Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Malarodu Thaniyaga...
Naan Malarodu Thaniyaga...
Naan Malarodu Thaniyaga...
Ebook102 pages37 minutes

Naan Malarodu Thaniyaga...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903644
Naan Malarodu Thaniyaga...

Read more from Pattukottai Prabakar

Related to Naan Malarodu Thaniyaga...

Related ebooks

Reviews for Naan Malarodu Thaniyaga...

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Malarodu Thaniyaga... - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    நான் மலரோடு தனியாக...

    Naan Malarodu Thaniyaga...

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    ஒலிபெருக்கிகள் எல்லாத் திசைகளிலிருந்தும் இரைச்சலாய் விளம்பரங்களை காதுகளில் திணித்துக் கொண்டிருந்தன.

    'என்ன ராஜாத்தி, ஏன் இப்படி கவலையா இருக்கே?’

    இந்த சட்டை என்ன போட்டுத் துவைச்சாலும் வெள்ளையாக மாட்டேங்குது. நாளைக்கோ அவருக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. அதான் கவலையா இருக்குக்கா.

    ப்பூ! இவ்வளவுதானா? மயில் மார்க் டிட்டெர்ஜெண்ட் சோப் இருக்கறப்போ நீ ஏன் கவலைப்படறே? எந்த அழுக்கையும் அடிச்சி விரட்டிடும்.

    'ஆம்! வாங்குங்கள் மயில் மார்க் டிட்டெர்ஜெண்ட் சோப்பு போலிகளைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்! மயில் மார்க் என்று கேட்டு வாங்குங்கள்!"

    தமிழ்நாடு அரசின் சாதனைகளை முரசு கொட்டும் பல அரங்கங்களிலும் கியூவில் நின்று கொண்டிருந்தார்கள். கண்காட்சியை ஒரு தரம் சுற்றி வரும் ரயில் இன்னும் இரண்டு பெட்டிகளுக்கு ஆள்சேரக் காத்திருந்தது. பல நிறுவனங்களின் துண்டுப் பிரச்சார நோட்டீசுகள் USE ME " தொட்டிகளைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் மிதிபட்டன, சோப்புக் குமிழிகள் பல வண்ணங்களில் பிரதிபலித்துக் காற்றில் அலைந்தன. இரண்டு கையாலும் பிடித்துச் சாப்பிட வேண்டிய மகா அப்பளங்களுக்கும், கை பூரா எண்ணெயாகும் மிளகாய் பஜ்ஜிகளுக்கும் டோக்கன் வாங்கிக் கொண்டு முத்திக் கொண்டிருந்தார்கள்.

    கொஞ்சம் பிடிங்களேன் என்று சரவணனை ரகு விடம் ஒப்படைத்துவிட்டு சாரதா பீங்கான் கப் அண்ட் சாஸர் எடுத்துப் பார்த்து, இது உடையுமாப்பா? என்று விசாரித்தாள்.

    சரவணன் சிறகு சொருகின தொப்பி வைத்து, கன்னத்தில் திருஷ்டிப் பொட்டுடன், கையில் நீள வால் கொண்ட பலூனைப் பிடித்திருந்தான்.

    ரகு அருகில் இருந்த செயற்கை நீருற்றை சரவணனுக்குக் காட்டி அவனை சிரிக்க வைக்க முயன்றாலும், நெரிசலான கூட்டமும் இரைச்சலான சத்தமும் அலர்ஜி செய்ய சரவணன் சிரிப்பதில்லை என்கிற தீர்மானத்தில் இருந்தான்.

    'என்னங்க, ஆறு இருபது ரூபாய் சொல்றான். வாங்கட்டுமா?"

    'ஏம்ப்பா ஏழா கொடுக்கக் கூடாதா?"

    வராதும்மா.

    சரி, நல்லா பேக் பண்ணிக் கொடு சரவணனை ஜாக்கிரதையாக இருக்கியபடி கைப்பையின் ஜிப் திறந்து இருபது ரூபாய் எடுத்துத் தந்தான் ரகு.

    அடுத்து ராஜஸ்தான் சேலைகள் அலங்கரிக்கப்பட்டிருந்த கடைக்குள் நுழைவதற்கு முன்பு, சும்மா பாக்கலாங்க, எதுவும் எடுக்கணும்னு இல்லை என்றாள் சாரதா.

    என், பிடிச்சிருந்தா எடுக்கலாம் சாரதா.

    நுழைந்து அரை மணி நேரம் புரட்டி விட்டு, கேள்விகள் தொடுத்துவிட்டு, வேணாங்க, சுருங்காதுன்னுதான் சொல்றான். எனக்கு நம்பிக்கை வர மாட்டேங்குது. நூத்தி இருபதுக்கும், நூத்தி நாப்பதுக்கும் இங்க எடுக்கறதுக்கு இன்னும் கொஞ்சம் கூட விலையில் பூனம், ஷிபான் இப்படி எடுத்துட்டா நல்லா உழைக்கும் என்றான்.

    சரவணன் அழ ஆரம்பிக்கவே ஒரு பக்கமாக அமர்ந்து ஃபேரெக்ஸ் கலந்து பாட்டிலில் களற்றி சரவணன் வாயில் திணித்தான் சாரதா.

    ரகு சற்றுத் தள்ளி நின்று சிகரெட் பற்ற வைத்தான்.

    அருகில் நாடக அரங்கத்தில் இருநாறு நாற்காலிகளில் இருபத்தி நான்கு பேர் உட்கார்ந்திருக்க... நடக்கின்ற சத்தம் டங், டங் ' என்று ஒலிக்கும் மேடையில் நாடகம் நடந்து கொண்டிருந்தது.

    மாலதி, உன்னைப் பார்க்காமல் என்னால் ஒரு நிமிடம் கூட உயிர்வாழ் முடியாது.

    ஆனால் விதியின் விளையாட்டுக்கு நாம் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும் சுரேஷ். இதுதான் காலம் செய்யும் கோலம். திருமாலின் தீர்ப்பு, அதை மீற மனித ஜென்மங்களாகிய நமக்கு சக்தியில்லை. வாழ்க்கையின் கோரப் பிடியில் நாமெல்லாம் கொலு பொம்மைகள் சுரேஷ், கொலு பொம்மைகள்!

    ரகு வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.

    ஹலோ ரகு என்று வந்தான் செந்தில். ரகுவோடு அதே பேங்கில் வேலை பார்ப்பவன், தனியாவா வந்திங்கா!

    இல்லைங்க, என் வைஃபும், குழந்தையும் அதோ இருக்காங்க.

    ரொம்ப தைரியம் தான். நீங்க தம் அடிக்கிறதுக்கு அவங்க எதுவும் சொல்றதில்லையா?

    சொல்லி அலுத்துப் போய் நிறுத்திட்டாங்க. நீங்க ஃபேமிலிய அழைச்சுட்டு வரல்லையா!

    இல்லை ரகு. ஊர்லேர்ந்து என் மச்சானோட பையன் வந்திருக்கான். அவனுக்கு ராட்டினம் சுத்தணும்னு மட்டும் தான் குறி. எனக்கு மயக்கம் வரும். இஷ்டத்துக்கு சுத்திட்டு வான்னு காசைக் கொடுத்து அனுப்பிச்சிட்டேன்.

    "ஸ்மோக் பண்றிங்களா செந்தில்? ரகு பாக்கெட் நீட்ட...

    கொடுங்க என்றெடுத்து நெருப்பைப் பரிமாற்றம் செய்து கொண்டு. இன்னிக்கு மேனேஜரோட என்ன தகராறு ரகு என்றான்.

    "இன்னிக்கு கேஷ்ல நூறு ரூபா ஷார்ட்டேஜ். மேனகா எண்டர்பிரைசஸ்ல தான் பதினஞ்சி பண்டல் கொண்டாந்து கட்டினாங்க.

    Enjoying the preview?
    Page 1 of 1