Akira Kurasewawin Red Beardum… Azhiyaachudar Anithavum…
By Kulashekar T
()
About this ebook
அகிரா குரசேவாவின் ரெட் பியர்ட் அப்படியே குணாம்சத்தில் அனிதாவோடு ஒத்துப் போகிறவராக தோன்றினார். ரெட் பியர்ட் ஒரு தன்னலமில்லாத மருத்துவர். அனிதாவும் அப்படியான ஒரு மருத்தவராக வந்திருக்க வேண்டியவர். ரெய் பியர்ட் கிராமங்களில் கதியற்று வாழும் ஏழை கிராம மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர். அனிதாவும் அப்படியாக தன்னை அர்ப்பணித்துக் கொள்கிற கனவுகளோடே இருந்தவர். இருவரும் ஏழ்மையான சூழ்நிலையில் இருந்து, ஏழ்மையில் இருக்கும் கிராம மக்களின் வலிகளை உணர்ந்து அதை போக்க, உயிர்ப்போடு போராட நினைத்தவர்கள். இப்படி பல தளங்களில் இரண்டு கதாபாத்திரங்களும் ஒத்திருப்பதை பார்க்கையில் தான், இயக்குநர் அகிரா குரசேவாவின் மகத்துவம் பிடிபடுகிறது. காலம் கடந்த காலத்தால் அழிக்க முடியாத மகாகலைஞன். என்னவொரு தூரதிஷ்டி பார்வை. அந்த மகாகலைஞனின் அறுபதுகளில் வந்த படைப்பு இப்போதும் பொருந்துகிறது.
அதனாலேயே இந்த நூலை எழுதியே ஆக வேண்டும் என்கிற தாபம் பீறிட்டெழ ஆரம்பித்தது. ஒரே நாளில் ஒரே மூச்சில் இந்த நூலை எழுதி முடித்து விட்டேன். எழுதி முடிக்கும் வரை நிறுத்த முடியவில்லை.
எங்கோ துவங்குகிற புள்ளி எங்கோ எப்படியோ முற்றிலும் எதிர்பாராத பரிமாணங்களோடு கருக்கொண்டு உருக்கொண்டு தன்னை வெளிப்படுத்துகிற கயாஸ் தியரி போல இந்த நூலின் ஆதி துவக்கம் எங்கோ ஒரு புத்தகசாலையில் திரையிடப்பட்ட வீடு திரைப்படம் என்கிற புள்ளியில் துவங்கியிருக்கிறது. வீடு திரைப்படத்திலிருந்து இந்த படைப்பு வரை பயணித்த கயாஸ் தியரியின் பயணிப்பை உணர்த்தவே இந்த மேற்படி விவரங்கள்.
அதேபோல அனிதா என்கிற புள்ளி எங்கெல்லாம் எப்படியெப்படியோ எதிர்பாராத பரிமாணங்களோடு கருக்கொண்டு உருக்கொண்டு உயிர்கொண்டு தனதான நீட்சியில் நீட்டின் தந்திரம் உடைத்து பூமியின் உயிர்நாடியான கிராமத்தின் மனிதத்தை காக்கும் விதத்தில் அங்கே ஏராளம் அனிதாக்களை மருத்துவர்களாக ஆக்கி அழகு பார்க்கிற விஸ்வரூப தரிசனமாய் நிகழ இருக்கும் கயாஸ் தியரியின் பயணிப்பாய் இந்த ரெட் பியர்ட் என்கிற படைப்பை தரிசிக்கலாம்.
நிர்பயா என்கிற ஜோதி தன்னுடைய தோழனோடு இரவில் பேருந்தில் பயணிக்கிற போது, நான்கு பேருந்து ஊழியர்களாலேயே வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார். உடனே, எல்லோரையும் போல பயந்து போய் ஒடுங்கிவிடவில்லை. துணிச்சலோடு, உயிருக்கு ஆபத்தான நிலையிலும் காவல் நிலையம் போய் நடந்ததை சொல்லி பிராது கொடுத்தார் அல்லவா... அதனால் தானே தேசமே அவருக்காக ஒன்று திரண்டு போராடியது. அதன் விளைவாக ‘நிர்பயா ஆக்ட்’ சட்டமாக கொண்டும் வந்தார்கள்.
அனிதாவின் அழித்தொழிப்பு மறைமக கொலையே. தற்கொலைக்கு தூண்டுவது சந்தேகத்திற்கிடமில்லாமல் கொலை தான். அத்தனை துணிச்சலான பெண்ணை தற்கொலைக்கு தூண்டுகிறதும் கொலை தானே... அப்படியான பேரிழப்பை சந்தித்து, தமிழகமே கொதித்துப் போய் கிடக்கிற இந்த வேளையில், தேசமே அனிதாவிற்காக குரல் கொடுத்து ‘அனிதா ஆக்ட்’ கொண்டு வர முனைய வேண்டும் என்கிற வேண்டுகோளில் நியாயம் இருப்பதாகவே உணர்கிறேன். இதில் அகிரா குரசேவாவின் ரெட் பியர்ட் திரைக்கதையையும் முழுமையாக தரிசிக்கலாம், அதனை ஒத்திருக்கிற அனிதா என்கிற குறியீட்டு படிமத்தோடான ஒப்புமைகளையும் தரிசிக்கலாம். ஆக, ஒரே நூலில் இருவேறு நூல்களுக்கான அனுபவங்களை அந்த சூட்சும புள்ளியில் ஒரு சேர தரிசிக்கிற அனுபவமாக இயைந்து அவை புதிய அனுபவமாய் படிக்கிற மனங்களில் உயிர்த்தெழுந்து நீங்கா இடம் பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
அக்கினிக் குஞ்சாய் ரெட் பியர்டின், அனிதாவின் கனவுத் தாகம் எங்கும் அணையாச் சுடராய் விரிந்து பரந்து பரவ, அந்த பரவச பயணிப்பை எழுத்தாய் இதோ உங்கள் முன் ஒப்படைத்தாகி விட்டது. இந்த படைப்பின் சுடரை உங்கள் ஆன்மாக்களிலும் வைத்துக் கொண்டு அணையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவே ரெட் பியர்டுக்கும், அனிதாவுக்கும் செய்கிற மரியாதை.
இனியொரு அனிதாவை காவு கொடுத்துவிடக் கூடாது. இங்கே அனிதா என்பது தகுதி இருந்தும் விரும்பிய கல்வி கற்க இயலாது தாகத்தோடு தவித்தலையும் ஒருமித்த கிராமிய ஆன்மாக்களின் குறியீடு. தகுதியிருந்தும் தந்திரக்காரர்களால் தட்டிப்பறிக்கப்பட்டு பரிதாப நிலையில் பரிதவித்தலைகிற ஆயிரமாயிரம் ஆண்,பெண் உருவிற்குள் உள்ள அனிதாக்களுக்கு ரெட் பியர்டின் ஆன்மம் வழியாக இந்த நூலை சமர்ப்பணம் செய்கிறேன்.
மனிதத்துடன், தி. குலசேகர்
Read more from Kulashekar T
White Nights - Venmayamana Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsA Separation Rating: 0 out of 5 stars0 ratingsVikramadithanukku Vedhalam Sonna Puthir Kathaigal Rating: 5 out of 5 stars5/5Oru Snegithikkaga... Rating: 0 out of 5 stars0 ratingsSpring Autumn Winter Summer Spring Rating: 0 out of 5 stars0 ratingsCity Lights Rating: 0 out of 5 stars0 ratingsThe Day I Became A Woman Rating: 0 out of 5 stars0 ratingsMr and Mrs Iyer Rating: 0 out of 5 stars0 ratingsTaxi Rating: 0 out of 5 stars0 ratingsBiggboss - Oviya Varaiyum Devathai Padimam Rating: 0 out of 5 stars0 ratingsMulla Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsFirst Teacher Rating: 0 out of 5 stars0 ratingsBigg Boss 2 Aishwarya Enum Kuzhanthai Manathin Agavulagam Rating: 0 out of 5 stars0 ratingsChildren of Heaven Rating: 0 out of 5 stars0 ratingsBigg Boss 2 - Episode 5 Rating: 0 out of 5 stars0 ratingsCharulatha Rating: 0 out of 5 stars0 ratingsNinaivellam Poovasam! Rating: 0 out of 5 stars0 ratingsMathilukal Rating: 0 out of 5 stars0 ratingsUnnil Ennai Kaangirean Rating: 0 out of 5 stars0 ratingsTheeraakkadhal Rating: 0 out of 5 stars0 ratingsThe Road Home Rating: 0 out of 5 stars0 ratingsT. Kulashekar Stories Rating: 0 out of 5 stars0 ratingsThulli Thiriyum Ninaivalaigal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsIdharku Peyarthan Kaadhala... Rating: 0 out of 5 stars0 ratingsBigg Boss 2 - Episode 3 Rating: 0 out of 5 stars0 ratingsTitanic - Oru Kaadhalin Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsWhite Balloon Rating: 0 out of 5 stars0 ratingsBigg Boss 2 - Episode 12 Rating: 0 out of 5 stars0 ratingsNee Mattum Rating: 0 out of 5 stars0 ratingsUyirkaadhal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Akira Kurasewawin Red Beardum… Azhiyaachudar Anithavum…
Related ebooks
Charulatha Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikka Neramillai Uruvana Kathai Rating: 0 out of 5 stars0 ratingsTheeraakkadhal Rating: 0 out of 5 stars0 ratingsErandu Per Vaanathai Parkirargal Rating: 0 out of 5 stars0 ratingsAnthareen Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Iravu Rating: 5 out of 5 stars5/5City Lights Rating: 0 out of 5 stars0 ratingsBramma Kanave Pratisha! Rating: 0 out of 5 stars0 ratingsTitanic - Oru Kaadhalin Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsOre Kadal Rating: 0 out of 5 stars0 ratingsThe Road Home Rating: 0 out of 5 stars0 ratingsMr and Mrs Iyer Rating: 0 out of 5 stars0 ratingsAtho Ange Aarambam Rating: 5 out of 5 stars5/5En Paarvaiyil Kalaignar Rating: 0 out of 5 stars0 ratingsCast Away Rating: 0 out of 5 stars0 ratingsVeezhvenendru Ninaithayo Rating: 0 out of 5 stars0 ratingsRun Lola Run Rating: 0 out of 5 stars0 ratingsDevadas - Azhiyaa Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsVaazha Ninaithaal Vaazhalaam Vaazhviyal Thodar Rating: 0 out of 5 stars0 ratingsMathilukal Rating: 0 out of 5 stars0 ratingsIthu Sathiyam Rating: 5 out of 5 stars5/5Kalloori Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsAthe Athe... Saba Pathe... Rating: 0 out of 5 stars0 ratingsSathuragiriyil Itchadhari Naagini! Rating: 5 out of 5 stars5/5The Apartment Rating: 0 out of 5 stars0 ratingsChildren of Heaven Rating: 0 out of 5 stars0 ratingsRagasiyamaga Oru Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Chinnanchiru Kiliye... Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Kadhal Vendum Rating: 4 out of 5 stars4/5
Reviews for Akira Kurasewawin Red Beardum… Azhiyaachudar Anithavum…
0 ratings0 reviews
Book preview
Akira Kurasewawin Red Beardum… Azhiyaachudar Anithavum… - Kulashekar T
http://www.pustaka.co.in
அகிரா குரசேவாவின் ரெட் பியர்டும்...அணையாச் சுடர் அனிதாவும்...
Akira Kurasewawin Red Beardum… Azhiyaachudar Anithavum…
Author:
தி. குலசேகர்
T. Kulashekar
For more books
http://www.pustaka.co.in/home/author/kulashekar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
அத்தியாயம் 55
அத்தியாயம் 56
அத்தியாயம் 57
அத்தியாயம் 58
அத்தியாயம் 59
அத்தியாயம் 60
அத்தியாயம் 61
அத்தியாயம் 62
அத்தியாயம் 63
அத்தியாயம் 64
அத்தியாயம் 65
அத்தியாயம் 66
அணையா விளக்கு
திருவான்மியூரில் உள்ள பனுவல் புத்தக கடைக்குள் ஒரு மாலையில் பாலுமகேந்திராவின் சந்தியாராகம் திரைப்படம் போட்டார்கள். அதையொட்டி தயாரிப்பாளர் தனஞ்செயனோடு ஒரு கலந்துரையாடலும் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்வில் தான் தீபாவை சந்தித்ததாக ஞாபகம். கணவர் அய்யப்ப மகாராஜனோடு வந்திருந்தார்.
அய்யப்பனை தீபா அறிமுகமாவதற்கு முன்பே தெரியும். எனது ஆசான்களில் ஒருவரான இயக்குநர் வஸந்த்தின் ஆரம்பகாலங்களில் நல்ல நண்பராகவும், ஆலோசகராகவும் இருந்த ரமணீயன் வீட்டில் வைத்து தான் சந்தித்தோம்.
ரமணீயன் அற்புதமான மனிதர். ஆனால் படபட பட்டாசு. பொசுக்பொசுக்கென கோபம் வந்துவிடும். வார்த்தைகள் தெறிக்கும். ஆனால் வந்த கோபம் நொடியில் கரைந்தும் விடும். இலக்கியத்திலும், உலக சினிமாவிலும் தேர்ந்த பரிட்சயம் கொண்டிருந்தவர். தினமும் அதிகாலையில் மூன்று மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். அவரின் ஆயுட்காலம் நெருங்குவது அறிந்தோ என்னவோ அவர் நேரத்தை சிறப்பாகவே கையாண்டார்.
அவரோடு சேர்ந்து சூர்யமுகி என்கிற ஒரு ஸ்கிரிப்ட் எழுதினேன். அவர் சொன்ன ஐடியா. சந்திரமுகியை உல்டா பண்ணி மிகுந்த நகைச்சுவையாக எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த விசயம் பிடித்திருந்ததால் சம்மதித்தேன். கவுண்டமணி கதாபாத்திரம் தான் ரஜினி, கோவை சரளா தான் ஜோதிகா, செந்தில் தான் பிரபு, ஆர்த்தி தான் நயன்தாரா இப்படியாக கதாபாத்திரங்களை நிர்மாணித்து, மிகுந்த நகைச்சுவையோடு ஸ்கிரிப்ட் உருவாக்கினேன். படப்பிடிப்பு சுலபமாய் நடத்தியாகிவிட்டது. எடிட் செய்த பின், டப்பிங். அதற்கு அந்தந்த கதாபாத்திரங்களை டம்மியாக ஏற்று யார்யாரோ நடித்திருந்தார்கள். அது அப்படியே மோஷன் க்ராஃபிக்ஸில் அந்தந்த நகைச்சுவை நடிகர்களாக மோஷன் கேப்ச்சர் கிராஃபிக்ஸ் உத்தியில் மாற்றப்பட்டு விடும். அதற்காக அவர் அமெரிக்காவில் இருந்து பிரத்யேக சாஃப்ட்வேர் வாங்கி வந்து பத்து கம்ப்யூட்டர் எஞ்சினியர்களை வைத்து அதற்கான வேலையில் ஈடுபட்டார். டப்பிங்கில் தான் தத்ரூபமாய் கவுண்டமணி, கோவை ரசளா என குரல் வரக்கூடிய மிமிக்ரி ஆர்ட்டிஸ்டை தேடிப்பிடித்து டப்பிங் பண்ணுவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. ஆனால், பிரமாதமாக வந்தது. எனினும், இடையிலேயே அவர் தவறிவிட்டதால் திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டுவிட்டது. இல்லையென்றால், கோச்சடையானுக்கு முன்னால் அந்தர டெக்னிக்கில் வந்த முதல் படமாக இருந்திருக்கும்.
அவரின் குடும்ப நண்பரான ரோகிணியை அங்கு வைத்து தான் சந்தித்தேன். பின்னர் அவர் ஆங்கர் பண்ண கேப்டன் டிவியில் உலக சினிமா என்கிற தொடர் நிகழ்ச்சியை எழுதி, இயக்கியிருக்கிறேன்.
இயக்குநர் ரோகிணியின் உதவியாளராக அய்யப்பனை ரமணீயன் வீட்டில் வைத்து சந்தித்தேன். ஆனால் முதல் சந்திப்பிலேயே அவரின் அமைதியான சுபாவம் பிடித்துப் போய் விட, நட்பாகிவிட்டார். அடிக்கடி சந்திக்க முடிவதில்லை என்றாலும், ஏதாவது நிகழ்வுகளில் சந்திக்கிற தருணங்களில் ஒருவரை பற்றி ஒருவர் அக்கறையோடு பகிர்ந்து கொள்வதுண்டு.
அப்போது தீபாவிடம் என்ன செய்து கொண்டிருக்கீறீர்கள் என்று கேட்டதற்கு, கேமராமேன் ஆர்.டி. ராஜசேகரின் உதவியாளர் வைசாலி ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கான திட்டத்தில் இருக்கிறார். அந்த டிஷ்கஸனில் இருப்பதாக சொன்னார். உடனே நெருங்கிவந்து விட்டதாக ஒரு உணர்வு. காரணம் வைசு என்கிற அந்த வைசாலி தான் நீ+நீ=நாம் என்கிற எனது முதல் குறும்படத்தின் கேமராவுமன். மேலும் நெருங்கிய தோழியும் கூட. கதை பிடித்திருந்த ஒரே காரணத்திற்காக, பணம் எதுவும் வாங்கிக்கொள்ளாமல் இருந்த வசதிக்குள் பிரமாதமாய் பணியாற்றினார்.
எனது இன்னொரு ஆசான் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்களின் சமீபத்திய கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்த போது, அதில் வேலை செய்வதற்கான உதவி இயக்குநர்கள் குழுவை தேர்ந்தெடுக்க திட்டமிட்டோம். அப்போது, சட்டென எனக்கு தீபாவின் ஞாபகம் வந்தது. அவரை உடனே தொலைபேசியில் அழைத்து, நல்ல கதை... குறுகிய கால தயாரிப்பு... உங்களுக்கு துணை இயக்குநராக பணியாற்ற விருப்பமா என்று கேட்டேன். அப்போது தான் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்து பராமரிக்கிற பணியில் தீவிரமாயிருந்தபடியால், அவரால் அப்போது அந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.
அயல் சினிமா மாத இதழில் பொறுப்பாசிரியராக சேர்ந்தபின், பிறகொரு நாள் தொலைபேசியில் அழைத்தார்.
அயல் சினிமாவிற்கு கட்டுரைகள் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி, இந்த மாதத்திற்கு என்ன கட்டுரை எழுதலாம் என அவரிடமே ஆலோசனை கேட்டேன். அப்போது அவர் அகிரா குரசேவாவின் ரெட் பியர்ட் திரைக்கதையை பற்றிய ஒரு கட்டுரை எழுதுங்கள். அது அப்படியே நிகழ்கால சூழலை ஒத்திருக்கிறது. நீட் என்கிற சூழ்ச்சியின் மூலம் பலிகொடுக்கப்பட்ட அனிதாவிற்கும், இதில் வரும் மையக் கதாபாத்திரமான ரெட் பியர்டுக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறபடியால் அதையும் அந்த படைப்பின் அனுபவத்தோடு இணைத்து எழுதுங்களேன் என்றார். அந்த ஐடியா பிடித்திருந்தது. உடனே எழுதிக் கொடுத்துவிட்டேன்.
ஆனாலும், அந்த கட்டுரைக்காக எழுதிய சில பக்கங்களோடு இந்த ஆக்கம் நின்றுவிடக்கூடாது என்று தோன்றியது. அந்த தாக்கம் அப்படியானது. அப்படியாக தான் இந்த நூலை எழுதுவதற்கான பொறி தோழி தீபாவிடமிருந்து துவங்கி வைக்கப்பட்டது.
அகிரா குரசேவாவின் ரெட் பியர்ட் அப்படியே குணாம்சத்தில் அனிதாவோடு ஒத்துப் போகிறவராக தோன்றினார். ரெட் பியர்ட் ஒரு தன்னலமில்லாத மருத்துவர். அனிதாவும் அப்படியான ஒரு மருத்தவராக வந்திருக்க வேண்டியவர். ரெய் பியர்ட் கிராமங்களில் கதியற்று வாழும் ஏழை கிராம மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர். அனிதாவும் அப்படியாக தன்னை அர்ப்பணித்துக் கொள்கிற கனவுகளோடே இருந்தவர். இருவரும் ஏழ்மையான சூழ்நிலையில் இருந்து, ஏழ்மையில் இருக்கும் கிராம மக்களின் வலிகளை உணர்ந்து அதை போக்க, உயிர்ப்போடு போராட நினைத்தவர்கள். இப்படி பல தளங்களில் இரண்டு கதாபாத்திரங்களும் ஒத்திருப்பதை பார்க்கையில் தான், இயக்குநர் அகிரா குரசேவாவின் மகத்துவம் பிடிபடுகிறது. காலம் கடந்த காலத்தால் அழிக்க முடியாத மகாகலைஞன். என்னவொரு தூரதிஷ்டி பார்வை. அந்த மகாகலைஞனின் அறுபதுகளில் வந்த படைப்பு இப்போதும் பொருந்துகிறது.
அதனாலேயே இந்த நூலை எழுதியே ஆக வேண்டும் என்கிற தாபம் பீறிட்டெழ ஆரம்பித்தது. ஒரே நாளில் ஒரே மூச்சில் இந்த நூலை எழுதி முடித்து விட்டேன். எழுதி முடிக்கும் வரை நிறுத்த முடியவில்லை.
எங்கோ துவங்குகிற புள்ளி எங்கோ எப்படியோ முற்றிலும் எதிர்பாராத பரிமாணங்களோடு கருக்கொண்டு