Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poonthenraley!
Poonthenraley!
Poonthenraley!
Ebook110 pages53 minutes

Poonthenraley!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603658
Poonthenraley!

Read more from Devibala

Related to Poonthenraley!

Related ebooks

Reviews for Poonthenraley!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poonthenraley! - Devibala

    http://www.pustaka.co.in

    பூந்தென்றலே!

    Poonthenraley!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    ஒன்பது மாதங்கள் முழுமை பெற்று பத்தாவது - மாதத்துக்குள் நுழைந்து விட்டாள் சரண்யா! எந்த நேரமும் பிரசவ வலி எடுக்கலாம்!

    பிறந்த வீட்டில்தான் இருக்கிறாள் சரண்யா! காலை குளியல் முடிந்து. ஆபீசுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் அம்மா பதறிக் கொண்டிருந்தாள்

    'ஏண்டீ? இன்னிக்கும் ஆபீசுக்கு போகணுமா? நிறை மாசம்! நான் வயித்துல நெருப்பைக் கட்டிட்டு அலையறேன்! நீ பண்றது உனக்கே நல்லாயிருக்கா?

    ஏம்மா பதட்டப்படறே? டாக்டர் கொடுத்த ட்யூ டேட் அடுத்த வெள்ளிக்கிழமைதான் அதுக்குள்ளேவலிவரலைன்னா, காலைல வந்து அட்மிட் ஆயிடுங்கன்னு டாக்டர் சொல்லியாச்சு! நீ ஏன் பதட்டப்படறே இன்னிக்கு புதன்தான் ஆகுது! எனக்கு பிரசவ லீவும் வெள்ளிக்கிழமை தான் தொடங்குது!

    நல்லாயிருக்குடி! கடைசி நேரம் வரைக்கும் போவியா?

    அம்மா காலைல டாக்ஸி புடிச்சுத்தான் போறேன்' எந்த ஒரு பிரச்ச பனனயும் இல்லை

    என்னங்க இதை கேட்டீ,ங்களா?

    கேட்டுட்டுத்தான் இருக்கேன்! அவ தைரியசாலி, நீ தேவையில்லாம் அவளை டென்ஷன் படுத்தாதே!

    அவரும் ஆபீசுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார்!

    சரண்யாவின் தங்கை அட்சயா கல்லூரியில் கடைசி வருஷம் படிக்கிறாள். அவள் புறப்பட்டுக் கொண்டிருந்தாள்.

    சரண்யாவுக்கு போன் வந்தது!

    அவள் கணவன் விதுர்தான் பேசினான்.

    எப்படியிருக்கே! சரியா சாப்பிடறியா ராத்திரி தூங்கினியா?

    சாப்பாடு பரவாயில்ல! ராத்திரி தூக்கம் சுத்தமா இல்லை!

    டென்ஷனா

    இருக்காதா? தலைப்பிரசவம் நாள் நெருங்குது இல்ல? நீங்க எப்ப வர்றீங்க?

    இப்ப நான் ஹைதராபாத்ல இருக்கேன். வெள்ளிக் கிழமை காலைல வந்துடுவேன்! அன்னிக்குத்தானே அட்மிட் ஆகணும்!

    ஒரு நாள் முன்னால் பிறந்துட்டா?

    வலி வந்ததும் தகவல் கொடு? பிளைட் புடிச்சு வந்திடறேன்! அம்மா வந்தாங்களா?

    இல்லீங்க போன்ல பேசினாங்க!

    சரி வச்சிடறேன்?

    சரண்யா புறப்பட்டு விட்டாள்.

    மாப்பிள்ளையை சீக்கிரம் வரச்சொல்லுடி!

    "அம்மா அவர் டூர்ல இருக்கார் மார்க்கெட்டிங் வேலை. பொறுப்புள்ள அதிகாரி பாதில விட்டுட்டு ஓடி வரமுடியாது!

    புரிஞ்சுக்கோ! நீ எல்லாத்துக்கும் பதட்டப்பட்டு லாபமில்லை!"

    சரண்யாவின் அப்பா தனியாரில் உத்யோகம் ஓய்வு பெற மூன்று வருடங்கள் பாக்கி. அம்மா குடும்பத்தலைவி!

    தங்கை அட்சயா கல்லுாரியில்!

    சரண்யா மத்திய அரசாங்க உத்யோகம். கல்யாணமாகி இரண்டு வருடங்கள் முடிந்து விட்டன.

    அழகானவள்! கை நிறைய சம்பாதிக்கிறாள். நல்ல பெண்! அன்புக்கும் பாசத்துக்கும் கட்டுப்பட்டவள்!

    வாழ்க்கைப்பட்ட இடமும் நல்ல இடம்! பணக்கார இடம் மூன்று பிள்ளைகள்.

    மூத்தவன் குடும்பத்துடன் அமெரிக்காவில்

    அடுத்தது விதுர்-நல்ல வேலை.

    மூன்றாவது தம்பி வியை- உள்ளூர்கல்லூரியில் பேராசிரியர். சரண்யா வேலைக்குப் போய் எதுவும் ஆக வேண்டியதில்லை.

    மாமனார் பிஸினஸ் மேன். வீடு, கார் என சகல வசதிகளும் உண்டு சரண்யா தன் காலில் நிற்க ஆசைப்பட்டாள். யாரும் மறுக்கவில்லை,

    மாமியார் எந்த வேலையும் செய்ய மாட்டார்.

    சகலத்துக்கும் வீட்டில் ஆள் இருந்ததால், கோயில், ஷொப்பிங் என ஊரைச்சுற்றி சம்பாதிக்கும் கரன்சிகளை கரைத்துக் கொண்டிருப்பாள்.

    சரண்யா ஓரளவுக்கு வீட்டு வேலைகளை செய்வாள், மாமியார்மாமனார், பாரிடமும் ஓட்டாத மனிதர்கள். பணம், அந்தஸ்த்து கெளரவம் இதையெல்லாம் நிறைய பார்ப்பார்கள்,

    கல்யாணம் நிச்சயமானதும், இந்த வீட்டில் பெரிய குழப்பம் ஏற்பட்டது!

    சரண்யாவின் அண்ணன்ராம்கி காதலித்தது வேற்றுமதத்து பெண்ணை கிறிஸ்தவ பெண் ஜூலி! அவதாரம் எம்.பி. ஏ, படித்து ராம்கியுடன் வேலை பார்க்கும் பெண்!

    காதலிக்கத் தொடங்கி ஒரு வருட காலத்தில் அரச புரசலாக பிரச்சினை வெளிப்பட்டு ஒரு கட்டத்தில் வெடித்து விட்டது!

    வீடுகளுக்கு அது தெரிய,

    இரு வீட்டாரும் ஒப்புக் கொள்ளவில்லை!

    இங்கே அப்பா, அம்மா தரும் எதிர்ப்பு. சரண்யா, அட்சயா பேசிப் பார்த்தார்கள்.

    அவனுக்குப் பிடிச்ச வாழ்க்கையை தேர்ந்தெடுக்கக் கூட உரிமை இல்லையா? காதல் இப்பல்லாம் சகஜம். என்ன தப்பு! நடக்கட்டுமே

    சரண்யா வாதாடிப் பார்த்தாள்.

    எடுபடவில்லை!

    அப்பா கோபால் ரகளை செய்து விட்டார். அம்மா சரோஜாவுக்கும் அதில் உடன்பாடில்லை!

    ஜூலி குடும்பத்தில் அதற்கு மேல் ஆவேசமாக நின்றார்கள். வெட்டுவேன், குத்துவேன் என்று கோதாவில் இறங்கி விட்டார்கள்.

    ஜூலியின் இரண்டு அண்ணன்மாரும் ராம்கியை ஆள் வைத்து அடித்து, போலீசில் புகார் தந்து பிரச்சினையை பெரிதாக்க, போலீஸ் வந்து ராம்கியை இழுத்துப் போக,

    இங்கே கோபால்- சரோ இன்னும் பதட்டமாக, விவகாரம் பெரிதாகி விட்டது! கொஞ்சமும் அசைந்து கொடுக்காமல் உறவுகள் மத்தியில் இறுக்கம் பரவிவிட்டது!

    ராம்கி, தங்கை சரண்யாவிடம் அழுதான்!

    தனியாக ஒரு முறை ஜூலியை ராம்கி தங்கைக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்!

    அழகு கொட்டும் புத்திசாலி ஜூலி!

    என்ன லாபம் பெரியவர்களின் வறட்டு ஜம்பம் பெரிதாக இருக்க, சரண்யா கடைசி வரை, போராட

    ரெண்டு வயசு பொண்ணுங்களை வீட்ல வச்சுக்கிட்டு மதம்தாண்டி காதலா? அவனை அடிச்சு விரட்டு!

    என்னங்க! நான் பேசி அவன் மனசை மாத்தறேன்

    அவனை தலை முழுகணும் இங்கே போலீஸ், அடியாட்கள்னு வர்றாங்க! நம்ம பொண்ணுங்க கழுத்துல தாலி ஏற வேண்டாமா?

    இது நடக்காது என்ற முடிவுக்கே வந்துவிட,

    சரண்யா அழைத்தாள்.

    "இதப்பாரு ரெண்டு பேரும் மேஜரி! யாரும் தடுக்க முடியாது!

    Enjoying the preview?
    Page 1 of 1