangalai Uzhaippakku

Related ebooks

Reviews for Ennangalai Uzhaippakku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennangalai Uzhaippakku - M.P.Natarajan

    http://www.pustaka.co.in

    எண்ணங்களை உழைப்பாக்கு...!

    Ennangalai Uzhaippakku…!

    Author:

    மு.ப. நடராஜன்

    M.P. Natarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mp-natarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    என்றும் கனத்த நினைவுகளுடன்...

    எனக்குள் எண்ணக் குவியல்களை

    உத்வேகமாய் விளைய வைத்த

    அன்பு ஆசான்! உம்மை

    வணங்கிட யுகங்கள் போதாது...!

    "நன்கு கற்றால் செயல்திறன் பெறலாம்!

    செயல்திறத்தால் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் பரிணமிக்கும்!

    ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் அறிவுக்குச் சக்தியாக மிளிரும்!

    அந்த அறிவு நம் வாழ்வை வளமாக்கும்!"

    - டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்!

    பதிப்புரை

    உன்னால் உலகம் வடிவமைக்கப்பட்டது. உன்னால் அனைத்தும் பாதுகாக்கப்பட்டது. வாழ்வில் இன்ப துன்ப உணர்வுகளை உணரக்கூடிய சக்தி நம் மனதிலே குடியிருக்கிறது.

    அதனைப் புரிந்து கொள்ளும் விதத்திலே நாம் கண்டறிய முடியும். அன்பு, பண்பு, பாசம், நேசம், சகிப்புத்தன்மை, விழிப்புணர்வு இவை யாவும் நம்மை புதுப்பிக்க வைக்கும் மகிழ்விக்க வைக்கும் என்ற உயரிய நோக்கங்களை உயரிய முறையில் எழுத்துக்களாக எடுத்துரைக்கும் போதோ அல்லது வடிப்பதன் மூலம் நமக்கும் புதிய மன மாற்றத்தை அனுபவிக்க முடியும் என்பதை உணர செய்யவே இப்புத்தகம் வெளியிடப்படுகிறது.

    அனைவரும் படித்துப் பயன் பெறுக.

    என்னுரை

    நம் சமுதாயம் பிறரை மதிக்காத போது எந்த நேரத்திலும் மகிழ்ச்சியில் இருந்து விட முடியாது.

    ஆகவே மனித நேயங்களை மதித்து உண்மையான செல்வம் நற்குணங்களை வெளிப்படுத்திட நமக்குள் அறிவும் திறமையும் குறைவாக உள்ளபோது அதிலிருந்து தன்னை மீட்டு உயர்வான கருத்துக்களாலும் வலுவான எண்ணங்களாலும் வலிமை பெற சாதனை படைத்து திகழ முற்பட வேண்டும்.

    உன்னால் உயரமான இடத்திற்கு செல்ல குறுக்கு வழியில் சென்று விட முடியாது. நீண்ட நெடிய தூரம் சென்று முன்னேற்ற படிக்கட்டுகளில் ஏறி சென்றால்தான் வெற்றியை அடைய முடியும் என்ற நோக்கோடு இந்த புத்தகம் எழுதப்பட்டது.

    அன்புடன்

    மு.ப.நடராசன், M.A. (SD), M.B.A., MHRM.,

    (சமுக இயக்கவியல், மேலாண்மை மனிதவளம், மேலாண்மை வணிகவியல்)

    மனம் படுத்தும் பாடு

    மனம் ஒரு குரங்கு. அது ஆங்காங்கு மரக்கிளையில் தத்தித் தாவி திரிவது போல மனமும் அதுபோல அலைகிறது என்பதனை எடுத்துரைக்கும் விதமாக மனம் ஒரு குரங்கு என்று சான்றோர் களும் ஆன்றோர்களும் என்றார்கள்.

    ஆகவே வாழ்வில் இன்பங்களையும் துன்பங்களையும் இரண்டும் உணர்ந்து அதனை அனுபவிப்பதற்காக போராடும் போராட்டம் இருக்கிறதே அதனை ஒவ்வொரு தனி மனிதனால் வாழ்வியலை சொல்லி மாளாது என்பதனை அனைவரும் உணர முடியும்.

    ஆனால் வாழ்நாள் முழுவதும் பெறக்கூடிய வசதிகளும் வாய்ப்புகளும் அவரவர் ஆசைகளை பொறுத்து அமையும் என்பதனை நம்மால் உணர முடியும்.

    நம்முடைய மனம் படுத்தும் பாட்டினை காலத்தின் கட்டாயத் தால் அலைபாய்ந்து அதனால் மனமாற்றம் தடுமாற்றங்கள் எற்படும் என்பதனை அறியமுடியும்.

    அதனால் தான் ஒரு சில விசயங்களில் நாம் மனதை கட்டுப்படுத்தி சுதந்திரமாகச் செல்லாமல் உணர்வுகளையும் ஆசைகளையும் அமைதிப்படுத்தி செயல்படும் போது வாழ்வில் வெற்றியை காணமுடியும்.

    அன்றாட வாழ்க்கை தத்துவங்களை உணரும் போது நமக்குள் புரியும். ஒன்றை பெறுவதற்கும் ஒன்றை இழந்தபிறகு மனம் படுகிற பாடும் ஏராளம்! ஏராளம்.

    ஆசை மனம் அலைபாய்வதை தடுத்துவிட்டால் அகிலமும் உன் காலடியில் விழ்ந்து கிடக்கும் என்பதனை அறிந்திட முடியும். மனம் என்றும் எளிமை என்றும் ஊஞ்சலில் அசைந்தாடும்

    போது இதமான சுகமான சந்தோசம் உண்டாகும் என்பதனை கண்டு தழைக்க முடியும்.

    நம் ஒருவிதமான சூழ்நிலையை உணரும் போது காலத்தின் கட்டாயம் நம்மை மாற்றிச் செல்லும். நாம் அன்றாட நடக்கின்ற செயல்பாடுகளை உணர்ந்து செயல்படும் போது மனம் அனுபவம் பெறவும் மன பக்குவம் பெறவும் வாய்ப்புகள் ஏராளம் என்பதனை கண்டறிய முடியும்

    மனதில் ஏற்படுகிற தாக்கங்களும் பிரச்சனைகளும் ஒருவரை பக்குவப்படுத்திடவும் உதவும். அதுவே படுகுழியில் தள்ளி விடவும் வாய்ப்புகள் உண்டு. இதனைக் கண்டு செயல்பாடுகளை பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படுகிற பக்குவத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.

    வாழ்நாள் முழுவதும் ஒருவர் போராடுகிறார் அதன் மூலம் வெற்றியும் கிடைக்கிறது. தோல்வியும் கிடைக்கிறது. இதனை பகுப்பாய்வு செய்து மனம் பண்படும் போது உண்மையான நிலையை உணர முடியும்.

    வாழ்வில் இன்பங்களை அனுபவிப்பது மட்டும் ஒரு மனிதனின் வேலையல்ல அவரவர் நிலை உணர்ந்து மனதை சமநிலைப்படுத்தும் போது கிடைக்கிற மகிழ்ச்சியும் ஆராவாரம் இதன் மீது ஈடுபாடு கொண்டு செயல்படவும் மனம் உதவுகிறது.

    ஒருமனிதன் சந்தோசத்தை அனுபவிப்பதற்கு நல்ல வாய்ப்பு களும் வசதிகளுமே அடிப்படை ஆதாரமாக இருந்தாலும் இதனை பயன்படுத்தும் விதத்தில்தான் கண்டு உணர முடியும்.

    ஒரு மனிதனுக்கு வலிமையான சிந்தனையும் வலிமையான உடல் அமைப்பும் இருந்து விட்டால் மட்டும் போதாது மனதை பக்குவப்படுத்தும் ஆற்றல் மிக தேவையென உணர வேண்டும்.

    நாம் காலத்தின் வளர்ச்சி கண்டு ஏமாறாமல் உன்னதமான மாற்றங்களை வரவழைத்து அதன் மூலம் கவனிக்கப்பட வேண்டிய விசயங்கள் ஏராளம்.

    நாம் ஒன்றை நிறைவேற்ற நினைக்கிறோம். அதனால் நிறைவேறவில்லை. அதற்காக நாம் தோல்வியை கண்டோம் என்று வருந்துவது எந்தவித பயனுமில்லை.

    ஒரு இலக்கை அடைவதற்கு முழுமையான ஈடுபாடு

    தேவை. அது போலவே அமைதியான நல்ல அணுகுமுறையும் நடைமுறைப்படுத்துகின்ற செயல் சிந்தனையும் ஒருங்கிணைத்து செயல்படும்போது வெற்றி என்ற சாதனை குறியீட்டினை கடந்து வெல்ல முடியும்.

    வாழ்நாளை வசந்த காலமாய் மாற்றுவது அவரவர் மன நிலையை பொறுத்தது என்பதனை உணர வேண்டும்.

    வாழ்நாளை வீணடித்து சோகங்களோடும் துக்கங்களோடு பிரச்சனைகளோடும் கைகோர்த்து நடப்பதனால் என் லாபம் அடைந்திட முடியும் என்பதனை உணர வேண்டும்.

    நமக்குள் ஆசைகள் புதைந்து கிடக்கிறது அந்த ஆசைகள் அளவு கடந்து செல்லும்போது நம்மை அடிமைப்படுத்தி வீணடிக் கிறது விரயம் ஏற்படுகிறது.

    வாழ்வியல் பற்றிய விரிசல்கள் உண்டாகிற மனச்சிதைவு நோய் ஏற்பட்டு வாழ்வே ஒரு பொய் வாழ்வே ஒரு மாயம். வாழ்வே ஒரு நாடக மேடை என்ற போர்வை போர்த்தி மூடி மறைக்கும் நோயாக மாறி விடுகிறது.

    ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் அவரவர் கையில் உள்ளது. அவரவர் முயற்சி யாலும் அக்கரையிலும் தான் பெறமுடியும் என்பதனை உணர்வதற்கு மனம் தேவையாகும். இதன் மூலமே வலிமை பெற முடியும்.

    மனம் ஒருமனிதனை கொல்லவும் செய்யும் கொடுமையும் செய்யும் காலம் முழுவதும் கோபப்படுத்தும் இதற்கெல்லாம் நாம் விடைகாண்பது அவரவர் மன நிலையை பொறுத்து அமைவ தாகும்.

    சமூக விழிப்புணர்வு

    நம்முடைய சமூகம் ஓர் விசித்திரமான வித்தியாசமான சமூகம். சமூகம் என்பது மனிதன் வாழும் கூட்டமைப்பு. அதோடு விலங்குகளும் தாவரங்களும் இயற்கை வளங்களும் சேர்த்து வாழும் தன்மை கொண்டது மனிதன் தொன்றுதொட்டு வாழும் காலம் முதல் இன்று வரை இந்த சூழல் உணர எண்ணிலடங்கா சமுக அடிப்படை கட்டமைப்புகளும் சமூக சிந்தனைகளும் மாற் றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

    அதற்கான முதற் காரணம் அறிவியல்பூர்வமான, விஞ்ஞானபூர்வமான வளர்ச்சியும் உலக தரம் வாய்ந்த நிலை

    யில் பொருளாதார மேம்பாட்டினை குறிக்கும். இவ்விதத்தில் சமூகம் எவ்விதத்தில் உள்ளது?

    இச்சமூகம் எந்த சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளது? என்பதனை ஆராய முற்படுவோமானால். சமூக அடித்தள கூட்டமைப்பில் அறியாமையே ஒவ்வொரு தனிமனித சமூகத்

    திலும் புதைந்து கிடக்கிறது அந்த அறியாமையை வெளிக் கொணர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை உணரப்பட வேண்டும். ஒவவொரு நிலையிலும் மாற்றங்களை நிறைவேற்ற வேண்டும்.

    குறிப்பாக, சமூக மாற்றம், பொருளாதார

    Enjoying the preview?
    Page 1 of 1