Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vetrikana Vilai
Vetrikana Vilai
Vetrikana Vilai
Ebook191 pages1 hour

Vetrikana Vilai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மு.ப.நடராசன் சிறு வயதிலிருந்து தமிழ் மீது பற்று கொண்டு கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் திரைப்பட பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் காட்டியுள்ளார். இவர் கல்லூரி படிக்கும் காலங்களில், "வானம் வெகு தூரமில்லை" என்ற தன்னம்பிக்கை தரும் புத்தகம் வெளியிட்டு கல்லூரி மாணவர்களிடையே உத்வேகம் பெறவும், கல்வியின் அவசியத்தை உணரும் வகையிலும் சமூக ஏற்றதாழ்வுகளை பிரதிபலிக்கும் விதமாகவும் எழுதியுள்ளார். ஒவ்வொரு தனி நபரிடமும் உள்ளார்ந்த திறமையுள்ளது, அதனை வெளிக்கொணர்ந்து தனக்கென முத்திரைப் பதித்து வெற்றி வாகை சூடிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124703637
Vetrikana Vilai

Read more from M.P.Natarajan

Related to Vetrikana Vilai

Related ebooks

Reviews for Vetrikana Vilai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vetrikana Vilai - M.P.Natarajan

    http://www.pustaka.co.in

    வெற்றிக்கான விலை

    Vetrikana Vilai

    Author:

    மு.ப. நடராஜன்

    M.P. Natarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mp-natarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    நீங்கள் நம்புங்கள்:

    உங்களை நீங்கள் நம்பியே ஆகவேண்டும்... உங்களுக்குள் ஏற்படுகிற மாறுதல்களை மாற்றங்களையும் அனுபவிக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். அதனால் நீங்கள் உங்களை நம்பும் போது ஏற்படுகிற சந்தோஷம் அளப்பறிய ஆனந்தத்தைத் தந்து வாழ்வினை ரசிக்க வைக்கிறது.

    மனச்சங்கடங்களை அகற்றுங்கள்:

    மனதுக்குள் ஏற்படுகிற அழுத்தங்களையும் கவலைகளையும் பிரச்சினைகளையும் தடைகளையும் தர்ம சங்கடங்களையும் முறையாக அகற்ற வேண்டும். அதனை மனதில் போட்டுப் புதைத்து வைத்தால் எந்த நன்மையும் வராது! நம்பிக்கையும் வராது! ஆகவே அகற்றுங்கள் சந்தோஷமாய் சிரியுங்கள். மகிழ்வோடு இருப்பதற்கு சிரிப்பு ஒரு மருந்து என்பதனை உணருங்கள். உன்னதம் பெறலாம், உயர்வு பெறலாம்.

    வாழ்க்கை ரொம்ப கடினமல்ல:

    வாழ்க்கை இனிமையானது! புனிதமானது! வசந்தமானது! இன்பமானது! துன்பத்தைத் தொலைத்து துயரத்தைப் போக்கி சந்தோஷத்தை கண் கொள்ளா காட்சியாக அனுபவிக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டால் வாழ்க்கை என்றும் கடினமாக இருக்காது.

    நல்வழி தேடுங்கள்:

    நீங்கள் செல்கிற பயணம் நல்வழியை தேடுகிற பயண மாகத்தான் இருக்க வேண்டும். பயணம் தடைபோடுகிற பயண மாக இருக்கக் கூடாது என்பதனை நன்கு உணர்ந்து செயல் படுங்கள்.

    உங்களுக்குள் குறி:

    உங்களுக்கென்று ஒரு செயலை செய்து முடிக்கக் கூடிய வல்லமையும் வலிமையும் உருவாக்கிக் கொண்டு அதனை அடைவதற்கான குறி வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

    உயர்ந்து விடு:

    உன்னை அடையாளம் காட்ட வேண்டுமானால், உயர்வின் இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும். அதனை நிறைவேற தீர்க்கமான தொலைநோக்கு சிந்தனை பெற்றுத் திகழ வேண்டும்.

    உண்மையை நம்புங்கள்:

    ஒரு செயலில் கண்டிப்பாக உண்மை இருக்கும். அதனை உணர வேண்டும். நம்பிட வேண்டும் நம்பிக்கை தான் வாழ்க்கை என புரிந்துக்கொள்ள வேண்டும்.

    ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்:

    தனக்குள்ளே சோம்பேறித் தனத்தை உருவாக்கிக் கொண்டு உழைக்காமல் உயர்ந்து விடலாம் என்ற அவநம்பிக்கைக் கொண்டு செயல்படாதீர்கள்.

    ஜெயிக்க வேண்டும்:

    ஒவ்வொரு நாளும் மனதில் ஜெயிக்க வேண்டும். பிறர் நம்மை மதிக்க வேண்டும். புகழால் பாராட்டப்பட வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் பதியுங்கள். ஜெயிக்க முடியும்.

    வல்லமை:

    நீங்கள் எந்தவித செயல்களையும் செய்து முடிக்க கனவு காண்கிற மாதிரி உடனே செய்திட முடியாது. அதற்காக போராடி ஜெயிக்கின்ற வல்லமையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

    சிந்தனை பரிமாற்றம்:

    மனதில் ஏற்படுகிற சிந்தனைகளை செயல்களாக மாற்ற பிறரிடம் மனம்விட்டுப் பேசுங்கள். சுயசிந்தனையைப் பரிமாறிக் கொள்ளுங்கள்.

    வெற்றியை மட்டும் யோசியுங்கள்:

    நீங்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற

    துடிப்பு இருந்தால் போதும். அதன்மூலம் உலகத்தில் சரித்திரம் படைக்கலாம். நாளைய உலகில் தோல்வி பற்றிய பயம் இல்லாமல் தொலைதூர பயணம் செல்லலாம். நான் வெற்றி பெற்றுவிட்டேன் என்ற எண்ணம் உங்கள் மனதில் குடி கொண்டால் போதும் சாதித்து விடலாம்.

    உங்களது இலக்கு:

    உங்களது இலக்கு எதுவாக இருக்க வேண்டும். அதுவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிச் செல்வது சாத்தியமே. அந்த இலக்கு நிரந்தரமான தீர்வு காண்கிற வாய்ப்பாக அமைய வேண்டும். அப்போதுதான் அது உங்களுக்கு பாதுகாப்பு வளையமாக அமையும். எவ்வித குழப்பமில்லாத சூழ்நிலையை உருவாக்கித் தரும்.

    புலம்பாதீர்கள்:

    வாழ்வில் புலம்புவதற்காகவே பிறந்தது போல புலம்பிக் கொண்டே இருக்காதீர்கள். வாழ்வில் லட்சிய பிடிப்பு இருந்தால் இந்த விதமான சூழ்நிலை வராது என்பதனை உணர வேண்டும்.

    தீர்க்கமாக இருங்கள்:

    உங்கள் மீது பற்று வையுங்கள். அன்பு செலுத்துங்கள் நேசம் வையுங்கள். பரிவு காட்டுங்கள் பிறர் மீது வைக்கிற அன்பின் மீது கணிவுடன் செயல்படுங்கள்.

    அங்கீகரிக்கும்:

    இந்த உலகத்திற்காக எந்த விதமாக செயல்களைச் செய்து முடிக்க காத்திருக்கிறீர்களோ அதற்கான செயல்களை செய்து முடித்தால் உலகம் உங்களை கண்டிப்பாக அங்கீகரிக்கும். கவலைப்படாதீர்கள். உங்களுக்குள்ளே திறமையும் உழைப்பையும் அங்கீகரிக்கும் நேரம் வரும் அதுவரை பொறுமையாக நிதானமாக செயலை செய்து முடியுங்கள்.

    குற்றம் சாட்டாதீர்கள்:

    பிறர் மீது குற்றம் சாட்டுவதே பொழுது போக்காக வைத்துக் கொள்ளாதீர்கள். குற்றம் என்ன என்பதனை உணர்ந்து அதனை தீர்க்கமாக முடிவு செய்ய பழகிக் கொள்ளுங்கள்.

    உங்களது மனம்:

    மனம் மாற்றத்தைத் தேடுகிறது. வலிமையை உண்டாக்கி கொள்ளுகிறபோது தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் தென்படுகிறது. ஆகவே உங்களது மனது உங்களுக்குள் ஒய்யாரமாக இருக்கும் போது ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள். சலிப்பில் சூழ்ந்து விடுகிறீர்கள் கைவிடுங்கள்.

    கவனித்துக் கொண்டிருங்கள்:

    உங்களை நீங்கள் தான் கவனித்துக் கொள்ள வேண்டும். சந்தோஷமாக இருக்க வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்போது தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

    மலர்ச்சியாக இருங்கள்:

    சந்தோஷ எண்ணத்துடன் சந்தோஷமாக மகிழ்ச்சியாக ஆரவாரமாக உற்சாகமாக இருக்கும் பட்சத்தில் உங்கள் மனதில் மலர்ச்சி ஏற்படுகிறது. இதன் மூலம் கவலை மறந்து கடந்த காலத்தை வென்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.

    நீங்கள் வேகமாகப் புரிந்துகொள்ளுங்கள்:

    இன்றைய உலகம் உங்களை சுய பரிசோதனை செய்து பார்க்கிறது. யார் யார் வேகமாகப் போகத் தயாராக இருக்கிறார்களோ அவர்களை வரவேற்கிறது. அவர்களுக்கு சாதகமாக அமைகிறது. ஆகவே நீங்கள் எதுக்கு தயாராக இருங்கள். துடிப்பாக இருங்கள். வாழ்வைப் புரிந்துக் கொள்ளுங்கள். வளமாகட்டும்.

    உனக்குள்ளே சந்தோஷம்:

    உனக்குள்ளே சந்தோஷம் இருக்கிறது. ஆனந்தம் இருக்கிறது. ஆரவாரம் இருக்கிறது. இதற்காக நீங்கள் எங்கும் தேடிப்போகத் தேவையில்லை. அது உங்களுக்குள்ளே பறவை யாய் வட்டமிட்டுக் கொண்டு வலம் வருகிறது. அதனை உபயோகி யுங்கள் சந்தோஷமாகலாம். உற்சாகம் காணலாம்.

    ஆழ்ந்து யோசித்துப்பாருங்கள்:

    உங்களைப் பற்றிய சிந்தனைகளை எண்ணங்களை வலப்படுத்தி வாழ்கிற சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆழ்ந்த சிந்தனை மனதில் தெளிவைத் தந்து நல்ல மாற்றத்தையும் ஏற்றத்தையும் தருகிறது. ஆகவே எந்த விஷயத்தையும் ஆழ்ந்து யோசித்து செயல்படுங்கள்.

    எண்ணமும் செயலும்:

    எண்ணமும் செயலும் ஒன்றோடு பிணைக்கப்பட்டது. எண்ணத்தை வலிமைப்படுத்தி செயலாக செய்ய நினைக்கிற போதுதான் தீர்க்கமாக வெற்றி கிடைக்கும்.

    அறிவுத்திறன்:

    அறிவுத்திறனை அறிந்துக் கொள்ளுங்கள் புரிந்துக்கொள்ளுங்கள். உங்களுக்கென்று இருக்கின்ற தகுதிதான் அறிவுத்திறன் என்பதனை உணர்ந்து செயல்படுங்கள்.

    கவனியுங்கள்:

    உலகம் என்ன செய்து கொண்டு இருக்கிறது. உலகத்திற்காக நீ என்ன செய்தாய். உலகம் உனக்காக என்ன செய்தது என்பதனை ஆராய்ந்து அறியுங்கள் கவனியுங்கள்.

    இயங்க வையுங்கள்:

    உங்களை நீங்கள் தான் இயங்க வைக்க வேண்டும். உழைக்காமல் சோம்பேறியாய் பிறர் மீது குற்றம் சொல்லிக்கொண்டே திரிவதால் எவ்வித பயனுமில்லை.

    நினைத்தால் நம்மால் முடியும்:

    நாம் அன்றாடம் நினைக்கிற செயல்களை செய்து முடிப்பதற்கு நமக்குள் சக்தி இருக்கிறது மன தைரியம் இருக்கின்றது. மன வலிமை இருக்கின்றது நம்மால் எதுவும் செய்ய முடியும் என்ற உணர்வை செம்மைப் படுத்திக் கொண்டால் போதும் சாதிக்க முடியும் சரித்திரத்தில் இடம்பிடிக்க முடியும்.

    எதையும் செய்திட முடியும்:

    என்னால் எந்த செயலையும் செய்து வைக்க முடியும். என்னால் எதனையும் செய்வதற்காகவே பிறந்தவன் என்பதனை உணரக் கூடிய சக்தி மனதில் இருந்தாலே போதும் உன்னதமான உயர்வான நிலையை அடைய முடியும்.

    எதற்கும் முடங்கக் கூடாது:

    எந்த ஒரு செயலையும் நல்லவிதமாக செய்து முடிக்க தயங்கக் கூடாது. அந்த தயக்கம் மனதிலே புதைந்து உயர்வை தராமல் தாழ்வு மனப்பான்மையைக் கொடுத்து தோல்விகளை தழுவச் செய்துவிடும். சாதிப்பது நமது இலக்கு. அதனை சந்திப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். எதற்கும் முடங்கிவிடக்கூடாது என்பதனை உணர்வோம்.

    முடியும் எழுந்து நட:

    உன்னால் முடியும் உன் உணர்வால் முடியும் உன் செயலால் முடியும். உனக்குள் சக்தி இருக்கிறது. மகா வலிமை இருக்கிறது முடியும் என்ற மனப்பாங்குடன் செயல்படு எழுந்து நட! விரைந்து செல்!! வெற்றிநடை போடு வேகம் உண்டாகும். வெகுதூரம் போகலாம்.

    வழி நிச்சயம் தெரியும்:

    ஒவ்வொரு செயலுக்கும் ஒரு தனிவழி உண்டு. அந்த வழி நிச்சயம் வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகளை உண்டாக்கித் தரும். அப்போது செயல்படுகிற நோக்கம் இலட்சியம், வலிமை, நல்ல உணர்வு, சிந்திக்கின்ற தன்மை அனைத்தும் புரியும்.

    இலக்கினை நிர்ணயுங்கள்:

    முதலில் இலக்கினை நிர்ணயம் செய்து சாதிப்பதற்கான வழிகளை கண்டறிந்து ஆராய்ந்து அறிந்து ஆக்கப்பூர்வமான சிந்தனை செயல்பாட்டோடு கலந்து செய்கின்ற செயல்கள் தான் வெற்றி இலக்கைத் தேடித் தரும். ஆகவே இலக்கினை நிர்ணயித்து வெற்றி பெறுங்கள். சாதிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உண்டாகும்.

    தெளிவான பயணம்:

    தெளிவான சிந்தனை கொண்டு நல்வழி பயணம் செல்லும்போது நமக்குள் சாதிக்கின்ற மனத்துடிப்பும் வலிமையும் உண்டாகி மாற்றத்தை உண்டாக்கும். ஆகவே தெளிவான மனநிலை தான் சிறந்ததொரு பயணம் செல்வதற்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதனை ஒவ்வொரு தனி நபரும் உணர வேண்டும்.

    அடையாளம் காணுங்கள்:

    உங்களை நீங்கள் தான் அடையாளம் காண வேண்டும். அடையாளம் என்பது தனக்குள் இருக்கிற திறமைகளை வெளிக்கொணர்ந்து தக்க தருணத்தில் சாதனை புரிவதற்கு உபயோகப்படுத்தும் போது கிடைக்கிற சந்தோஷம்தான் அடையாளமாகும்.

    உங்களுக்குள் சிறப்பு:

    உங்களுக்கென்று தனிச்சிறப்பு இருக்கிறது. அதனை முறையாக நீங்கள் பயன்படுத்தும் போதும் உங்களைப் பற்றி சுய மதிப்பீடு செய்யும் போதும் கிடைக்கிற பயன்கள் தான் தனிச்சிறப்பாகும்.

    சவால்களை சுமந்து:

    இன்றைய உலகம் உங்களை அரக்கப் பறக்க ஓட வைக்கிறது. என்ன சொல்வதென்றே தெரியாமல் திணறுகிற மனிதர்களை நாம் பார்க்கிறோம் ஆகவே சவால்களை சுமந்து கடந்து சாதிக்கிற வல்லமைப் பெற்றுத் திகழ வேண்டும்.

    குறைகளைச் சொல்லாதீர்கள்:

    வாழ்வில் குறைகளை சொல்லியே திரியாதீர்கள். நிறைகளை மனதில் நினையுங்கள் பதியுங்கள் அப்போது தான் மனம் பலம் பெறும். நம்பிக்கை பிறக்கும்.

    முழுமையாகப் புரிந்துகொள்:

    உன்னை முதலில் முழுமையாக புரிந்து கொள். அதன் பின்பு பிறரை முழுமையாக புரிந்து கொள்ள முற்படலாம்.

    நன்றாக யோசியுங்கள்:

    எந்தவித செயலையும் நன்றாக யோசித்து முடிவெடுங்கள். அப்போது தான் அந்த செயலின் அடித்தளம் புரியும்.

    பேசுவதில் தெளிவு:

    எந்த நேரத்திலும் தெளிவான பேச்சு இருந்துவிட்டால் மனதில் தெளிவு

    Enjoying the preview?
    Page 1 of 1